அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

ஓர் அடி

7 comments
ஈறுடல் காலூன்றி
ஓர் அடி
ஓர் அடி
நிலைகொத்தி நிற்க
இருமனம் தான்கலந்து
அன்பிக் கடலாக
உடலீர்ப்பு விசையினால்
உயிரிரண்டும் ஒட்டிக்கொள்ள
மார்மீது தலைசாய்த்து
கையிரண்டும் பின்னிக்கொண்டு
காதலில் நாம் எடுத்துவைக்கும்
ஒவ்வொரு அடியும்
இப்பிரபஞ்சத்தில் பூமியின்
வரலாறு கண்ணே!

7 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

தோழி

15 comments
தோழி
தோழி
உன்னோடு நானிருந்த காலம்
கோடையிலும் ஓர் வசந்தம்
பாலையிலும் ஓர் சோலைவனம்
பருவமடையா வயதில்
ரெட்டை ஜடையுடன்
கைகோர்த்து நடந்தது
ஒருகை இலந்தைப்பழத்தை
இருகைகள் பகிர்ந்துண்டது
டியூசன் வகுப்புகளுக்கு
துணையாய் வந்தது
யாரோ உன்னையடிக்க
எனக்கு கோபம்வந்தது

விடுமுறை நாட்களில் வந்த
இழந்தது போன்ற உணர்வு
அண்ணணை சாக்காய் வைத்து
உன்னைப் பார்த்தது
நட்பையும் தாண்டிய
நாகரீகப் பேச்சுகள்
இடையறாத பேச்சுக்களின்
நடுவே நீ காட்டும் மெளனம்
எல்லை தாண்டியபோதும்
நட்பாய் ஏற்றுக்கொண்டது

இவைகளை நினைத்தால்
இமைகளும் வலிக்கினறன
உடல்கள் நடுங்குகின்றன
கண்கள் குளமாகின்றன
ஆயிரம் வசந்தம்
ஆயிரம் கோடை
கடந்து விட்டேன்
நீயிட்ட கோலமட்டும்
மனதில் பசுமையாய்
நிழலாடுகிறது தோழி
உன் சுவடுகள் என் நெஞ்சில்
அதை ஒவ்வொருநாளும்
படிக்கிறேன் அழுகிறேன்

15 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

மெழுகுவர்த்தி

2 comments
இயற்கை வெளிச்சம் குறைந்து
மெழுகுவர்த்தி
மெழுகுவர்த்தி
செற்கைவெளிச்சம் கவிழும்
மாலை நேரம் - திடீரென
எலெக்ட்ரான் ஓட்டம் தடைபட
மீண்டும் கவிழ்ந்தது இருட்டு
இருட்டை விரட்ட அவன்
என்னோடு இருந்தான் - நானோ
கருவறை இருந்தும்
கருவில்லாத தாயைப்போல்
என்தேடலை தேடிக்கொண்டிருந்தேன்
நேரம் நகர நகர
அவன் கரைந்து கொண்டிருந்தான்
சட்டென ஓர் இருட்டு
அவன் முழுவதுமாக
கரைந்து தரையில்கிடந்தான்
ஒளி கொடுத்தவன் 
நன்றி எதிர்பார்க்காமல்
தன்னை அர்பணித்து
தரையில் கிடக்கிறான்
நானோ சுயநலமாக
அவனிடம் பேசாமல்
இருந்துவிட்டேன்
கரைந்த உடலை
தழுவிக்கொண்டே கண்ணீருடன்
நகர்ந்தது மாலைவேளை
இன்னும் எத்தனை
தியாகங்களை மறந்தேனோ!!!

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

பாவம்

4 comments
பாவம்
பாவம்
அழகான பிறைநிலா
அதன்கீழ் ஒர் விடிவெள்ளி
இரவின் நிழலில்
நீண்ட சாலையில்
அலங்கார விளக்கெடுத்து
ஊர்திகள் விரைந்துசெல்ல
சாலையிலன் ஓரம்
என்னவளின் கைபிடித்து
குலாவிக்கொண்டிருந்த தருணம்
சற்று தூரத்தில்
பூனையொன்று ரோட்டில்பாய
ஊர்தியொன்று தலையில் ஏற
சடக்கென சத்தம்
என்னவளே அய்யோவென
இதயம் நின்றது
போல ஓர் உணர்வு
பூனையின் கால்கள் உதற
அதை கடந்த தருணம்
கல்லானது இதயம்
மனம்மட்டும் கதறியது
அய்யோ பாவம்!
அய்யோ பாவம்!

4 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

ஜென் zen

4 comments
நேற்று இருந்தது
zen
zen
இன்று இருக்கிறது
நாளை இருக்கும்
போகும் போது உன்
தடத்தை விட்டுச் செல்
உன் பார்வைக் கோணத்தை
நூற்றி எண்பத்திஓராவது டிகிரிக்கு திருப்பு
எல்லாம் புத்தம்
அமைதியாக இரு
கோடையும் வரும்
புல்லும்தானாக வளரும்.

4 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

காதல் பழமொழி -- 2

10 comments
நான் கொடுத்த
காதல் பழமொழி -- 2
காதல் பழமொழி -- 2
காதல் கடிதத்தை - நீ
படிக்கவும் இல்லை
கிழிக்கவும் இல்லை
ஆனால் கையில் வைத்து
பெருமைப்பட்டுக் கொள்கிறாய்
இதுவன்றோ நாய்பெற்ற
தெங்கம் பழம்!!

10 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

என்ட்ரோபி(entropy)

No comments
                              வெப்ப இயக்கவியலின்(Thermo dynamics)  இரண்டாம் விதி.உலகில் பல விஞ்ஞானிகளால் பலவித அர்த்தங்கள் சொல்லப்பட்டு இன்னும் பலரால் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட விதி என்றும் சொல்லலாம்.இன்னும் பல ஆராய்ச்சிகள் இந்த விதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

                              குறிப்பாக பிரபஞ்சத்தின் தோற்றம்,முடிவு சம்பந்தமான ஆய்வுகளுக்கும்,கோள்கள்,நட்சத்திரங்கள் ,மனித இனத்தின் தோற்றம் என எல்லா இடங்களிலும் மேற்கோள் காட்டப்பயன்படும் விதி.நோபல் பரிசுக்கென சிலர் இன்னும் இவ்விதியை வைத்து மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

விதி

என்ட்ரோபி(entropy) என்பது ஒரு அமைப்பின்(System)  ஒழுங்கற்ற அமைப்பை(Disorder) பற்றி கூறுவது.

(அல்லது)

ஒரு அமைப்பிற்கு(System) கொடுக்கப்படும் ஆற்றலுக்கும்(q) அதன் வெப்பநிலைக்கும்(T) உள்ள விகிதம் (q/T)ஆகும்


                              பள்ளியில் நாம் படித்த ஒரு சின்ன அறிவியல் விதி வெப்பம் சூடான இடத்தில் இருந்து குளிர்ந்த இடத்தை நோக்கிப் பரவும்.ஆனால் நாம் எப்போதாவது ஏன் வெப்பம் ஏன் குளிர்ந்த இடத்திலிருந்து சூடான இடத்தை நோக்கி பாயக்கூடாது என கேட்டதுண்டா? பரவாயில்லை இப்போது கேட்போம் ஏன் பாயக்கூடாது?

ஒரு சோதனை :

குளிர்ந்த பனிக்கட்டியில் உள்ள மூலக்கூறுகள்(molecules) ஒரு நிலைத்தன்னையுடன் குறைந்த பட்ச ஓர்  ஒழுங்கமைப்பில்(Order) இருக்கும்.

என்ட்ரோபி(entropy)
என்ட்ரோபி(entropy)


ஓர் சூடான  கம்பியில் உள்ள மூலக்கூறுகள்(molecules) அதிக ஆற்றலால் அதிக இயக்க ஆற்றலைப்(kinetic energy) பெற்றிருக்கும்.அதனால் ஒன்றின் மீது ஒன்று மோதி ஓர் ஒழுங்கற்ற அமைப்பை(Disorder பெற்றிருக்கும்.

இப்போது சூடான கம்பியை  பனிக்கட்டியில்விடும்போது கம்பியில் உள்ள அதிக ஆற்றல் மூலக்கூறுகள் பனிக்கட்டி மூலக்கூறுகளை மோத ஆரம்பிக்கும் .கம்பியின் அதிக ஆற்றல் மூலக்கூறுகள் தங்கள் ஆற்றலை பனிக்கட்டி மூலக்கூறுகளின் மீது மோதி செலுத்தும்.இதனால் வெப்பம் அதிகரித்து பனிக்கட்டி உருக ஆரம்பிக்கும் அதன் மூலக்கூறு அமைப்பும் ஒழுங்கிலிருந்து(Order)   ஒழுங்கற்ற(Disorder) அமைப்பை நோக்கி நகர ஆரம்பிக்கும்.

ஏற்கனவே  சூடான கம்பியின் என்ட்ரோபி(entropy)(ஒழுங்கற்ற தன்மை) அதிகம் இருந்தது இப்போது வெப்ப ஓட்டம் காரணமாக பனிக்கட்டியின்  என்ட்ரோபி (ஒழுங்கற்ற தன்மை) அதிகரித்து விட்டது.மொத்த என்ட்ரோபி ஏற்கனவே இருந்ததை விட இப்போது அதிகரித்துவிட்டது.

கேள்வியின் பதில் :

சூடான கம்பியின் மூலக்கூறுகள் தனது அதிகப்படியான ஆற்றலை இழந்தால் தான் சமநிலை அடையமுடியும் .அதனால் அதிகப்படியான ஆற்றலை பனிக்கட்டியின் மூலக்கூறுகளிடம் இழந்து சமநிலை(Equilibrium) அடைகிறது.இதனால் வெப்பம் அல்லது ஆற்றல் எப்போதும்  அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்தை நோக்கி பாயும்.

என்ட்ரோபி(entropy)
என்ட்ரோபி(entropy)



ஒரு அமைப்பின் என்ட்ரோபி(ஒழுங்கற்ற  அமைப்பு) எப்போதும் அதிகரிக்கும் அல்லது ஏற்கனவே இருந்த மதிப்பாக இருக்கும்.ஆனால் குறையவே குறையாது.

மிக முக்கியமான ஒரு விதி இயற்கை எப்போதும் ஒழுங்கிலிருந்து ஒழுங்கற்ற அமைப்பை நோக்கியே செல்லும்.ஆனால் ஒழுங்கற்ற அமைப்பிலிருந்து ஒழுங்கை நோக்கி செல்ல வெளியிலிருந்து ஆற்றல் அல்லது வேலை செய்ய வேண்டும்.

 உதாரணங்கள் : 

சிதறிய செங்கற்கள்  ஒழுங்கற்ற அமைப்பில் இருக்கும்.இப்போது என்ட்ரோபி அதிகம் உள்ளது.அதை ஒழுங்காக அடுக்க நாம் நமது ஆற்றலை வேலையாக செலவழித்தால் ஒழுங்காகமாறிவிடும்.இப்போது  செங்கற்களின்  என்ட்ரோபி குறைந்து விட்டது.


என்ட்ரோபி(entropy)
என்ட்ரோபி(entropy)
கவனிக்க :

என்ட்ரோபி குறையவே குறையாது என்று சொன்னேன் ஆனால் இப்போது குறைகிறதே என நீங்கள் கேட்கலாம்.இங்கு தான் பல அறியாமை தவறுகள் நடக்கின்றன.மொத்த அமைப்பை பார்க்க வேண்டும்.நாம் ,செங்கள் ,சுற்றுச்சூழல் மொத்ததையும் ஓர் அமைப்பாக கருதவேண்டும்.செங்களை அடுக்க ஆற்றலை செலவழித்து  நாம் வேலை செய்கிறோம் .வெப்பத்தினால் நமது என்ட்ரோபி அதிகரிக்கிறது.செங்களின் என்ட்ரோபி குறைக்க  நாம் அதிக வேலை செய்து நமது என்ட்ரோபியை  அதிகரிக்கிறோம்.இதனால் மொத்த என்ட்ரோபி அதிகரிக்கிறது.


முக்கியவிதி :

 என்ட்ரோபி செயல்பட ஒரு அமைப்பு(System) புறவிசை(External factors) எதுவும் பாதிக்காதாகவும்,மூடியதாகவும்(closed), தொடர்ந்து மாறிக்கொண்டே(changing)  இருக்க கூடியாதாகவும் இருக்க வேண்டும்.

புறவிசை(External factors)  எதுவும் பாதிக்காத ஒரு அமைப்பு(System)  நேரம்(Time) ஆக ஆக எப்போதும் ஒழுங்கிலிருந்து(Order) ஒழுங்கற்ற(Disorder) அமைப்பை நோக்கியே செல்லும்.

 என்ட்ரோபி(entropy)  எப்போதும் ஒழுங்கமைப்பை(Order) பற்றி கூறுகிறது ஒழுங்கைப்பற்றி(disipline) அல்ல.

மேலும் படிக்க : 






http://mapyourinfo.com

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

தமிழ்மகனே கண்ணுறங்கு

6 comments
கண்ணே ஒரு பாடல்
தமிழ்மகனே கண்ணுறங்கு
தமிழ்மகனே கண்ணுறங்கு
காதோரம் நான் பாட
கண்ணே கண்ணுறங்கு
கன்னித்தமிழ் நீகேளு!

பூவே புதுமலரே
பூவில் மலர்ந்த பூந்தேனே
புதுராகம் நான் பாட
பூந்தேனே கண்ணுறங்கு!

மார்கழி குளிர்காத்து
உன்னை தீண்டாமல்
இதமாய் அணைப்பேன்
அந்த கதகதப்பில்
பைங்கிளியே கண்ணுறங்கு!

அம்புலி நீ விளையாட
நிலவெல்லாம் சேர்த்துவைப்பேன்
உன்பசி நான் போக்க
வட்டதோசை சுட்டு வைப்பேன்
நீதிக்கதை நான் சொல்ல
நிலவே நீ கண்ணுறங்கு!

கூடி விளையாட
அத்த மக இருக்க
ஓடி விளையாட
ஆவாரம்பூ காடிருக்கு
ஊர்க்கதைகள் நான் சொல்ல
ஊர்க்கிளியே கண்ணுறங்கு!

தாய்மொழி நான் சொல்ல
கனிமொழி நீ பேச
தமிழ்மொழிதான் வளர
தாய்மொழி நீ கற்று
தரணி ஆள்வாய்
தமிழ்மகனே!

6 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

கடவுள் வாழ்த்து

6 comments
என்னுடைய இந்த 150 பதிவை கடவுளுக்கு சமர்ப்பிக்கிறேன்.

கடவுள் வாழ்த்து
கடவுள் வாழ்த்து
அலை அலையாய்
ஆயிரம் பிறவிகள்
கரை இல்லாத
இப்பிறவி பெருங்கடலில்
கரை சேர
இப்பிறவி அளித்த
இறைவா போற்றி!

உத்தமர் தன்வரம் கொடுக்க
உத்தமி தன்மகனாய் பிறக்க
வரம் அளித்த
இறைவா போற்றி!

நான் அழ தான்அழுது
நான் விழ தான் கைதூக்கிய
உடன்பிறப்புகளை அளித்த
இறைவா போற்றி!

இவ்வுலகை இனிதாக்க
வனப்பும் வலிமையுமிக்க
உடலை அளித்த
இறைவா போற்றி!

தன்னுணர்வை தானறிந்து
உள்ளுணர்வால் உனையறியும்
அறிவைக் கொடுத்த
இறைவா போற்றி!

அறிவில் மாணிக்கமாய்
உன்னில் ஒருபாதியாய்
குருவை அளித்த
இறைவா போற்றி!

சுற்றும் உலகை சுவைத்தறிய
ஊன்றுகோலாய் ஊன்றிநடக்க
சுற்றம் கொடுத்த
இறைவா போற்றி!

பேரழகும் பெருங்குணமும்
பாருலகில் பைங்கிளியாயும்
மனைவி அளித்த
இறைவா போற்றி!

என்பெருமை தான்  தூக்க
கடைசியில் கால்தூக்க நன்
மக்கட்பேறு அளித்த
இறைவா போற்றி!

ஆயிரம்பேர் வந்தாலும்
ஆயிரம்தான் சொன்னாலும்
தன்னலம்தான் பாராமல்
என்னலம்தான் பார்க்கும்
நண்பனை அளித்த
இறைவா போற்றி!

அழகு அழகு
பைங்கிளியின் பேச்சழகு
அழகுக்கெல்லாம் அழகு
பைங்கிளியின் தமிழ் பேச்சழகு
திட்டினாலும் வாய்மணக்கும்
தமிழ்மொழி அளித்த
இறைவா போற்றி!

கல்லில் உனைக்கண்டேன்
பசும்புல்லில் உனைக்கண்டேன்
என்னில் உனைக்கண்டேன்
தமிழாய் உனைக்கண்டேன்
உருண்டோடும் பிரபஞ்சத்தில்
ஒர் ஒழுங்காய் உனைக்கண்டேன்
தாய்மையில் உனைக்கண்டேன்
அன்பில் உனைக்கண்டேன்
நட்பில் உனைக்கண்டேன்
துள்ளிவரும் நாய்க்குட்டியின்
நன்றியில் உனைக்கண்டேன்
உன்னைக்காண என்னைப்படைத்து
உன்னையறியும் உணர்வைக் கொடுத்து
உன்னைப்பாடும் அறிவை அளித்த
இறைவா உன்பாதம் பணிந்து
உன்னை வணங்குகிறேன்.






6 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

நீ மட்டுமே உண்மை

9 comments
உடலை இறுக்கி
வில்லாய் வளைத்து
நரம்பை முறுக்கி
நாணாய் மாற்றி
கேள்விகணைகள் தொடுத்திடு
உன்னைச் சுற்றிய வேலிகளை
கேள்விகணைகள் உடைக்கட்டும்

மனிதா மனிதா விழித்துக்கொள்
நீ மனிதன் என்பதை ஒப்புக்கொள்
இன்னொரு வாழ்வில்லை நினைவில்கொள்
வாழ்க்கை வாழ்வதை கற்றுக்கொள்

உடைந்த கண்ணாடி
முழுபிம்பம் காட்டாது
உடைபட்ட உன்மனம்
உன்பிம்பம் காட்டாது
பிரிவினை சேற்றில்
கால் வைத்தபின்
கரைசேர்வது எப்போது

தனிமனித கொள்கைகள்
காலைப் பனித்துளி
கதிரவன் வந்ததும்
காற்றில் பறந்துவிடும்
உன்கண்ணை மூடிக்கொண்டு
அடுத்தவன் கண்ணில்
பார்ப்பது மடத்தனம்
கடன் வாங்கிய அறிவு
கரை எப்போதும் சேர்க்காது

எறும்புக்கென்ன பாடம்
குயிலுக்கேது பயிற்சி
எருமைகிருக்கும் பொறுமை
உனக்கில்லை எருமை
பெருமைபேசும் எருமை
உலகில் இருந்தால் மடமை

உன்னை விதைத்து
உன் சுதந்திரத்தை அறுவடைசெய்!
உன் தவறை நீயே செய்!
விழிப்போடு இரு!

கரை இல்லா வாழ்க்கைகடலிலே
அறிவென்னும் படகிலேறி
விழிப்பென்னும் விளக்கேற்றி
நீயே துடுப்பிட்டு கரைசேர்.

9 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

காதல் பழமொழி -- 1

12 comments
பூவுக்குள் காதலை வைத்து
எனக்குள் உன்னை வைத்து
என் காதலை நீட்டினேன்
நீயோ நாற்றமுணர்ந்த மூக்கைப்போல
முகத்தை திருப்பிக் கொண்டாய்
அப்போதுதான்  உணர்ந்தேன்
கழுதைக்கு தெரியுமா
கற்பூரவாசனை என்னவென்று!!

12 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

காதல் விளம்பரம்

6 comments
ஒவ்வொரு முறையும்
நிலவுக்கு வண்ணமடித்து
விளம்பரம் செய்கிறேன்
உன்னைக் காதலிகிறேன் என்று
நீ பார்க்கிறாயா?இல்லையா?

6 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

நன்றிசொல் காதலுக்கு

6 comments
காதல் வந்தால்
காற்றின் ஆக்சிஜன்
குறைந்து போகும்
கால்கள் மறையும்
சிறகுகள் முளைக்கும்
காற்றில் பறப்பாய்
இதே உடலில்
மறுபிறவி எடுப்பாய்

கலைக்கண் திறக்கும்
தேடல் ஆரம்பிக்கும்
வார்த்தைகளை வளைப்பாய்
வண்ணங்களில் தோரணம் கட்டுவாய்
மலரை ரசிப்பாய்
நிலவை முட்டுவாய்
இதயத்தை பங்குபிரிப்பாய்
தனி உலகில்
வாழ ஆரம்பிப்பாய்
மண்ணைமுட்டி வெளிவந்த
புதியவிதை போல
பூமியை பார்ப்பாய்

எமனுடன் போட்டிபோட்டு
உலகம் சுற்றிவருவாய்
கண்ணில் கண்ட
கற்களை சிலையாக்குவாய்
ஒளியின் வேகத்தில்
கற்பனை செய்வாய்
பூமி சிறியதாகி
பிரபஞ்சத்தில் பறப்பாய்
அன்பென்னும் பிரபாகம்
பொங்கிப்பெருகி கருணையால்
உலகை நனைப்பாய்
ஆதலால் நன்றிசொல்
காதலுக்கு!

6 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

தமிழனின் பொங்கல்

4 comments
மேகம் மழைபொழிய
நிலமெல்லாம் ஈரமாக
கையில் கலப்பை எடுத்து
கம்பீர காளை பூட்டி
இடுப்பில் கோவணம் கட்டி
ஆழ உழுத்திட்டோம்
மார்கழியில் கதிரறுக்க

மாரியம்மா துணையிருக்க
மும்மாரி மழைபொழிய
கதிரவன் துணையிருக்க
மார்கழியும் வந்ததடி
மனசெல்லாம் குளிர்ந்ததடி
பசித்த வயித்துக்கெல்லாம்
வயிறாற சோறுபோட
பூமித்தாய் கொடுத்ததடி

தையும் வந்ததடி
பொங்கலும் வந்ததடி
பொங்கலாம் பொங்கல்
நாளுநாள் பொங்கல்
அள்ளிகொடுத்த அன்னைக்கு
தமிழனின் பொங்கல்

பொங்கலாம் பொங்கல்
போகிப் பொங்கல்
பசியெல்லாம் போக்கி
மனஅழுக்கெல்லாம் போக்கி
பழசெல்லாம் பறந்துவிட
புதுவெள்ளம் பாய்ந்துவிட
மக்கள் குறைபோக்க
தமிழனின் பொங்கல்
போகிப் பொங்கல்

பொங்கலாம் பொங்கல்
தைப் பொங்கல்
அன்னம் கொடுத்த
பூமி அன்னைக்கு
நன்றி தெரிவிக்கும்
தமிழனின் பொங்கல்
தைப் பொங்கல்

பொங்கலாம் பொங்கல்
மாட்டுப் பொங்கல்
களத்து மேட்டிலும்
ஜல்லி கட்டிலும்
துள்ளி விளையாடிய
காளைகளுக்கு
நன்றி தெரிவிக்கும்
தமிழனின் பொங்கல்
மாட்டுப் பொங்கல்

பொங்கலாம் பொங்கல்
கணுப் பொங்கல்
உற்ற சுற்றங்களை
வரவேற்றும்
களைபிடுங்கி
நாத்து நட்டு
கதிரறுத்து சுமைதூக்கிய
பெண்டீருக்கும்
நன்றி தெரிவிக்கும்

தமிழனின் பொங்கல்
கணுப் பொங்கல்

பொங்கலும்தான் பொங்குது
சந்தோஷம் பொங்குது
பசித்த உயிர்க்கெல்லாம்
சந்தோஷம் பொங்குது
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்


அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

4 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

மொழி வணக்கம்

3 comments
ஒலிக்கும் மொழிகளில்
இனிக்கும் மொழியாய்
இசைக்கும் ஒலிகளில்
இனிக்கும் தேனாய்
பிறந்த மழலை
மெல்லும் சொல்லாய்
கட்டிக் கரும்பில்
இனிக்கும் தேனாய்

வானாய்,மண்ணாய்
ஊனாய்,உயிராய்
அன்னை ஊட்டிய
சுவை அமுதாய்
கொஞ்சும் மகளிர்
இதழில் பெருகும்
இன்பத்தேனாய்
வாழ்விலும் வளர்ச்சியிலும்
உன்மடி சாய்த்து
என்னை வளர்க்கும்
தமிழ் அன்னையே
உன்னை வணங்குகிறேன்!


3 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

என்ன செய்யபோகிறாய்?

4 comments
உனக்காக கவிதை செய்து
வார்த்தைகளும் வற்றிவிட்டன
உனக்காக அழுது
கண்களும் வற்றிவிட்டன
இப்போது உடலும்
வற்ற ஆரம்பித்துவிட்டது
குறைந்தபட்சம் உன்கூந்தல்
பூக்களையாவது என் கல்லரையின்மேல்
வைத்துவிட்டு போ!
உன்னை அணைக்க
நினைத்த மார்பு
காய்ந்த பூக்களையாவது
அணைத்துவிட்டு போகட்டும்!




4 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

ஜன்னல்

6 comments
காலைத்தென்றல்
குயிலின் சத்தம்
மாலைச் சூரியனென
பூத்துக்குலுங்கிய
என் வீட்டு ஜன்னல்
உன்னைப் பார்த்ததுமுதல்
உன் நிழற்படம் ஆனதடி.

இப்போதும் அழகு
கொப்பளித்துக் கொண்டிருக்கிறது
ஜன்னலின் வெளியே
ஆனால் ரசிக்க மனமில்லை!

அழகாய் தெரிந்த ஜன்னல்
சிறையாய் தெரிகிறது
உன்னைப் பார்த்தது முதல்!

6 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

காலம்

No comments
காலமென்னும் ஆற்றினிலே
கூழாம் கற்களாய்
ஓடுகின்ற வாழ்க்கையிது
யார் சொல்லியும் கேட்பதில்லை
யாருக்கும் நிற்பதில்லை
விழித்தவன் கரை சேர்கிறான்
மற்றவன் அடித்துச் செல்லப்படுகிறான்

முன்னது முடிந்தது
பின்னது வரப்போவது
இரண்டுக்குமிடையில்
ஒரு புள்ளி ஊஞ்சலாட்டம்
இந்த ஓடம்
எல்லையில்லா வெளியில்
எல்லை தெரியாமல்
அசைந்துகொண்டே முடிகிறது.

சுருக்கவும் வழியில்லை
நீட்டவும் வழியில்லை
கரைபுரண்ட வெள்ளமாய்
கண்ணுக்கு சிக்கமால்
பலரின் வாழ்க்கையை கரைத்து
கையில் சிக்காமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

விதை

4 comments
நீரில்லா பாலையிலே
நாவல் மரமொன்று
வெயிலோடு போராட
பழுத்த நாவலொன்று
சூரைக்காற்றில் மண்ணில் விழ

சுட்டெரிக்கும் வெயிலும்
கொந்தளிக்கும் மணலும்
பழத்ததனை வறுத்தெடுக்க
நீர்வற்றி , உடல் வற்றி
விதையென ஆனதென்ன?
கனலின் நடுவே பிறந்த
பிள்ளையை வெயிலே
வறுத்தெடுப்பதென்ன?

அப்பக்கம் வந்ததோர்
வெள்ளாட்டுக் கூட்டமோ
பிள்ளையை மித்தெடுக்க
அதிலோர் வெள்ளாடு
பிள்ளையை மேய்ந்துவிட
வெள்ளாட்டின் குடலில்
பிள்ளையின் போராட்டமென்ன?

வெள்ளாட்டுக் கூட்டத்தை
இடையனோ வயலில் பட்டியிட
வெள்ளாடோ புழுக்கையிட
விதையும்தான் விழுந்ததடி
உழவனின் மிதிகொஞ்சம்
காளையின் மிதிகொஞ்சம்
விதையும்தான்  புதைந்ததடி மண்ணிலே!

கார் இருள் , கடும் அழுத்தம்
அம்மாவின் கருவறையில்
இருந்த அதே சூழல்
அப்போது சுகமாய்
இப்போது போராட்டமாய்
தோலெல்லாம் கிழிந்து
உடலெங்கும் ரணமாய்
உயிர்வாழும் வைராக்கியம் எஞ்சிருக்க

வந்ததோர் மழைகாலம்
ஒருதுளி மழைநீர் உற்சாகப்படுத்த
மண்ணை துளைத்து
பொங்கி எழுந்தது
விண்ணைமுட்ட!

4 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

முதியோர் இல்லம்

1 comment
வாழ்க்கையென்னும் கடலில்
போராடி கரைசேர்த்தவர்களுக்கு
பிள்ளைகளின் அன்புபரிசு
முதியோர் இல்லம்!

1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

காதல் ரணம்

No comments
ரசித்த இதயத்தை
துடிக்க வைக்கிறாய்
மலர் கொடுத்த என்னை
முள்ளால் குத்துகிறாய்
பஞ்சணையில் தூங்கியவன்
இப்போது பனிகொட்டும் ரோட்டில்
சிறகடித்து பறந்தவன்
சிறகொடிந்து நிற்கிறேன்
போதும் கொன்றுவிடு!!

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

பார்வையற்ற ஜோடி

No comments
விழியிருந்தும் ஒளியில்லை
இருந்தாலும் தடையில்லை
வழிகாட்டி ஒருகையில்
வாழ்க்கைத்துணை மறுகையில்
அன்பின் ஒளியில்
தொடர்கிறது வாழ்க்கைப்பயணம்!

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..