தன்னம்பிக்கை
Marc
2:54 PM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
love poems
,
poem about life
,
poems
,
poems about life
,
tamil kavithai
,
tamil kavithaigal
,
tamil love kavithaigal
,
tamil poems about life
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
1 comment
அந்த அறை முழுவதும் ஒரே அமைதி ஒரே சோகமயம் எடுத்திருப்பதோ வெறும் 183 ரன்கள் அறையில் நுழையும் போது அறையின் முழு சூழ்நிலையையும் புரிந்து கொண்டு எல்லோரையும் அழைத்து சிரித்த முகத்துடன் பேசத்துவங்குகிறார் கபில்தேவ்
"நம்மைப் போன்ற சிறந்த வீரர்களை அவர்களால் 183 ரன்களுக்கு அவுட் செய்ய முடியுமென்றால் நம்மாளும் முடியும் நம்பிக்கையோடு விளையாடுங்கள்" என்றார்.
அன்றைய ஆட்டம் இந்தியாவுக்கு உலககோப்பை பெற்று தந்த ஆட்டம்.
உலகமுழுவதும் பொருளாதார பெருமந்தம் எங்கு பார்த்தாலும் வேலை நீக்கம்,பங்கு சந்தைவீழ்ச்சி.இது தீர 5 வருடங்கள் ஆகும் என் உலக வல்லுனர்கள் எல்லாம் கை விரித்தனர்.ஆனால் ஒரு மூலையில் மட்டும் "வெற்றி உனது(jaiho) வெற்றி உனது(jaiho)"
என ஒரே ஆனந்த தாண்டவம் ஒரு சின்ன நம்பிக்கை சுடர் மட்டும் உலகத்தை துளைத்தெடுத்தது.ஆறே மாதத்தில் உலகம் மீண்டெழுந்தது.அதற்காகவே அது இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்றது.
தோல்வியின் மத்தில் நின்று கொண்டு வெற்றி நமதே என் சொல்வது மட்டும் தன்னம்பிக்கையில்லை.தோல்வியே அடைந்தாலும் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பது தான் தன்னம்பிக்கை.
சர்ச்சிலிடம் பத்திரிக்கை நண்பர்கள் கேட்டார்களாம் "ஏன் உங்களால் காந்தியை ஒன்றும்
செய்ய முடியவில்லை என்று".அவர் சொன்னார் காந்தி கத்தி எடுத்திருந்தால் நான் துப்பாக்கி கொண்டு அடக்கி இருப்பேன். துப்பாக்கி எடுத்திருந்தால் பீரங்கியால் அடக்கி இருப்பேன்.ஆனால் அவர் சத்தியத்தை ஆயுதமாக தாங்கி வருகிறார். சத்தியத்தை தோற்கடிக்க இது வரை ஒரு ஆயுதமும் கண்டுபிடிக்கப் படவில்லை அதனால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.
சத்தியம் மட்டுமே இந்தியாவின் ஆயுதமாக, தன்னம்பிக்கை அதை வழி நடத்த இந்தியாவின் சுதந்திரம் உதயமானது.
உலகம் முழுவதையும் வென்ற அலெக்சாண்டரையும்,டெஸ்டில் தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டுவந்த ஆஸ்திரேலியாவையும் தடுத்து நிறுத்தியது இந்தியா தான்.காரணம் போராட்டம் குணம் விட்டுகொடுக்க மாட்டேன் என்கிற போராட்டம் குணம்.
யாருக்காகவும் எதற்காகவும் கொண்ட கொள்கையிளும் ,எடுத்த முடிவுகளையும் விட்டுகொடுக்காதிர்கள்.
உலகத்தின் நம்பர் ஒன் பணக்கார வாரியம் இந்தியா கிரிக்கட் வாரியம்.ஆனால் இந்தியா வெற்றி பெறுவது எப்போதாவது தான்.பிறகு எப்படி நம்பர் ஒன் பணக்கார வாரியம்.தெரிந்து கொள்ளுங்கள் வெற்றி பெறுவதை விட எப்படி தோற்றீர்கள் என்பது தான் முக்கியம்.இந்தியா விளையாண்டால் கடைசி பந்து வரை போராட்டம் தான்.
வெற்றியாளனாக இருப்பதை விட தோற்றாலும் சிறந்த எதிரணியாக இருப்பது தான் தன்னம்பிக்கை.
அவனை அன்றுதான் பள்ளியில் தாய் சேர்த்தால் ,சேர்ந்த சில நாட்களில் அவன் பள்ளி குறிப்பேட்டில் ஆசிரியர் இப்படி எழுதி அனுப்புகிறார்."இவனைப் போன்ற முட்டாளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று."அதைப் பார்த்த தாய் அழுது கொண்டே சொல்கிறாள்"என் மகன் முட்டாள் அல்ல,அவனை நான் புத்திசாலி ஆக்குகிறேன் என்று"இன்று அவனைப் பற்றி எல்லா குழந்தைகளும் படிக்கின்றனர்.அவன் தான் இருட்டில் உழன்ற உலகத்திற்கு வெளிச்சம் காட்டிய தாமஸ் ஆல்வா எடிசன்.
உலகம் தனக்கென்று ஒரு வரையறை வைத்துள்ளது அதன் படி நீ இருந்தால் நீ புத்திசாலி, இல்லை என்றால் முட்டாள்.தன்னம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் முட்டாள்கள் ஏன் என்றால் அவர்கள் வரையறை மட்டும் அல்ல உலகையே மாற்ற பிறந்தவர்கள்.
அந்த கூட்டுகுடும்பத்தில் பிறந்த அவனுக்கு பிறந்தநாள் அவன் பாட்டி குடும்ப ஏட்டில் இப்படி எழுதினால் "எனக்கு ரவியின் எதிர்காலம் நினைத்தாலே பயமாக இருக்கிறது"என்று.ஆனால் அவனோ இன்று இரு நாடுகளுக்கு தேசிய கீதம் பாடி,நோபல்பரிசும் பெற்றான்.அவன் தான் ரவீந்திரநாத் தாகூர்.
நம்மை பற்றி உலகம் என்ன நினைக்கிறது என்பது முக்கியம் அல்ல, நம்மை பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பது தான் "தன்னம்பிக்கை".
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இது தான் தன்னம்பிக்கையின் கானம்.
"நம்மைப் போன்ற சிறந்த வீரர்களை அவர்களால் 183 ரன்களுக்கு அவுட் செய்ய முடியுமென்றால் நம்மாளும் முடியும் நம்பிக்கையோடு விளையாடுங்கள்" என்றார்.
அன்றைய ஆட்டம் இந்தியாவுக்கு உலககோப்பை பெற்று தந்த ஆட்டம்.
உலகமுழுவதும் பொருளாதார பெருமந்தம் எங்கு பார்த்தாலும் வேலை நீக்கம்,பங்கு சந்தைவீழ்ச்சி.இது தீர 5 வருடங்கள் ஆகும் என் உலக வல்லுனர்கள் எல்லாம் கை விரித்தனர்.ஆனால் ஒரு மூலையில் மட்டும் "வெற்றி உனது(jaiho) வெற்றி உனது(jaiho)"
என ஒரே ஆனந்த தாண்டவம் ஒரு சின்ன நம்பிக்கை சுடர் மட்டும் உலகத்தை துளைத்தெடுத்தது.ஆறே மாதத்தில் உலகம் மீண்டெழுந்தது.அதற்காகவே அது இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்றது.
தோல்வியின் மத்தில் நின்று கொண்டு வெற்றி நமதே என் சொல்வது மட்டும் தன்னம்பிக்கையில்லை.தோல்வியே அடைந்தாலும் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பது தான் தன்னம்பிக்கை.
சர்ச்சிலிடம் பத்திரிக்கை நண்பர்கள் கேட்டார்களாம் "ஏன் உங்களால் காந்தியை ஒன்றும்
செய்ய முடியவில்லை என்று".அவர் சொன்னார் காந்தி கத்தி எடுத்திருந்தால் நான் துப்பாக்கி கொண்டு அடக்கி இருப்பேன். துப்பாக்கி எடுத்திருந்தால் பீரங்கியால் அடக்கி இருப்பேன்.ஆனால் அவர் சத்தியத்தை ஆயுதமாக தாங்கி வருகிறார். சத்தியத்தை தோற்கடிக்க இது வரை ஒரு ஆயுதமும் கண்டுபிடிக்கப் படவில்லை அதனால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.
சத்தியம் மட்டுமே இந்தியாவின் ஆயுதமாக, தன்னம்பிக்கை அதை வழி நடத்த இந்தியாவின் சுதந்திரம் உதயமானது.
உலகம் முழுவதையும் வென்ற அலெக்சாண்டரையும்,டெஸ்டில் தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டுவந்த ஆஸ்திரேலியாவையும் தடுத்து நிறுத்தியது இந்தியா தான்.காரணம் போராட்டம் குணம் விட்டுகொடுக்க மாட்டேன் என்கிற போராட்டம் குணம்.
யாருக்காகவும் எதற்காகவும் கொண்ட கொள்கையிளும் ,எடுத்த முடிவுகளையும் விட்டுகொடுக்காதிர்கள்.
உலகத்தின் நம்பர் ஒன் பணக்கார வாரியம் இந்தியா கிரிக்கட் வாரியம்.ஆனால் இந்தியா வெற்றி பெறுவது எப்போதாவது தான்.பிறகு எப்படி நம்பர் ஒன் பணக்கார வாரியம்.தெரிந்து கொள்ளுங்கள் வெற்றி பெறுவதை விட எப்படி தோற்றீர்கள் என்பது தான் முக்கியம்.இந்தியா விளையாண்டால் கடைசி பந்து வரை போராட்டம் தான்.
வெற்றியாளனாக இருப்பதை விட தோற்றாலும் சிறந்த எதிரணியாக இருப்பது தான் தன்னம்பிக்கை.
அவனை அன்றுதான் பள்ளியில் தாய் சேர்த்தால் ,சேர்ந்த சில நாட்களில் அவன் பள்ளி குறிப்பேட்டில் ஆசிரியர் இப்படி எழுதி அனுப்புகிறார்."இவனைப் போன்ற முட்டாளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று."அதைப் பார்த்த தாய் அழுது கொண்டே சொல்கிறாள்"என் மகன் முட்டாள் அல்ல,அவனை நான் புத்திசாலி ஆக்குகிறேன் என்று"இன்று அவனைப் பற்றி எல்லா குழந்தைகளும் படிக்கின்றனர்.அவன் தான் இருட்டில் உழன்ற உலகத்திற்கு வெளிச்சம் காட்டிய தாமஸ் ஆல்வா எடிசன்.
உலகம் தனக்கென்று ஒரு வரையறை வைத்துள்ளது அதன் படி நீ இருந்தால் நீ புத்திசாலி, இல்லை என்றால் முட்டாள்.தன்னம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் முட்டாள்கள் ஏன் என்றால் அவர்கள் வரையறை மட்டும் அல்ல உலகையே மாற்ற பிறந்தவர்கள்.
அந்த கூட்டுகுடும்பத்தில் பிறந்த அவனுக்கு பிறந்தநாள் அவன் பாட்டி குடும்ப ஏட்டில் இப்படி எழுதினால் "எனக்கு ரவியின் எதிர்காலம் நினைத்தாலே பயமாக இருக்கிறது"என்று.ஆனால் அவனோ இன்று இரு நாடுகளுக்கு தேசிய கீதம் பாடி,நோபல்பரிசும் பெற்றான்.அவன் தான் ரவீந்திரநாத் தாகூர்.
நம்மை பற்றி உலகம் என்ன நினைக்கிறது என்பது முக்கியம் அல்ல, நம்மை பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பது தான் "தன்னம்பிக்கை".
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இது தான் தன்னம்பிக்கையின் கானம்.
Related Posts
Subscribe to:
Post Comments
(
Atom
)
உண்மையிலேயே தன்னம்பிக்கை கொடுக்கும் நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
ReplyDelete