அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

சில வரிக் கதைகள் (குவாண்டம் வாழ்க்கை, சூது கவ்வும், வாழ்க்கை ஒரு வட்டம்)

3 comments

குவாண்டம் வாழ்க்கை
கல்யாணம் ஆகாமல் ஒன்றாய் வாழும் கௌதமும், கீர்த்தியும் அந்த
அப்பார்ட்மென்ட் கட்டிலில்
பிளாங்க் இடைவெளியில்(h/2 Pi), நிலையற்ற தருணத்தில்( unCertainity), காம (குவாண்ட) உணர்வை
பரிமாறிக் கொண்டிருந்தார்கள். சட்டென சுதாரித்துக் கொண்ட கிர்த்திதன்னை விலக்கிக்கொண்டு கேட்டாள் "இதெல்லாம் தப்பில்லையா?''
இல்லையென்பது போல் சிரித்துக் கொண்டே தலையசைத்தான் கௌதம். இருவரும் தங்கள் பிளாங்க் இடைவெளியை குறைத்துக் கொண்டார்கள். புதிய பிரபஞ்சம் உருவாக தயாரானது.

அசிங்கமான மனிதர்கள்
கிழிந்த சட்டை, அழுக்கு பாவாடை சகிதமாய் ,நடு ரோட்டில் கிடந்த மாட்டின் அசிங்கங்களை வெறும் கையால் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தாள் அவள். அவளை அசிங்கமாக பார்த்துக்கொண்டே கடந்து சென்றார்கள் சக மனிதர்கள்.

சூது கவ்வும்
முன்பெல்லாம் தன் காதல் கல்யாண வாழ்க்கையை பற்றி அக்கம் பக்கத்தில் பெருமையடித்துக் கொண்ட கமலா', இப்போதெல்லாம் ஓடிப்போன மகளின் காதலைப் பற்றி அக்கம் பக்கத்தில்புலம்பிக் கொண்டிருக்கிறாள்.

வாழ்க்கை ஒரு வட்டம்
மனிதர்களின் உணர்வை புரிந்து கொள்ள முடியாத நோயினால் பாதிக்கப்பட்ட மோகன், வாழ்க்கையில் தேறுவது கடினம் என பள்ளி ஆசிரியர் வருத்தப்பட்டுக் கொண்டார். பாவம் மோகன், இப்போது கால்நடை மருத்துவர் ஆகி விட்டான்.


3 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..