அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

மனுநீதி

No comments
அப்பாவியை தூக்கிலிட்டு,
நீதி சாவதில்லையென்று,
மார்தட்டிக்கொண்டார்கள்
நீதியரசர்கள்.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

இதயத்திற்குள் போராட்டம்

1 comment
எனக்கு பிடித்த
புத்தகத்தை,
என் குழந்தை
கிழிக்கும் போது,
என் இதயம்
அணி பிரிந்து
சண்டையிடுவதை
உணர்கிறேன்.

1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

உயர்பரிமாண(Higher dimension) பூனை

No comments
பூனை நக்க
பாற்கடலும் வற்றுமோ?
வினவினான் ஒருவன்?

உயர்பரிமாண(Higher dimension)
பூனையென்றால்
பிரபஞ்சத்தையே நக்கலாம்
என்றேன்!!

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

எதார்த்த கணவன்

2 comments
நிலவிற்கு 
ராக்கெட் அனுப்பிவிட்டு, 
வீட்டிற்கு வந்தவனிடம்
 மனைவி சொன்னாள்? 
நேற்று வாங்கி வந்த
வெண்டைக்காய்
 சூத்தையென்று.

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

மனித தர்மம்

2 comments
கடித்த எறும்பின்
கருணை மனுவை
அதை கொன்ற பின்,
பரிசீலிக்கும்
மனித தர்மத்தை
என்னவென்று சொல்ல?



2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

'நான்' என்னும் 'கருங்குழி'

4 comments
யாரோ சொல்லி,
எனக்குள் எட்டிப்பார்க்க,
அங்கிருந்த கருங்குழி
என்னை உள்ளே இழுத்துக்கொண்டது.
இப்போது
என்னால் யாரையும்
பார்க்கமுடிவதில்லை.
யார் குரலையும்
கேட்கமுடிவதில்லை.
தயவு செய்து
உங்களுக்குள் எட்டிப்பார்க்காதீர்கள்.

4 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

கவிஞனின் கவிதை

2 comments
கடல் நீரில்
கால் நனைக்கும் போது,தன்
கால்கள் கரைவதை
உணரமுடியாத
கவிஞனின் கவிதை
ஆன்மாவில்லாத
வெற்றுடம்பு.

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

நீ நல்லவனா?

2 comments




நீ நல்லவனா?

என்று

கேட்டவனிடம் சொன்னேன்,

பொய்,

பொறாமை,

கோபம்,

வஞ்சம்,

ஏமாற்றம்,

தோல்வி,

போன்ற குப்பைகளால் ஆன,

கனத்த இதயம்

எனக்கும் உண்டு என்று.

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..