அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

உன்னை நான் பார்த்த பின்

2 comments
உன்னை நான் பார்த்த பின்
முன்பு போல் இல்லையே!
என்னையே கேட்கிறேன்
எங்கு நான் தொலைந்தேனோ?

மண்ணிலே பிறந்தேனோ?
மழையிலே கரைந்தேனோ?
காற்றிலே கலந்தேனோ?
கூந்தல் வாசம் நுகர்ந்தேனோ?

கால தூரம் கடந்தேனோ?
காம ஏக்கம் உணர்ந்தேனோ?
சொர்க்கமே சென்றாலும் உன்
பிரிவு ஏக்கம் கொல்லுதடி.

உன்னையென்று பார்த்தேனோ?
உயிரை தொலைத்துவிட்டேனே.
கண்ணிழந்த குருடர்கள்
யானை தடவி பார்ப்பது போல்,
கண்ணில் கண்ட பொருளெல்லாம்
உன்னை பார்க்க நினைக்கிறேன்.

மொட்டைமாடி போகிறேன்.
ஒற்றைக்காலில் நிற்கிறேன்.
தனிமையோடு பேசுகிறேன்.
தவமாய் கிடக்கிறேன்.

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..