அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

குழந்தையும் பொம்மையும்

No comments

நம்மை பொறுத்தவரை பொம்மைகளுக்கு உயிர் இல்லைதான்.ஆனால் ஒரு குழந்தை பொம்மையுடன் விளையாடுவதை பார்த்தால் அது தவறு என்பது புரியும்.அந்த குழந்தை பொம்மையுடன் பேசும்,சிரிக்கும்,அழும்,தான் சாப்பிடும் சாப்பாட்டை ஊட்ட முயற்சி செய்யும்,அதற்கு ஆடை அணிவிக்கும்.பொம்மை பேசாதுதான்.ஆனாலும் நாள் முழுவதும் விளையாடும்.அதற்கு யாரும் தேவை இல்லை.இரவில் அதனுடனே தூங்கும்.உண்மையில் எல்லா குழ்ந்தைகளும் கடவுள் தான்.அவர்கள் உயிரற்ற பொம்மைகளுக்கு உயிர்கொடுப்பதனால்.ஆனால் வளர்ந்தவுடன் அதே குழந்தை தன் கடவுள் தன்மையை தொலைத்துவிட்டு மனிதனாகி தான் தொலைத்த கடவுளை தேடி தேடி நொந்து சாகிறது.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

கதைகேட்டு நீதி சொல்லுங்கள் - 2

No comments
ஒரு நாள் கடவுள் பூமிக்கு வர ஆசைப்பட்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார்?வெளியே வந்த ஆளிடம் நான் தான் கடவுள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்?வீட்டுக்காரர் மிகுந்த கடுப்புடன் இவ்வாறு கூறினார் "முன்பு எல்லாம் கடவுளின் பெயரைச் சொல்லி பிச்சையெடுத்தீர்கள்!இப்போ கடவுள் என்று கூறி பிச்சையெடுக்க ஆரம்பித்து விட்டீர்களா? என்று சீறினார்.கோபம் கொண்ட கடவுள் கீழி இறங்கி ரோட்டில் நடக்க ஆரம்பித்தார்.வழியில் அவர் இரு குடிகார குடிமகன்களிடம் நான் தான் கடவுள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்?அதற்கு ஒருவன் சரிதான் போ நாங்கள் யார் என்று நினைத்தாய்? நான் யேசு!இவன் முகமது!என்று கூறினான்.நொந்தே போய்விட்டார் கடவுள்!!


இதன் நீதி : ?????

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

கதைகேட்டு நீதி சொல்லுங்கள் - 1

No comments
ஒரு காட்டில் வாழ்ந்த சிங்கம் ஒன்றுக்கு தீடிரென ஒரு சந்தேகம் வந்தது.காட்டில் யார் பல சாலி என்று?உடனே அது ஒரு எலியிடம் சென்று கர்ஜனையுடன் கேட்டது உடனே அது ராஜா உங்களைவிட காட்டில் யாரும் பலசாலி உண்டா என திருப்பிக்கேட்டது?இதனால் சந்தோஷம் அடைந்த சிங்கம் இன்னும் சற்று கம்பீரத்துடனும்,கர்ஜனையுடன் அந்த பக்கம் வந்த மானைக் கேட்டது.மானும் பயத்துடன் ராஜா உங்களைவிட காட்டில் யாரும் பலசாலி உண்டா என்றது.இவ்வாறாக எதிர்ப்பட்ட மிருகங்களை எல்லாம் கேட்டது.ஒரே பதில் எல்லாரிடம் இருந்து வந்தது.அந்த நேரத்தில் யானை ஒன்று அந்த பக்கம் வந்தது.அதைப் பார்த்த சிங்கம் மிகுந்த அலட்சியத்துடனும்,கர்வத்துடனும் ஏ யானையே ! இந்த காட்டில் நான் தான் பலசாலி என்பதை ஒப்புக்கொள்கிறாயா என்றது?யானை சட்டைசெய்யாமல் நடந்தது.கோபம் அடைந்த சிங்கம் முட்டாள் யானையே பதில் சொல்கிறாயா இல்லையா என்று சீரிக்கொண்டே யானையை நோக்கி சென்றது.யானை சற்றும் அசராமல் சிங்கத்தின் வாலைப்பிடித்து தலைக்குமேல் இரண்டு சுற்று சுற்றி தரையில் ஒருஅடி அடித்து தூக்கி எறிந்தது.எழுத்து நின்ற சிங்கம் என்ன கூறிவிட்டேன் என்று இப்படி கோபப்படுகிறான் என்று புலம்பிக் கொண்டே நடையை கட்டியது.


இதன் நீதி : ?????

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

miracle Antimatter!!

No comments



(matter) பருப்பொருள்.நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருள்களும் அடிப்படையில் பருப்பொருளால் உருவாக்கப் பட்டவை.ஏன் நாமே அடிப்படையில் பருப்பொருளில் இருந்து வந்தவர்கள்தான்.பருப்பொருள் ஒரு பொருளுக்கு வடிவம் மற்றும் நிறையை கொடுக்கிறது.ஒவ்வொரு பொருளின் அடிப்படை அணுக்கள்(atoms).அணுக்களின் அடிப்படை துகள்கள்(புரோட்டான்,எலெக்ட்ரான்,நியூட்ரான்).இவை எல்லாவற்றிற்கும் நிறை(mass) இருக்கிறது.இவை எல்லாம் பருப்பொருள்(matter) தான்.புரோட்டான் ஒர் பருப்பொருள்(matter) .எலெக்ட்ரான் ஒர் பருப்பொருள்(matter).அணுக்களின் அடிப்படை துகள்கள் எல்லாம் ஒர் பருப்பொருள்கள்தான்(matter).

அணுக்களின் அடிப்படை துகள்கள் எல்லாவற்றிற்கும் நிறை,மின்னூட்டம்,தற்சுழற்சி என தனித்தன்மைகள் இருக்கின்றன.புரோட்டான் அதிக நிறை,நேர் மின்னூட்டம் கொண்டது,நியூட்ரானும் அதிக நிறை ஆனால் மின்னூட்டம் அற்றது.எலெக்ட்ரான் குறைந்த நிறை,எதிர் மின்னூட்டம் கொண்டது.



(antimatter)எதிர்பருப்பொருள்.இதுவும் பருப்பொருள்(matter) போன்றது ஆனால் எதிர் மின்னூட்டம் கொண்டது.

எலெக்ட்ரான் ஒர் பருப்பொருள்(matter) அதன் எதிர்பருப்பொருள்(antimatter) பாசிட்ரான்.
எலெக்ட்ரானும் பாசிட்ரானும் ஒரே நிறை,ஒரே தற்சுழற்சி.ஆனால் எலெக்ட்ரான் எதிர் மின்னூட்டம் கொண்டது.பாசிட்ரான் நேர் மின்னூட்டம் கொண்டது.

புரோட்டான் நேர் மின்னூட்டம் கொண்டது அதன் எதிர்பருப்பொருள்(antimatter) நெகட்ரான் எதிர் மின்னூட்டம் கொண்டது.

இப்போது ஒரு ஆச்சர்யம் நியூட்ரான் மின்னூட்டம் அற்றது.ஆனால் அதற்கும் எதிர் பருப்பொருள் உள்ளது.ஏனென்றால் நியூட்ரானின் அடிப்படை துகள்களான குவார்க்குகளுக்கு மின்னூட்டம் உண்டு.ஒவ்வொரு அணுவுக்கும் எதி அணுவுண்டு

உதாரணமாக :




ஹட்ரஜனுக்கு ஒர் புரோட்டானும்,ஒர் எலெக்ட்ரானும் உண்டு.ஆனால் எதிர் ஹட்ரஜனுக்கு ஒர் நெகட்ரான்,ஒர் பாசிட்ரான் உண்டு.

ஆமா எலெக்ட்ரானும் ,பாசிட்ரானும் சந்திச்சா?,ஹட்ரஜனும் ,எதிர் ஹட்ரஜனுக்கு சந்திச்சா?
முழு ஆற்றலும் வெளியாகி அழிந்துவிடும்.

சாதாரணமான
வேதிவினைகளில் நாம் பில்லியனில் ஒரு பங்கைதான் ஆற்றலாக பெருகிறோம்.கரித்துண்டை எரித்தால் பில்லியனில் ஒரு பங்கைதான் ஆற்றலாக பெறமுடியும் மீதாம் சாம்பலாக மாறும்.

அணுக்கரு வினைகளில்(nuclear reaction) நூறில் ஒர் சதவீதம் தான் ஆற்றலாக பெறமுடியும் மீதம் அணுக்கதிர் வீச்சு இன்னபிறகழிவுகள் கிடைக்கும்.

ஆனால் ஹட்ரஜனும்,எதிர் ஹட்ரஜனும் அல்லது எலெக்ட்ரானும் ,பாசிட்ரானும் சந்தித்தால் 100 சதவீத ஆற்றல் குறிப்பாக அணுக்கதிர் வீச்சு இன்னபிறகழிவுகள் எதுவும் கிடையாது.

angels and demons படம் பார்த்தா இப்போ உங்களுக்கு புரியும்.அதுல (antimatter) குண்டு தான் கதையின் கரு.
பூமியில் எங்கும் எதிர்பருப்பொருள்(antimatter) கிடையாது.அப்படி இருந்தாலும் உடனே அழிந்துவிடும்.ஆனால் பிரபச்சத்தில் எதிர் ஹட்ரஜனால் ஆன பூமி இருக்கலாம்.நாம் தவறிப் போய் அங்கே நுழைய நினைத்தால் அவ்ளோதான்.angels and demons படம் பார்த்தா அதில் 'CERN' போன்ற ஆய்வுகூடத்தில் தான் இதை உருவாக்கமுடியும் என்பதை காட்டி இருப்பார்கள்.சும்மா ஒரு கைப்பிடி எதிர் ஹட்ரஜன் எடுத்து அப்பிடியே ஒரு தூவு
தூவினா பூமி அவ்ளோதான்.அப்புறம் டண்டனக்காதான்.யாராவது வேற்றுகிரகத்தில் இருந்து வந்தா பல்ல காட்டி கைய கொடுத்துடாதிங்க.அப்புறம் டண்டனக்காதான்.http://www.blogger.com/img/blank.gif
http://www.blogger.com/img/blank.gif

அணு குண்டு எல்லாம் நம்ம தாத்த காலத்து டெக்னிக்.இப்போ எல்லாம் (antimatter) குண்டு தான் latest.பயந்துராதிங்க அப்படியெல்லாம் நடக்காது ஏனா அதுக்கு ரொம்ப ரொம்ப பெரிய ஆற்றல் வாய்ந்த ஆய்வுகூடம் தேவை.ஆனால் (antimatter) தான் நம் எரிபொருள் http://www.blogger.com/img/blank.gifதேவையை நிறைவு செய்யும்.

மேலும் படிக்க

Antimatter

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

what is function in maths?

No comments



அது என்னய்யா function? கணக்கு வாத்தியார் போர்டுல எழுதுவாரே ஒரு வார்த்தை யாருக்கும் தெரியாது ஆனா ஒரு பத்து பன்னிரென்டுவேர் மட்டும் வேகமா தலையாடுவாங்க?வாத்தியார் கிட்டகேட்டா இன்னும் புரியாத பாசைல சொல்லி நம்ல கொன்னுடுவாரு.சரி விசயத்துகு வருவோம்.நான் எப்படி படிப்பேனோ அப்படியே சொல்லிதர முயற்சி செய்றேன் .முதல் என்ன செய்யனும்னா functionக்கு அர்த்தம் பார்க்கனும்.functionக்கு தமிழ் அர்த்தம் நிகழ்வு.அப்படினா ஏதாவது ஒன்று குறிப்பிட்ட இடத்தில் அல்லது குறிப்பிட்ட பொருளின் மேல் ஏதாவது நடந்தா அது ஒரு நிகழ்வு.அட சும்மா சொன்னா ஏதாவது நடக்கனும்பா!! (marriage function,birthday function etc)



இப்போ மேல படத்த பாருங்க அந்த பெரிய f இருக்கே அது மாரிதான் function ன குறிப்பிடனுமாம்.இத function of x னு சொல்லனும்.அப்படினா எதாவது x ல நடக்கனும்னு அர்த்தம்.ஏதாவதுனா என்ன அர்த்தம்னா x ஓட ஒன்ன கூட்டலாம்(x+1) .அதனால x ன் மேல் கூட்டல் நிகழ்வு நடக்கிறது.

y = f(x) னா என்ன அர்த்தம்.ரொம்ப ஈசி தான்.y மதிப்பு x ன் மேல் நடக்கும் நிகழ்வுகளுக்கு சமம்.

கவனிக்க y = x னா y மதிப்பு x மதிப்புக்கு சமம்.
y = f(x) னா y மதிப்பு x ன் மேல் நடக்கும் நிகழ்வுகளுக்கு சமம்.

அட சும்மா x ஏதாவது பன்னுங்கபா கூட்டுங்க,கழிங்க,பெருக்குங்க இல்ல விளக்கமாறால அடிச்சு அதன் மதிப்பு மாறுனா அதுவும் function தான் பா!!

உதாரணம்

f(x) = (x+1)(x*X)

f(x) = (x+1)/(x*X)

f(x) = (x)/m

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..