அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

ஜாலியாக ஜாவா கற்கலாம்: கணினி மொழி (computer language)

No comments
நாம் கருத்துகளையும்,உணர்வுகளையும் மொழியின் வாயிலாகவே வெளிப்படுத்துகிறோம்.ஒருவருக்கொருவர் கருத்துகளை பரிமாறிக்கொள்ள மொழி மிக அவசியமான ஒன்று.அதுபோல் கணிப்பொறியுடன் இணைந்து செயல்பட கணினிக்கு என்று பிரத்தியேக மொழிகள் உண்டு.ஆனால் அடிப்படையில் கணினிக்கு தெரிந்த ஒரே மொழி இயந்திர மொழி(machine language) அல்லது இருநிலை மொழி(binary language) மட்டுமே.நாம் கணிப்பொறியுடன் இணைந்து செயல்பட இயந்திர மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.அது மிகவும் சிக்கலானதாகவும், புரிந்து கொள்ள கடினமானதாகவும் இருப்பதால் நமக்கு உயர்மட்ட கணினி செயலாக்க மொழிகள் (high level programming  language)தேவைப்படுகிறது.

உதாரணமாக நமக்கு தமிழ் மட்டுமே தெரியும் என வைத்துக்கொள்வோம்.ஒரு ஜெர்மன் நபருடன் உரையாட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?ஒன்று ஜெர்மன் மொழி படிக்க வேண்டும் அல்லது ஜெர்மனும்,தமிழும் தெரிந்த மொழிபெயர்ப்பாளரை(translator) உடன் வைத்துக்கொள்ள வேண்டும். கணினி செயலாக்க மொழிகள் இந்த மொழிபெயர்ப்பாளர் பணியைதான் செய்கின்றன.நாம் செய்ய வேண்டிய செயல்களை மனிதர்களுக்கு புரிந்த ஆங்கில மொழியில் சொன்னால் இந்த கணினி செயலாக்க மொழிகள்(programming  languages) கணினிக்கு புரியும் வகையில் இயந்திர மொழியில்(machine language) மொழிபெயர்த்து கொடுத்துவிடும்.

பொதுவாக மனிதர்களுக்கு புரியும் மொழியினை உயர்மட்ட மொழிகள் என்றும்((high level languages),இயந்திர மொழியினை கீழ்மட்ட மொழிகள்(low level  languages) என்றும் கூறுவர்.பெரும்பாலான கணினி செயலாக்க மொழிகள்(computer programming  languages) இந்த உயர்மட்ட மொழிவகையினை சேர்ந்தவை.

உயர்மட்ட மொழிகளால் முக்கியமான பலன்கள் உண்டு.
  • கற்றுக்கொள்வது எளிதாகிறது
  • கடினமான கணினி செயல்பாட்டினை புரிந்துகொள்ள அவசியமில்லை
  • நாம் செய்ய வேண்டிய செயலை மட்டும் கவனித்தால் போதும்

கணினி மொழியினை பொறுத்தவரை மேல் மட்ட மொழியிலிருந்து கீழே செல்ல செல்ல சிக்கல்கள் அதிகரித்துக்கொண்டே செல்லும்.இதனால் புரிந்து கொள்வதும் கடினமாகிறது. நாம் நம் செயல்முறையை மேல் மட்ட மொழிகளின் மூலமாகவோ அல்லது இயந்திர மொழியின் மூலமாகவோ செய்யலாம்.மேலே சொன்னவாரு கீழ் மட்டமொழியின் மூலம் செய்யும் போது அதிக சிக்கலும்,அதிக நேர விரயமும் ஏற்படுகிறது.இதனால் பெரும்பாலும் உயர்மட்ட மொழிகளிலே எல்ல கணினி செய்முறைகளும்
 எழுதப்படுகின்றன.

உயர்மட்ட மொழிகளுக்கு உதாரணமாக ஜாவா,சி,சி++ மொழிகளை கூறலாம்.ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்புகள் உண்டு.நம் தேவையை பொருத்து மொழியை தேர்தெடுக்க வேண்டும்.

  • இயந்திர மொழி(machine language) 
  • இருநிலை மொழி(binary language)
  • கணினி செயலாக்க மொழிகள்(programming  languages)
  • உயர்மட்ட கணினி செயலாக்க மொழிகள் (high level programming  language)
  • கீழ்மட்ட மொழிகள்(low level  languages) 
  • மொழிபெயர்ப்பாளரை(translator)  


முந்தய பதிவுகள் :

கணிப்பொறி செயலாக்கமுறை(computer programming)


                                                                                 ---- பயணம் தொடரும் ----

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

பணத்தால் தேர்தலில் ஜெயிக்க முடியுமா?

1 comment
ஒவ்வொரு மனிதனுக்கும்  ஒரு விலையுண்டு
பணத்தை நாம் சம்பாதிக்காவிட்டால்
பணம் நம்மை சம்பாதித்துவிடும்.

பணம் பத்தும் செய்யும் என்பதை விட பணம் எல்லாம்செய்யும் என்பதே உண்மை.நாம் வாழும் இந்த உலகமே பணம் என்னும் மாயையால் பின்னப்பட்ட மெய்நிகர் உலகம்.நாம் பார்க்கும் செய்திகள்,சாப்பிடும் சாப்பாடு ,பிடித்த ,பிடிக்காத என எல்லாவிசயத்தையும் பணமே தீர்மானிக்கிறது.பெரும் ஊழல் என செய்தி படிக்கிறோம்.ஊழல் செய்தவர் விடுவிக்கப்பட்டசெய்தி எந்த பத்திரிக்கையிலும் வருவதில்லை.பணம் கொடுத்து செய்தியால் ஒருவர் மரியாதையை குறைக்கலாம்.பணம் கொடுத்து ஒருவர் மரியாதையை கூட்டலாம்.பிரச்சனைகளை திசை திருப்பலாம்.பணமென்னும் பூதத்தின் பிடியில் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது.

சரி பணம் தேர்தல் முடிவுகளை மாற்றுமா?

கண்டிப்பாக மாற்றும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.அமெரிக்க அதிபர் தேர்தலிலே பல முறை அதிக பணம் செலவு செய்தவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.ஒரு மனிதனுக்கு நூறு ரூபாய் என்றால் ஏழுகோடி மனிதர்களுக்கு கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்.இவ்வளவு கோடி கோடியான பணத்தை செலவு செய்வது வெறும் ஒரு சதவீத மனிதர்கள்.இந்த ஒரு சதவீத மனிதர்கள் ஏன் பணத்தை முதலீடு செய்ய வேண்டும்?

ஏனென்றால் தங்களுக்கு சாதகமான,தங்கள் தொழிலுக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்க ஒத்துழைப்பு தருபவர்களை வெற்றி பெற வைக்க இப்பணத்தை செலவழிக்கிறார்கள்.இப்பணத்தை பயன்படுத்தி எதிர்மறையான விளம்பரங்களை உருவாக்கி எதிரணியை  தோற்கடிக்கவே பயன்படுத்துகிறார்கள்.

உதாரணமாக ஒரு அமைச்சரை பற்றி வாட்ஸ் ஆப்பில் அசிங்கமான ஒரு செய்தி இந்த தேர்தல் நேரத்தில் ஏன் வரவேண்டும்.பைத்தியம்,முட்டாள் என தாங்கள் நினைக்கும் தோற்றத்தை எதிரணியினர் மீது ஏற்படுத்த இப்பெரும் பணம் பயன்படுகிறது.பெரும்பாலும் இப்பணத்தில் மஞ்சக்குளிப்பது என்னவோ செய்தி நிறுவனங்கள் தான்.இதற்கென பிரத்தியேக கார்ப்ரேட் நிறுவனங்களே இருக்கின்றன.

நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.என்ன பஞ்ச் பேச வேண்டும்.நம் நடைவுடை பாவணி என எல்லாமே அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.அது மட்டுமில்லாமல் எதிர் அணியின் மீது திட்டமிட்டு எதிர்மறையான செய்திகள் பரப்புவது,அவர்களின் மரியாதையை மக்களிடம் குறைப்பது என எல்லாவற்றையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.நாம் பணம் கொடுக்க தயாராக இருந்தால் யாரை வேண்டுமானாலும் கேனையனாக்கலாம்,குடிகாரானாக்கலாம்.

இதையெல்லாம் படிக்கும் போது தற்போது தமிழ் நாட்டு அரசியலில் நடக்கும் காமெடி காலாட்டாக்களை ஒப்பிட்டு பாருங்கள் எல்லாம் புரியும்.நிதனமாக யோசித்தால் இவையெல்லாமே மக்களாகிய நம்மை கடைசிவரை மடையர்களாகவே வைக்க பெரும் பணம் படைத்தவர்கள் செய்யும் சூழ்ச்சி என்பது நன்றாகவே புரியும்.

இவ்வளவு பணம் கொட்டி நல்லது செய்ய இவர்கள் என்ன பாரி வள்ளலா?அவர்களை பொருத்தவரை இதும் ஒரு வகையான முதலீடு.நமக்கு நூறு ரூபாய் கொடுத்து தேர்தலில் வெற்றி பெருபவர்கள் ,முதலீடான நூறு +அடுத்த தேர்தலுக்கான முதலீடாக நூறு+ லாபமாக நூறு என முந்நூறு சம்பாதித்தால் மட்டுமே லாபம்.இந்த லாபத்தை மக்களின் பையில் இருந்து முறையாக எடுப்பதற்கு தான் இந்த அரசியல் ஆட்டம்.

நம் பையில் நூறை வைப்பது போல் வைத்து,நம்மையே உலக வங்கியுடம் அடகு வைத்து பல லட்சம் கோடி கடன் வாங்கி தங்கள் பைக்குள் வைத்துக்கொள்வார்கள். சம்பந்தமே இல்லாமல் பொருளின் விலைகளை ஏற்றி நம் பையில் இருந்து சில பல நூறுகளை எடுத்துக் கொள்வார்கள்.

இந்த சூது தெரியாமல் நூறு தானே என பணத்தை வாங்கி பையில் வைத்து ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்துவிடுகிறோம்.அரசியல்வாதிகளோ பெரிய நாம கட்டிவாங்கி நாமத்தை நமக்கு சாத்துகிறார்கள்.இன்று நாம் வாங்கும் நூறுதான் நாளைய பல கோடி ஊழல்களுக்கு அடித்தளம்.மக்களுக்கு இந்த பண அரசியல் புரியாதவரை பணத்தையும், அரசியல் வாதிகளையும் குறை சொல்லி எந்த பயனும் இல்லை.

1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

எனர்ஜி டானிக் : எதிர்த்து பழகுங்கள்,எதிர்ப்பிலே வாழுங்கள்

No comments
எதிர்வினையில்லை என்றால் நாம் இறந்துவிட்டதாக அர்த்தம்


சின்னதாகவோ, பெரியதாகவோ நம்மைச் சுற்றி பல தவறுகள் நடந்து கொண்டே இருக்கின்றன.வெறும் செய்திகளாகவும் பொழுதுபோக்கும் சம்பவமாகவும் பார்த்து நகர்ந்து கொண்டே இருக்கின்றோம்.சின்னதாக ஒரு எதிர்ப்பை நாம் மனதுக்குள் கூட சொல்லிக்கொள்ள மாட்டோம்.இது கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை வியாதி போல் பரவி உள்ளது.நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிய தடையாக உள்ளது.

பெற்றோர்கள் செய்யும் தவறை பிள்ளைகள் எதிர்த்து சொல்லக்கூடாது.ஆசிரியர்கள்  தவறை மாணவர்கள் எதிர்த்து சொல்லக்கூடாது என அடிப்படையிலே எல்லாவற்றையும் அமுக்கி நசுக்கி ஒரு சமூகத்தை உருவாக்கிவிட்டோம்.ஒரு சின்ன எதிர்ப்பைக்கூட காட்டாமல் யாருக்கோ நடந்தது போல் வேடிக்கை பார்த்துக்கொண்டே நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

பக்கத்து நாட்டில் கொத்து கொத்துதாக மக்கள் அகதிகளாக கொல்லப்படுகின்றனர்.பக்கத்து மாவட்டத்தில் விவசாய நிலங்களை நசுக்கி கார்பரேட் கம்பெனிகள் அபகரிக்கின்றன.பக்கத்தில், தூரத்தில் என பாகுபாடில்லாமல் தனிமனித சுதந்திரங்கள்,வாழ்வுரிமை பறிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.செய்யாத தவறைக்கூட எடுத்து சொல்ல வழியில்லாமல் கூனிக்குறுகி கடந்து கொண்டிருக்கின்றோம்.

எதிர்க்கமாட்டார்கள் என தெரிந்தே அரசியல்வாதிகள் பொய்மேல் பொய் கூறி நம்மை இழிச்சவாயகர்களாக வைத்திருக்கிறார்கள்.எதிர்க்கமாட்டார்கள் என் தெரிந்தே கார்ப்பரேட் கம்பனிகள் கலப்பட பொருளையும் தர குறைந்த பொருளையும் தலையில் கட்டுகிறார்கள்.நாம் எதிர்க்காமலே இருந்ததால் நம்மை 200 வருடங்களாக அடிமைகளாகவே வைத்திருந்தார்கள்.

காந்தி என்ற மாபெரும் மனிதரே நிறவெறிக்கெதிராக சின்ன எதிர்ப்பை காட்டியதால் தான் உருவானார்.அன்று தென்னாப்பிரிக்காவில் காந்தியை  நிறவெறியை காரணம் காட்டி முதல் வகுப்பில் பயணம் செய்வதை  தடுத்தை காந்தி எதிர்த்திருக்காவிட்டால் காந்தி என்ற மனிதர் உருவாகியிருக்க மாட்டார்.இந்தியாவுக்கும் சுதந்திரம் கிடைத்திருக்காது.கார்ல்மார்க்ஸ் மட்டும் முதலாளித்துவத்தை எதிர்த்திருக்காவிட்டால் சமத்துவம் கிடைத்திருக்காது.பல தனிமனித எதிர்ப்புகளின் விளைவுகள் தான் இன்று நாம் வாழும் நவீன உலகம்.

எதிர்ப்பு என்பது எதிராளியின் மனதை தூண்டுவதாக இருக்க வேண்டும்.நம் எதிர்ப்பு எதிராளியை  சிந்திக்க செய்து தன் குற்றத்துக்காக கூனி குறுக்கச் செய்ய வேண்டும் என காந்தி கூறுகிறார்.தவறுகளை பார்த்து தப்பி ஓட வேண்டாம்.இது தவறு என சொன்னால் கூட போதும்.துப்பாக்கி தூக்கி போராட வேண்டாம்,ஒரு பேப்பரை எடுத்து எதிர்ப்பை எழுதி பிரசுரித்தால் போதும்.

ஒன்றை எதிர்க்க ஆரம்பிக்கும் போதே நம்மை நாம் சுயபரிசோதனை செய்ய ஆரம்பித்துவிடுவோம்.மற்றவர்களை எதிர்க்க ஆரம்பிக்கும் முன் தான் சரியாக இருக்கிறோமா என காந்தி தன்னை தானே கேட்டுக்கொண்டார்.தன்னை சரி செய்ய ஆரம்பித்தார்.மகாத்மா ஆனார்.சாவு ஒரு முறைதான்.ஆனால் எப்படி சாகிறோம் என்பது முக்கியம்.எதிர்க்காமல் உள்ளே புழுங்கி வெந்து நொந்து சாவதை விட எதிர்த்து விட்டு சந்தோஷமாக சாகலாம்.குனிந்து குனிந்து வாழ்ந்து நமக்கு இருப்பது முதுகுதண்டா? ரப்பர்துண்டா? என்ற வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


எதிர்த்து பழகுங்கள்,உலகமே நமக்கு எதிராக இருந்தாலும்.
எதிர்த்து பழகுங்கள்.பயம் நம்மைவிட்டு ஓடும் வரை.
எதிர்த்து பழகுங்கள்,நாம் உயிர்ப்பு தன்னையுடன் வாழ்வதற்காக
எதிர்த்து பழகுங்கள்,நாம் விழிப்போடு  வாழ்வதற்காக.
எதிர்த்து பழகுங்கள்,நம் முட்டாள்தனங்ககளை தெரிந்து கொள்ள.
எதிர்த்து பழகுங்கள்,கடவுளின் உதவியில்லாமல் வாழ.
எதிர்த்து பழகுங்கள்,சிலருக்கு கடவுளாக இருக்க.


சரியோ தவறோ எதிர்த்து பழகுங்கள்,எதிர்ப்பிலே வாழுங்கள்.

இதோ அற்புதமான பாரதியின் பாடல் வரிகள்
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..