அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

என்ன செய்யபோகிறாய்?

உனக்காக கவிதை செய்து
வார்த்தைகளும் வற்றிவிட்டன
உனக்காக அழுது
கண்களும் வற்றிவிட்டன
இப்போது உடலும்
வற்ற ஆரம்பித்துவிட்டது
குறைந்தபட்சம் உன்கூந்தல்
பூக்களையாவது என் கல்லரையின்மேல்
வைத்துவிட்டு போ!
உன்னை அணைக்க
நினைத்த மார்பு
காய்ந்த பூக்களையாவது
அணைத்துவிட்டு போகட்டும்!




ஜன்னல்

காலைத்தென்றல்
குயிலின் சத்தம்
மாலைச் சூரியனென
பூத்துக்குலுங்கிய
என் வீட்டு ஜன்னல்
உன்னைப் பார்த்ததுமுதல்
உன் நிழற்படம் ஆனதடி.

இப்போதும் அழகு
கொப்பளித்துக் கொண்டிருக்கிறது
ஜன்னலின் வெளியே
ஆனால் ரசிக்க மனமில்லை!

அழகாய் தெரிந்த ஜன்னல்
சிறையாய் தெரிகிறது
உன்னைப் பார்த்தது முதல்!

காலம்

காலமென்னும் ஆற்றினிலே
கூழாம் கற்களாய்
ஓடுகின்ற வாழ்க்கையிது
யார் சொல்லியும் கேட்பதில்லை
யாருக்கும் நிற்பதில்லை
விழித்தவன் கரை சேர்கிறான்
மற்றவன் அடித்துச் செல்லப்படுகிறான்

முன்னது முடிந்தது
பின்னது வரப்போவது
இரண்டுக்குமிடையில்
ஒரு புள்ளி ஊஞ்சலாட்டம்
இந்த ஓடம்
எல்லையில்லா வெளியில்
எல்லை தெரியாமல்
அசைந்துகொண்டே முடிகிறது.

சுருக்கவும் வழியில்லை
நீட்டவும் வழியில்லை
கரைபுரண்ட வெள்ளமாய்
கண்ணுக்கு சிக்கமால்
பலரின் வாழ்க்கையை கரைத்து
கையில் சிக்காமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது.

விதை

நீரில்லா பாலையிலே
நாவல் மரமொன்று
வெயிலோடு போராட
பழுத்த நாவலொன்று
சூரைக்காற்றில் மண்ணில் விழ

சுட்டெரிக்கும் வெயிலும்
கொந்தளிக்கும் மணலும்
பழத்ததனை வறுத்தெடுக்க
நீர்வற்றி , உடல் வற்றி
விதையென ஆனதென்ன?
கனலின் நடுவே பிறந்த
பிள்ளையை வெயிலே
வறுத்தெடுப்பதென்ன?

அப்பக்கம் வந்ததோர்
வெள்ளாட்டுக் கூட்டமோ
பிள்ளையை மித்தெடுக்க
அதிலோர் வெள்ளாடு
பிள்ளையை மேய்ந்துவிட
வெள்ளாட்டின் குடலில்
பிள்ளையின் போராட்டமென்ன?

வெள்ளாட்டுக் கூட்டத்தை
இடையனோ வயலில் பட்டியிட
வெள்ளாடோ புழுக்கையிட
விதையும்தான் விழுந்ததடி
உழவனின் மிதிகொஞ்சம்
காளையின் மிதிகொஞ்சம்
விதையும்தான்  புதைந்ததடி மண்ணிலே!

கார் இருள் , கடும் அழுத்தம்
அம்மாவின் கருவறையில்
இருந்த அதே சூழல்
அப்போது சுகமாய்
இப்போது போராட்டமாய்
தோலெல்லாம் கிழிந்து
உடலெங்கும் ரணமாய்
உயிர்வாழும் வைராக்கியம் எஞ்சிருக்க

வந்ததோர் மழைகாலம்
ஒருதுளி மழைநீர் உற்சாகப்படுத்த
மண்ணை துளைத்து
பொங்கி எழுந்தது
விண்ணைமுட்ட!

முதியோர் இல்லம்

வாழ்க்கையென்னும் கடலில்
போராடி கரைசேர்த்தவர்களுக்கு
பிள்ளைகளின் அன்புபரிசு
முதியோர் இல்லம்!

காதல் ரணம்

ரசித்த இதயத்தை
துடிக்க வைக்கிறாய்
மலர் கொடுத்த என்னை
முள்ளால் குத்துகிறாய்
பஞ்சணையில் தூங்கியவன்
இப்போது பனிகொட்டும் ரோட்டில்
சிறகடித்து பறந்தவன்
சிறகொடிந்து நிற்கிறேன்
போதும் கொன்றுவிடு!!

பார்வையற்ற ஜோடி

விழியிருந்தும் ஒளியில்லை
இருந்தாலும் தடையில்லை
வழிகாட்டி ஒருகையில்
வாழ்க்கைத்துணை மறுகையில்
அன்பின் ஒளியில்
தொடர்கிறது வாழ்க்கைப்பயணம்!

போய்வா 2011

தூக்கம் கலைந்து
துயிழெழும் நேரம் வந்த
கனவினைப் போல
கடந்து சென்றாயே!
பல கனவுகள்
பல சபதங்களுடன்
உன்னை தொடர ஆரம்பித்தேன்!

என்னோடு நீயிருந்த 
365 நாட்களில்
இன்பத்தில் சிலநேரம்
துன்பத்தில் சிலநேரம்
ஏற்றத்தில் சிலகாலம்
இறக்கத்தில் பலகாலம்
அடடா என்னே
நீ கொடுத்த அனுபவம்!

கனத்த இதயத்துடன் சில கணங்கள்
இறகைப்போலே  சில கணங்கள்
கண்ணீருடன் சில நேரம்
கவிதையுடன் சில நேரம்
சொல்லிய வார்த்தைகள்
சொல்லாமல் சென்றவர்கள்
திரும்பிப் பாக்கையில்
எத்தனை பதிவுகள்
என் பதிவேட்டில்!
ஓடிக்கொண்டே இருந்துவிட்டாய்.

இந்த 365 நாட்கள்
என் காதேரம், கனவுகள்,
தனிமை, கவிதை
கண்ணீர் என
என்னோடு இருந்தாய்!
இப்போது செல்லப் போகிறாய்!
மீண்டு வரமுடியாத
இடத்திலிருந்து வந்து
திரும்பிபெற முடியாதவற்றை
தந்துவிட்டு செல்கிறாய்!
உன் காலடி தடம்
என் நெஞ்சில் மாறா இரனமாய்இருக்க
என்னை விட்டு செல்கிறாய்!
பரவாயில்லை!
போய்வா நண்பனே!
போய்வா 2011!!





அவள்

காம்பின்மேல் வரைந்த
அற்புத ஓவியம் மலர்,
பூமியின் மேல் மலர்ந்த
அற்புத மலர் அவள்!


நியாயமா?

ஒவ்வொருமுறையும் உன்னை
பெண்ணாக படைக்கிறான் கடவுள்,
ஒவ்வொருமுறையும் உன்னை
தேவதை ஆக்குகிறேன் நான்,
நீயோ கடவுளை வணங்குகிறாய்
என்னை முறைக்கிறாய்
இது நியாயமா?