அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

கருவறை சுகம்

4 comments
ரத்தமும் சதையுமாய்
ஆனந்த சுகத்தோடு
அன்னையின் கருவறையில்
உறங்கியதொரு காலம்.....

யாருமில்லா தனிமையில்
நான் உள்ளே இருந்து
அவள் பேசுவதை கேட்டு
கழித்ததொரு காலம்....

அந்த பத்து மாதமும்
எனக்காக அவள் பட்ட
கஷ்டமெல்லாம் எனக்கு
மட்டுமே தெரியும்....

பத்துமாதமும் முடிந்தது.
என்னை வேரின் சுவடே
இல்லாமல் கருவறையில்
இருந்து பிரித்து பூமியில்
நட்டார்கள்.கேட்டால்
பிறந்தநாள் என்றார்கள்.

அன்று நான் அழுவதை
சுற்றி நின்று ஆனந்தமாக
சிரித்தார்கள் .

அன்று தொலைத்த
கருவறை சுகம்
அன்பாக காதலாக மாறி
ஒரு பெண்ணை
நோக்கி நகர்ந்தது!

அவளும் வந்தாள் - மனைவியாக.
அவள் மார்பில்
தலைவைத்து படுத்துக்கொண்டேன்.
அவளும் தலைகோதிவிட்டாள்.
மீண்டும் குழந்தையாகி போனேன்.

மீண்டும் ஒரு நாள் வந்தது.
என்னை வேரின் சுவடே
இல்லாமல் பூமியில்
இருந்து பிரித்துவிட்டார்கள்.கேட்டால்
இறந்தநாள் என்கிறார்கள்.

இப்போது எல்லோரும்
அழுகிறார்கள்.நானோ
ஆனந்தமாக இருக்கிறேன்.ஏனென்றால்
நான் மீண்டும் அவளோடு
சேரப்போகிறேன் .

அந்த கருவறை
சுகத்திற்கான
பயணத்திற்கு மீண்டும்
தயாராகிவிட்டேன்.









4 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

நான் தேடும் கவிதை

2 comments
தினமொரு கவிதை
எழுதிட நினைத்து
தவியாய் தவிக்கிறேன்.

ஆயிரம் எண்ணங்கள்
குவியலாய் அவியலாய்,
 அதிலொரு முகத்தை தேடுகிறேன்.

எண்ணங்கள் கூடி வர
வார்த்தைகள் ஒத்துழைக்கவில்லை.
வார்தைகள் வளைந்துவர
அர்த்தங்கள் ஒத்துழைக்கவில்லை.
அர்த்தங்கள் கூடிவர
உணர்வுகள் வெளிப்படவில்லை.

இன்னமும் குப்பையும்
கூழமுமாய் ஒழுங்கில்லா
வடிவியலுடன் எழுத்துகளை
அடுக்கி கவிதை
செய்து கொண்டு இருக்கிறேன்.

ஆனால் உணர்வை தொட்டு
உயிரில் கலக்கும் அந்த
கவிதை இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறேன்.


2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..