அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

எனர்ஜி டானிக்: கடினமாக அல்ல,புத்திசாலிதனமாக செயல்படுங்கள்

No comments
புத்திசாலிகள் உலகை ஆளுகிறார்கள்,
பலசாலிகள் அவர்களை பின் தொடர்கிறார்கள். 

கடுமையாக உழைத்தால் முன்னேறலாம்.புத்திசாலிதனமாக உழைத்தால் வேகமாக முன்னேறலாம்.கடுமையான உழைப்பும்,புத்திசாலிதனமும் இணையும் போது அற்புதம் நிகழ ஆரம்பிக்கும்.கடுமையாக எல்லோருக்கும் உழைக்க தெரியும்.ஆனால் எப்படி புத்திசாலிதனமாக செயல்படுவது?அதற்கு முன் நாம் எந்த வகையை சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

எதையும் யோசிக்காமல் செய்ய ஆரம்பித்தால் கடுமையாக உழைப்பவர் என கொள்ளலாம்.யோசித்து தெளிவான திட்டங்களை கையில் வைத்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தால் புத்திசாலிதனமாக செயல்படுபவர் என கொள்ளலாம்.இதில் நீங்கள் எந்தவகை என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

சரி எந்த விசயத்தையும் புத்திசாலிதனமாக அணுகுவது எப்படி?

  • நீங்கள் செய்ய வேண்டிய விசயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
  • நீங்கள் செய்ய வேண்டிய விசயத்தை சுலபமாகவும்,எளிமையாகவும் செய்யக் கூடிய ஒரு வழி உள்ளது என்பதை மனதார நம்புங்கள்.இந்த வார்த்தையை மனதுக்குள் திரும்ப திரும்ப சொல்லிக்கொள்ளுங்கள்.
  • உடனே சிந்திக்க ஆரம்பியுங்கள்,சிந்தனையில் வருபவற்றை மனதிலே குறித்துக்கொள்ளுங்கள்.எதையும் நல்லது,கெட்டது என சிந்தனை தடையில்லாமல் சிந்தியுங்கள்.
  • ஒரு சின்ன யோசனை கிடைத்த உடன் அதை உடனே திட்டமாக்குங்கள்.
  • இதைவிட ஒரு சிறப்பான, எளிய திட்டம் ஒன்று உள்ளது.அதையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும் என மறுபடியும் மனதிற்குள் சொல்லிக்கொள்ளுங்கள்.
  • இப்போது முதல் திட்டத்தை உருவாக்க என்னென்ன வழிமுறைகளை ,சிந்தனைகளை,பின்பற்றினோமோ அவற்றை மறுபடியும் பயன்படுத்தாமல் வேறு ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்.இதை திரும்ப திரும்ப செய்து பலதிட்டங்களை உருவாக்குங்கள்.
  • எல்லா திட்டங்களில் உள்ள நல்லது கெட்டதை உங்கள் உள்ளுணர்வால் ஆராய்ந்து, எல்லாவற்றையும் இணைத்து இறுதி திட்டத்தை உருவாக்குங்கள்.
  • உங்கள் திட்டத்தை யாரிடமாவது விளக்கி தேவையான மாற்றத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
  • திட்டத்தை நிறைவேற்ற கடுமையாக உழையுங்கள்.
எதையும் யோசித்து செய்வதுதான் புத்திசாலிதனம்.எப்படி யோசிக்க வேண்டும் என்பதைதான் மேலே பார்த்தோம்.மேலே சொன்னவற்றை படிக்கும் போது சில ஆச்சர்யமான மனம் சார்ந்த விசயங்களை பார்க்கலாம்.
நம் மூளைதான் எல்லாவற்றையும் செய்கிறது.அது சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் சிறப்பாக ஊக்கப் படுத்தவேண்டும்.மற்றொன்று நம் உள்ளுணர்வு.தேர்தெடுக்கும் போது பகுத்தறிவைவிட உள்ளுணர்வுதான் சரியானதை தேர்ந்தெடுக்கிறது என அறிவியல் சொல்லுகிறது.எனவே நாம் புத்திசாலிதனமாக செயல்பட மனமும்,உள்ளுணர்வும் முக்கியம்.

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். இருவரும் மரவெட்டிகள்.அதில் ஒருவர் பலசாலி. மற்றொருவர் புத்திசாலி.காலையில் மரம் வெட்ட சென்று மாலையில் திரும்பி வரும்போது யார் அதிகமாக மரம் வெட்டியது என எண்ணிப் பார்ப்பார்கள்.எப்போதும் புத்திசாலி நபர் தான் நாளின் இறுதியில் அதிக மரம் வெட்டியிருப்பார். இதை பார்த்த பலசாலி புத்திசாலியிடம் காரணத்தை இவ்வாறாக கேட்டார்.

"நான் காலையிலிருந்து மாலைவரை இடைவிடாமல் மரம் வெட்டிக் கொண்டிருக்கிறேன். நீ யோ இடைவெளி விட்டு வெட்டிக் கொண்டிருக்கிறாய். ஆனால் நாளின் இறுதியில் நீதான் ஜெயிக்கிறாய். அதன் ரகசியிம் என்ன?" என்றார் ?

அதற்கு அந்த புத்திசாலி சொன்னார்
"நாம் தொடர்ந்து வெட்டும் போது சிறிது நேரத்தில் உடலும் மனமும் சோர்ந்து விடுகிறது, கோடாரியும் மழுங்கி விடுகிறது. அதனால் சிறிது ஓய்வு எடுத்து மரம் வெட்டுகிறேன்.ஓய்விலும் எனது கோடாரியை நான் கூர் தீட்டிக் கொண்டிருப்பேன். இதனால் மறுபடியும் முழு வீச்சுடன் வெட்ட ஆரம்பிப்பேன். இதனால் நாள் முழுவதும் முழு தெம்புடன் மரம் வெட்டுகிறேன். நாளின் இறுதியில் அதிகமான மரக்கட்டைகளை சேகரிக்கிறேன்.


மேலே உள்ள கதையில் சொன்னது போல் கடின உழைப்பை விட .புத்திசாலிதனத்துடன் கூடிய கடின உழைப்பே உண்மையான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எதிலும் வெற்றி பெற கடினமாக அல்ல,புத்திசாலிதனமாக செயல்படுங்கள்



No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..