அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

கதை நேரம் : நாமே புத்தர்கள்

2 comments
 ஜென் தத்துவமோ அல்லது கோட்பாடோ அல்ல.எல்லா
தத்துவக்குப்பைகளையும் துடைத்தெரிந்து விட்டு விழிப்புணர்வுடன் இயற்கையோடு வாழ்வது தான்.

நாம் எல்லோரும் காலையில் விழிக்கிறோம், மூன்று வேளை சாப்பிடுகிறோம்,இரவில் தூங்குகிறோம்.இவற்றிற்கிடையில் சாப்பாட்டிற்காக உழைக்கிறோம்.ஆனால் இவற்றில் எதையும் என்ன செய்கிறோம் என்ற விழிப்புணர்வோடு செய்வதில்லை.

காலையில் கண்விழித்த போது மீண்டும் ஒரு வாய்ப்பளித்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லவில்லை.குளிக்கும் போதும் நம் உடலை தொட்டு தழுவி நம்மை சுத்தமாக்கும் தண்ணீருக்கு நன்றி சொல்லவில்லை.
சாப்பிடும் போதும் சாப்பாட்டை வாயில் இட்டு ரசித்து சுவைத்து சாப்பிடுவதும் இல்லை. அதற்காகபாடு பட்டவற்களுக்கு நாம் நன்றி சொல்வதும் இல்லை.இரவிலும் அன்றைய தினம் முழுவதிற்கும் நமக்கு உதவியவர்களுக்கும், நமக்கு வாய்ப்பளித்தவர்களுக்கும் நாம் நன்றி சொல்வதில்லை.என்ன ஒரு நன்றி கெட்ட வாழ்க்கையை வாழுகிறோம்.உண்மையில் ஒரு செக்கு மாட்டைப்போல் வாழ்கிறோம்.

வாழ்க்கையை இனிமையாய் வாழ நாம் என்ன செய்கிறோம் என்ற சின்ன விழிப்புணர்வு போதும்.அப்புறம் வாழ்க்கை இனிக்கத்தொடங்கி விடும்.
ஒரு சின்ன விழிப்பென்னும் தீப்பொறி அறியாமை  காட்டிற்குள் விழும் போது என்ன ஆகும் என்பதை பாரதியார் பாடுகிறார்..

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.


விழிப்பென்னும் சிறு தீப்பொறியை அறியாமை நிரம்பிய மனமென்னும் காட்டிற்குள் வைத்த போது ,மனமென்னும் காடு  எரிந்து சாம்பலாகி,விழிப்பென்னும் உயர் நிலையை அடைகிறது.அப்போது அவர் மனம் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் என ஆனந்த கூத்தாடுகிறது.

மனதில் ஏற்படும் ஒரு சின்ன மாற்றம்,சின்ன கீறல் போதும் ஞானம் உதயமாகிவிடும்.அப்புறம் வாழ்க்கையே இனிமையாகிவிடும்.அற்பமெல்லாம் அற்புதமாகிவிடும்.

ஒருவன் பெரிய ஜென் மடாலயத்திற்கு சென்று அங்குள்ள குருவிடம் "நான் புத்தனாக வேண்டும்" என்றான் ஒருவன்.

அவர் உடனே கோபத்தில் ஓங்கி அறைந்து விட்டார்.அவனும் அதிர்ச்சியில் கன்னதை தடவிக்கொண்டே அங்கிருந்த தலைமை குருவிடம் "இவர் ரொம்ப மோசம். நான் புத்தனாக வேண்டும் என்றுதானே கேட்டேன்?" இதற்காக ஏன் இப்படி அறைகிறார்? என்றான்.

உடனே தலைமை குரு சொன்னார்.

"அவர் ரொம்ப கருணையானவர். நீ ரொம்ப இளம் வயதுக்காரன் என்பதால் உன்னை அறைவதோடு நிறுத்திக்கொண்டார்.இல்லையென்றால் கத்தியெடுத்து வெட்டி இருப்பார்".

ஏன் என்னை இப்படி கோபப்படுகிறார்? என்றான் வந்தவன்.

அதற்கு குரு சொன்னார் பிறகு "புத்தனாக இருந்து கொண்டே புத்தனாவது எப்படி என்று கேட்டால் யாருக்குதான் கோபம் வராது."

இதையே தான் இந்து மதமும் சொல்கிறது "அயம் ஆத்மா பிரம்மம்  – இந்த ஆத்மாவே பிரம்மம்

நானே புத்தனென்றேன்
ஆனவமாய் ஆகி நின்றேன்.
நாமே புத்தர்களென்றேன் 
புத்தனாய் ஆகிவிட்டேன்.

இன்னொரு கவிதை

வாழ்க்கையென்னும் பிச்சைப்
பாத்திரத்தில் விழுந்ததை சாப்பிடு
கிடைத்ததற்கு நன்றி சொல்
பசியாறிய வயிறு
உடலை மறைக்க தூண்டும்
உடலை மறைத்த மனம்
துணையை தேட சொல்லும்
எல்லாம் கிடைத்த மனம்
திமிர் பிடித்து திரியும்
மீண்டும் பசிவந்தால்
எல்லாம் மறைந்து போகும்
ஒரு ஜான் வயிறு - அதான்
இயக்கத்தின் மூலம்

மலை உச்சியில் பார்த்தால்
பள்ளத்தாக்கில் நடப்பது புரியும் !
விழிப்பின் உச்சியில் பார்த்தால்
நடப்பது புரியும்  ! நடக்கப் போவதும் புரியும் !
வந்த வழி சிறியது !
போகும் வழி பெரியது !
வந்த வழியில் திரும்பிப்
போக முடியாது !
போகும் வழி எங்கு போய்
முடிவதோ தெரியாது ?
வந்துவிட்டாய் , போகப் போகிறாய் !
சலனம் வேண்டாம்
ஓடல் வேண்டாம்
மனக் குளத்தில் கல்லெறிந்து
கொண்டே இருக்காதே !
ஓடிக் கடக்க முடியாது - உலகம்
அமைதியாக உட்கார்
உன்னைத்தேடி வரும் !
நீ தான் அது !
அதான் நீ  !
கண்ணாமூச்சி புரிந்து விட்டால்
தேடல் நின்றுவிடும் !
ஆன்ம சுதந்திரம் பிறந்துவிடும்
அமைதியோடு அமைதியாகி
அன்பு வெள்ளம் பெருகி
உன்னை அழித்து
புத்தம் பிறக்கும் !



 
மேலும் படிக்க

சிந்தனை நேரம் : உண்மையில் பெண்களுக்கு என்னதான் வெண்டும்? 

கதை நேரம் : கடவுள் (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) 

சிந்தனை நேரம் : பெண்களை புரிந்து கொள்வது எப்படி? பகுதி 1

 

 


 


  

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

சிந்தனை நேரம் : உண்மையில் பெண்களுக்கு என்னதான் வெண்டும்?

2 comments


உண்மையில் பெண்களுக்கு என்னதான் வெண்டும்?

 பெண்களைப்பற்றி அறிய முதல் பகுதியை இங்கு சொடுக்கி படித்துவிட்டுவரவும்.

இந்த கேள்வியை கேட்டவர் புகழ் பெற்ற மனோதத்துவ மேதை சிக்மண்ட் பிராய்டு.ஆனால் அவருக்கே இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை.
சரி பெண்களுக்கு உண்மையில் என்ன தான் வேண்டும்.
 
அவர்களுக்கு எல்லாமே தான் வேண்டும்.இதை எப்படி புரிந்து கொள்வது.உதாரணமாக ஒரு பெண் 250 ரூபாய் சேலை எடுக்கப்போனால்.கீழ் சொன்னவாரு அவர்கள் நடந்து கொள்வார்கள்.
  1. எல்லா மாடல்களையும் பொறுமையாக பார்ப்பார்கள்.
  2.  பெரிய பெரிய பூவாக இல்லாமலும் ,வெறும் கட்டம் கட்டமாக இல்லாமலும், நவீன ட்ரண்டாக இருக்க வேண்டும்.
  3. கண்டிப்பாக எளிமையாக இருக்கக்கூடாது.
  4. பட்டிக்காட்டுதனமாக இருக்கக் கூடாது.
  5. அடுத்தவர்கள் பார்த்தவுடன் வாய்பிளக்க வேண்டும்.
  6. யாருமே கட்டாத,யாருமே கற்பனை கூட கண்டிராத ஒரு சேலை

எளிமையாக சொன்னால் ஒரு ஆயிரம் ரூபாய் சேலைக்கு உரிய தகுதி இருக்க வேண்டும்.மேல் சொன்ன அனைத்து விசயங்களும் பெண்களுக்கு தகுந்த மாதிரி வேறுபடும்.இப்படிதான் அவர்கள் எல்லா தகுதிகளும் உள்ள ஒரு சிறந்த 250 ரூபாய் சேலையை தேர்ந்தெடுப்பார்கள்.

பெண்களை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?

ஏனென்றால் ஒரு பெண்ணுக்கே தான் யார்? தனக்கு என்ன வேண்டும்? என்பது தெரியாது.பிறகு நாம் எப்படி தெரிந்துகொள்வது.

மேலே சொன்ன உதாரணத்தையே எடுத்துக்கொண்டால்.அந்த சேலை எடுக்கும் பெண்ணுக்கே தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறோம் என்பது தெரியாது.பட்டிக்காட்டுதனமான சேலை என்று ஒரு பாய்ண்ட் சொல்லி இருக்கிறேன் என்றால் உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் அதற்கு ஒவ்வொரு அர்த்தம் சொல்லுவாள்.பெண்களை புரிந்து கொண்டு சேலை டிசைன் செய்தால் ஒரு பெண்ணுக்கே சேலை டிசைன் செய்வதில் நம் எல்லோருடைய வாழ்க்கையே முடிந்துவிடும்.ஏனென்றால் அவர்களுக்கே என்ன டிசைன் வேண்டும் என்பது தெரியாது.நாம் டிசைன் செய்து காட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.அவர்கள் உள்ளுணர்வு அதை வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும்.


 ஏன் ஒவ்வொரு பெண்ணும்  கையில் கைகுட்டை அல்லது பை,தனித்துவமான ஆடை அலங்காராம் செய்கிறார்கள் தெரியுமா?

ஏனென்றால் பெண்களுக்கு அடிப்படையிலே ஒரு பிடிமானமும்,ஒரு தனித்துவ குறியீடும் தேவைப்படுகிறது.உதாரணமாக எல்லா மலர்களும் ஒரே போல் இருந்தால் நமக்கு அதனதன் அழகில் வித்தியாசம் தெரியாது.அது போல் ஒவ்வொரு மலருக்கும் தனித்துவமான அடையாளங்கள் வேண்டும்.  அப்போது தான் வண்டுகள் குறிப்பிட்ட மலரை அடையாளம் காணமுடியும்.இப்படிதான் தான் பெண்களும் தங்களுக்கென ஒரு அடையாள குறி ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.அப்போது தான் ஆண்களால் எளிமையாக அந்த பெண்ணை அடையாளம் காண முடியும்.

பெண்கள் ஏன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்?

பெண்கள் இயல்பிலே வெளிப்படுத்தும் தன்னை கொண்டவர்கள்.அது அழகானலும் சரி அழுகையானலும் சரி.மனதில் எதையுமே வைத்துக்கொள்ள விரும்புவது இல்லை.அதை வெளிப்படுத்தியாக வேண்டும்.அதனால் தான் பெண்களுக்கு தங்கள் பேச்சை காது கொடுத்து கேட்கும் ஆண்களை ரொம்ப பிடிக்கும்.ஒரு நாள் ஒரு விசயத்தை மனதில் வைத்து வெளிப்படுத்தா விட்டால் பெண்களுக்கு தூக்கமே வராது.உண்மையில் எல்லா ஆண்களும் காதலிக்கும் போது பெண்களின் பேச்சை கேட்பது போல்,பேசிக்கொண்டே இருப்பது போல் நடிக்கிறார்கள்.ஏனென்றால் ஆண்களுக்கு இயற்கையிலே அந்த தன்மை கிடையாது.மேடைப்பேச்சாளர்கள் பாதி பேர் வீட்டில் பேசுவதே இல்லை என்பது தான் உண்மை.பேசிக்கொண்டே இருக்கும் காதல் கல்யாணத்திற்கு பின் நாறிவிடுகிறது என்பதுதான் உண்மை.


இறுதியாக பெண்களுடன் வாழ்வது எப்படி?

இந்த கட்டுரையை நான் எழுத ஆரம்பித்ததே இந்த கேள்விக்காக தான். நாம் எல்லோரும் பெண்களை தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம் இல்லை இல்லை புரிந்து கொள்ளவே இல்லை என்பது தான் உண்மை.ஏன்? நாம் யாரும் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை.ஒரு சேலை எடுக்க இவ்வளவு நேரமா?மேக்கப் போட இவ்வளவு நேரமா? என கோபித்துக்கொள்கிறோம்.ஆனால் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிய முயற்சி செய்வதில்லை.உண்மையில் எல்லா பெண்களுக்கும் சில விசயங்களில் ஆலோசகர் தேவைப்படுகிறார்.அவர்களும் கேட்க தயாராகவே இருக்கிறார்கள்.ஆண்கள் மனதில் ஒரு விசயத்தை நினைத்தவுடனே செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.யோசிப்பதில்லை.பெண்கள் பல வழிகளில் யோசித்துக்கொண்டே இருப்பார்கள்.செயல்படுவதில்லை.பெண்களிடம் யோசனைகளை கேட்டுக்கொண்டு ஆண்கள் செயல்பட வேண்டும்.இது தான் இயற்கையான வழி.

மற்றொரு முக்கியமான விசயம் பெண்கள் சார்ந்து வாழ்பவர்கள்.அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்,அன்பை அளிக்கும் ஆணை சார்ந்து வாழ்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு நல்ல அப்பா, நல்ல அண்ணண், நல்ல நண்பன்,நல்ல காதலன், நல்ல கணவன் என நிறைய  நல்ல விசயங்கள் தேவைப்படுகிறது.இதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சரி ஏன் கடவுள் பெண்களை மட்டும் இப்படிப்படைத்தான்?

வாழ்க்கையை சுவாரசியமாக்கத்தான்.எல்லாமே புரிந்து விட்டால்,தெரிந்து விட்டால் வாழ்க்கையில் தேடல் நின்றுவிடும்.சுவாராசியம் தீர்ந்துவிடும்.அதனால்தான் கடவுள் தன்னையும் ,பெண்களையும் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு படைத்து விட்டான்.

பெண்களை உற்றுப்பாருங்கள்,கூர்ந்து கவனியுங்கள்,வாழ்க்கையே சுவாரசியமாகி கவிதைபோல் ஆகிவிடும். 

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

கதை நேரம் : கடவுள் (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்)

No comments


ஒரு ஆத்திகர் இறந்தவுடன் சொர்க்கம் சென்றார்.

கடவுள் ஊர்வலம் நடப்பதால் கொஞ்ச நேரம் ஒரத்தில் நிற்குமாறு கிங்கரர்கள் ஆத்திகரிடம் கூறினார்கள்.அவரும் ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தார்.

கொஞ்ச  நேரத்தில் ஒரு பெரிய கூட்டம் வெள்ளை சிப்பாவும்,முகத்தில் தாடியும் கொண்ட மனிதனை தங்கள் தோல்களில் சுமந்த படி சென்றனர்.ஆத்திகர் கூட்டத்தை பற்றி கிங்கரர்களிம் கேட்டதற்கு கிறித்தவர்கள் கூட்டம் என கூறினார்கள்.

அந்த கூட்டம் போன பின்பு மற்றொரு கூட்டம் வந்தது. அவர்களும் ஒரு பெரிய மனிதரை தங்கள் தோல்களில் சுமந்து ஆடிக்கொண்டே சென்றனர்.அவர்கள் பற்றி கேட்ட போது இஸ்லாமியர்கள் கூட்டம் என கூறினார்கள்.

அதற்கடுத்தாற் போல் அமைதியாக ஒரு மனிதன் நடந்து போனார்.அவரை பின் பற்றி அமைதியாக ஒரு கூட்டம் சென்றது.அவர்களை பார்த்த உடனே புத்த மதத்தை சேர்ந்தவர்கள் என ஆத்திகர் புரிந்து கொண்டார்.

இவ்வாறாக சிறிதும் பெரிதுமாக கூட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்து சென்றன.இறுதியில் ஒரே ஒரு வயதான மனிதர் மட்டும் தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தார்.அவர் பின்னால் எந்த கூட்டமும் இல்லை.

இதைப்பார்த்த ஆத்திகருக்கு ஒரே ஆச்சர்யம்.ஓடிப்போய் அவரிடமே நீங்கள் யார்?உங்களை நான் பூமியில் பார்த்ததே இல்லை என கூறினார்.

அதற்கு அந்த வயதான மனிதர் நான் தான் கடவுள் என்றார்.

========================================================================

"ஒருவன் ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டுங்கள்" என்று ஒரு மத போதகர் போதகம் செய்து கொண்டிருந்தார்.இதை கேட்டுக்கொண்டிருந்த ஒருவன் பரிசோதிக்க விரும்பினான்.

உடனே போதகர் கன்னத்தில் அறைந்தான்.

உண்மையான போதகர் மறுகன்னத்தையும் காண்பித்தார்.

இந்த முறை அவன் தன் முழு உடல் பலத்தையும் பயன்படுத்தி ஓங்கி மறு கன்னத்திலும் அறைந்தான்.

உடனே அவனை பாய்ந்து பிடித்த துறவி செம்மையாக அடிக்கத்தொடங்கினார்.

வலிதாங்க முடியாமல் அலறியபடி அவன் கேட்டான்.

"என்ன செய்கிறீர்கள்?காலையில்தான் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னதைக் காட்ட சொன்னீர்கள்?"

துறவி சொன்னார் :

"ஆம்.எனக்கு மூன்றாம் கன்னம் இல்லையே; ஏசுவும் மறு கன்னத்தோடு நிறுத்திக்கொண்டார்.அதற்கு பிறகு நான் விரும்பியதை செய்து கொள்ளலாம்.ஏசு இதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை என்றார்".

=======================================================================

 மேலும் படிக்க :


சிந்தனை நேரம் : பெண்களை புரிந்து கொள்வது எப்படி?

 

 

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

சிந்தனை நேரம் : பெண்களை புரிந்து கொள்வது எப்படி? பகுதி 1

2 comments


இந்த உலகில் கால காலமாக சொல்லப்பட்டு வரும் பொய்களில் ஒன்று பெண்களை புரிந்து கொள்ள முடியாது.நம்மால் ஒரு மலரையோ அல்லது பட்டாம்பூச்சியையோ  ரசிக்க முடிந்தால்,புரிந்து கொள்ள முடிந்தால் பெண்களையும் ரசிக்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியும்.

ஆண்களே இல்லாத, பெண்கள் ஆட்சி செய்யும் பெண்களின் உலகம் எவ்வாறு இருக்கும்?அந்த உலகத்தில் சண்டையே இருக்காது.அந்த உலகத்தில் தண்ணி, தம் இருக்காது.சண்டை வந்தால் சண்டையிடுவதற்கு பதிலாக அந்த நாடு எதிரி நாட்டுடன் பேசிக்கொள்ளாது.அந்த உலகத்தில் கொடிய செயலே கில்லுவதும்,அறைவதுமாக இருக்கும்.

ஒரு ஆங்கில படத்தில் ஒரு அருமையான காட்சி ஒன்று பார்த்தேன்.அது பெண்களின் உலகத்தை , மனதை அருமையாக படம் பிடித்துக்காட்டியது.
படத்தின் கதானாயகன் ஒரு சீன குங்பு மாஸ்டர்.ஜப்பானியர்கள்  இந்த குங்பு மாஸ்டரை கொல்ல நினைக்கிறார்கள்.தன்னையும் தன் குடும்பத்தையும் எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற மனைவியின் வற்புறுத்துதலால் நாட்டைவிட்டே போக முயற்சி செய்கிறான்.அந்த காட்சியில் கதா நாயகன் சொல்லுவான் "நான் எவ்வளவு பெரிய குங்பு மாஸ்டர்!இருந்தும் என்னால் இந்த நாட்டுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.நான் கோழை போல் நாட்டைவிட்டு போக போகிறேன்." அதற்கு அவன் மனைவி சொல்லுவாள்.
"எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை.நீங்கள்,நான் நம் மகன் மூவரும் உயிரோடு இருக்கிறோம்."அது போதும் என்பாள்.

உண்மையில் ஆண்கள் அறிவுப்பூர்வமானவர்கள்.பெண்கள் உணர்வுப்பூர்வமானவர்கள்.ஒரு ஆணுக்கு பித்தாகரஸ் தியரம் அவசியமாக இருக்கலாம்.ஆனால் பெண்ணுக்கு தானும் தன் குடும்பமும் மிக முக்கியம்.உண்மையில் பெண்கள் தான் உலகத்தையே உறவு பாலங்களாக பின்னி பேணிக்காப்பவர்கள் பெண்கள்.

ஒரு ஆணை திட்டிவிட்டால் பத்து நிமிடத்தில் போடா போ என தன் வேலையை பார்க்கப்போய்விடுவான்.ஆனால் பெண்ணோ இடிந்து போய்விடுவாள்.அதிலிருந்து மீள நாட்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.

எந்த டீக்கடையிலாவது பெண்கள் அமர்ந்து அரசியல் பேசியது உண்டா?
இல்லை.

ஏனென்றால் ஆண்கள் புறத்தன்மை வாய்ந்தவர்கள்.அவர்களுக்கு தங்கள் வீட்டைத்தாண்டி சமூகம்,அரசியல் என புறத்தன்மைவாய்ந்த விசயங்கள் வேண்டும்,
பெண்கள் அகத்தன்மை வாய்ந்தவர்கள்.அவர்களுக்கு தங்கள் அழகு,தங்கள் கவுரவம்,தங்கள் பிள்ளை என தங்களை பற்றிய அல்லது தங்களை சுற்றி உள்ளவர்கள் பற்றிய விசயம் மிக அவசியம்.ஒரு பெண்ணுக்கு மன்மோகன்சிங்கை விட அன்று நாதஸ்வரம் சீரியலில் என்ன நடந்தது என்பது முக்கியம்.

ஆண்கள் உடல் வலிமையானவர்கள்.அதனால் தான் ஆண்கள் ஆட்சி செய்யும் இந்த உலகம் இத்தனை வன்முறைத்தனமாக இருக்கிறது.பெண்கள் மன வலிமையானவர்கள்.பெண்களின் உடம்பே அதிக பட்ச வலிகளை தாங்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.அதனால் தான் பிரசவம் போன்ற விசயங்களை இலகுவாக தாண்டிவிடுவார்கள்.அது மட்டும் இல்லாமல் ஒரு செயலை எடுத்துவிட்டால் செய்யாமல் விட மாட்டார்கள்.

ஒரு பெண்ணால் தன் எதிரே நிற்பவர்களின் உடல் மொழிகளை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.உதாரணமாக ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பொய் சொல்லுகிறான் என்றால் அந்த பெண்ணால் அவன் பொய் சொல்லுகிறான்,என்பதை ஆணின் உடல் மொழியால் அறிந்து கொள்ளமுடியும்.

ஒரு பெண்ணிற்கு சமுதாயத்தின் மீதும் அதன் கட்டுப்பாடுகளின் மீது எந்த அக்கரையும் இல்லை.அவள் நினைத்தால் அத்தனைக்கட்டுப்பாடுகளையும் எளிதாக உடைத்து தாண்டிவிடுவாள்.

ஒரு பெண்ணுக்கு இரண்டு ஆண் நண்பர்கள் இருக்க முடியும்.ஆனால் ஒரு ஆணுக்கு இரண்டு பெண் நண்பர்கள் இருந்தால் அவன் செத்தான்.

பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு உலகம்.அவர்களுக்கென பிடித்தமான விசயங்கள்,செயல்பாடுகள்,கட்டுப்பாடுகள் எல்லாம் பெண்ணிற்கு பெண் வேறுபடும்.

தன்னை மதிக்கும்,தன்னை காக்கும்,தன் மேல் அன்பைப்பொழியும் ஆண்களையே பெண்களுக்கு பிடிக்கும்.ஒரு ஆண் வலிமையற்றவனாய்,அன்பில்லாதவனாய் இருந்தாள்.உடனே அவனை விட்டு விலக ஆரம்பிப்பாள்.

பெண்களுக்கு உள்ளுணர்வு தன்மை அதிகம்.அதனால் அவர்கள் எதிரிகள் அருகில் வரும் போதே முறைக்க அல்லது எதிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒரு ஆண் துரோகங்களையும்,அவமானங்களையும் எளிதாக மறந்து விடுவான்.ஆனால் ஒரு பெண் துரோகங்களை,அவமானங்களையும் மறக்கவும் மாட்டாள்.மன்னிக்கவும் மாட்டாள்.


தொடரும்............

மேலும் வாசிக்க

திகில் கதை : வேண்டாத வேலை 

சிந்தனை நேரம் : கொடைக்கானல் துன்பச்சுற்றுலா

 

 

 

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

திகில் கதை : வேண்டாத வேலை

No comments

நள்ளிரவில் ஒரு வீட்டில் இரண்டு திருடர்கள் நுழைந்தனர்.அவர்கள் ஒவ்வொரு அறையாக சென்று பீரோல் மற்றும் நகைகள் இருக்கும் இடத்தை தேடினார்கள்.

இறுதியாக இருவரும் பீரோல் இருக்கும் அறையை அடைந்தனர்.முதலாவது திருடன் பீரோலை திறந்து பார்த்தவுடன் அலறியபடி தரையில் சுருண்டு விழுந்தான்.அலறலைக் கேட்ட இரண்டாவது திருடனும் பீரோல் அருகில் வந்து சுற்றி முன்னும் பின்னும் பார்த்தான். திடீரென அவனும் அலறியபடி தரையில் சுருண்டு விழுந்தான்.

சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது திருடர்கள் இருவரும் வாயில் நுரையுடன் சுருண்டு கிடந்தனர்.

வீட்டில் உள்ளவர்கள் உடனே போலிஸுக்கு போன் செய்து நடந்ததை சொன்னார்கள்.போலிஸ் வந்து இருவரையும் ஆம்புலன்ஸில்  ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.

அந்த நள்ளிரவு நேரத்தில் திருடர்கள் ஏன் அலறினார்கள்?
எதனால் இருவரும் மயங்கி விழுந்தார்கள்?
என போலிஸுக்கு ஒன்றுமே புரியவில்லை.
வீட்டில் உள்ளவர்களை கேட்ட போதும் தங்களுக்கு எதுவும் தெரியாது என விசாரணையில் சொல்லிவிட்டார்கள்.

உடனே இன்ஸ்பெக்டர் அந்த வீடு முழுவதையும் மீண்டும் பரிசோதிக்க ஆரம்பித்தார்.குறிப்பாக அந்த பீரோல் இருக்கும் அறையை கூர்ந்து பரிசோதிக்க ஆரம்பித்தார்.ஆனால் அங்கு எந்த குறிப்பும் கிடைக்கவில்லை.

பிறகு அந்த அறையைவிட்டு அதற்குமுன் இருந்த சமையல் அறையை பரிசோதிக்க ஆரம்பித்தார்.சமையல் அறை சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருந்தது.ஆனால் அந்த அறையில் இருந்த ஒரு மேஜையின் மீது வெற்று தட்டு இருப்பதை தற்செயலாக பார்த்தார் .அதன் ஓரங்களில் ஏதோ இனிப்பு பொருள் ஒட்டி இருப்பதை பார்த்தார்.

உடனே வீட்டில் உள்ளவர்களிடம் தட்டைப்பற்றி விசாரித்தார்.அதற்கு வீட்டில் உள்ளவர்கள் "வீட்டில் எலித்தொல்லை அதிகம் இருப்பதால் எலியை கொல்ல சுவீட்டிற்குள் எலி மாத்திரை வைத்துவிட்டு தூங்குவது தங்கள் வீட்டில் வழக்கம் என் கூறினார்கள்."

இன்ஸ்பெக்டருக்கு எல்லாம் புரிந்து விட்டதால் கிளம்ப ஆரம்பித்தார்.ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்றும் புரியாததால் இன்ஸ்பெக்டரிடம் என்ன நடந்தது என கேட்டனர்?

அதற்கு அவர் திருடர்கள் முதலில் சமையல் அறைக்குள் நுழைந்திருக்கிறார்கள்.எலி மருந்து கலந்த சுவீட்டை சாப்பிட்டுவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்து பீரோலை திறக்க ஆரம்பிக்கும் போது எலி மருந்து தன் வேலையை காட்டிவிட்டது.திருடர்கள் மாட்டிக்கொண்டார்கள் என்றார்.


மேலும் வாசிக்க:

கதை நேரம் : அழகிய மனங்களுக்கான அந்த மாதிரி கதைகள்
கதைநேரம் : ஆசை
 

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

சிந்தனை நேரம் : கொடைக்கானல் துன்பச்சுற்றுலா

2 comments

எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் ஆச்சு.நானும் கல்யாணம் ஆன புதுசுல ஊட்டிக்கு போலாம்னு பிளான் பன்னி இருந்தப்ப எங்க வீட்டுல விடல.அதுக்கப்பறம் குழந்தை , வேலைனு டூர் பத்தி நினைக்கறதுக்கே நேரம் இல்லாம போச்சு,சரி இந்தவாட்டி கொடக்கானல் போலாம்னு ஒரு சின்ன பிளான்  பன்னினேன்.பிளான் இது தான்.எனக்கு சனி,ஞாயிறு வார விடுமுறை.அதனால் வெள்ளிக்கிழமை மதியம் மூணு மணிக்கு வீட்டுல இருந்து கிளம்பி ஏழு மணிக்குள்ள கொடைக்கானல் போய் சேரனும்.அங்க போய் ரூமும் வாடகை காரும் பிடிச்சு சனி ஞாயிறு இரண்டு நாள் ரிலாக்ஸா கொடைக்கானல என்ஜாய் பன்னனும்.ஆனா என் பிளான் எப்படியெல்லாம் சொதப்பி, நான் என்ன அனுபவிச்சேன் என்பது தான் இந்த கட்டுரை.

என்னுடைய பிளான்படி சரியா மாலை 3.30க்கு நான் , என் மனைவி ஒரு வயது மகள் மூவரும் ஆரப்பாளையம் பஸ்டாண்டிற்கு ஆட்டோவில் போய் சேர்ந்தோம்.அங்கே போய் விசாரித்த பிறகுதான் தெரிந்தது அங்கிருந்து கொடைக்கானலுக்கு நேர் வண்டி 5.20க்கு என்று.சரி அங்கிருந்து வத்தலகுண்டு சென்றால் கொடைகானலுக்கு வேகமாக போய்விடலாம் என்று அங்கிருந்து டீகடைக்காரர் சொன்னதால் நேராக வத்தலகுண்டு சென்றோம்.ஆனால் வத்தல்குண்டிலும் இதே நிலைமைதான்.அங்கிருந்தும் கொடைக்கானலுக்கு அடிக்கடி பஸ் இல்லை.வத்தலகுண்டில் பதினைந்து நிமிட காத்திருப்புக்கு பின் ஒரு வண்டி வந்தது.அந்த வண்டியில் நிற்ககூட இடமில்லை.ஆனால் வேறு வழி இல்லாமல் நாங்கள் அந்த வண்டியில் ஏறினோம்.

ஏறி பதினைந்தாவது நிமிடத்தில் என் மகள் அழ ஆரம்பித்தாள்.நானும் என் மனைவியும் நின்று கொண்டே என் மகளை சமாதானப் படுத்திக்கொண்டிருந்தோம்.ஆனால் அவளோ பஸ்ஸே ரெண்டாகும் அளவுக்கு கத்த ஆரம்பித்தாள்.தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவி தன் பையில் இருந்த ஒரு சாக்லேட்டை என் மகள் கையில் கொடுத்தாள்.என்மகளும் சாக்லேட் தின்னும் ஆசையில் சமாதானமானாள்.ஆனால் எல்லாம் ஐந்து நிமிடம் தான்.மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.

இதைப்பார்த்து என் மனைவி நின்று கொண்டிருந்த சீட் அருகில் இருந்த பெண்மணி கருணையோடு தன் சீட்டை என் மனைவிக்கு கொடுத்தார்.ஆனாலும் என் மகள் அழுகையை நிறுத்தவில்லை.வேறு வழி இல்லாமல் என் பையில் இருந்த டேப்லட் கணிணியை இயக்க ஆரம்பித்தாள் என் மனைவி.உடனே என் மகள் அழுகையை நிறுத்திவிட்டாள்.இதற்குள் பஸ் மலைப்பகுதியின் கால்வாசி தூரத்தை கடந்திருந்தது.திடீரென ஒரு வளைவில் பஸ் நின்றுவிட்டது.பஸ் முழுவதும் புகையால் நிரம்ப ஆரம்பித்தது.எல்லோரும் பஸ்ஸில் இருந்து வேகமாக இறங்கி சாலையில் நின்றோம்.இனி பஸ் நகராது என டிரைவர் சொல்லிவிட்டு மாற்று வண்டிக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.

வேறு என்ன செய்வது என்று தெரியாமல் நானும் என் மனைவியும் ரோட்டில் நின்று கொண்டிருந்தோம்.என் மகளும் குளிரில் அழ ஆரம்பித்தாள்.ஆனால் அவளை சாமாதானம் செய்ய முடியாமல் வெறுப்பின் உச்சிக்கே சென்றோம்.அருகில் இருந்தவர்கள் போகும் வண்டிகளிடம் லிப்ட் கேட்டு ஏற ஆரம்பித்தார்கள்.பத்து நிமிட காத்திருப்புக்கு பின் தூரத்தில் ஒரு வேன் வந்து நின்றது.அது கல்லூரி மாணவிகளை ஏற்றிவரும் வேன் என்பதால் எங்களை  ஏற்ற மறுத்தார்கள்.ஆனால்கையில் குழந்தையுடன் கொட்டும் பனியில் நிற்பதை பார்த்து எங்களை ஏற்றிக்கொண்டார்கள்.என் மகளும் வேனில் ஏறியவுடன் அழுகையை நிறுத்திவிட்டாள். நான் டிரைவர் சீட் அருகிலும் என் மனைவி உள்ளே மாணவிகளுடன் போய் அமர்ந்து கொண்டாள்.

வண்டி மெதுவாக கொடைக்கானலை நெருங்கும் போது டிரைவர் என்னிடம் எங்கு இறங்க வேண்டும் என்றார்?நான் பஸ்டாண்ட் என்றேன். நீங்கள் ரூம் எடுத்துவிட்டீர்களா? என்றார். நான் இல்லை என்றேன்.உடனே அவர் ஒரு கார்டை என்னிடம்  காட்டி தாங்கள் லோக்கல் கொடைக்கானல் டிரைவர்கள் என்றும் ரூம் மற்றும் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்பவர்கள் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.அது மட்டுமில்லாமல் கொடைக்கானலில் ஏமாற்றுபவர்கள் அதிகம் என்பதால் தாங்களே ரூம் ஏற்பாடு செய்யலாமா, என  கேட்டார்கள்?  நானும் சரி என தலையசைத்தேன்.உடனே கிளினர் யாருக்கோ போன் செய்து வரச்சொன்னார்.

வண்டி கொடைக்கானலை அடைந்ததும் அங்கே ஒருவர் எங்களுக்காக காருடன் காத்துக்கொண்டிருந்தார். நாங்கள் காரில் ஏறி பஸ்டாண்டில் இருக்கும் அவருடைய ஏஜன்ஸிற்கு சென்றோம்.அங்கே எந்த மாதிரி ரூம் வேண்டும் என்றார்.நான் சிங்கிள் பெட் உள்ள ரூம் வேண்டும் என்றேன்.அவர் தன் மேஜையின் மீது இருந்த அந்த ரூமின் போட்டோவை காட்டி இது ஓகேவா என் கேட்டார்?நானும் என் மனைவியும் ஓகே என்றோம்.அங்கிருந்து ஓட்டலுக்கு வந்த காரிலே சென்றோம்.ஓட்டலுக்கு சென்று பார்த்தால் எனக்கும் என் மனைவிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.ஆம் எங்களுக்கு போட்டோவில் காட்டிய அறைக்கும் நாங்கள் நேரில் பார்க்கும் அறைக்கும் சம்பந்தமே இல்லை.நாங்கள் ஏமாற்றப்பட்டதை நொந்து கொண்டு வேறு வழி இல்லாமல் அதே அறையில் தங்கினோம்.

 மறுநாள் காலையில் மீண்டும் அந்த ஹோட்டலின் ஓனர் எங்களை வந்து சந்தித்தார்.சுற்றிப்பார்க்க கார் அல்லது வேனை ஏற்பாடு செய்யட்டுமா என கேட்டார்? நான் யோசித்துக்கொண்டே நின்றேன்.உடனே தன் சட்டை பையிலிருந்து ஒரு அட்டையை எடுத்து என்னிடம் நீட்டினார்.அதில் எந்ததெந்த இடங்களை எல்லாம் சுற்றி காட்டுவார்கள் என ஒரு லிஸ்ட் இருந்தது.அதுவும் தலைக்கு150,200,350 என பணத்தின் அடிப்படையில் மூன்று வகையாக இருந்தது. நானும் என் மனைவியும் 350 ரூபாய் வகையை தேர்ந்தெடுத்தோம்.அவர் அங்களிடம் பணத்தை வாங்கிவிட்டு வண்டி பத்து மணிக்கு வரும் என்றார்.நாங்களும் வேகமாக சாப்பிட்டுவிட்டு ரிசப்சனில் பத்து மணிக்கு காத்திருந்தோம்.மணி 10.30 ஆகியும் வண்டி வரவே இல்லை.போன் பன்னி கேட்டதற்கு பாரஸ்ட் ட்ரிப் என்பதால் காட்டிலகா அதிகாரிகளின் அனுமதி சீட்டிற்காக காத்திருப்பதாக சொன்னார்கள்.மூன்று முறை போன் செய்த பின்பு 11.30 ஒரு வேன் வந்து சேர்ந்தது.அதற்குள் ஒரு கைடு,டிரைவர் மேலும் எங்களைப்போல ட்ரிப் கேட்டிருந்தவர்களும் இருந்தார்கள்.

வண்டி சரியாக இரண்டு வளைவுகள் பயணம் செய்து ஒரு ஓரம் போய் நின்றது.அந்த இடம் தான்  கோக்கர்ஸ்வாக் எனவும் ,எதிரே இருப்பது பூங்கா எனவும் அதனதன் வரலாறை ஒரு நிமிடம்கூறி எல்லோரும் இரண்டையும் சுற்றி பார்த்துவிட்டு சரியாக ஒரு மணிக்கு வண்டி நிற்கும் இடத்திற்கு வருமாறு கூறினார்கள்.அந்த இரண்டு இடங்களுமே நாங்கள் இருந்த ஹோட்டலின் அருகில்தான் இருந்தது .நாங்கள் மறுபடியும் நொந்து கொண்டு இரண்டு இடங்களைசுற்றி பார்த்துவிட்டு வேன் நிற்கும் இடத்திற்கு வந்தோம்.அங்கிருந்து வேன் வேகமாக மலைக்காட்டிற்குள் பயணம் செய்ய ஆரம்பித்தது.போகும் வழியில் வண்டியில் இருந்தவாரே எல்லா இடங்களை சொல்ல ஆரம்பித்தார்கள்.பேருக்கு இரண்டே இடங்களில் இறக்கிவிட்டார்கள்.மதியம் உணவிற்கு மலை உச்சியில் தனியாக இருந்த ஒரு கடையில் இறக்கிவிட்டார்கள்.அங்கு சாப்பாடு மட்டும் இருந்தது.பொறியல் காலியாகியிருந்தது.ஆனால் விலையோ அறுபது ரூபாய்.என்ன சொல்ல வேறுவழியில்லாமல் சாப்பிட்டோம்.

அங்கிருந்து மறுபடியும் வேனில் புறப்பட்டு சரியாக நான்கு இடங்களை வேனில் இருந்தவாறே காட்டினார்கள்.பேருக்கு குணாக்குகையில் மட்டும்
இறக்கிவிட்டார்கள்.கடைசியில் எங்களை ஏரி கரையில் இறக்கிவிட்டு தலைக்கு ஐம்பது எக்ஸ்ட்ரா ஜார்ஜ் வாங்கிக்கொண்டார்கள்.கேட்டதற்கு டிரைவர்,கிளினர் சம்பளம் என்றார்கள்.உண்மையில் ஒரு மணி நேர வேன் பயணம் இதற்கு தலைக்கு இவர்கள் வாங்கிய பணம் 400.நாங்கள் உண்மையில் வெறுப்பின் உச்சிக்கே சென்றோம்.மறுநாள் காலை நாங்கள் எந்த ட்ரிப்பும் ஏற்பாடு செய்யாமல் நாங்களே நடந்து பார்க்,ஏரி என சுற்றிப்பார்த்து கொடைக்கானலில் இருந்து கீழே இறங்கினோம்.

உண்மையில் மொத்த கொடைக்கானல் டூரிலும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதுதான் உண்மை.இதற்கு நான் செய்த முட்டாள்தனமான பிளான்தான் காரணம்.ஆனால் என் மனதை உறுத்துவது ஒன்றேதான்.மனிதன் சகமனிதனை ஏமாற்றிவாழும் அந்த வாழ்க்கைதான்.பத்து ரூபாய்க்கு எத்தனை பொய் எத்தனை புரட்டு.தங்களை நம்பிவந்தவர்களை முதுகில் குத்தும் கூட்டத்தை நான் இப்போது தான் நேரில் பார்க்கிறேன்.ஆனாலும் இவ்வளவு கெட்ட மனிதர்கள் நடுவிலும் நிறைய நல்ல மனிதர்களையும் சந்தித்தேன்.

கொட்டும் பனியில் மலை ரோட்டில் கையில் குழந்தையுடன் லிப்ட் கேட்கும் போது வண்டியை நிறுத்தி இடம் கொடுத்த வேன் டிரைவர்.என் மகளுக்காக தான் உட்கார்ந்திருந்த இடத்தை கொடுத்த அந்த பெண்.அவ்வளவு பேருந்து கூட்டத்திற்கு நடுவிலும் என் மகளின் அழுகையை சமாதானப்படுத்த தன் பையில் இருந்த சாக்லேட்டை எடுத்துக்கொடுத்த கல்லூரி மாணவி என் நிறைய நல்ல மனங்களையும் சந்தித்தேன்.


மகாபாரத்தில் துரியோதனன் தலைமையிலான கெளரவர்கள் படை எல்லாவிதத்திலும் பெரியதாகவும், திறமையானவர்களை கொண்டதாகவும் இருந்தாலும்,ஏன் போர் சொல்லிக்கொடுத்த குருதேவரே அவன் பக்கம் இருந்தும் ஏன் தோற்றார்கள் என ஓசோவிடம் ஒரு கேள்விகேட்கப்பட்டது?

அதற்கு அவர் ஒரு மனிதன் ஒரு செயலை செய்யவோ அல்லது இலக்கையோ  அடையவோ திட்டமிடும் போது  இது இப்படிதான் நடக்கும் மிகுந்த நம்பிக்கை கொள்கிறான்.ஆனால் கண்ணுக்கு புலனாக சக்திகள் அதில் செயல்பட ஆரம்பிக்கும் போது எல்லாம் தலைகீழ் ஆகிவிடுகிறது.நினைப்பதொன்று நடப்பதொன்றாகி விடிகிறது.துரியோதனனும் தன் முழு திறமையுடன் திறமையான ஆட்களை தன் படையில் இணைத்து வெற்றி பெருவோம் என மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட்டான்.ஆனால் கடவுள் கண்ணண் ரூபத்தில் வந்து எல்லாவற்றையும் மாற்றிப்போட்டுவிட்டார்.எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.தோற்கவேண்டியவன் ஜெய்த்துவிட்டான்,ஜெயிக்க வேண்டியவன் தோற்றுவிட்டான்.

உண்மையில் கொடைக்கானல் கிளம்பும்முன் இன்பச்சுற்றுலா என நினைத்தேன்.ஆனால் அதுவே துன்ப சுற்றுலாவாக மாறி  நல்ல அனுபவத்தை கொடுத்தது என்பதுதான் உண்மை.

மேலும் வாசிக்க

சிந்தனை நேரம் : உடல் எடையும் ,குறைக்கும் வழிமுறைகளும்




2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

கதை நேரம் : அழகிய மனங்களுக்கான அந்த மாதிரி கதைகள்

1 comment


ஒரு பேராசிரியர் உடற்கூறு வகுப்பில் "உணர்ச்சி தீண்டுதலில் பத்து மடங்கு பெரிதாகும் மனித உறுப்பு  எது என்று?" ஒரு மாணவியிடம் கேட்டார்.

உடனே அந்த மாணவி நாணத்துடன் "இதற்கு நான் பதில் கூறமாட்டேன் என்றாள்".

அந்த பேராசிரியர் அருகில் இருந்த மாணவனை கேட்டார்.

அவன் "கண்ணின் கருவிழி" என்றான்.

பேராசிரியர் மாணவியை பார்த்து கூறினார்.

உனது குழப்பம் மூன்று விசயங்களை காட்டுகிறது.ஒன்று "நீ பாடங்களை சரியாக படிப்பதில்லை".இரண்டு "உன் மனம் அழுக்கானது".மூன்று "நீ மிகவும் ஏமாற்றத்திற்குள்ளாவாய்".


----------------------------------------------------------------&&---------------------------------------------------


தன்னுடைய 70 வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாட விரும்பிய அந்த முதியவர் மருத்துவமனைக்கு வந்தார்.

டாக்டரை அணுகி "டாக்டர், இன்று இரவு ஒரு பெண்ணுடன் தங்கப்போகிறேன்.அவளிடம் ஒரு இளைஞனைப்போல் நடந்து கொள்ள விரும்புகிறேன்.ஏதாவது மருந்து கொடுங்கள்" என்றார்.

அவரது ஆசையை கண்டு அனுதாபப்பட்டு டாக்டரும் சில மாத்திரைகளை எழுதிக்கொடுத்தார்.

நடு இரவில் அந்த டாக்டர் ஆர்வத்தை கட்டுப்படுத்தமுடியாம ல் அந்த முதியவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டார்: "என்னுடைய மாத்திரைகள் ஏதும் வேலை செய்ததா?"

"ஆகா! பிரமாதம்! இதுவரை எழு தடவை ஆகிவிட்டது!"என்று உற்சாகமாக கூறினார் முதியவர்.

"அப்படியா! ரொம்ப சந்தோசம்! ஆமாம், அந்த பெண் எப்படி இருக்கிறாள்?" என்றார் டாக்டர்?

அந்த பெண்ணா? அவள் இன்னும் இங்கு வரவில்லையே. என்றார் முதியவர்.


-------------------------------------------------------------&&---------------------------------------------------------

மேலே சொல்லப்பட்ட கதைகள் மனம் காட்டும் கண்ணாடிகள். நீங்கள் இந்த கதைகளை படிக்கும் போது ஆழமாக உங்கள் மனங்களை பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்னை திட்ட நினைத்தால் அதற்கு நீங்கள் கொண்ட தவறான புரிதலாக கூட இருக்கலாம். நீங்கள் சிரித்துக்கொண்டால் நானும் சிரித்துக்கொள்வேன்.ஏனென்றால் நாம் இருவரும் சரியான புரிதல் உள்ளவர்களாக இருக்கலாம்.


மேலும் கதைகளுக்கு படியுங்கள்.

  1. ஆசை 
  2. வாயால் வந்த வினை


1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

சிந்தனை நேரம் : உடல் எடையும் ,குறைக்கும் வழிமுறைகளும்

No comments

இன்றைய சூழலில் பல ஆயிரம் கோடி லாபம் தரும் தொழில் எது என்றால் அது உடல் எடையை குறைக்கும் கருவிகளை,மாத்திரைகளை தயாரிக்கும் தொழில் தான்.ஏனென்றால்  மேற்கில் மூன்றில் ஒரு பங்கு ஆணும்,பெண்ணும் அதிக எடையுடன்(overweight) இருப்பதாக ஒர் ஆராய்ச்சி சொல்கிறது.அதுமட்டுமில்லாமல் இயல்பான எடையில் இருப்பவர்கள் கூட மனதளவில் தாங்கள் அதிக எடையுடன் இருப்பதாக நினைத்து கவலைப்படுகிறார்கள்.

 குறிப்பாக ஆண்களைவிட பெண்கள் தாங்கள் அதிக எடையில் இருப்பதாக நினைத்து கவலைப்படுகிறார்கள்.டாக்டர் ஜெப்ரி என்பவர் இரண்டாயிரம் பேரிடம் எடுத்த  ஒரு சர்வேயில் 72 சதவீதம் பெண்கள்  உணவு கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டினி(diet) கிடப்பதாகவும் ,44 சதவீத ஆண்கள் இயல்பான எடையில் இருப்பதாகவும் கூறிவுள்ளார்.

பட்டினி இருப்பது இன்று ஒரு நாகரீகமாகிவிட்டது.உண்மையில் இது நீண்டகாலம் நீடிக்காமல் மனஅழுத்தத்தில் கொண்டுபோய்விடுகிறது.இதில் வேதனை தரும் விஷயம் பதினைந்து வயதிற்குட்பட்ட மூன்றில் ஒரு பள்ளி குழந்தை உடல் எடையை காக்கிறேன் என்று பட்டினி கிடக்கிறது.

நான் குண்டாக(Obesity) இருக்கிறேன்.அதிக எடையில் அசிங்கமாக இருக்கிறேன்,இது போன்ற மன அழுத்தங்கள் தோன்றி பட்டினி கிடந்து,மருந்து சாப்பிட்டு வாழ்வை சீரழிக்கின்றன.உண்மையில் மன அழுத்தம் உள்ளவர்கள் தான் அதிகமாக உண்டு உடல் எடையினால் அவதிப்படுகிறார்கள்.

இவற்றில் இருந்து வெளியேறி ஆரோக்கியமான உடல் எடையை எப்படி தக்கவைப்பது?

  • நாம் எல்லா விசயத்தையும் முதலில் மனதளவில் புரிதளோடு தொடங்க வேண்டும்.
  •  முதலில் நாம் அதிக எடையுடன் இருக்கிறோம் என்ற மன அழுத்தத்தில் இருந்து வெளியேருங்கள்.இதை எப்படி செய்வது?
  • உங்கள் எடை கூடியதற்கு நீங்கள் நீண்டகாலம் மேற்கொண்ட தவறான உணவு பழக்கவழக்கம் தான் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். 
  • அதே போல் உடல் எடைகுறையவும் நீண்டகாலம் ஆகும் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.
  • உடலின் செயல்முறைகளை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்.உண்மையில் நம் உடல் ஓர் அற்புதம் என்பதை உணருங்கள்.
  • நாம் பட்டினி கிடக்கும் போதோ அல்லது பத்தியம் இருக்கும் போதோ உடல் இயங்க தேவையான ஆற்றல் குறைந்து உடல் தன் இயக்கத்தை மெதுவாக்குகிறது,இது கொழுப்பை கரைக்கும் செயலையும் மெதுவாக்குகிறது. நீங்கள் நன்றாக சாப்பிடும் போது கொழுப்பை கரைக்கும் உடலின் செயல் துரிதமாகிறது.எனவே நன்றாக சாப்பிடுங்கள்.
  • அறிவியல்ஆய்வுகள் சொல்கின்றன வருடத்திற்கு ஒரு மனிதன் அதிகபட்சமாக ஆறுகிலோ வரைக்கும் குறைக்கலாம் என்று. நீங்களோ உங்கள் நண்பரோ ஆறுகிலோவை ஒரு மாதத்தில் குறைத்தால் பக்கவிளைவுகள் நிச்சயம்.அடுத்தடுத்த மாதத்தில் மீண்டும் உடல் எடை வேகமாக கூட ஆரம்பிக்கும்
  • எந்த மருந்தும் உடல் எடையை நீண்ட நாள் குறைத்து தக்கவைக்க முடியாது என்பதை உணருங்கள்.
  • இரவில் கொழுப்பு உணவை தவிர்த்து விடுங்கள்.ஏனென்றால் இரவில் உடல் தன் இயக்கத்தை குறைத்து உணவை கொழுப்பாக மாற்றுகிறது.
  • நீண்ட காலம் கடைபிடிக்க முடிந்த ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.உதாரணமாக காலையில் ஐந்து இட்லி,மதியம் இரண்டு கப் உணவு,இரவு ஒரு கப் உணவு அல்லது இரண்டு சப்பாத்தி என்று உடல் உழைப்பிற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
  • சிலர் திரவ உணவுகளை மட்டும் உட்கொள்வதால் உடலுக்கு போதிய ஆற்றல் இல்லாமல் உடனே பசி ஏற்படுகிறது.
  • தண்ணீர் அதிகம் குடியுங்கள்.ஏனென்றால் தண்ணீர் அதிகம் குடிக்காமல் பசிக்கும் தாகத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடுகிறது.
  • உணவை பற்றியும்,உடல் எடை பற்றியும் அதிகம் சிந்திப்பதை நிறுத்துங்கள்.
  • உணவை மெதுவாகவும்,அணுஅணுவாகவும் ரசித்து சாப்பிடுங்கள்.
  • ஒரு நாள் அதிகம் சாப்பிட்டுவிட்டால் கவலைப்படுவதை விட்டு அடுத்த நாள் இரண்டி நிமிடம் அதிகம் உடற்பயிற்சி செய்து குறைத்துக் கொள்ளலாம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
  • யோகா,தியானம் போன்ற நல்ல விசயங்களில் கவனம் செலுத்துங்கள்.
  • இறுதியாக உடல் எடை குறையாவிட்டால் உங்களை நினைத்து கவலைப்படுவதை விட்டு, நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
 மேலும் வாசிக்க

http://www.fatmatters.com/top-10-dieting-mistakes/
http://www.fatmatters.com/tag/psychology-of-dieting/
http://www.fatmatters.com/how-to-stay-committed-to-losing-weight/


No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

கதைநேரம் : ஆசை

1 comment


இந்த உலகமே ஆசை என்னும் சக்கரத்தின் மீது ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த உலகத்தில் ஆசை இல்லாத மனிதனே இல்லை.எல்லோருக்கும் அவர் அவர்களின் வசதியை பொருத்து ஆசை இருக்கிறது.ஆனால் ஆசையே துன்பத்திற்கு காரணம் என புத்தர் சொல்கிறார்.அப்போ ஆசைபடுவது தவறா?

இந்த கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள ஆசை பற்றிய கொஞ்சம் புரிதல் வேண்டும்.ஆசை என்பது என்ன?

ஆசை என்பது நம் மனதை திருப்திபடுத்தும் பொருளை அடைவது அல்லது செயலை செய்வது.ஒரு கார் அழகாக இருக்கிறது என்பதால் அதன் மீது ஆசைபடலாம் அல்லது அது நம்மிடம் இருந்தால்தான் நாம் சமுதாயத்தில் பெரிய மனிதனாக தெரிவோம் என்ற கெளரவத்திற்காக ஆசைபடலாம்.இது மட்டுமா.நாம் ஆசைபட்ட பொருளின் மீது நம் உடல்  பொருள் ஆன்மா என் எல்லாவற்றையும் வைத்து விடுகிறோம்.

உண்மையில் மனிதன் தன் ஆன்மாவையும் உயிரையும் புறப்பொருளின் மீது வைக்க  நினைப்பதுதான் ஆசைக்கு உண்மையான அர்த்தம்.

சரி ஆசை எப்படி துன்பத்திற்கு காரணமாக முடியும்?

ஆசை வந்தவுடன் நாம் கனவுகான ஆரம்பிக்கிறோம்.அவை செயல்களாக மாற ஆரம்பிக்கின்றன.ஆசை நிறைவேறிய பின் ஆசைபட்ட பொருளின் மீதான ஈர்ப்பு குறைய ஆரம்பிக்கிறது.இதற்காகவா இவ்வளவு போராடினோம் என குற்ற உணர்வு ஆரம்பிக்கும்.

சில நேரம் ஆசையை நிறைவேற்ற தவறான செயல்களை செய்ய ஆரம்பித்து வாழ்க்கையையே தொலைத்துவிடுகிறோம்.சில ஆசைகளினால் வாழ்க்கையை இயல்பாக வாழமுடியாமல் இயந்திரமாக வாழ ஆரம்பித்துவிடுகிறோம்.

உண்மையில் ஒரு ஆசையின் பின் மற்றொரு ஆசை என ஒன்றன் பின் ஒன்றாக நம் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது.ஆசையின் காரணமாக கடனாளியாக,குற்றவாளியாக, இயல்பு வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம். ஆசை ஆசையாக காதலித்து வாழ்க்கையை தொலைத்தவர்கள்தான் இங்கு அதிகம்.

உண்மையில் ஆசை நம் இயல்பு வாழ்க்கை தின்று விடுகிறது.இதற்கு அருமையான கதை ஒன்று சொல்வார்கள்.

ஒருத்தர் அருமையான கார் ஒன்றை வாங்க ஆசைபட்டார்.அதற்காக குடும்பம் பிள்ளைகள் என அனைத்தையும் மறந்து கடினமாக வேலை செய்தார்.இறுதியாக அவர் அந்த காரை வாங்கி தன் வீட்டின் முன் நிறுத்தி நிம்மதி பெரு மூச்சு விட்டுக்கொண்டார்.

அடுத்த நாள் காலையில் எழுந்து தன் காரை பார்க்க வந்த போது அவருடைய மகள் அந்த புது காரின் மேல் கல்லால் எதையோ கிறுக்கிக்கொண்டிருந்தாள்.அதை பார்த்த அவருக்கு தன் உயிரின் மேல் கிறுக்குவது போல் இருந்தது.ஆத்திரத்தில் அருகில் இருந்த குச்சியை எடுத்து மகளின் கைகளின் மேல் ஆத்திரம் தீர அடித்தார். இந்த செயலால் மகளின் கையே செயல் இழந்து போனது.மீண்டும் கை செயல்படாது மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள்.

அவர் மிக கவலையுடன் தன் வீட்டின் முன் அமர்ந்து அந்த காரை பார்த்துக் கொண்டிருந்தார்.தற்செயலாக மகள் கிறுக்கிய பகுதியை உற்று பார்க்கும் போது அது ஏதோ எழுத்துபோல் இருந்தது.ஓடி போய் அருகில் நின்று பார்த்தார்.

அதில் I love you dad என எழுதி இருந்தது.அவர் நொடிந்து போய்விட்டார்.

இதை தான் புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என சொன்னார்.ஆசை ஏதாவது ஒரு வகையில் துன்பத்தில் போய் முடிகிறது.ஆசைபடாமல் எப்படி வாழ்வது என நீங்கள் கேட்கலாம்.

வாழ்க்கையை இரண்டு வகைகளில் வாழலாம்.ஒன்று தேர்ந்தெடுப்பது(choice) மற்றொன்று முக்கியத்துவம் அளிப்பது(preference).எப்போதும் முக்கியத்துவமளித்து வாழுங்கள்.தேர்ந்தெடுத்து வாழாதீர்கள்.

அப்படி தேர்ந்தெடுக்கும் போது உங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.தேர்ந்தெடுத்த பொருள் இல்லாமல் உங்களால் வாழமுடியாதா?அதன் மேல் உயிரையே வைத்திருக்கிறீர்களா?இரண்டுக்கும் ஆமாம் என்றால் நீங்கள்  ஆசைபடுகிறீர்கள் என்று அர்த்தம்.அது உங்களுக்கு தேவையில்லை.






1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

சிந்தனை நேரம் : டிப்பிங் பாய்ன்ட்(tipping point)

1 comment
ஒரு பொருள் அல்லது செயல் அதன் உச்சகட்ட அளவை எட்டுவதை ஆங்கிலத்தில் டிப்பிங் பாய்ன்ட்(tipping point) என்பார்கள்.சில நேரங்களில் சமுதாயத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் ,சில பொருள்கள் அதன் உச்சகட்ட அளவை எட்ட காரணமாகலாம்.உதாரணமாக விளம்பரம் இல்லாமல் சாதாரணமாக வெளிவரும் ஒரு சிறு முதலீட்டு திரைப்படம் மவுத்டாக்(mouth talk) எனப்படும் வாய்வழி விளம்பரங்களாலும் ,இனணயதள விளம்பரங்களாலும்  அதன் உச்சகட்ட வெற்றியை பெற்று சக்கைபோடு போடும்.ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலும்  டிப்பிங் பாய்ன்ட்(tipping point)க்கு ஒரு சிறந்த உதாரணம். அவர் மக்களிடம் திடீரென்று பிரபலமாகி டெல்லி முதல்வர் ஆகிவிட்டார்.
 
சரி இப்படி திடீரென்று ஒரு பொருள் அல்லது செயல் சந்தையில் பிரபலமாகி அதன் உச்சகட்ட வளர்ச்சியை அடைய காரணம் என்ன?இதை நாம் நம் வளர்ச்சிக்கோ அல்லது நாம் சார்ந்த தொழிலுக்கோ பயன்படுத்த முடியுமா?
கண்டிப்பாக முடியும் .நம்மால் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் சிறு மாற்றங்களை செய்ய முடியுமானால் நாம் உச்சகட்ட அளவு வெற்றியை எட்டமுடியும்.

நாம் முதலில் சொன்ன சிறு முதலீட்டு படத்தை எடுத்துக்கொள்வோம்.படம் வெளியாகி சரியாக 6 மணி நேரம் கழித்து ஒரு பத்து பேர் சேர்ந்தார் போல் படம் நன்றாக இருக்கிறது என்று இணையத்தில் எழுதினால் போதும்.அப்புறம் வாய்வழியாக ஒரு பத்து பேரிடம் படம் சூப்பர் என்று சொன்னால் போதும்.கண்டிப்பாக இது படத்தின் லாபத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை.இதே போல் சில நல்ல படங்கள் கூட மோசமான விமர்சனங்களால் ஓடாமல் கூட போயிருக்கிறது.


இதற்கு காரணம் செயல்களின் பரவும்தன்மை.உண்மையில் ஒவ்வொரு செயலும் வைரஸ் போல் பரவும்தன்மை கொண்டவை.நான் கொட்டாவி என்று சொல்லும் போதும்  சரி அல்லது கொட்டாவி விடும் சத்தத்தை நீங்கள் உங்கள் மொபைலில் பதிவு செய்து கேட்கும் போதும் சரி உங்களுக்கு கொட்டாவி வர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு செயல்களின் பரவும்தன்மை மிக முக்கியமான ஒன்று.


'வதந்திகள்' பரவும்தன்மைக்கு அருமையான உதாரணம்.பிள்ளையார் பால் குடிக்கிறார் என்ற வதந்தி காட்டு தீ போல பரவி எல்லோரும் அருகே உள்ள பிள்ளையார் கோவிலுக்கு  படையெடுத்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.

சில நேரங்களில் சமுதாயங்களில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட மிக பெரிய விளைவை ஏற்படுத்தலாம்.உதாரணமாக இன்று இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் திடீரென அதன் உச்ச அளவை எட்டி இருக்கின்றன.இதற்கு சமுதாயத்தில் ஏற்பட்ட இரண்டு முக்கியமான காரணங்கள் தான்.ஒன்று இணையதளம் சுருங்கி ஒவ்வொருவர் உள்ளங்கைகளிலும் கைபேசியாக அமர்ந்திருப்பது.மற்றொன்று பாலியல் குற்றங்கள் பற்றிய செய்திகள் இணையதளம் மற்றும் செய்திதாள்கள் வழியாக மக்களிடம் வேகமாக பரவுவது.இவை இரண்டும் மக்களிடம் பாலியல் விசயங்களை குறையாமல் பரப்புவதுதான்.

ஒரு தனிமனிதனின் செயல்கள் கூட அவர்கள் வாழ்வில் உச்சகட்ட மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கு  ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் சிறந்த உதாரணம்.அவருக்கும் அன்னஹசாரேவுக்கும் இடையேயான சிறு கருத்து வேறுபாட்டையும்,ஊழலுக்கு எதிரான மக்களின் உறுதியான மனப்பாங்கையும் அவர் வழுவாக பயன் படித்திக்கொண்டார்.டெல்லி முதல்வர் ஆனார்.தன் வாழ்வின் உச்சகட்ட வளர்ச்சியை எட்டிக்கொண்டிருக்கிறார்.

ஒரு நாள் சுப்பர் மார்க்கெட்டில் நூடுல்ஸ் வாங்க போயிருந்தேன்.ஆனால் எந்த கம்பெனி நூடுல்ஸ் வாங்கனு தெரியல.டக்னு மனசு டாப் ராமன்(top raman) னு மனசு சொல்லுச்சு. நான் ஏன் டாப் ராமன் வாங்குனேனு யோசிச்சா! டிவியில தினமும் அந்த கம்பெனி விளம்பரம் தான் ஓடிட்டு இருக்கு.அது என்  மனசுல எப்பவோ பதிஞ்சு போயிருந்தது. நான் எதை வாங்கனு குழப்பமா இருந்த போது எனக்குள்ள இருந்த டாப் ராமன்(top raman) விளம்பரம் அதோட வேலைய காட்டிருச்சி.ஒரு விளம்பரம் எப்படி எல்லாம் வேலை செய்யுது பாருங்க.


வாழ்க்கையில் அல்லது தொழிலில் வெற்றி பெற நாம் பெரிய மாற்றங்கள் செய்ய தேவையில்லை.சிறு மாற்றங்களே போதும் என்பதை சொல்வது தான் இந்த டிப்பிங் பாய்ன்ட்(tipping point).

1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

பெண்களென்னும் பட்டாம்பூச்சிகள்

2 comments
பெண்கள்
அழகான பட்டாம்பூச்சிகள்,
அழுக்கான பூமியில்
இங்கும் அங்கும் பறந்து
வண்ணம் அடிக்கும்
அழகியல் சிற்பிகள்.

பெண்கள்
மழைச்சாரல்கள்,
வறண்ட மனங்களை
ஈரமாக்கும்
வெள்ளி தேவதைகள்.

பெண்கள்
இசைகீதங்கள்,
இதயங்களை கரைக்கும்
மூங்கில் குழலோசைகள்.

பெண்கள்
சுகமான கனவுகள்,
சஞ்சலமான இரவுகளை
சுகமாக்கும் மெத்தைகள்.

பெண்கள்
தேவதைகள்,
நம்மை சுற்றி
எப்போதும் பார்க்கமுடிந்த
பூமி வாழ் தெய்வங்கள்.

மகளிர் தின வாழ்த்துகள்..............

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

கதை நேரம் ---- வாயால் வந்த வினை

No comments
வாழ்க்கையில் பெரிய பிரச்சனையே பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அல்லது பேசாமல் இருக்க வேண்டிய இடத்தில் உளறிக்கொட்டுவது தான்.
சில நேரங்களில் உண்மையை மறைக்க ஒரு பொய் சொல்வோம்.அப்புறம் பொய்யை மறைக்க இன்னொரு பொய். இப்படியே போய் பொய்யே வாழ்க்கை ஆகிவிடும்.






ஒரு ஊரில் பாலம் கட்டி இருந்தார்கள்.பெரிய விழா எடுத்து அந்த ஊர் அமைச்சரை அந்த பாலத்தை திறக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

அதனால் நிறைய போக்குவரத்து துறை அதிகாரிகளும் பொதுமக்களும் வந்திருந்தனர்.

ஒரு போட்டி ஒன்னும் அறிவிச்சாங்க.அதாவது நூறாவதா அந்த பாலத்தை கடக்குற  வண்டிக்கு பணமுடிப்பை கொடுக்க போறதா அறிவிச்சாங்க.

அமைச்சரும் பாலத்தை திறந்து வச்சு முதல் ஆள பாலத்தை கடந்து போனாரு.அவரை தொடர்ந்து ஒவ்வொரு காரா கடக்க ஆரம்பிச்சது.விழா ஏற்பாடு செஞ்சவங்க ஒவ்வொரு காரா எண்ண ஆரம்பிச்சாங்க.

 நூறாவத வந்த அந்த கார் டிரைவரிடம் போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த பரிசை என்ன செய்யப்போகிறீர்கள்? என கேட்டனர்.

உடனே அந்த ஆள் இந்த பணத்தை வைத்து டிரைவிங் லைசென்ஸ் எடுக்க போறேன்னு சொன்னான்.


என்னது நீ டிரைவிங் லைசென்ஸ் இல்லாமதான் வண்டி ஓட்டிட்டு இருக்கியானு அதிகாரிகள் அதிர்ச்சியுடன் கேட்டனர்.

காருக்குள்ள அமர்ந்திருந்த அவர் மனைவி நிலைமையை புரிஞ்சிகிட்டாங்க.

கணவரை காப்பாத்தியாகனும். உடனே அவங்க சொன்னாங்க

ஐயா இவர் சொல்றதை நம்பாதிங்க.குடிச்சிட்டு உளறுறாரு.

ஓ இந்த ஆளு குடிக்க வேற செஞ்சிருக்கானா?

காருக்குள்ள இருந்த அந்த ஆளோட அப்பாக்கு காது கேட்காது.ஆனா ஏதோ சிக்கல் மட்டும் புரிஞ்சது.

அப்பவே சொன்னேன் கார திருடாதனு.இவன் கேட்கவே இல்லைனு மெதுவா முணங்க ஆரம்பித்தார்.

இது திருட்டுகாரானு கேட்டு அதிகாரிகள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்..

எப்படி பேசக்கூடாது என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம்.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..