ஓர் அழகான எழுத்து முயற்சி.

கவிதையாய் வருவாய்

12 comments
கவிதையாய் வருவாய் sekar tamil
கவிதையாய் வருவாய்
உணர்வில்லாத சொல்
உரைத்தென்ன பயன்
உயிரில்லாத வரிகள்
வரித்தென்ன பயன்
உண்மையில்லாத கூட்டில்
பிறப்பதெல்லாம் வீண்
ஆன்மாயில்லாத கவிதை
எழுத்துக்களின் சாக்கடை
உன்னை நினைத்து
வரிப்பதெல்லாம் சந்தனம்
உன்னை நினைத்து
என்னில் முளைத்து
கவிதையாய் வருவாய்
உலகெல்லாம் செழிக்கட்டும்!

12 comments :

  1. ''...உணர்வில்லாத சொல்
    உரைத்தென்ன பயன்
    உயிரில்லாத வரிகள்
    வரித்தென்ன பயன்...''
    நல்ல வரிகள் சகோதரா வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  2. Ennaku purialayannu theriala but kavithaya yetha vara solra, first unmaya uraiyakannum iruku ok aana final..a ulagam selika yaarai kavidaiyai alaikindrai? really i didnt understand.

    ReplyDelete
    Replies
    1. ஆண்டவனே உன்னை நினைத்து எழுதுவதெல்லாம் சந்தனமாய் மனக்கிறது.நான் உன்னை நினைத்துக் கொண்டே இருப்பேன் நீ எனக்குள் கவிதையாய் வருவாய் அதன் ஒளியில் இந்த உலகம் செழிக்கட்டும்.

      Delete
  3. உன்னை நினைத்து
    வரிப்பதெல்லாம் சந்தனம்
    வரிகள் மணக்கத்தான் செய்தன அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  4. வரிகள் தோறும் கவிநயமே-நீர்
    வடித்தன அழகு சொல்மயமே
    வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி புலவர் அவர்களே

      Delete
  5. வரிகள் தோறும் கவிநயமே-நீர்
    வழங்கினீர் அழகிய சொல்மயமே

    வாழ்த்துக்கள்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  6. என்னில் முளைத்து
    கவிதையாய் வருவாய்
    உலகெல்லாம் செழிக்கட்டும்!
    >>>>
    நல்லதொரு சிந்தனை. வாழ்க வளமுடன் தம்பி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  7. வித்தியாசமான சிந்தனை வரிகள்.ரசித்தே !

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..