மனமார்ந்த வாழ்த்துகள்
என் அருமைத் தோழர்களே மற்றும் கவிகளே
என் மனமென்னும்
தோட்டத்தில் பூத்தமலர்களை
நானிங்கு விற்றேன்
உங்கள் மனக்கதவு திறந்திருந்ததால்
உங்கள் வீட்டை வாசம் செய்தது
உபயமாக தங்கள்
மனமென்னும் மலை உச்சியில்
பூத்த அன்பென்னும் குறிஞ்சிப்பூக்களை
எமக்களித்தீர் ஆனால்
அதையும் தாண்டி
நீர் அளித்த பரிசு
என்னை மகிழச்செய்கிறது
என்னை மேலும்
செயலாற்ற உந்துகிறது
எல்லாம் அவன்
வெறும் பேனா நான்
இந்த பேனாவை
பெருமைப்படுத்தியமைக்கு நன்றி!!
இக்கவிதையின் வாயிலாக திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என்னை அவர் தம் மனதிற்கினிய அந்த 5 இளம் பதிவாளர்கள் பட்டியல் சேர்த்து லீப்ச்டர் (இளம் வலைப்பதிவாளர்களுக்கு
வழங்கப் படும் ஒரு ஜெர்மானிய விருது) விருது வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் .
ஸ்ரவாணி அவர்களின் மனதிற்கினிய அந்த 5 இளம் பதிவாளர்கள் பட்டியல் :
1 . தன் தரமான , கனமான பதிவுகளால் மனதை சுண்டி இழுக்கும் கீதா அவர்கள் !
http://geethamanjari.blogspot.in/
2 . நகைச்சுவையும் , பல்சுவையும் கலந்து கலக்கல் பதிவுகள் தரும் கணேஷ் அவர்கள்!
http://minnalvarigal.blogspot.in/
3 . வனப்பை ரசித்து அதை மேலும் மெருகூட்ட அருமையான அழகுக் குறிப்புகள் தரும் சந்திரகௌரி அவர்கள் !
http://kowsy-vanappu.blogspot.in/
4 . ஏறக்குறைய ஒரு பத்திரிகைப் போல் இந்த நாளில் இன்னின்ன பதிவுகள் என்று அழகாகத் திட்டமிட்டு
அருமையாகப் பதிவுகள் தரும் மதுமதி அவர்கள் !
http://writermadhumathi.blogspot.in/
5 . மனதை இலகுவாக்கி அழகியக் காதல் கவிதைகள் தந்து நெஞ்சள்ளிப் போகும் தனசேகரன் அவர்கள் !
http://sekar-thamil.blogspot.in/
மேலும் என்னோடு விருது பெற்ற கீதா,கணேஷ்,சந்திரகௌரி ,மதுமதி ஆகியவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தெரிந்து கொள்ள
லீப்ச்டர் விருது
என் மனமென்னும்
தோட்டத்தில் பூத்தமலர்களை
நானிங்கு விற்றேன்
உங்கள் மனக்கதவு திறந்திருந்ததால்
உங்கள் வீட்டை வாசம் செய்தது
உபயமாக தங்கள்
மனமென்னும் மலை உச்சியில்
பூத்த அன்பென்னும் குறிஞ்சிப்பூக்களை
எமக்களித்தீர் ஆனால்
அதையும் தாண்டி
நீர் அளித்த பரிசு
என்னை மகிழச்செய்கிறது
என்னை மேலும்
செயலாற்ற உந்துகிறது
எல்லாம் அவன்
வெறும் பேனா நான்
இந்த பேனாவை
பெருமைப்படுத்தியமைக்கு நன்றி!!
இக்கவிதையின் வாயிலாக திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என்னை அவர் தம் மனதிற்கினிய அந்த 5 இளம் பதிவாளர்கள் பட்டியல் சேர்த்து லீப்ச்டர் (இளம் வலைப்பதிவாளர்களுக்கு
வழங்கப் படும் ஒரு ஜெர்மானிய விருது) விருது வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் .
ஸ்ரவாணி அவர்களின் மனதிற்கினிய அந்த 5 இளம் பதிவாளர்கள் பட்டியல் :
1 . தன் தரமான , கனமான பதிவுகளால் மனதை சுண்டி இழுக்கும் கீதா அவர்கள் !
http://geethamanjari.blogspot.in/
2 . நகைச்சுவையும் , பல்சுவையும் கலந்து கலக்கல் பதிவுகள் தரும் கணேஷ் அவர்கள்!
http://minnalvarigal.blogspot.in/
3 . வனப்பை ரசித்து அதை மேலும் மெருகூட்ட அருமையான அழகுக் குறிப்புகள் தரும் சந்திரகௌரி அவர்கள் !
http://kowsy-vanappu.blogspot.in/
4 . ஏறக்குறைய ஒரு பத்திரிகைப் போல் இந்த நாளில் இன்னின்ன பதிவுகள் என்று அழகாகத் திட்டமிட்டு
அருமையாகப் பதிவுகள் தரும் மதுமதி அவர்கள் !
http://writermadhumathi.blogspot.in/
5 . மனதை இலகுவாக்கி அழகியக் காதல் கவிதைகள் தந்து நெஞ்சள்ளிப் போகும் தனசேகரன் அவர்கள் !
http://sekar-thamil.blogspot.in/
மேலும் என்னோடு விருது பெற்ற கீதா,கணேஷ்,சந்திரகௌரி ,மதுமதி ஆகியவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தெரிந்து கொள்ள
லீப்ச்டர் விருது
புரிந்து கொள்ளடா
Marc
9:00 AM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
poem about life
,
poems about life
,
tamil kavithaigal
,
tamil poems about life
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
4 comments
புரிந்து கொள்ளடா |
உனக்காகத்தான் உள்ளதடா
நெல்லி போன்ற உருவமடா
நெழியும் சூழ்ச்சிகள் உள்ளதடா
தன்னைத்தானே சுற்றுமடா
உன்னை இழுத்துக் கொள்ளுமடா
கொள்கையில்லா பல பேரை
மூடிப்புதைக்கும் கல்லறையடா
மனிதப் பூச்சிகள் வாழுமடா - அது
தன்னைதா னடித்துக் கொல்லுமடா
மாயப்பேய்கள் வாழுமடா - உன்
குறிக்கோள்ளெல்லாம் அழிக்குமடா
போட்டியென்று சொல்லுமடா - உன்
வாழ்வை முழுதும் கரைக்குமடா
சட்டமென்று சொல்லுமடா அதுதான்
நியாயமென்று சொல்லுமடா
பகைவனென்று சொல்லுமடா
நெஞ்சில் குத்தி கொல்லுமடா
அன்புயென்று சொல்லிவிட்டு
ஆர்ப்பாட்டம் பன்னுமடா
காதலென்று சொல்லுமடா
கழட்டிவிட்டு ஓடுமடா
காவியென்று சொல்லுமடா
காமப்பசி காட்டுமடா
வாழென்று சொல்லுமடா
வாழவிடாமல் கொல்லுமடா
போகும்போது அழுகுமடா
நல்லவனென்று கூறுமடா
Subscribe to:
Posts
(
Atom
)
9 comments :
Post a Comment
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..