அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

இந்த வருடத்தின் முத்தாய்ப்பான மூன்று விசயங்கள்

No comments
இந்த வருடத்தின் இறுதிக் கட்டுரை.இந்த வருடத்தின் மீதான என் பார்வை என்றும் சொல்லலாம்.எப்பவுமே ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் தான் பல திருப்புமுனைகள் அமையும்.அது போல இந்த வருடத்தின் கடைசி நாட்களில் பல சுவாரஸ்சியமான திருப்புமுனைகள்.சென்னையின் மழை வெள்ளம்,சிம்புவின் பீப் பாடல் ,சென்னை மழைக்கிடையிலும் சென்னை கால்பந்து அணி அதிரி புதிரியாக  கோப்பையை வென்றது என எல்லாம் அழகான நினைவுகளாக நீங்கப் போகின்றன.

இன்னும் பத்து வருடம் கழித்து, நான் சென்னையின் இந்த வெள்ளக்காட்சியை போட்டோவாக என் பிள்ளைகளிடம் காட்டினால்,கண்டிப்பாக காமடியாகத்தான் பார்ப்பார்கள்.கண்டிப்பாக யாரும் நம்பக்கூட மாட்டார்கள்.மழையாக ஆரம்பித்து,வெள்ளமாக மாறி,மனிதனின் கருணையாக முடிந்த சென்னை வெள்ளம் சொல்லிச் சென்ற பாடம் ஒன்றே ஒன்றுதான்.இயற்கை நினைத்தால் நாம் வாழ்த்த தடம் தெரியாமல் நம்மை துடைத்தெரிய ஒரு நிமிடம் போதும்.ஆனால் நாம் தான் அது புரியாமல் இயற்கையோடு வாலாட்டிக்கொண்டே இருக்கிறோம்.சென்னை மழை காட்டிய மற்றொரு பாடம் மனிதநேயம்.சென்னையில் இவ்வளவு நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் என்னவோ மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி தீர்த்திருக்கிறது.

அடுத்தது சிம்புவின் பீப் பாடல்.பாவம் சிம்பு ,போன வருசம் பய தப்பான முகத்துல முழிச்சிட்டார் போல.போகுற இடத்துல எல்லாம் தர்ம அடி.யாரோ வாங்க வேண்டிய அடியெல்லாம் ,யார் பெத்த புள்ளையோ,சிம்பு வாங்கிக்கிறாரு.இனி இணையத்துல இவர்மேல காச்சி ஊத்த ஒன்னும் இல்லை என்னும் சொல்லுற அளவுக்கு பயபுள்ள அடி வாக்கிருச்சி.பொம்பளப்பிள்ளைங்கள எல்லாம் பார்த்தாலே பயமா இருக்கு.இத பார்த்தா காலேஜ்ல எங்க மெக்கானிக்கல் வாத்தியார் சொன்ன வார்த்த, இப்ப ஞாபகம் வருது.ஒரு தடவ  பொம்பள பிள்ளைங்களுக்கு லேப்ல மார்க் குறைச்சுப் போட்டுடாரு நம்ம சாரு.இத கவனிச்ச புள்ளைங்க அவர் வண்டி பெட்ரோல்டேங்கல மண்ண போடலாமா? ,இல்ல சீனிய போடலாமானு? பெரி டிஸ்கஸனே பண்ணியிருக்காய்ங்க.இது எப்படியோ சாருக்கு தெரிச்சு போய் அவர் அடித்த நாள் கிளாஸ்ல இத சொல்லி,உங்க கிளாசுக்கு வரவே பயமா இருக்குனு புலம்பி தள்ளிட்டாரு.இன்னொரு நாள் லேப்ல பெயில் ஆக்கிருவேன் சொன்னவர, ஊர்ல இருந்து ஆள் இறக்கிருவேன்னு ஒரு புள்ள மெரட்டிருக்கு.இன்னைக்கு காலத்துல பொம்பள பிள்ளைங்க ரொம்ப உசாரு .சிம்பு அவங்க ஆயா காலம்னு நினைச்சு பாட்டு போட இன்னைக்கு அவர் டவுசர் கழன்டு போச்சு.மிஸ்டர் சிம்பு ,உங்க அப்பா கதாநாகியை தொடாமலே முதல் படத்துல நடிச்சதாலயே 100 நாள் ஓடுச்சாம்.இத நாங்க உங்களுக்கு சொல்ல தேவ இல்ல. எல்லா பெண்களையும் சக மனிதரா ,தோழனா பார்த்து பழகுங்க.நீங்க யாரப்பார்த்தாலும் லவ்ரா பார்க்க நினைச்சு ,அவங்க ,கடைசில உங்க நைனா போட்ட சோக பாட்ட உங்களுக்கே டெடிகேட் பன்னிட்டு போய்ராங்க.....

கடைசியா ISL கால்பந்து பைனல் மேச்.நம்ம ஆளுங்களா இப்படி.எங்கையா இருந்தீங்க? இம்புட்டு திறமைய வச்சுக்கிட்டு.  எப்பவும் பிரேசில்,ஜெர்மனி என அடுத்தவங்களையே பார்த்த எனக்கு ,நம்ம ஊரு கிட்டுமணி,ஜேஜே வை பார்க்க ஒரே ஆச்சர்யம்.அதுவும் அந்த பைனல் மேட்ச் கடைசியில் மென்டோசா அடித்த ரெண்டு கோல் அற்புதம்.நான் பார்த ஜோரான பைனல் மேட்சுகளில் இதுதான் மிகச்சிறப்பான ஒன்று.சத்தமில்லால் இந்திய கால்பந்து அணியினர் உலகுக்கு சொன்ன செய்தி.நாம் வேகமாக வந்து கொண்டிருக்கிறோம்.இந்திய அணி உலக்கோப்பையில் ஆடும் அந்த நாளைக் காண ஆவலாக உள்ளேன்.

வாழ்க்கை எல்லாவற்றையும் கரைத்துவிடும்,ஒருவிதமான கரைப்பான்.அதுயாரையும் விட்டுவைப்பதில்லை.போகிற போக்கில் எல்லாவற்றையும் துடைத்து தூக்கி போட்டுவிடும்.அது ஒவ்வொரு பன்னிரெண்டு மாதத்திற்கு ஒரு முறையும், தனது இந்த பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது.புத்தனை மறக்க வைத்தது,காந்தியை மறக்க வைத்தது.நம்மையும் ஒரு நாள் தடம் தெரியாமல் மறக்க வைத்துவிடும்.
ஒவ்வொரு பன்னிரெண்டு மாதமும் வாழ்க்கை பழையவற்றை அழித்து தன்னை தான் புதுப்பித்துக்கொள்ளும்.அதோடு சேர்ந்து நாமும் நம்மை புதுப்பித்துக்கொள்வோம்.


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..