ஓர் அழகான எழுத்து முயற்சி.

நான்

No comments
விந்தை எடுத்து
அண்டத்தில் குழைத்து
இருட்டில் வரைந்த
ஓவியம் நான்!
மண்ணில் விழுந்து
விண்ணை இடித்து
ஓங்கி வளர்ந்த
கற்பகவிருட்சம் நான்!
சொல்லை எடுத்து
தேனில் குழைத்து
காற்றில் எழுதிய
கவிதை நான்!

சொல்லை தாண்டிய சொல்லும் நான்
கற்பனைக்கு எட்டாத கற்பனை நான்
இருளில் கலந்த இருளும் நான்
ஒளியை தாண்டிய ஒளியும் நான்
தாகத்தில் கலந்த தண்ணீர் நான்
பசியில் கலந்த வறுமை நான்

காக்கை சிறகினில் நான்
குயிலின் குரலில் நான்
குளிர்ந்ததென்றல் காற்றும் நான்
கடும் பாலை நிலமும் நான்
எல்லைகடந்த எல்லை நான்

மூச்சும் நான்
சுவாசம் நான்
மண்ணும் நான்
விண்ணும் நான்
கண்டதும் நான்
காணபோவதும் நான்
தெடுவதும் நான்
தெடுபொருளும் நான்
உண்மை நான்
உயிரும் நான்
நானும் நான்
நீயும் நான்

அண்டம் அதிர
பிண்டம் குலுங்க
உலகை படைத்த
கடவுளும் நான்!

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..