அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

இன்னொரு காலை

No comments
ஊர்ஓரம் அரசமரம்
மாமனுக்கு காத்திருந்தேன்
மாமனும் வரவில்ல
மனசும்தான் இயங்கவில்ல
மாமனும் வருவாரோ?
மனச கொஞ்சம் தருவாரோ?

ஒத்த மரத்தடியில்
ஒரு நேரம் காத்திருக்கேன்
நிக்க நிழலில்ல
நீதி சொல்ல ஆளில்ல
காலைல வந்தவ
கால் கடுக்க நிக்குறேன்
ஒத்த முகம்பாக்க
ஒத்த காலில் நிக்குறேன்
சொக்கன் முகம் பார்ப்பேனோ?
சொக்கிப் போய் நிப்பேனோ>

கருத்த உடம்புண்டு
இரும்பு போல கையுண்டு
வட்ட முகமுண்டு
லட்டுபோல கண்ணுண்டு
அழக சிரிப்பாரோ?
மல்லிகைப்பூ கொடுப்பாரோ?

மாமனுக்கு பிடிக்குமுனு
மடிநெறய சோளமும்
தாகம் எடுக்குமுனு
சட்டிநெறய மோரும்
கொண்டுவந்தேன்
மாமனும் வரல
மடிபாரமும் இறங்கல

நாளும் ஓடுதடி
பொழுதும் தேயுதடி
நாளும் ஏங்குறேன்
நாளுக்கு நாள் தேயுறேன்
தினமும் தூங்கையில
நெஞ்சுக்குள்ள அழுகுறேன்
இன்னைக்குப் பார்ப்பேன்னு
காலையில முழிக்குறேன்!



No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..