ஓர் அழகான எழுத்து முயற்சி.

திகில் கதை : வேண்டாத வேலை

No comments

நள்ளிரவில் ஒரு வீட்டில் இரண்டு திருடர்கள் நுழைந்தனர்.அவர்கள் ஒவ்வொரு அறையாக சென்று பீரோல் மற்றும் நகைகள் இருக்கும் இடத்தை தேடினார்கள்.

இறுதியாக இருவரும் பீரோல் இருக்கும் அறையை அடைந்தனர்.முதலாவது திருடன் பீரோலை திறந்து பார்த்தவுடன் அலறியபடி தரையில் சுருண்டு விழுந்தான்.அலறலைக் கேட்ட இரண்டாவது திருடனும் பீரோல் அருகில் வந்து சுற்றி முன்னும் பின்னும் பார்த்தான். திடீரென அவனும் அலறியபடி தரையில் சுருண்டு விழுந்தான்.

சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது திருடர்கள் இருவரும் வாயில் நுரையுடன் சுருண்டு கிடந்தனர்.

வீட்டில் உள்ளவர்கள் உடனே போலிஸுக்கு போன் செய்து நடந்ததை சொன்னார்கள்.போலிஸ் வந்து இருவரையும் ஆம்புலன்ஸில்  ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.

அந்த நள்ளிரவு நேரத்தில் திருடர்கள் ஏன் அலறினார்கள்?
எதனால் இருவரும் மயங்கி விழுந்தார்கள்?
என போலிஸுக்கு ஒன்றுமே புரியவில்லை.
வீட்டில் உள்ளவர்களை கேட்ட போதும் தங்களுக்கு எதுவும் தெரியாது என விசாரணையில் சொல்லிவிட்டார்கள்.

உடனே இன்ஸ்பெக்டர் அந்த வீடு முழுவதையும் மீண்டும் பரிசோதிக்க ஆரம்பித்தார்.குறிப்பாக அந்த பீரோல் இருக்கும் அறையை கூர்ந்து பரிசோதிக்க ஆரம்பித்தார்.ஆனால் அங்கு எந்த குறிப்பும் கிடைக்கவில்லை.

பிறகு அந்த அறையைவிட்டு அதற்குமுன் இருந்த சமையல் அறையை பரிசோதிக்க ஆரம்பித்தார்.சமையல் அறை சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருந்தது.ஆனால் அந்த அறையில் இருந்த ஒரு மேஜையின் மீது வெற்று தட்டு இருப்பதை தற்செயலாக பார்த்தார் .அதன் ஓரங்களில் ஏதோ இனிப்பு பொருள் ஒட்டி இருப்பதை பார்த்தார்.

உடனே வீட்டில் உள்ளவர்களிடம் தட்டைப்பற்றி விசாரித்தார்.அதற்கு வீட்டில் உள்ளவர்கள் "வீட்டில் எலித்தொல்லை அதிகம் இருப்பதால் எலியை கொல்ல சுவீட்டிற்குள் எலி மாத்திரை வைத்துவிட்டு தூங்குவது தங்கள் வீட்டில் வழக்கம் என் கூறினார்கள்."

இன்ஸ்பெக்டருக்கு எல்லாம் புரிந்து விட்டதால் கிளம்ப ஆரம்பித்தார்.ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்றும் புரியாததால் இன்ஸ்பெக்டரிடம் என்ன நடந்தது என கேட்டனர்?

அதற்கு அவர் திருடர்கள் முதலில் சமையல் அறைக்குள் நுழைந்திருக்கிறார்கள்.எலி மருந்து கலந்த சுவீட்டை சாப்பிட்டுவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்து பீரோலை திறக்க ஆரம்பிக்கும் போது எலி மருந்து தன் வேலையை காட்டிவிட்டது.திருடர்கள் மாட்டிக்கொண்டார்கள் என்றார்.


மேலும் வாசிக்க:

கதை நேரம் : அழகிய மனங்களுக்கான அந்த மாதிரி கதைகள்
கதைநேரம் : ஆசை
 

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..