அவள் வசம் நான்!!
Marc
அன்பே
உன்னை பார்த்த நாள் முதல் என் இதயம் ,
உன் சேலையில் ஒட்டுப்புல்லாய் ஒட்டிக்கொண்டது!
திருப்பி தருவாயா?
என் வசம் இருந்த நான் இப்போது உன்வசம்!
திருப்பி தருவாயா என்னை?
நீ சிரித்தது முதல் எனக்குள் போராட்டம்,
மேலும் என்ன செய்ய காத்திருக்கிறாய்?
நீ அடித்து விளையாட
என் இதயம் ஒன்றும் கோவில் மணியல்ல.
வலிக்கிறது இதயம்
அடிப்பது நீ என்பதால் இனிக்கிறது.
நீ வலியா இல்லை வாழ்க்கையா??
உன்னை பார்த்த நாள் முதல் என் இதயம் ,
உன் சேலையில் ஒட்டுப்புல்லாய் ஒட்டிக்கொண்டது!
திருப்பி தருவாயா?
என் வசம் இருந்த நான் இப்போது உன்வசம்!
திருப்பி தருவாயா என்னை?
நீ சிரித்தது முதல் எனக்குள் போராட்டம்,
மேலும் என்ன செய்ய காத்திருக்கிறாய்?
நீ அடித்து விளையாட
என் இதயம் ஒன்றும் கோவில் மணியல்ல.
வலிக்கிறது இதயம்
அடிப்பது நீ என்பதால் இனிக்கிறது.
நீ வலியா இல்லை வாழ்க்கையா??
குழந்தையும் பொம்மையும்
Marc

நம்மை பொறுத்தவரை பொம்மைகளுக்கு உயிர் இல்லைதான்.ஆனால் ஒரு குழந்தை பொம்மையுடன் விளையாடுவதை பார்த்தால் அது தவறு என்பது புரியும்.அந்த குழந்தை பொம்மையுடன் பேசும்,சிரிக்கும்,அழும்,தான் சாப்பிடும் சாப்பாட்டை ஊட்ட முயற்சி செய்யும்,அதற்கு ஆடை அணிவிக்கும்.பொம்மை பேசாதுதான்.ஆனாலும் நாள் முழுவதும் விளையாடும்.அதற்கு யாரும் தேவை இல்லை.இரவில் அதனுடனே தூங்கும்.உண்மையில் எல்லா குழ்ந்தைகளும் கடவுள் தான்.அவர்கள் உயிரற்ற பொம்மைகளுக்கு உயிர்கொடுப்பதனால்.ஆனால் வளர்ந்தவுடன் அதே குழந்தை தன் கடவுள் தன்மையை தொலைத்துவிட்டு மனிதனாகி தான் தொலைத்த கடவுளை தேடி தேடி நொந்து சாகிறது.
கதைகேட்டு நீதி சொல்லுங்கள் - 2
Marc
ஒரு நாள் கடவுள் பூமிக்கு வர ஆசைப்பட்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார்?வெளியே வந்த ஆளிடம் நான் தான் கடவுள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்?வீட்டுக்காரர் மிகுந்த கடுப்புடன் இவ்வாறு கூறினார் "முன்பு எல்லாம் கடவுளின் பெயரைச் சொல்லி பிச்சையெடுத்தீர்கள்!இப்போ கடவுள் என்று கூறி பிச்சையெடுக்க ஆரம்பித்து விட்டீர்களா? என்று சீறினார்.கோபம் கொண்ட கடவுள் கீழி இறங்கி ரோட்டில் நடக்க ஆரம்பித்தார்.வழியில் அவர் இரு குடிகார குடிமகன்களிடம் நான் தான் கடவுள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்?அதற்கு ஒருவன் சரிதான் போ நாங்கள் யார் என்று நினைத்தாய்? நான் யேசு!இவன் முகமது!என்று கூறினான்.நொந்தே போய்விட்டார் கடவுள்!!
இதன் நீதி : ?????
இதன் நீதி : ?????
3:04 PM
எனது பக்கங்கள்
,
கதை நேரம்
Subscribe to:
Posts
(
Atom
)









விருது வழங்கிய திரு.ஹேமா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
விருது வழங்கிய திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.