அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

கொள்ளிவைக்கும் இஸ்ரேல்,சுடுகாடாகும் பாலஸ்தீனம்

4 comments
ஒரு துப்பாக்கிகுண்டால்
மரணத்தை பரிசளித்தார்கள்.
மரணத்தை உறுதிசெய்ய -மேலும்
இரண்டுகுண்டுகளை பரிசளித்தார்கள்.
உடல்சிதறி
நிலமெல்லாம் ரத்தகளமாய்
பிணக்குவியல்களுக்கு நடுவே
புனிதமானவர்களின் புனிதமும்,
போராட்டக்காரர்களின் கொள்கைகளும்,
காக்கப்படுகின்றன
.



தினசரி செய்தித்தாள்களை பார்க்கும் போது ஒரே வெறுப்பாக இருக்கிறது.இஸ்ரேல் பாலஸ்தீன போரால் தினமும் கொத்து கொத்தாக மனித உயிர்கள் போய்க்கொண்டிக்கின்றன.எதையும் செய்யமுடியாமல் உலகத்தோடு சேர்ந்து நாமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

சொந்த தாய்மண்ணை அபகரித்துவிட்டார்கள் என்று பாலஸ்தீனமும்,தங்களை எதிர்க்கிறார்கள் என்று இஸ்ரேலும் காரணம் சொல்லிக்கொண்டு கொல்வது என்னவோ அப்பாவி பொதுமக்களைத்தான்.
இங்கே மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் அர்ப்பமான கொள்கைகள்,வரலாறு,மதரீதியான நம்பிக்கை என இரு சாரராக பிரிந்துகொண்டு போரை ஊக்குவிக்கும் கூட்டம் தான் அதிகமாக இருக்கிறார்கள்.அதுவும் ஒரே நாடு, ஒரே இனம்,ஒரே மக்கள் என்று சொல்லும் இந்தியர்கள் கூட அணி அணியாக பிரிந்து நியாய தர்மம் பேசி ஏதோ ஒரு தரப்பை ஊக்குவிப்பதுதான் வேதனைதரும் விசயம்.

நாம் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு பேசும் நியாய தர்மங்கள் துப்பாக்கியின் பிடியில் சிக்கி தவிக்கும் அப்பாவி மக்களை ஒரு போதும் காப்பாற்ற போவதில்லை.பல்லாயிரகணக்கான மக்களை கொன்று அவர்களின் சவக்குழியின் மேல் அமைதி பூங்காவைகட்ட நினைக்கிறது இஸ்ரேல்.கடந்த கால துரோகங்களையும்,மத உணர்வுகளையும் காரணம் காட்டி தன் இனத்தை தானே இழந்து கொண்டிருக்கிறது பாலஸ்தீனம்.

இவையெல்லாம் நம் மனிதன்மையை கேள்விக்குறிகளாக்குகின்றன.இங்கே மனித உயிர்கள் புழுவினும் கீழ்நிலைகளாக கருதி கொல்லப்படுகின்றன.வேதனையிலும் வேதனை தரும் விசயம் இதை உலகமே கைகட்டி,வாய்பொத்தி வேடிக்கை பார்ப்பதுதான்.ஒரு லட்சம் யூதர்களை இனப்படுகொலை செய்தான் ஹிட்லர்.ஆறு லட்சம் தமிழர்களை கருவறுத்தான் ராஜபக்சே.இப்போது இஸ்ரேல் செய்வதுமட்டும் புனிதப்போராகவா ஆகிவிடப்போகிறது.

உலகின் அதிபயங்கர புத்திசாலிகள் என மார்த்தட்டிக்கொள்ளும் யூத இஸ்ரேலியர்களே மக்களை கொத்துக்கொத்தாக கொல்வதுதான் புத்திசாலித்தனமோ?உயிரின் வலி,போரின் வக்கிரங்களை தலைமுறை தலைமுறைகளாக அனுபவித்த நீங்கள் மற்றவருக்கு அதையே பரிசளிப்பது தகுமோ?

பாலஸ்தீன போராளிகளே நீங்களும் ஒன்றும் புனிதர்கள் அல்ல.உங்கள் கொள்கைகளும் ஒன்றும் புனிதமானவை அல்ல.உங்கள் கொள்கைகள் வெறும் இடத்திற்காகதான்.உங்கள் கொள்கைகளால் போவது என்னவோ அப்பாவி உயிர்கள்தான்.போராட்டத்தை கைவிடுங்கள் என்று நான் சொல்லவில்லை.போராடும் பாதையை மாற்றிக்கொள்ளுங்கள்.கத்தியின்றி ரத்தமின்றி அறவழியில் போராடுங்கள்.மிச்சம் இருப்பவர்களாவது வாழட்டும்.

அமைதியென்பது சுடிகாட்டிலும் இருக்கிறது,பூந்தோட்டத்திலும் இருக்கிறது.உங்கள் துப்பாக்கிகளும் கொள்கைகளும் உங்களுக்கு கொடுக்கப்போவது என்னவோ மயானத்தைதான்.நாடு,இன கொள்கைகளை தாண்டி மனிதனாக வாழப்பழகுங்கள்.மழைக்கு இரவில் ஒதுங்கும் ஒரு ஆட்டுக்குட்டியை தன்வீட்டீல் அனுமதிக்காத மனிதன் உலகில் இல்லை.ஆனால் வீடில்லாத, வாழ வழியில்லாத, சக மனிதனை அரவணைத்து வாழத்தெரியாத மனிதநேயத்தை என்னவென்று சொல்வது.

இந்த பூமி எல்லோருக்கும் சொந்தம்.அதன் மேல் கிறுக்கியிருக்கும் எல்லைக்கோடுகள் மனிதனை தடுத்துவிடமுடியாது.போரை நிறுத்துங்கள்.எல்லை தாண்டி,கொள்கை தாண்டி மனிதநேயத்துடன் மனிதனாக வாழுங்கள்.மற்றவரையும் வாழவிடுங்கள்.நாளைவிடியும் பூமி அமைதிக்காக விடியட்டும்.



படிக்கவேண்டிய புத்தகங்கள்








4 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

என் கேள்விக்கு என்ன பதில் சுப வீரபாண்டியன் அவர்களே?

4 comments
இந்த கட்டுரை சுப வீரபாண்டியன் அவர்கள் http://tamil.oneindia.in/ இணையதளத்துக்கு எழுதிய கட்டுரைக்கு என்னுடய கருத்துரையாக எழுதப்பட்டது.அவர்கள் என் கருத்துரையை ஏற்க மறுத்துவிட்டதால்.அதை இங்கே பதிவாக இடுகிறேன்.அந்த கட்டுரைய  இங்கே படித்துவிட்டு பதிவை படிக்கவும்.









முதலில் தங்கள் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இங்கே ஜன்ஸ்டீனின் பொது சார்புக்கொள்கையை பற்றி கூறி உள்ளீர்கள்.ஆனால் அவர் கூறிவிட்டதால் மட்டும் அது உண்மையாகிவிட முடியாது.எல்லா கொள்கைகளும் ஓர் எல்லைகளுக்கு உட்பட்டே இருக்கின்றன.ஏன் ஒளியை மிஞ்சக்கூடிய எந்த பொருளும் இல்லை என்ற ஜன்ஸ்டீனின் கொள்கையையே நியூட்டினோக்கள் தகர்த்துவிட்டன.

உண்மையில் பெரும்பாலான அறிவியல் கொள்கைகள் முதலும் இல்லாமல் தொடக்கமும் இல்லாமல் முழித்து தொங்கிக்கொண்டு இருக்கின்றன.கண்ணால் பார்ப்பதை மட்டும் நம்புவேன் என்றால் கண்ணால் பார்க்க முடியாத காற்றை யாருமே நம்ப முடியாது.

உண்மையில் அறிவியல் ஒன்றும் முற்று பெறவில்லை.அது இன்னும் அறைகுறையாக தான் உள்ளது.ஏன் அறிவியலே சொல்லுகிறது ஒரு பிரபஞ்சம் அல்ல கோடான கோடி பிரபஞ்சங்கள் உள்ளன என்று.மேலும் நம் முடைய அறிவியல் கொள்கைகள் மற்றொரு பிரபஞ்சத்தில் செல்லுபடியாகாது.

அப்படியென்றால் நீங்கள் மேற்கோள்காட்டும் அறிவியலே பிரபஞ்சம் என்ற எல்லைக்கு உட்பட்டது என்றால் உங்கள்வாதாமும் இப்பிரபஞ்சத்திற்கு உட்பட்டதுதான்.மார்க்ஸ்,ஜன்ஸ்டீன் அல்லது மேலை நாட்டு விஞ்ஞானிகள் சொல்வது இருக்கட்டும்.நம் முன்னோர்கள் சொன்ன கடவுள் வழி கருத்துகள் பாமரனால் தவறாக புரிந்துக்கொள்ளபட்டு இருந்தாலும் படித்தவர்களான நாம் அதை சரியாக புரிந்துகொண்டு ஆராய வேண்டியுள்ளது.ஆனால் நாம் ஆராயமலே தவறு என்று முடிவு கட்டிவிட்டோம்.

ஏன் ஜெனிவாவிலே நடராஜர் சிலை உள்ளது.அங்கே உள்ளவர்கள் எல்லாம் விஞ்ஞானிகள்தாம். அவர்களுக்கு கடவுள் மறுப்பு அறிவியல் தெரியாமலா சிலை வைத்தார்கள்?முதலில் அறிவியல் முழுமையாக முற்று பெற்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படட்டும்.பின் அதை வைத்து எழுதிய தத்துவவிலாசங்களை பேச அலச ஆரம்பிப்போம்.

மனிதன் பகுத்தறிந்து முழு விழிப்போடு வாழ மட்டுமே அறிவியல்.அதை வைத்துக்கொண்டு பாமரனின் அடிப்படை நம்பிக்கையை சிதைப்பது அநியாயம்.

4 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

கணிதமேதை ராமானுஜன் :- பிரபஞ்சத்தின் புதிர்

3 comments
கணிதமேதை ராமானுஜத்தை பத்தி எழுத வேண்டும் என்று ரொம்ப வருடத்திற்கு முன்னாடியே யோசிச்சிருந்தேன்.ஆனால் அவரைப்பற்றி நான் எழுத நினைத்த தலைப்புக்கு நிறைய கடினமான அறிவியல் தலைப்புகள் தேவைப்பட்டது.அவற்றையெல்லாம் எல்லோருக்கும் புரியும்படி எழுத முடியுமா? என்ற சிந்தனையில் எழுத முடியாமல் போய்விட்டது.இப்போது அவரைப்பற்றிய திரைப்படம் வெளியாகி உள்ளது.இது அவரைப்பற்றி எழுத சரியான தருணம் என நினைக்கிறேன்.

ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறைப் பற்றி நான் இங்கு எழுதப்போவதில்லை.ஆனால் மேற்கில் வாழும் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானியின் பார்வையில் ராமானுஜத்தை பற்றி எழுதப் போகிறேன்.அவர் தான் "மிக்கியோ கக்கூ (Michio Kaku)".புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானியான கக்கூ தனது உயர்பரிமாணங்கள்(hyperspace) என்னும்  நூலில் ராமானுஜத்தை பற்றி சிலேகித்து கீழ்கண்டவாறு கூறுகிறார்.

"கணித உலகில் ராமானுஜம் ஒரு விந்தையான மனிதர்.அவரை ஒரு வெடித்து சிதறும் நட்சத்திரத்தின் வலிமையோடு ஒப்பிடலாம்.நூறு வருடங்கள் மேற்கில் உள்ள அத்தனை கணித வல்லுனர்களும் சேர்ந்து கண்டுபிடித்த அத்தனை கணித கோட்பாடுகளையும்,சூத்திரங்களையும் தனிமனிதனாக 33 வயதிற்குள் மறு உருவாக்கம் செய்தார்.மேற்கு உலக தொடர்பில்லாததால் தான் கண்டிபிடித்த பல விசயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டவை என்று தெரியாமலே தன் வாழ்வின் பெரும்பகுதியை அதில் செலவிட்டார்.

ராமானுஜம் மொத்தம் 400 பக்கங்களில் 4000 சூத்திரங்களை எழுதியுள்ளார்.அவற்றில் சில சூத்திரங்கள் மிக வினோதமானவை.இந்த வினோத சூத்திரங்கள் மாடுலர் பங்சன் என்னும் கணித பிரிவின் கீழ் வருகின்றன.மேலும் ராமானுஜத்தை கவுரவிக்கும் பொருட்டு இவை "ராமானுஜன் பங்சன் (RamanujanThetaFunction)"  என்றே அழைக்கப்படுகின்றன.இவற்றில் மிக விசேசம் என்னவென்றால் இந்த வினோத சூத்திரங்களில் ஆங்காங்கே 24ன்  அடுக்கு என்று இடம் பெருகிறது.இந்த 24 என்ற என்னை விஞ்ஞானிகள் மேஜிக்கல் நம்பர் என்கிறார்கள்.ஏன் இதை மேஜிக்கல் நம்பர் என்று புரிந்துகொள்ள நாம் சில உயர் அறிவியல் கோட்பாடுகளை புரிந்துகொள்ள வேண்டும்.

சாதாரண மனிதர்களைப் பொறுத்தவரை இந்த பிரபஞ்சம் மூன்று பரிமாணங்களை (dimension) கொண்டது.இதை நாம் ஏற்கனவே பள்ளிகளில் X,Y,Z என வரைபடத்தாளில்(graph) மூன்று தளங்களாக பிரித்து படித்திருக்கிறோம்.சுருக்கமாக (மேல்,கீழ்),(இடது,வலது),(முன்,பின்) என முப்பரிமாணங்களாக குறிக்கலாம்.பின்னால் வந்த ஜன்ஸ்டீன் தனது பொது சார்பியல் கொள்கையில்(general theory of relativity) காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நான்கு பரிமாணங்கள் ஆக்கினார்.ஆனால் தற்போதைய இயற்பியல் கூற்றுப்படி இந்த பிரபஞ்சம் பத்து பரிமாணங்கங்களை கொண்டது.சரி அது என்ன சரியாக 10 பரிமாணம்?ஏன் 9 இருக்கக்கூடாதா? என கேட்கலாம்.ஆனால் இந்த காரணத்தை அறிந்த ஒரே மனிதர் ராமானுஜம் மட்டுமே. 

இயற்பியலில் நூலிழைக்கோட்பாடு(string theory) என்று ஒன்று உள்ளது.இந்த நூலிழைக்கோட்பாட்டின் படி பிரபஞ்சமே அடிப்படையில் மெல்லிய நூலிழைகளால் ஆனது.ஏன் இந்த பிரபஞ்சமே இரண்டு பெரிய உயர்பரிமாண நூலிழைகளின் மோதலினால் தான் உருவானது.அடிப்படை துகள்களான புரோட்டான்,எலெக்ரான் என எல்லாமே சாதாரண நூலிழைக்களின் மாறுபட்ட தோற்றங்கள் தான்.



இந்த நூலிழைகளை எப்படிகற்பனை செய்லாம் என்றால் குண்டு பல்பின் நடிவில் இருக்கும் டங்ஸ்டன் இழையோடு ஒப்பிடலாம்.தூரத்தில் இருந்து பார்க்கும் போது டங்ஸ்டன் இழை சாதாரண கம்பி போல் தொன்றினாலும் மிக அருகில் நெருக்கமாக பார்க்கும் போது நெருக்கமாக சுற்றப்பட்ட லேசான நீண்ட கம்பி என்பது புரியும்.அது போல் எலெக்ட்ரான்,புரோட்டான் அருகில் தூரத்தில் பார்த்தால் துகள் போல் தோன்றினாலும் அருகில் பார்த்தால் டங்ஸ்டன் இழை போல் நெருக்காமாக சுற்றப்பட்ட உயர்பரிமாண இழைகளால் ஆனவை.இந்த இழைகளின் அதிர்வு மற்றும் நிறையைப்பொறுத்து அது எலெக்ட்ரானாகவும்,புரோட்டானாகவும் தெரிகிறது.

இந்த நூலிழைகள் தானாக அறுந்தும் மற்றொரு நூலிழையோடும் சேர்ந்து புது புது அணு துகள்களை உருவாக்குகின்றன.இப்படி இவை இணைந்து உருவாக்கும் ஜோடிகளும் அதன் அதிர்வெண் பரிமாணங்களும் முடிவிலியாக இருக்கின்றன.ஆனால் ராமனுஜன் பங்சனை பயன்படுத்தும் போது முடிவிலிகள் கரைந்து சரியாக 24 வகையான ஜோடிகளும், அதிர்வெண் பரிமாணங்களும் வருகின்றன.


ராமனுஜன் பங்சனை பொதுப்படையாக்கும் போது 24 என்பது சுருங்கி 8 ஆகிறது.எனவே இந்த பிரபஞ்சம் (8+2)=10 பரிமாணங்களை கொண்டதாகிறது.இவற்றில் ஒன்றை கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ முடிவிலியில் போய் நிற்கிறது.உண்மையில் ராமனுஜன் சொன்ன 24 என்ற எண் இயற்பியலாளர்களை பொருத்தவரை மேஜிக் நம்பர்தான்.ஆனால் ஏன் 24 என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.ஆனால் இதை உருவாக்கிய ராமானுஜனுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு முறை ஜன்ஸ்டீன் இப்படி சொன்னார்.
"இந்த உலகத்தை படைக்கும் போது கடவுள் என்ன நினைத்தார்?எப்படி படைத்தார் என்பது தெரியவேண்டும்.மற்றவை பற்றி எனக்கு கவலை இல்லை என்றார்."
ஜன்ஸ்டீனின் இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்த ஒரே மனிதர் ராமானுஜன் மட்டுமே.ஆனால் அவரும் இப்போது உயிரோடு இல்லை.உண்மையில் பிரபஞ்சத்தை போலவே ராமானுஜனும் ஒரு புரியாத புதிர்தான்.

3 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

உன்னை நான் பார்த்த பின்

2 comments
உன்னை நான் பார்த்த பின்
முன்பு போல் இல்லையே!
என்னையே கேட்கிறேன்
எங்கு நான் தொலைந்தேனோ?

மண்ணிலே பிறந்தேனோ?
மழையிலே கரைந்தேனோ?
காற்றிலே கலந்தேனோ?
கூந்தல் வாசம் நுகர்ந்தேனோ?

கால தூரம் கடந்தேனோ?
காம ஏக்கம் உணர்ந்தேனோ?
சொர்க்கமே சென்றாலும் உன்
பிரிவு ஏக்கம் கொல்லுதடி.

உன்னையென்று பார்த்தேனோ?
உயிரை தொலைத்துவிட்டேனே.
கண்ணிழந்த குருடர்கள்
யானை தடவி பார்ப்பது போல்,
கண்ணில் கண்ட பொருளெல்லாம்
உன்னை பார்க்க நினைக்கிறேன்.

மொட்டைமாடி போகிறேன்.
ஒற்றைக்காலில் நிற்கிறேன்.
தனிமையோடு பேசுகிறேன்.
தவமாய் கிடக்கிறேன்.

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..