அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

ஏன் அழுகிறாய்?

No comments
அழுகை வந்தால்
இப்போதே அழுதுவிடு முழுவதுமாக
இதற்கு முன் ஒருமுறை அழுதாய்
பிறக்கும் போது,
இப்போதும் அழுகிறாய்,
ஏன் அழுகிறாய்?
எதற்கு அழுகிறாய்?
யாருக்காக அழுகிறாய்?
இங்கே உன் கூக்குரல்
கேட்க ஆளில்லை,
நேரமும் இல்லை,
நீ பார்த்த முகங்கள்
எல்லாம் மகமுடிகள்
என்பதை ஏன் சிந்திக்கவில்லை?
உன் கண்கள் ஏன்
உண்மையை பார்க்கும் திறனிழந்துவிட்டன?
எங்கே உன் நிமிர்ந்த நடை எங்கே?
நேர் கொண்ட பார்வை எங்கே?
யாருக்கும் அச்சாத பார்வை எங்கே?
உற்றுப்பார் எல்லாம் மூலையில்
உட்கார்ந்து ஓலமிடுகின்றன.
நேற்று சிரித்தாய்
இன்று அழுகின்றாய்
நாளை அழுவார்கள்
பொய் வேடதாரிகள்
நல்லவன் என்று!
உன்னையே கேட்டுப்பார்
ஏன் பிறந்தாய்?
எதற்காக உழைக்கிறாய்?
யாருக்காக உழைக்கிறாய்?
என்ன செய்யப்போகிறாய்?
சுயநலன் இல்லாத
உறவும் இல்லை,
பொதுநலன் கொண்ட
உழைப்பும் இல்லாத
உலகம் இது!
இதற்காகவா அழுகிறாய்?
யாருக்கும் உழைக்கப் பிறக்கவில்லை?
யாருக்கும் அடிமையும் இல்லை.
நீ பிறந்தது சாதிக்க!
இடைப்பட்ட காலத்தில்
ஏன் இந்த மயக்கம்?
ஏன் இந்த தயக்கம்?
ஏன் இந்த அழுகை?
ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?
எது இன்று உன்னுடயதோ,
அது நாளை மற்றொருவருடையாகிறது,
மற்றொரு நாள் அது வேறொருவடையதாகிறது,
இந்த மாற்றம் உலக நியதியாகும்,
என்ற மாறாத கீதை பிறந்த மண்ணில்
பிறந்தா அழுகிறாய்?

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..