அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

வாழ்வு

3 comments
வாழ்வை என்னவென்று நினைத்தாய்?
வாழ்வு
நிற்காமல் ஓடும் கால ஓடை,
யாரையும் சட்டை செய்யாமல்,
யாருக்காகவும் கருணைகாட்டாமல்,
இல்லாத இலக்கை நோக்கி ஓடும் வேட்டைக்காரன்.
 நீ ஜான் ஏறினால் முழம் சறுக்கும்,அதற்காக
ஏறுவதை நிறுத்தாதே.
சுகங்களை அள்ளி வீசும்,அங்கே
தேங்கி சாக்கடை ஆகிவிடாதே.
போலிகள் சுற்றி வருவார்கள்
அவர்களிடம் ஏமாந்துவிடாதீர்கள்.
வெறுப்பை அள்ளி உமிழும்,அதற்காக
வருத்தப்பட்டு பயணத்தை நிறுத்தாதீர்கள்.
தோல்விகள் அலையாய் மலையாய் வரும்
சுருண்டு படுத்துவிடாதீர்கள்.
இழப்புகள் தகர்க்கவரும்
தகர்ந்துவிடாதீர்கள்.
ஓடவிட்டு செங்கல்லால் அடிக்கும்
திரும்பி அடிக்க மறந்துவிடாதீர்கள்.
திமிரை கொடுக்கும்,அதை
 நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.
அன்பை கொடுக்கும்,அதற்கு
அடிமையாகிவிடாதீர்கள்.
 நட்பை கொடுக்கும்,அதற்காக
 நடிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்.
வாழ்வை பற்றி தெரியாமல்
உன்னை வாழ வைக்கும்.
வாழ ஆரம்பிக்கும் போது
இடுகாட்டில் புதைத்துவிடும்.
வாழ்வை என்னவென்று நினைத்தாய்?

3 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..