அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

கதைகேட்டு நீதி சொல்லுங்கள் - 2

No comments
ஒரு நாள் கடவுள் பூமிக்கு வர ஆசைப்பட்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார்?வெளியே வந்த ஆளிடம் நான் தான் கடவுள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்?வீட்டுக்காரர் மிகுந்த கடுப்புடன் இவ்வாறு கூறினார் "முன்பு எல்லாம் கடவுளின் பெயரைச் சொல்லி பிச்சையெடுத்தீர்கள்!இப்போ கடவுள் என்று கூறி பிச்சையெடுக்க ஆரம்பித்து விட்டீர்களா? என்று சீறினார்.கோபம் கொண்ட கடவுள் கீழி இறங்கி ரோட்டில் நடக்க ஆரம்பித்தார்.வழியில் அவர் இரு குடிகார குடிமகன்களிடம் நான் தான் கடவுள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்?அதற்கு ஒருவன் சரிதான் போ நாங்கள் யார் என்று நினைத்தாய்? நான் யேசு!இவன் முகமது!என்று கூறினான்.நொந்தே போய்விட்டார் கடவுள்!!


இதன் நீதி : ?????

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

கதைகேட்டு நீதி சொல்லுங்கள் - 1

No comments
ஒரு காட்டில் வாழ்ந்த சிங்கம் ஒன்றுக்கு தீடிரென ஒரு சந்தேகம் வந்தது.காட்டில் யார் பல சாலி என்று?உடனே அது ஒரு எலியிடம் சென்று கர்ஜனையுடன் கேட்டது உடனே அது ராஜா உங்களைவிட காட்டில் யாரும் பலசாலி உண்டா என திருப்பிக்கேட்டது?இதனால் சந்தோஷம் அடைந்த சிங்கம் இன்னும் சற்று கம்பீரத்துடனும்,கர்ஜனையுடன் அந்த பக்கம் வந்த மானைக் கேட்டது.மானும் பயத்துடன் ராஜா உங்களைவிட காட்டில் யாரும் பலசாலி உண்டா என்றது.இவ்வாறாக எதிர்ப்பட்ட மிருகங்களை எல்லாம் கேட்டது.ஒரே பதில் எல்லாரிடம் இருந்து வந்தது.அந்த நேரத்தில் யானை ஒன்று அந்த பக்கம் வந்தது.அதைப் பார்த்த சிங்கம் மிகுந்த அலட்சியத்துடனும்,கர்வத்துடனும் ஏ யானையே ! இந்த காட்டில் நான் தான் பலசாலி என்பதை ஒப்புக்கொள்கிறாயா என்றது?யானை சட்டைசெய்யாமல் நடந்தது.கோபம் அடைந்த சிங்கம் முட்டாள் யானையே பதில் சொல்கிறாயா இல்லையா என்று சீரிக்கொண்டே யானையை நோக்கி சென்றது.யானை சற்றும் அசராமல் சிங்கத்தின் வாலைப்பிடித்து தலைக்குமேல் இரண்டு சுற்று சுற்றி தரையில் ஒருஅடி அடித்து தூக்கி எறிந்தது.எழுத்து நின்ற சிங்கம் என்ன கூறிவிட்டேன் என்று இப்படி கோபப்படுகிறான் என்று புலம்பிக் கொண்டே நடையை கட்டியது.


இதன் நீதி : ?????

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..