அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

கரை வேட்டிகட்டியவனெல்லாம் கோமாளியுமில்லை,ஜீன்ஸ் போட்டவெனெல்லாம் ஜீனியஸும் இல்லை.

No comments
 கரை வேட்டிகட்டியவனெல்லாம் கோமாளியுமில்லை
ஜீன்ஸ் போட்டவெனெல்லாம் ஜீனியஸும் இல்லை.
கரை வேட்டிகட்டியவனெல்லாம் கோமாளியுமில்லை,ஜீன்ஸ் போட்டவெனெல்லாம் ஜீனியஸும் இல்லை.

கோடை காலம்,இலையுதிர் காலம் என்பது போல் இது தேர்தல் காலம்.பட்டிதொட்டி எங்கும் ஒரே அரசியல் பேச்சு.தேர்தல் கூட்டணி,ஆளும் ஊழல்,எதிர் கட்சி ஊழல்,என இணையம் முழுவதும் ஒரே அரசியல் பேச்சு.ஆனால் இந்த தேர்தல் முன்பை போல் இல்லை.இணையத்தின் ஆழமான ஊடுருவல் மற்றும் கைப்பேசிகளின் தாக்கத்தால் சின்ன விசயம் கூட கடைக்கோடி குடிமகன்களிடம் வெகுவாகப் போய்ச்சேர்கிறது.இதில் முக்கியமான ஒரு விசயம் எல்லா நிகழ்வுகளும் நகைச்சுவையாகவே சித்தரிக்கப் படுகின்றன.

இன்றைய சூழலில் எல்லாஅரசியல் தலைவர்களும் கேளி கிண்டலுக்கு ஆளாகின்றனர்.உண்மையில் எல்லா தலைவர்களும் என்ன பேசுவதென்று விழி பிதுங்கி போய் இருக்கின்றனர்.அது மட்டுமில்லாமல் அவர்கள் பேசும் ஒவ்வொரு விசயத்தையும் அலசி ஆராய்ந்து பதில் போடஇணையத்தில் ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.அவர்கள் பேசும் சிறிய தவறான பேச்சு கூட அவர்கள் அரசியல் வாழ்க்கைக்கு சாவு மணியாக அமையக்கூடிய அளவுக்கு தொழில்நுட்பம் அவதாரம் எடுத்து நிற்கிறது.

இப்படி இன்றைய அரசியல் ஒரு கேளி கூத்தாகவே போய் கொண்டிருக்கிறது.எல்லா அரசியல் தலைவர்களையும் கோமாளியாகவே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் ஒன்றை யோசிக்க மறந்துவிட்டோம்.நாளை தேர்தல் என்று வரும் போது இந்த கோமளிகளில் ஒருவரைதான் நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்.வேறு வழி இல்லை.இது அவர்களுக்கும் தெரியும் அதனால் தினம் ஒரு பேச்சு என தினுசு தினுசாக பொய் பேசித்திரிகிறார்கள்.நாமும் எல்லாவற்றையும் ஒரு காமடியாகவே பார்த்து போய்க்கொண்டிருக்கிறோம்.

உண்மையில் மூன்று மாதங்களுக்கு கோமாளிகளாக தெரிபவர்களுக்கு தேர்தல் முடிந்தபின் அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாம் கோமாளிகளாக தெரிவோம்.ஆட்சி அதிகாரத்தில் எல்லாவற்றையும் சம்பாதித்துவிட்டு நம்மை அடிமையாகவே வைத்திருக்கும் அவர்கள் கோமாளிகளா? இல்லை எல்லா அதிகாரமும் கையில் இருந்து மாற்று அரசியலுக்கு வழியில்லாமல் ,பணத்தை வாங்கிக்கொண்டு சொத்தைகளுக்கு ஓட்டு போட்டு, பதவியில் அமர்த்தி குறை சொல்லி கொண்டிருக்கும் நாம் கோமாளிகளா?

இந்த நிலைமையை பார்க்கும் போது ஆப்பசைத்த குரங்கின் கதைதான் நியாபகம் வருகிறது.சிந்திக்க வேண்டிய நேரத்தில் சிரித்துக் கொண்டிருக்கிறோம்.கண்டிப்பாக சிரிக்க வேண்டிய காலத்தில் அழுவோம்.

பச்சைவேட்டிக்காரன் ஐந்நூறு
சிவப்புவேட்டிக்காரன் ஆயிரம்
கருப்பு,சிவப்பு வேட்டிகாரனிடம் முந்நூறுவென
எல்லாரிடம் பணம்வாங்கிக்கொண்டு
சிவப்புவேட்டிக்காரனுக்கு ஓட்டுப்போட்டு
காரணம் சொன்னால் அம்மா
சத்தியத்தை மீறக்கூடதென்று.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..