அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

சாகாவரம்

No comments
இன்னதென உலகம்
இதுவென தறியாமல்
பண்ணிய பாவங்கள்
பெற்றதொரு குழந்தை
ஓழமிட்டு அழுக,

உச்சிதனை முகர்ந்து
நெற்றியில் முத்தமிட்டு
பாலூட்டி சீராட்ட,

விதைத்தநெல் முளைக்காமல்
பருவமழை பொய்த்துவிட
பெற்றகடன் தொட்டிலிலே
பட்டகடன் வாசலிலே,

பாதிமுகம் சிரிக்கையிலே
மீதிமுகம் கோணலிலே
பாவிமகள் பிறந்தாளென்று
பார்நிரப்ப வந்தாளென்று
ஊர்ப்பேச்சு கேட்கையிலே,

கள்ளி மடிபிடித்து
பால்மணம் மாறுமுன்னே
கள்ளிப்பால் கொடுத்தாயோ
கல்நெஞ்சன் ஆனாயோ
கட்டையிலே போகுமுன்னே
சாகாவரம் கேட்டாயோ?

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..