அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

மொக்கை டாக்டர்கள் ஜாக்கிரதை

2 comments
உடலும், மனதும் நமது கட்டுப்பாட்டில் உள்ளவரை பிரச்சனையேதும் இல்லை.இரண்டில் எதில் பிரச்சனை என்றாலும் நாம் உடனடியாக அணுகும் முதல் நபர் மருத்துவர்.சரி எல்லா மருத்துவர்களும் திறமையானவர்கள் தானா? இந்த கேள்வி மிக மிக முக்கிமான ஒன்று.இக்கட்டான சூழலில் ஒரு மருத்துவரை நம்பி தான் நம் வாழ்வையே ஒப்படைக்கிறோம்.அந்த சூழலில் அவரின் திறமையின் மீது ஏற்படும் சிறு சந்தேகம் கூட நம் வாழ்க்கையை முடித்துவிடலாம்.

ஒப்புக்கு கூட ஒரு வகுப்பறையில் உள்ள எல்லா மாணவர்களும் திறமையானவர்கள் என்று கூற முடியாது.அதிக பட்சம் ஒரு பத்து சதவீதம் திறமையானவர்கள் என எதிர்பார்க்கலாம்.நிலைமை இப்படி இருக்கையில் மருத்துவம் படித்து வெளிவருபவர்கள் எல்லாம் திறமையானவர்கள் என எப்படிக் கூற முடியும்.அப்படியே திறமையானவர்கள் என்றாலும் கூட நாம் சந்திக்கப் போகும் மருத்துவர் திறமையானவர் என எப்படி நம்புவது?

திறமையான என என்ற வார்த்தையை ஏன் சுற்றி சுற்றி வருகிறோம் என்றால் இக்கட்டான சூழலில் பதற்றமில்லாமல் சரியான அணுகுமுறையை கையாள சாதாரண மருத்துவரை விட அசாதாரண மருத்துவரே முக்கியம்.எனவே நாம் சந்திக்கும் மருத்துவர் திறமையானவரா என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம்.இயல்பாகவே இரண்டுவிதமான மருத்துவ சிகிச்சைகள் இருக்கின்றன.இயல்பான நோய்க்கான மருத்துவம். உதாரணமாக காய்ச்சல்,ஜலதோஸம்,இருமல் ஆகியவற்றை இயல்பான நோய்கள் எனலாம்.நாட்பட்ட நோய்கான மருத்துவம். காசநோய்,உள்ளுறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியவற்றை நாட்பட்ட நோய்கள் என கூறலாம்.

சாதாரண நோயோ,நாட்பட்ட நோயோ முதலில் மருத்துவரை அணுகும் முன் மருத்துவரை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.முதல் சந்திப்பிலே நோய் குணமாக வேண்டும் என எண்ணக்கூடாது.ஏனென்றால் முதல் சந்திப்பிலே குணமாக வேண்டும் என்றால் அதிக வீரியம் மிக்க மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.மருந்துகள் என்றாலே பக்கவிளைவுகள் உண்டு.எவ்வளவு சாப்பிடுகிறோமோ அவ்வளவு பக்கவிளைவு.சில டாக்டர்கள் அதிக வீரியம் மிக்க மாத்திரைகளை முதல் சந்திப்பிலே கொடுத்துவிடுகிறார்கள்.அப்போது தான் நோய் வேகமாக குணமாகி அவருக்கு நல்ல பேர் கிடைக்கும் என்பதால் அவ்வாறு செய்கிறார்கள்.

நன்றாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விசயம் உலகில் உள்ள எந்த மருத்துவருக்கும் உள்ளே சென்ற மருந்து என்ன மாதிரியான  விளைவுகளை தரும் என்பது தெரியாது.மருந்துகள் எல்லாமே வேதிப்பொருள்கள். இரண்டு மாத்திரைகளை சேர்த்து சாப்பிடும் போது என்ன மாதிரி செயல்படும் என்பதை யாராலும் சொல்லமுடியாது.அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் இரண்டு மாத்திரைகளை ஆராய்ந்த போது, தனி தனியாக சாப்பிடும் போது எந்த பிரச்சனை இல்லை என்றும் ,சேர்த்து சாப்பிடும் போது ரத்ததில் சக்கரை அளவு கடுமை உயர்ந்ததை கண்டு பிடித்துள்ளார்கள்.

நம் நாட்டிலோ பல மாத்திரைகளை பொட்டலம் போல் கட்டித்தருகிறார்கள்.எங்கள் உறவினர் ஒருவர் விபத்தில் சிக்கிய போது வலி தெரியாமல் இருக்க வீரிய மிக்க வலி நிவாரணியை செலுத்தி உள்ளார்கள்.இதனால் தற்காலிக சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட்டு மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பி வந்தார்.

கன்பூசியஸ் காலத்தில் மக்களுக்கு நோய் வராமல் இருக்க மருத்துவருக்கு பணம் கொடுப்பார்களாம்.நோய் வந்து விட்டால் அவருக்கு பணம் தருவதை நிறுத்திவிடுவார்களாம்.ஏனென்றால் நோய் வருவதை தடுக்காமல் விட்டது மருத்துவரின் குற்றமாம்.

நாம் வாழ்வதோ கன்பியூசனான காலம்.எங்ககிட்ட வாங்க, எங்ககிட்ட வாங்கனு மருத்துவமனைகளே விளம்பரப் படுத்தி அழைக்கிற காலம்.உள்ளே போன ஜட்டி, பனியன கூட கழட்டிட்டு விட்டுறுவாங்க .நாம் உயிர் வாழ்வது மருத்துவர்கள் கையில் ,அவர்களை சரியாக தேர்ந்தெடுக்காமல் நாம் மருத்துவம் பார்த்தால்  நம் கதி அதோ கதிதான்.

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..