அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

சீரற்ற மாற்றமும்,காணாமல் போனவர்களும்

3 comments
வரலாற்றைத் திரும்பி பார்க்கும் போது மாபெரும் நாகரிகங்கள் எனத் தன்னை மார்தட்டிக் கொண்டவை பல இருந்த இடம் தெரியாமல் மண்ணோடு
மண்ணாக புதைந்து போய் உள்ளன.இதே போல் பல சாம்ராஜ்ஜியங்கள் ,அரசர்கள்,தனி மனிதர்கள் என பலரும் கணப்பொழுதில் காணாமல் போய் உள்ளனர்.இந்த அழிவு, வியாபாரம்,தொழில்நுட்பம் என பல துறைகளுக்கும் பொருந்தும்.நேற்று வரை கார்,பணம்,வசதி என பறந்து கொண்டிருந்தவர் சட்டென்று நடு ரோட்டிற்கு வந்திருப்பார்.நேற்று வரை உச்சத்திலிருந்த தொழில்நுட்பம் இன்று குப்பைக்கு போயிருக்கும்.பல ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்து ,பங்கு மார்க்கட்டில் உச்சத்தில் இருந்த கம்பெனி இன்று காணாமல் போயிருக்கும்.இவையெல்லாம் ஏன் நடக்கின்றன?இவற்றின் பின்னால் ஏதாவது அறிவியல் காரணம் உள்ளதா?இந்த காணமல் போனவர்கள் பட்டியலில் நாமும் சேராமல் இருப்பது எப்படி?

பத்து வருடத்திற்கு முன்னால் இந்தியவில் உள்ள ஒவ்வொருவர் கையிலும் கைபேசியை கொண்டு வந்து,அன்று கைபேசி மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்த கம்பெனி நோக்கியா.இன்று காணமல் போய்விட்டது.ஏன் காணாமல் போனது?நோக்கியாவின் அழிவைப் பற்றி பேச வேண்டுமானால், இரண்டு முக்கியமான விசயங்களைப் பற்றி பேச வேண்டும்.அதில் ஒன்று ஆப்பிளின் ஐபோன், மற்றொன்று கூகுளின் ஆண்டிராய்டு.ஆறு வருடத்திற்கு முன்னால் எல்லா மக்களின் கையிலும் கைபேசியை கொண்டு சேர்த்திருத்திருந்தன கைபேசி தயாரிக்கும் கம்பெனிகள். ஆனால் அடுத்த கட்ட தொழில்நுட்பம் என்னவென்று தெரியாமல் கைபேசி தயாரிக்கும் கம்பெனிகள் முழித்திக்கொண்டிருந்தன.அதில் நோக்கியாவும் ஒன்று.அப்போது கைபேசியின் அடுத்த பரிமாணத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது ஆப்பிளின் ஐபோன்.தொடுதிரை ,கண்கவர் பொத்தன்கள் ,தொழில் நுட்ப நேர்த்தியென கைய்டக்க கணிப்பொறியாகவே கைபேசியை அறிமுகப்படுத்தினர்.இதை அனைத்து கைபேசி தயாரிப்பு கம்பெனிகளும் காப்பியடிக்க முயன்று மண்ணை கவ்வின.காரணம் ஆப்பிளின் தொழில்நுட்ப நேர்த்தி.இந்த இடைப்பட்ட காலத்தில் நோக்கிய சரியத்தொடங்கியது.தன்னை காப்பாற்றிக்கொள்ள மைக்ரோசாப்ட்டுடன் இணைய திட்டமிட்டது.மற்ற கம்பெனிகள் மாற்றத்திற்காக காத்திருந்தன.

அப்போது தான் ஆப்பிளின் தொழில்நுட்பத்திற்கு சவால்விட கூகுள் தயாரானது.அதாவது புதிய கைபேசி இயங்குதளம் ஆண்டிராய்டை இலவசமாக வெளியிட் தயாரானது.ஆண்டிராய்டை பொருத்தவரை தொழில்நுட்பம் முற்றிலும் இலவசம்.அதுவும் உயர்ந்த தரத்தில்.கூகுளின் திட்டமே அப்போது உச்சத்திலிருந்த ஆப்பிளை வீழ்த்துவது தான்.வாய்ப்புகளுக்காக காத்திருந்த அலைபேசி கம்பெனிகள் ஆண்டிராய்டை மொய்க்கத்தொடங்கின.அதுதான் அலைபேசி தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறையின் ஆரம்பம்.கூகுள் ஆண்டிராய்டின் புண்ணியத்தால் குப்பனும் சுப்பனும் கைபேசி தயாரிக்கும் அளவுக்கும் தொழில்நுட்பம் எளிதானது.இங்கே நோக்கியாவின் நிலை பரிதாபம்.ஏற்கனவே மைக்ரோசாப்டுடன் கைகோர்த்துவிட்டதால்,ஆண்டிராய்டு இயங்கு தள கைபேசியை உருவாக்க முடியவில்லை. கடைசியில் வாய்ப்புக்காக காத்திருந்த சாம்சங்கும்,சோனியும் கைபேசி மார்க்கெட்டை விழுங்கின.நோக்கியாவை மைக்ரோசாப்ட் விழுங்கியது.சரி இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் என்ன? இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

வியாபார அறிவியலில் இதை இடையூறான கண்டுபிடிப்பு(disruptive innovation) என்பார்கள்.அதாவது வியாபாரத்திலோ,பொருட்களை உருவாக்கு முறையிலோ அல்லது தொழில்நுட்பத்திலோ சிறு மாற்றங்கள் செய்து புதிய சந்தையை அல்லது புதிய பயனாளர்களை உருவாக்கி சந்தையின் உச்சத்தை தொடுவது.உதாரணமாக சீன சந்தை மலிவானது,தரம் குறைந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும்.ஆனால் சீனாவின் திட்டமே மலிவான விலையை காரணம் காட்டி சந்தையில் நுழைந்து மெதுவாக தரத்தை உயர்த்தி உலக சந்தையின் உச்சத்தை தொடுவதுதான்.ஆரம்பத்தில் தரத்தை காரணம் காட்டி சீனாவை பார்த்து சிரித்த நாம் இன்று சீனாவிடம் உலக சந்தை இழந்துவிட்டோம் என்பது தான் உண்மை.

நோக்கியாவின் கதையிலும் நடந்தது இது தான்.கைபேசியில் புதிய மாற்றங்களை உருவாக்கி மொத்த சந்தையை வளைத்தது ஆப்பிள்.அதில் இருந்து புதிய சந்தையை உருவாக்க கூகுள் தொழில்நுட்த்தில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி இலவச இயங்குதளத்தை உருவாக்கி சந்தையை தன் வசமாக்கிக்கொண்டது.இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருந்த நோக்கியா தன்னையே இழந்துவிட்டது.

இப்படிதான் தொழிலிலும் ,தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஏற்படும் சிறு மாற்றங்களை கவனிக்க தவறி மொத்தத்தையும் இழந்துவிடுகிறோம்.உங்கள் கடைக்கு எதிராக ஒருவர் வித்தியாசமான அணுகுமுறை முறையோடு சின்ன கடை விரித்தாலோ,அல்லது நீங்கள் வேலைபார்க்கும் இடத்தில் ஒருவர் வித்தியாசமான அணுகுமுறையை கடைப்பிடித்தாலோ அதை அலட்சியம் செய்யாதீர்கள்.அது உங்கள் அழிவுக்கே காரணமாகலாம். மற்றொரு கோணத்தில் சொன்னால் வாழ்க்கையில் நாம் உயரத்திற்கு போக சின்ன மாற்றங்களே போதும்.மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.மாறிக்கொண்டே இருங்கள்.மாற்றம் ஒன்றே மாறாதது.




3 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்?

7 comments
அசோகர் மரத்தை நட்டார். இதை இளம் வயதில் எத்தனை முறை படித்திருப்போம், எத்தனை முறை பரிட்சைகளில் எழுதி இருப்போம்.ஆனால் யாராவது அசோகர் எந்த மரத்தை நட்டார்?எதற்காக நட்டார் என்பதை படித்திருக்கோமா? அல்லது சிந்தனையாவது செய்திருக்கோமா என்றால் இல்லை தான் என்ற பதில் வரும்!
ஆனால் இதற்கான விடையை எஸ் ராமகிருஷ்ணன் தனது மறைக்கப்பட்ட இந்தியா என்ற தனது நூலில் விவரமாக பதிந்துள்ளார்.



நகரமயம் ஆவதும் வணிகப் பாதைகள் உருவாவதும் அசோகர் காலத்தில் பிரதான வளர்ச்சியாக இருந்தன.அதன் காரணமாக பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டன.அதை விட மரங்களை நடுவதை ஓர் அறமாக கருதியது பெளத்தம்.பயணிகள் இளைப்பாறவும்,இயற்கையை பாதுகாக்கவும் என்றுதான் அசோகர் சால மரங்களை நட உத்தரவிட்டார்.ஏன் சால மரம் என்ற கேள்வி எழக்கூடும். சால மரமானது பெளத்த சமயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.

புத்தரின் தாயாருக்கு பிரசவ வலி ஏற்பட்டு தன் தாய் வீட்டுக்கு போகும் வழியிலேயே ஒரு சால மரத்தடியில் புத்தர் பிறந்தார்.அதேப்போல புத்தர் இறந்தும் குசி நகரில் உள்ள ஒரு சால மரத்துக்கடியில் தான்.ஆகவே சால மரம் பெளத்த சமயத்தின் புனிதக் குறியீடுகளில் ஒன்று.

சால மர விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை மக்கள் பிரதானமாக பயன்படுத்தினர்.இதன் இழைகளை தைத்து உணவு சாப்பிட பயன்படுத்தினர்.ஆதிவாசிகள் இந்த மரத்தில் இருந்து வாசனைத் திரவியம் தயாரித்தனர். காய்ந்த சால மர இலைகள் விவசாயத்திற்கு உரமாக பயன்பட்டன.சால மரம் பூக்கும் காலத்தை, பழங்குடி மக்கள் விழாவாக கொண்டாடினர்.சால மரம்,புத்தரின் மறுவடிவமாக கருதப்படுவதே இதற்கான காரணம்.

போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றார் என்பதால்,மரங்கள் ஞானத்தை அடையவதற்கான மன ஒருமையை உருவாக்கக்கூடியவை என்று பெளத்த துறவிகள் நம்பினர்.இதன் காரணமாகவே அசோகர் மரங்களை நட்டார்.சால மரம் மருத்துவக் குணம் கொண்டது.இந்த மரத்தின் இலைகள் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானப் பிரச்சனை களைத்தீர்க்கும்.பல் வலியைக் குணமாக்கும் தன்மை கொண்டது.இதனால் பயணிகள் உடல் உபாதைகளைப் போக்கிக்கொள்ள சால மரங்கள் பெரிதும் உதவக்கூடும் என்பதால் ,இந்த மரங்களை வழி நெடுங்கிலும் வளர்த்து இருக்கின்றனர்.

இவ்வாறாக ஒரு மரத்தின் வரலாறை மறைத்து,அதன் காரணத்தை மறைத்து,வெறும் அசோகர் மரத்தை நட்டார் என்று கற்று தரும் நம் கல்வி முறை வியப்பின் சரித்திரம்.

7 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

கடவுளாகிய மனிதர்கள்

No comments
கல்லால் அடித்து ,
சிலுவையில் அறைந்து ,
கொன்று பின் ,கடவுளாக்கி
தொழும் இந்த மனிதர்களை
என்னவென்று சொல்வது.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..