அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

கனவு நாயகனுக்கு கண்ணீர் அஞ்சலி

No comments
சோக மேகம் அடி மனதில்
அடை மழை போல் கண்ணீரோ
இரு கண்களில்.

வார்த்தையில் வடிக்கமுடியாத
வாழ்க்கை வாழ்ந்து
வானுயர வளர்ந்து நின்றீர்.

ஐயா, மனிதனாய் பிறக்கிறோம்
உங்களைப்போல் மனிதனாகவே
இறந்தவர் சிலர்.

இரும்பைக் கூட்டி
எரிபொருள் கொடுத்து
விண்ணில் பறக்க விடும்
வித்தையைக் கற்றுக் கொடுத்தீர்.

இருண்ட நெஞ்சங்களுக்கு
தன்னம்பிக்கை கொடுத்து
விண்ணில் பறக்கும்
வித்தையைக் கற்றுக் கொடுத்தீர்.

சாதி, மத பேதம் பூண்ட
மனிதர்களுக்கிடையில்
பேத பாகுபாடின்றி வாழ்ந்தீர்.

இனிமையாக, எளிமையாக வாழ்ந்து
வாழ்க்கை பாடம் கற்றுக்
கொடுத்த ஆசானே.

வாழ்க்கையென்னும் இருண்ட காட்டில்
எதிர்கால விளக்கேற்றி
வழி நடத்திய தலைவனே.

நீர் சொன்ன பாதை நோக்கி
இதோ வருகிறது நாளைய பாரதம் . 

நிம்மதியாக போய் வா
கனவு நாயகனே.

நீர் விதைத்த இளைய பாரதம்
உன் பெயர் சொல்லும்
எப்போதும்.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..