அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

சொல்லாட்டு

No comments
செவ்வானம் பூப்பூக்க
கார் இருளோ கொடை விரிக்க
கண்ணே விழித்தாயோ
கன்னித்தமிழ் கேட்டாயோ!

அப்பன் வரும் வரையில்
எந்தனிமை நீ போக்க
சோககத நான் பாட
கண்மணியே கேட்பாயோ!

மன்னன் நாடாள
மாந்தோப்பில் குயில் பாட
மண்குடிசை இல்லாமல்
மரக்கிளையில் நீயாட
பண்ணெடுத்து நான் பாட
பைங்கிளியே கேட்டாயோ!

பலகாரம் இனிக்குமென்று
ஊருசனம் சொல்லயிலே
பலகாரம் என்னவென்று
பைங்கிளியே அறிவாயோ!

நெல் குத்தும்போது
நெல்ல கொஞ்சம் பார்த்ததுண்டு
நெல்லு சோறு என்னவென்று
பைங்கிளியே நான்றியேன்!

கட்டிக் கொள்ள துணியுனில்ல
ஒட்டிக் கொள்ள சுவருமில்ல
கோட மழ பெய்யயில
கண்மணியே என்ன செய்ய?

சட்டிக்குள்ள தண்ணியுண்டு
அத சுத்தி தவளையுண்டு
சட்டியில சோறு பொங்கி
நாளு ரொம்ப நாளாச்சி!

காலம் வருமென்று
சட்டி நிறையுமென்று
கன்னீரில் நான் பாட
கண்மணியே நனைந்தாயோ?

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..