About Me

Saturday, December 15, 2012

காமம்

நானோ
என்னவென்றே தெரியாமல்
தேடிக் கொண்டிருக்கிறேன்.
நீயோ
என்னவென்றே தெரியாமல்
கொடுத்துக் கொண்டிருக்கிறாய்.
தேடுவதும் தெரியாமல்
கொடுப்பதும்  தெரியாமல்
அனுபவம் மட்டும் காட்சியாக
வேட்கை தொடர்கிறது.
 

Wednesday, October 31, 2012

கருவறை சுகம்

ரத்தமும் சதையுமாய்
ஆனந்த சுகத்தோடு
அன்னையின் கருவறையில்
உறங்கியதொரு காலம்.....

யாருமில்லா தனிமையில்
நான் உள்ளே இருந்து
அவள் பேசுவதை கேட்டு
கழித்ததொரு காலம்....

அந்த பத்து மாதமும்
எனக்காக அவள் பட்ட
கஷ்டமெல்லாம் எனக்கு
மட்டுமே தெரியும்....

பத்துமாதமும் முடிந்தது.
என்னை வேரின் சுவடே
இல்லாமல் கருவறையில்
இருந்து பிரித்து பூமியில்
நட்டார்கள்.கேட்டால்
பிறந்தநாள் என்றார்கள்.

அன்று நான் அழுவதை
சுற்றி நின்று ஆனந்தமாக
சிரித்தார்கள் .

அன்று தொலைத்த
கருவறை சுகம்
அன்பாக காதலாக மாறி
ஒரு பெண்ணை
நோக்கி நகர்ந்தது!

அவளும் வந்தாள் - மனைவியாக.
அவள் மார்பில்
தலைவைத்து படுத்துக்கொண்டேன்.
அவளும் தலைகோதிவிட்டாள்.
மீண்டும் குழந்தையாகி போனேன்.

மீண்டும் ஒரு நாள் வந்தது.
என்னை வேரின் சுவடே
இல்லாமல் பூமியில்
இருந்து பிரித்துவிட்டார்கள்.கேட்டால்
இறந்தநாள் என்கிறார்கள்.

இப்போது எல்லோரும்
அழுகிறார்கள்.நானோ
ஆனந்தமாக இருக்கிறேன்.ஏனென்றால்
நான் மீண்டும் அவளோடு
சேரப்போகிறேன் .

அந்த கருவறை
சுகத்திற்கான
பயணத்திற்கு மீண்டும்
தயாராகிவிட்டேன்.









Friday, October 12, 2012

நான் தேடும் கவிதை

தினமொரு கவிதை
எழுதிட நினைத்து
தவியாய் தவிக்கிறேன்.

ஆயிரம் எண்ணங்கள்
குவியலாய் அவியலாய்,
 அதிலொரு முகத்தை தேடுகிறேன்.

எண்ணங்கள் கூடி வர
வார்த்தைகள் ஒத்துழைக்கவில்லை.
வார்தைகள் வளைந்துவர
அர்த்தங்கள் ஒத்துழைக்கவில்லை.
அர்த்தங்கள் கூடிவர
உணர்வுகள் வெளிப்படவில்லை.

இன்னமும் குப்பையும்
கூழமுமாய் ஒழுங்கில்லா
வடிவியலுடன் எழுத்துகளை
அடுக்கி கவிதை
செய்து கொண்டு இருக்கிறேன்.

ஆனால் உணர்வை தொட்டு
உயிரில் கலக்கும் அந்த
கவிதை இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறேன்.


Friday, September 21, 2012

தெருக்கூத்து

இருட்டுக் கொட்டடியில்
சிற்றிடை சிரிப்பழகியின்
கடைசரக்கை கண்டிட,
விட்டில் பூச்சிகளாய்
வாலிபம் மொய்த்து நிற்க,
ஆரம்பித்தது கலைக்கூத்து.

அடித்தொண்டை கானமும்
கோமாளி பேச்சுமாய் தன்
நாடகத்தை தொடங்கினாள்.
காட்டியும் காட்டாமலும்
பேசியும் பேசாமலும்
ஜாடையாய் அவள் செய்த
கோலங்கள் இரவைவிரட்டிக்
கொண்டு இருந்தன.

ஏழ்மையின் காரணமாய்
தன் மானத்தை முச்சந்தியில்
கொட்டி அவள்  அள்ளி
கொண்டிருந்ததை பதின்ம
வயது சிங்கங்கள்
சீண்டி சுகம் கண்டனர்.

இங்கே பார்பவனுக்கும் பசி
பார்க்கப்படும் பொருளுக்கும் பசி
இவனது காமப்பசி அங்கே
அவளுக்கு வயற்றுப்பசியை
தீர்க்கிறது.

உண்மையில் பசி
சந்தி சிரிக்க வைக்கும்
கலைக்கூத்து தான்.






Monday, September 10, 2012

தீண்டாமை

தீண்டாமை
அழகான அந்த கவிதை
வாசித்து முடிக்கப் பட்டதும்
அரங்கமே அதிர்ந்தது - கர ஒலியில்
அதை எழுதிய மாணவன்
பிற்படுத்த பட்டவன் என்பதால்
அக்கவிதை நிராகரிக்கவும் பட்டது.
இங்கே மனிதர்கள் மட்டுமல்ல ,
கடவுளே பிறந்தாலும் -
உயர்குடியில் பிறந்தால் தான்
டம்ளரில் டீ- இல்லையென்றால்
சிரட்டையில் தான் டீ.

Sunday, September 9, 2012

அறிவரைகளை அலட்சியம் செய்யாதீர்கள்

அறிவரை
இன்றைய நவீனயுகத்தில் அலட்சியப்படுத்துதல் என்பது நாகரீகமாகிவிட்டது.எல்லாம் தெரியும் என்ற இறுமாப்பு வாழ்க்கையை அரித்துக்கொண்டிருக்கிறது.யாராவது அறிவுரை சொல்லிவிட்டால் போதும் உடனே அலட்சியத்துடன் "அறிவுரை சொல்வது எளிது" என மட்டம் தட்டுவது. அறிவுரை எப்பேர் பட்ட வரம். நம்மீது கொண்ட கனிவின் காரணமாக தன் சொந்த நேரத்தை நமக்காக ஒதுக்கும் மனித இதயத்தை கோடாரியால் வெட்டும் நம் புரிதலின் பார்வையை மாற்றவேண்டும்.அறிவுரையின் மீதான புரிதலை வளர்க்க வேண்டும்.ஒவ்வொரு விடியலிலும் நாம் காணும் மனிதர்களும்,பறவைகளும் நமக்கான பாடத்தை சுமந்து வருகின்றன.ஆனால் நாம் அவற்றை பார்க்கும் பார்வையையும் ,ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

ஒருமுறை முகமது நபியிடம் ,ஒரு பெண் தன் குழந்தை அதிகம் இனிப்பு சாப்பிடுவதாகவும் ,அதற்காக அறிவுரை கூறுமாறு வேண்டினாள். நபிகள் அவர்களும் போய்விட்டு ஒரு வாரம் கழித்து வருமாறு கூறினர்.அவளும் ஒரு வாரம் கழித்து வந்தாள்.அப்போது நபிகள் அந்த குழந்தையிடம் இனிப்புகள் சாப்பிடுவது உடம்பிற்கு கெடுதி அதனால் இனிப்பு சாப்பிடுவதை குறைக்குமாறு அறிவுரை கூறினாராம்.அதை கேட்ட அந்த பெண் ஏன் அன்றே இதை கூறி இருக்கலாமே என கேட்டாள்.அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் "நானும் அன்றைய தினம் வரை இனிப்புகள் சாப்பிட்டு கொண்டிருந்தேன்".அதனால் தான் அன்று கூறவில்லை.இப்போது இனிப்பு சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.அதனால் தான் அறிவுரை கூறுகிறேன் என்றார்.

அதற்காக அறிவுரை கூறுபவர்கள் எல்லாம் நல்லவர்களாவும் ,அதை கடைபிடிப்பவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அறிவுரை என்கின்ற பாடம் இறைவன் நமக்கு அளிக்கின்ற பரிசு.அறிவுரை சொல்பவர்கள் வெறும் தூது செல்பவர்கள்.ஆனால் நாமோ தூதுவனைப் பார்த்து கொண்டு தூது பொருளை தவற விட்டுவிடுகிறோம்.சிப்பியை பார்த்துவிட்டு முத்துவை தவறவிடலாமா? நாம் எப்போதெல்லாம் துன்பப்படுகிறோமோ அப்போதெல்லாம் நமக்கான ஆறுதல் ஏதோ ஒரு வடிவில் வந்து கொண்டுதான் இருக்கிறது.நாம் தான் அதை ஏற்கும் மன நிலைமையையும்,பகுத்தாயும் திறனையும் இழந்துவிட்டோம்.எல்லாவற்றையும் புரிதலோடும் அன்பென்ற கருனையோடும் அணுகும் போது ,மழைக்காலத்தில் சாலை ஓரத்தில் உள்ள ஒரு புல்லின் மீதான பனித்துளிகூட ஓராயிரம் பாடங்களையும் ,அர்த்தங்களையும் மெளனமாக சொல்லிவிட்டு செல்கிறது.

Friday, September 7, 2012

வரதட்சனை

பூமியில் பிறந்த
இருமனங்களின் திருமணம்
சொர்க்கத்தில் நிச்சியிக்கப்பட்டு
பூமியிலே விற்கப்படுகிறது.

Thursday, March 22, 2012

நான்

புள்ளி புள்ளியாக
சாவை நோக்கி நகரும்
மனித நேர்கோடு நான்!

பல பரிமாணச் சதைகளோடு
கூடித்திரியும்
ஒரு பரிமாணக்கோடு நான்!

வளைந்த காலவெளிக்குள்ளே
வாழ்க்கையை தேடும்
சிறு அதிர்வு நான்!

உடல் இயக்கவிதிகளெல்லாம்
தொலைத்துவிட்ட ஓர்
இதயம் நான்!

பிரம்மாண்டங்களுக்கிடையே பூத்த
சிறு மலருக்குள் - பதுங்கி வாழும்
வண்டு நான்!

இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும்
இடைப்பட்டு வாழும்
உயிர் ஜிவன் நான்!





Friday, March 16, 2012

பட்டமரம்

பட்டமரம்
பட்டமரம்
அழகான கானகத்தே
கரையில்லா அழகினூடே
அசிங்கமாய் காட்சியளிக்கிறேன்.
இன்பரசம் குடித்துக்கொண்டு
வாழ்க்கையை கரைத்தவன் - வெறும்
சக்கையாய் நிற்கிறேன்.


வைகறையும் வரும்
காலைஒளி கதவைத்தட்டும்
தத்தம் பறவைகள்
தன்குஞ்சுகளை என்பாதுகாப்பில் விட்டு
இரை தேடச்செல்லும்.
குஞ்சுகளோ என்மீது
ஆடிப்பாடி விளையாடும்.
அவைதம் பிஞ்சு நகங்களால்
என் கிளைகளை
பற்று ஆனந்தம்
வார்தையின் பார்பட்டது.


அதற்கு பலனாய்
இளவேனிற் காய்காத்து
கோடையில் பழுத்து
இலையுதிற் காலத்தே
விருந்து படைப்பேன்.
அவைகளும் விருந்துண்டு
என் தோல்மேலே
ஓடி விளையாடும்.



உச்சிவந்தால்
ஓடிவருவர் -  என் மடிதேடி.
வந்தவர்க்கு பழம்கொடுத்து
படுக்க மடிகொடுப்பேன்.
மாலை வந்தால்
சிறுவர் கூட்டம்
துள்ளி வந்து
என்னை தொத்தி
என்மேல் ஊர்ந்து
என்னை அணைத்து
ஆனந்தமாக விளையாடுவர்.


இரவு வந்தால்
இருட்டு அரக்கனிடமிருந்து
என் பிள்ளைகளை காப்பேன்.
அந்த நிலவின் ஒளி
ஆற்றில் எதிரொளிக்கும்.
அதன்  வெளிச்சத்தில்
பசியுண்ட குஞ்சுகளுக்கு
தாயினம் உணவூட்டும்
தாய்மையை பார்த்து ரசிப்பேன்.


அணுஅணுவாய் துளி சாறுகூட
மிச்சமில்லாமல் வாழ்க்கையை ரசித்தேன்!
இன்றோ ஒருதுளி
இலைகூட இல்லாமல்
பட்டமரமாய் எஞ்சியிருக்கிறேன்!
யாரும் என்மீது
கூடிகட்டுவதில்லை!
யாரும் என்மீது
ஏறி விளையாடுவதில்லை!
நான் என்ன
பாவம் செய்தேன்?
எதுவும் எதிர்பார்க்காமல் வாழ்த்தவன்!
யாருக்கும் பயன்படாமல்
சக்கையாய் நிற்கிறேன்!
காய்ந்த சருகாய்
காயத்துடன் நிற்கிறேன்.







Wednesday, March 14, 2012

விடைகொடு எங்கள் நாடே!

விடைகொடு எங்கள் நாடே!
விடைகொடு எங்கள் நாடே!
சகோதர சகோதரிகளே
நேரம் நெருங்கிவிட்டது.
நம் தொப்புள் கொடிகளை
மறந்து தொடர்பறுக்கும்
நேரம் நெருங்கிவிட்டது.
இந்தியர்களே உங்களுக்கு
எங்களை பற்றி கவலைபட நேரமில்லை.
இந்தியன் இந்தியனென
கத்தி கத்தி வாய்வலித்துவிட்டது.
இந்திய நாட்டில் இருந்து
நாங்கள் பிரிந்து விடுவோமென
தெரிந்துதான் தமிழ்நாடென
பெயர் சூட்டிவிட்டார்கள் போலும்.
எங்கள் வலியை புரிந்து கொள்ளாத
இந்தியர்களிடம் என்ன உறவுவென?
என் உள்மனதின் கேள்விக்கு
உங்களிடம் பதில் இல்லை.
பக்கத்து மாநிலக்காரனோ
தண்ணீர் தர மறுக்கிறான்.
பக்கத்து நாட்டுகாரனோ
என் உறவுகளை கொன்று குவிக்கிறான்.
உங்கள் சாக்கடை அரசியலோ
மின்சாரம் தர கூட மறுக்கிறது.

இந்தியா என்னும் மாயை
உண்மையில் எங்கள் இரத்ததை
குடித்துக் கொண்டிருக்கிறது.
என் தாய்மார்களை காக்காத
இந்த தாய்மண்
எங்களுக்கு தேவையில்லை.
தாகத்திற்கு தண்ணீர் தரா
ஒரு சகோதரத்தும் தேவையா?
சகோதரனின் வலியை உணரா
ஒரு சகோதரத்தும் தேவையா?
இந்திய சகோதரா ?
உன் வலியை என்னால் உணரமுடியவில்லை !
என் வலியை உன்னால்  உணரமுடியவில்லை !
பிறகென்ன சகோதரத்துவம்
பிறகென்ன ஒற்றுமை
விட்டு விடுங்கள் எங்களை
கனத்த இதயத்துடன்
பிரிந்து விடுகிறோம்.
நாங்கள் இந்தியனாக
வாழ விரும்பவில்லை.
ஒரு நல்ல மனிதனாக
வாழ விரும்புகிறோம்.
ஒரு  நாடு வாழ
ஒரு ஊரை பழிகொடுக்கலாம்தான்
அதற்காக எங்களை மட்டுமே
பழிகொடுத்துக் கொண்டிருக்கும்
உங்கள் இந்திய அரசியல்
எங்களுக்கு தேவையில்லை!






Tuesday, March 13, 2012

ஈழப்புலம்பல்

ஈழப்புலம்பல்
அடிவானத்தின் கீழ்
வெறித்த பார்வையோடு
கண்ணீர் துளியோடு காத்திருக்கிறேன்
அவர்களுக்காக.
அழகியலில் திளைத்து
வார்த்தைகளை வளைத்து
உணர்வில்லாமல்
கவிதை கிறுக்கி திரிந்தேன் .
ஒரு மனித மிருகத்தின்
ஈழப்புலம்பல்கோர தாண்டவம்
என் மனக்கண்ணாடியை
உடைத்தெறிந்து விட்டது.
அதோஅந்த வானத்தின் கீழ்
அந்த கடலை தாண்டி
வேலிகளின் நடுவே
என் மக்கள் இருக்கின்றனர்.
இல்லம் துறந்து 
உண்ண உணவில்லாமல்
உடுக்க உடையில்லாமல்
உறுப்புகளை இழந்து
உற்றம் சுற்றம் இழந்து
நடைபிணமாக காத்திருக்கிறார்கள்
என் வருகைக்காக.
நானோ கையாளாகாதவனாய்
கண்ணீரோடு புலம்பிக்கொண்டிருக்கிறேன்.

அதோ அடிவானத்தின் கீழ்
இருள் கொடைவிரித்து வருகிறது.
வெளிச்சம் குறைந்து கொண்டே வருகிறது.
அவர்களின் எண்ணிக்கையும்
குறைந்து கொண்டே வருகிறது.
வலியும் வேதனையும்
என் மக்களை அரித்துக்கொண்டிருக்கிறது.
இருளும் ஒளியும்
என் மக்களை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது.
அந்த ஓணாய்கள் வேலிகளுக்குள்
என் மக்களை கொன்று
ஜீரணித்துக் கொண்டிருக்கின்றன.
நானோ இருளின் பிடியில்
கண்ணீரோடு காத்துக்கொண்டிருக்கிறேன்
நல்ல விடியலுக்காக .








Saturday, March 10, 2012

ஈழக்காட்சிகள்

இரத்தவெறி பிடித்த
மனித மிருகத்திடம்
சிக்கியதொரு கூட்டம்
வீரர்களின் உறுப்புகள்
தெறித்து சிதறுகின்றன
பதுங்கு குழிகளெங்கும்
இரத்தஆறுகள் ஓடுகின்றன
எதிர்படும் உயிர்களெல்லாம்
மரணபயத்தில் அலறுகின்றன
அதோ அங்கே
உடல்கள் தரம் பிரிக்கப்பட்டு
தலைகள் கொய்யப்படுகின்றன
தேர்ந்தெடுக்கப்பட்ட பிணங்கள்
நிர்வாணமாகி காமப்பசிக்கு உணவாகின்றன
சுமையான சதைப்பிண்டங்கள்
குப்பையென வீசப்படுகின்றன
அதோ அங்கே
ஒருவன் உயிருடன் உள்ளான்
போகிற போக்கில் பொழுதுபோக்காக
கத்தியால் கழுத்து துண்டிக்கப்படுகிறது
தொடர்கிறது வேட்டை
விடிய விடிய இரத்தபலி
குவிகிறது சடலங்கள்
அழகான காட்சிகள்
நன்றாக வேடிக்கை பார்த்தோம்
இரவு உணவை முடித்துவிட்டு
நிம்மதியாக உறங்களாம்
அந்த வெறிபிடித்த மிருகமோ
புத்தனை பிரார்த்தனை செய்கிறது
தன் பாவங்களை போக்க!
நாமோ மெளனமாக வேடிக்கை பார்க்கிறோம்
மெளனம் கலைவீரோ தோழர்களே!!

Ads

Ticketamerica.com has football nfl tickets for the atlanta falcons and the buffalo bills as well as the houston texans seating charts home and away games too.

buffalo bills tickets
houston texans tickets
atlanta falcons tickets

Friday, March 9, 2012

மீண்டும் பள்ளிக்கு போகலாம் ...!!!

வணக்கம் நண்பர்களே

பள்ளி நினைவுகள் பற்றி பதிவுலக நண்பர்கள் எழுத அழைத்திருந்தனர்.இதை நான் எழுத நினைத்த போது இது ஒரு சுயபுராணமாக இல்லாமல் ,ஓர் நல்ல பாடமாகவும் , ஒர் நல்ல இதயத்தை பற்றிய பதிவாக அமைய வேண்டுமென்ற எண்ணம் உருவானது.ஆகையால் இப்பதிவை என் தாவரவியல் ஆசிரியரான எழிலரசு அவர்களை பற்றி எழுதியுள்ளேன்.

அன்று ஒரு நாள் ஓர் ஆசிரியர் ஒரே நாளில் என்னை அடித்து இரண்டு பிரம்புகளை ஒடித்தார்.காரணம் ரொம்ப சாதாரணம்.நான் வீட்டுப்பாடம் எப்போதும் எழுதுவதில்லை.அன்று வாழ்வில் வெறுப்பின் உச்சியில் இருந்த ஞாபகம்.இது நடந்தது நான் எட்டாம்வகுப்பு படிக்கும் போது.அன்று மாலை வீட்டில் அம்மாவிடம் அடித்த காயத்தைக் காட்டிஅந்த ஆசிரியரை கொலை செய்யும் அளவுக்கு திட்டிக்கொண்டிருந்தேன்.அம்மாவோ ஆசிரியருக்கு சப்போட்டாக,பாருடா மாதா,பிதா,குரு தெய்வம் மரியாதையா பேசு என்றார்.நானும் கோபத்தில் சற்றும் யோசிக்காமல் சொன்னேன் ஆமாம் மாதா,பிதா,குரு தெய்வம் ஆனால் மாதா,பிதா,ஆசிரியர்,தெய்வம் என்று யாரும் சொல்லவில்லையே.குருவைதான் திட்டக்கூடாது ஆனால் ஆசிரியரை திட்டலாம் என சொன்னேன்.இத்தனைக்கும் நான் மோசமாக படிக்கும் ஆள் இல்லை.ஏன் இவர்களுக்கு இந்த கொலைவெறி என யோசித்து யோசித்து ஆசிரியர்களை பார்தால் எனக்கு பற்றிக்கொண்டு வரும்.ஆசிரியர்களை நான் மதித்தது கிடையாது.என்னை பொறுத்தவரை குரு என்பவர் தட்சனை வாங்குவார் ஆனால் எதையும் எதிர்னோக்காமல் வாழ்க்கையை பார்க்க சொல்லி தருவார்.ஆனால் இந்த ஆசிரியர்களோ மாதா மாதாம் பணம் வாங்கிக்கொண்டு தங்கள் வெறியை பிள்ளைகளின் மேல் காட்டுகிறார்கள்.இவர்களை குரு என்று சொன்னால் குரு என்ற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போகும்.இப்படியே என் பள்ளி வாழ்க்கை ஒரு போராட்டமாக கடந்து கொண்டிருந்தது.ஆனால் நானும் என் பள்ளியின் முடிவில் உண்மையான குருவை தரிசித்தேன்.

அர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டியாக வந்து அறிவுக்கண்ணை திறந்தார்.எழிலரசு அவர்களோ வீல் சேரில் வந்து எங்கள் அறிவுக்கண்ணை திறந்தார்.சிவகாசி இந்து நாடர் உயர் நிலை பள்ளியில்(S.H.N.V. Higher Secondary school) எழிலரசு அவர்கள் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.ஒர் விபத்தில் வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுத்து அவரது தண்டிவடத்தில் பலத்த அடி.பல மாத போராட்டத்துக்கு பின் மீண்டும் பள்ளிக்கு வந்தார்.அதுவும் வீல் சேரில் இடுப்புக்கீழ் எந்த பகுதியும் வேலை செய்யாமல். பார்த்தாலே கண்கலங்கி நீர்வடியும்.ஆனால் ஒரு முறை கூட எங்களிடம் எந்த உதவியும் கேட்டதில்லை.பாடமோ புத்தகத்தை பார்க்காமலே 145 ஆம் பக்கத்தில் மூன்றாவது வரியில் அச்சுப் பிழையை திருத்திக்கொள்ளுங்கள் என தெளிவான உச்சரிப்பு வரும்.புத்தகத்தை தலைகீழ் மனப்பாடம் செய்து வைத்திருப்பார்.நிலாவில் கால் வைத்தது முதல் பைசம் சட்டைவத்துக்கு சட்டை போட்டது வரை அக்கு வேர ஆணிவர பிரிச்சு மேய்வார்.மொத்த வகுப்பும் வச்ச கண் மாறாம பார்த்து ரசிக்கும்.அவர் அமைதியா இருங்கனு சொல்லி கேட்பது அரிது.அந்த பள்ளியில் அவருக்கு இருக்கும் மரியாதை வேறு யாருக்கும் இருந்து பார்த்ததில்லை.

அடிக்கடி எங்களிடம் அவர் சொல்லும் வாசகம் நூலகத்திற்கு சென்று புத்தகத்தின் தலைப்பையும்,உள்ளடக்கத்தையும் மட்டும் படி வாழ்வில் பெரிய ஆளாகிவிடலாம் என்பது. நானும் என் கல்லூரி நாட்களில் இதை முழுவதுமாக கடைபிடிக்க ஆரம்பித்தேன்.பல நூறு புத்தகத்தை கடந்த பின் தான் தெரிந்தது அவரின் சூழ்ச்சி.ஒரு முறை தொட ஆரம்பித்தால் நம்மோடு புத்தகம் ஒட்டிக்கொள்ளும் என்பது. நிறைய படி,பிடித்தை செய்,உன்னால் முடிந்ததை மற்றவருக்கு கொடு. இது அவர் எங்களுக்கு சொல்லி கொடுத்த பாடம்.தளர்ச்சியுறும் போது நான் தன்னம்பிக்கை கட்டுரை படிப்பதில்லை வீல்ச்சேரில் வலம்வரும் தன்னம்பிக்கையான அவரை நினைத்துக் கொள்வேன்.புத்துணர்வும் புது வேகமும் எனக்குள் பிறக்கும்.உண்மையில் அவரே  எனக்கு உண்மையான குரு.



குப்பைக் குழந்தை

குப்பைக் குழந்தை
குப்பைக் குழந்தை
பச்சிளம் மேனிதன்னில்
பால் மணம் வீசுதடா - அதை
குப்பையில் எறிந்திட்ட - உன்
குப்பை மனம் தெரியுதடா
கணப்பொழுதில் தடுமாறி
நீ செய்த கோலங்கள்
குப்பையிலே கிடக்குதடா
செல்லறித்த மேனியாய்
பாலூறும் வாய்தனில்
எறும்பூறி கிடக்குதடா

 

Thursday, March 8, 2012

ஏ பெண்ணே !

ஏ பெண்ணே
ஏ பெண்ணே !
மடிதாங்கி பெற்றாய்
அம்மா என்றேன்,
எனக்கு முன்னே பிறந்தாய்
அக்கா என்றேன்,
எனக்கு பின்னே பிறந்தாய்
தங்கை என்றேன்,
தலைகோதி நடந்தாய்
தோழி என்றேன்,
தனிமையை போக்க
கைபிடித்து வந்தாய்
மனைவி என்றேன்,
பிறந்தது முதல் கடைசி வரை
என்னோடு இருக்கிறாய்
உனக்கு உலகையே
தரலாமென நினைத்தேன் - நீயோ
சிரித்தமுகம்
அன்பான வார்த்தை
இதமான அரவணைப்பு
கனிவான பேச்சு
என தெரியாததை கேட்கிறாய்.
கொஞ்சம் பொறு
நானும் கற்றுக்கொள்கிறேன்
இந்த மிருகத்தோளை கிழித்துவிட்டு
நுண்ணுணர்வுகளின் பிரபஞ்சத்திற்குள்
கைவீசி நடக்கலாம்
முன்னே சென்று விடாதே
அக்காவாகி விடுவாய்
பின்னே சென்று விடாதே
தங்கையாகி விடுவாய்
என்னோடு சேர்ந்து வா
இன்பம் தரும் தோழனாகவும்
துன்பம் போக்கும் கணவனாகவும்
கைகோர்த்து வருகிறேன்.


Tuesday, March 6, 2012

கருவறையின் கதறல்

கருவறையின் கதறல்
கருவறையின் கதறல்
உன்னை என்னில்
விதையென விதைத்தேன்
அதை கருவறைக்கூட்டில்
பொன்னெனக் காத்தேன்
என்னைக் கொடுத்து
உயிர்துளி பிரித்து - அதில்
அன்பின் ரசமும் அமுதமும் கலந்தூற்ற
மலரே நீயும் மலர்ந்தாய்
அமுதவாய் மொழிந்தாய்
காலமும் கடக்க
மோகமும் பிடிக்க
முட்களும் வளர்ந்து
இருதயத்தைக் கிழிக்க
யாரிடமும் சொல்லாமல்
வேரை நீ அறுக்க
ஆழமாய் வளர்ந்தவள்
அடியில்லாமல் சாகிறேன்
காலத்தைக் கடந்தவள்
கணப்பொழுதில் காய்கிறேன்.

Monday, March 5, 2012

யாரோ யார் யாரோ ?

யாரோ யார் யாரோ
யாரோ யார் யாரோ
யாரோ யார் யாரோ ?
இந்த வாழ்க்கையின் வழித்துணை
யாரோ யார் யாரோ ?

வார்த்தையில் கனவுகள்
வடிக்கும் வேலையில்
தடைகள் சொன்னது
யார் யாரோ ?

சோதனை வாசலை
அடைத்த வேலையில்
கதவை திறந்தது
யார் யாரோ ?

துடிக்கும் இதயங்கள்
துவண்டிட்ட வேலையில்
ஆறுதல் தந்தவர்
யார் யாரோ ?

கண்ணீர் துடைக்க
கவிதை தந்து
கவலை துடைப்பவர்
யார் யாரோ ?

இரவின் நிலவில்
குளிரைத் துடைத்து
வெப்பம் தருபவர்
யார் யாரோ ?

கூரையில்லா வீட்டினுள்ளே
தொலைந்த ஜீவன்களை
கரை சேர்த்தவர்
யார் யாரோ ?

 யாரோ யார் யாரோ ?
காகிதம் கொடுத்து கவிதையாய்
வந்து போவார் யாரோ?

Friday, March 2, 2012

உன்னைப் பார்க்கும் போது

உன்னைப் பார்க்கும் போது
புதுவகைக் கோணம்
புறக்கண்ணில் தோன்றும் !
நீ வரும் நேரம்
சலனங்கள் தோன்றும் !
நீ காற்றினில்
கலந்த சர்க்கரையே !
என் நாவினில் வந்து
இனிப்பதும் ஏன்? (  .... நீ காற்றினில் )
என் எண்ணங்களில்
பொன் வண்ணங்களாய்
உந்தன் நினைவுகள்
புதைந்து இனிக்கிறதே!

நீ வெள்ளை நிலவு
கொள்ளை அழகு
துடிக்கும் நட்சத்திரம்
நீ பார்த்தால் சிரித்தால்
அருகில் அமர்ந்தால் எந்தன்
உயிரும் கரைந்தோடும்
ஒரு மாலைவெயில் போல
ஒரு மாற்றம் தந்தாயே !
எந்தன் நேசப்புதர்களிலே
முட்பூவாய் மலர்ந்தாயே !
என் எண்ணங்களில்
பொன் வண்ணங்களாய்
உந்தன் நினைவுகள்
புதைந்து இனிக்கிறதே!

Wednesday, February 29, 2012

என்னுடைய விருதுகள் ?

வீசும் காற்றிற்கு விருதுகள் ஏது ?
பொழியும் மழைக்கு பரிசுகள் ஏது ?
பசி தீர்க்கும் கைகளுக்கேது
தங்கக்காப்பு ?
சூரியனைப்போல்
பகலில் சுட்டெரிப்பான்
இரவில் எதிரொலிப்பான்
யாரையும் எதிர்னோக்காமல்
தன்னாலீன்ற உதவி செய்து
தடம் தெரியாமல் தலைசாய்ப்பான்
விருதிற்காக வரிசை நின்ற ஆறெது?
பரிசிற்காக வீசிய காற்றெது?
நான் கேட்டா குயில் கூவியது?
நீ சொல்லிய மாலை புலர்ந்தது?
காலை மலர்ந்து
அழகை கொடுத்து
மாலை தலைகவிழ்ந்த
மலரின் மாண்பு
பரிசிற்கா ? இல்லை விருதிற்கா ?
பிறந்தான் வளர்ந்தான்
தன்னாலீன்ற உதவி செய்து
தடம் பதிக்காமல் மறைந்தான்
அவன் தான் மனிதன் !
அவனே மக்கட் தலைவன் !
அவனே மண்ணில் பிறந்த மாணிக்கம் !
அவனை மரியாதை செய்வதே
நன் மக்கட் கழகு !


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

எனக்கு தாங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்புக்கும் மரியாதைக்கும் என் முதற்கண் வணக்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்.அது போல் பலரும் எனக்கு விருதுகள் வழங்கி அதை பலருக்கும் பகிரச்சொல்லி அழைப்பு விடுத்தனர்.முக்கியமாக தோழி திரு.ஸ்ரவாணி,திரு.ஹேமா ,திரு.Esther sabi  இவர்களுக்கும் என் முதற்கண் வணக்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்.ஆனால் நான் வாங்கிய விருதை இதுவரை பகிரவில்லை.காரணம் நான் ஒரு நல்ல வாய்ப்பை தேடிக்கொண்டிருத்தேன்.
என்னைப் பொருத்தவரை நான் விருது கொடுக்கும் அளவுக்கு பெரிய அளவில் ஒன்றும் சாதித்து விடவில்லை.இருந்தாலும் ஒரு நல்ல ரசிகனாய் இருந்து நான் விரும்பிய எழுதிற்கு மதிப்பளிக்கும் உரிமை எனக்குண்டு என நம்புவதால் நான் தங்கப்பேனா விருதை சிலருக்கு வழங்க விரும்புகிறேன்.
இதை வாங்குபவர்கள் அனைவரும் மேலே என் கவிதையில் நான் குறிப்பிட்ட இயற்கையை ஒத்தவர்கள் .ஏனென்றால் இவர்கள் ஆறு போல் தங்கள் வழியில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.தங்களால் முடிந்ததை தங்கள் எழுத்தின் மூலமாக படைத்து கொண்டே இருக்கிறார்கள்.அவர்களை பாராட்டி ,விருது கொடுப்பதன் மூலம் நாம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

முதலாவதாக மதிப்பிற்குரிய ஐயா
அவர்களுக்கும்

இரண்டாவதாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கும்

மூன்றாவதாக மதிப்பிற்குரிய   ஐயா அவர்களுக்கும்

நான்காவதாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கும்

ஐந்தாவதாக மதிப்பிற்குரிய  அவர்களுக்கும்
 
ஆறாவதாக  மதிப்பிற்குரிய தோழி  ஸ்ரவாணி அவர்களுக்கும்

ஏழாவதாக மதிப்பிற்குரிய தோழி  சசிகலா அவர்களுக்கும்

எட்டாவதாக மதிப்பிற்குரிய தோழி    அவர்களுக்கும்

ஒன்பதாவதாக  மதிப்பிற்குரிய தோழி  கீதாமஞ்சரி  அவர்களுக்கும்

பத்தாவதாக  மதிப்பிற்குரிய   அவர்களுக்கும்


  தங்கப்பேனா விருது வழங்கி என் கவிதை சமர்ப்பணம் செய்கிறேன்.இவர்கள் அனைவரும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

Tuesday, February 28, 2012

வயல் காவலன்

வயல் காவலன்
தூரக்கிழக்கு
முடிவில்லா வானம்
இருள் போர்த்திய போர்வை - அதில்
துளையென நட்சத்திரங்கள்
உடைந்த நிலவு  - அதில்
தெரித்த ஒளிகள்
கனத்த மேகங்கள்
பரந்த வயல்வெளி
சலசலக்கும் நீரோடை
வீசும் காற்று
அசைந்தாடும் கதிர்கள்
பயமுறுத்தும் பொம்மைகள்
நெலியும் பாம்புகள் 
அலறும் ஆந்தைகள்
இரைச்சலிடும் தவளைகள்
வளைந்த தென்னை
கயிற்றுக்கட்டில்
அரிக்கன் விளக்கு
சுருங்கிய நெற்றி
தூக்கமிழந்த கண்கள்
மெலிந்த தேகம்
கிழிந்த கந்தை - அதில்
ஒற்றைக் கவண்வில்
சுதியிழந்த பாடல்
மொத்த போராட்டமும்
ஒரெயொரு நெல்மணிக்காக !  

Monday, February 27, 2012

வறுமையின் மதிய உணவு

வறுமையின் மதிய உணவு
வறுமையின் மதிய உணவு
உயிரை உருக்கும் நண்பகல்
நீண்ட தகிக்கும் தார்சாலை - அதன்
இடது ஓரத்தில்
மரத்தின் நிழலில்
மெலிந்த தேகம்
வெள்ளைச் சட்டை
கருத்தமுகம் - அதில்
அறுபதை தாண்டிய வறுமையின்
வெற்றிக் கொண்டாட்டம்
சட்டியில் பழையசோறு
ஒரு கையில் மிளகாய்
மறுகையில் உணவென
பசியாறிக் கொண்டிருந்தது
அந்த வயோதிக வயிறு
உட்கார விரிப்பில்லை
குடிக்க நீரில்லை
சாலையின் இரைச்சல்
புழுதியின் நடுவே
சற்றும் சலனமில்லாமல்
தன் வாழ்க்கையை
கடந்து கொண்டிருந்தது
அந்த மெளனம்.

Saturday, February 25, 2012

சர்க்கஸ் கல்விமுறை

சர்க்கஸ் கல்விமுறை
சர்க்கஸ் கல்விமுறை
பள்ளியென்னும் தொழிற்சாலையில்
பிள்ளைகளெல்லாம் உருவாகுதடா !
ரோட்டுல திரியும் கழுதபோல
பொதிமூட தூக்குதடா !
செக்குல பூட்டுன மாடுபோல
சுத்தி சுத்தி போகுதடா !
கடிவாளம் போட்ட குதிரபோல
சுய சிந்தனையில்லாம ஓடுதடா !
பழம் கொடுத்த கிளியபோல
சொன்னதயெல்லாம் சொல்லுதடா !

கால காலக் கல்விமுற - இது
வெள்ளையன் கொடுத்த கல்விமுற
ஆங்கிலப் பாடல் சொல்லிதரும்- இது
ஆங்கிலவழிக் கல்விமுற
குரு சீடன் மறஞ்சு போய் - இது
ஆசிரிய மாணவன் கல்விமுற
சொந்தபுத்திய குப்பைல போட்டு
மதிப்பெண் வாங்கும் கல்விமுற
பணங்காட்டு நரிகளிடம் - பிள்ளைகள்
பாடம் கற்கும் கல்விமுற
பிள்ளைகள் கனவை எரியூட்டி அதில்
குளிர்காயும் கல்விமுற
இந்தியாவின் தூண்களெல்லாம்
சர்க்கஸில் வரும் சிங்கமென
ஜோரா ஜோரா தாவுதுபார்
சுத்தி சுத்தி வருகுது பார்



Friday, February 24, 2012

எல்லாம் இழந்தவன்

எல்லாம் இழந்தவன்
எல்லாம் இழந்தவன்
வழியில்லா வாழ்க்கையில் வழி
தேடி தேடி வாழ்கிறேன்
பிறையில்லா வானில் ஒளி
தேடி தேடி பறக்கிறேன்
வழி சொல்வார் யாருமில்லை
ஒளி தருபார் யாருமில்லை
குருடன் கையில் விளக்காய்
பயனில்லா வாழ்க்கை வாழ்கிறேன்

அழகான வீடிது
விளையாட ஆளில்லை
சுரம் கொண்ட வீணை
சுதி சேர்க்க ஆளில்லை
இருக்கும் போது இருந்தவர்கள்
இல்லாத போது பறந்துவிட்டார்கள்
சொந்தமென்று வந்தவரெல்லாம்
நோகடித்து போனார்கள்
எல்லாம் போய்விட்டது
இல்லாமை மட்டும் இருக்கிறது
இப்போது நான்,
இந்த ஓட்டைக் குடிசை,
பழைய புல்லாங்குழல்
கனவுக்குப்பைகளோடு
தனிமையோடு இருக்கிறேன்.

 மேலும் படிக்க

தனிமை கடற்பயணம்
தோள்கொடுக்க வருவீரோ?
தோழி

Thursday, February 23, 2012

மின்சாரமில்லா மாலைவேளை

மின்சாரமில்லா மாலைவேளை
மின்சாரமில்லா மாலைவேளை
அழகானதொரு மாலைவேளை
அழகின்மேல் அழகூட்ட
அரசாங்கம் மின்சாரத்தை அணைக்க
என்னவளும் நானும்
பேருந்து நிறுத்தத்தில்
அலவளாவிக் கொண்டிருந்தோம்
நிலா ஒளியில்
பறவைகள் கூட்டிற்கு நகர
புழுக்க வாடையில்
மக்கள் வீட்டிலிருந்து வெளியேற
புலம்பலிலும் புழுக்கத்திலும்
மாலை நகர்ந்து கொண்டிருந்தது
இருட்டிலும் அவள்
கன்னங்கள் பளபளக்க
நானோ குவித்த உதடுகளுடன் - அவள்
கன்னத்தை நோக்கி நகர
சட்டென மின்சாரம் வர
பட்டென அவள் பார்க்க
மின்னலென ஞாபகம் வந்தது
அரசாங்கத்தின் மின்வெட்டு
குறைப்பு தீர்மானம்
உணர்வு போராட்டங்களுக்கிடையே
வெட்கத்தோடு நகர்ந்தது
அந்த மாலைவேளை

மேலும் படிக்க

தனிமை கடற்பயணம்
கதைக்கு காலுண்டா?கத்திரிக்காய்க்கு வாலுண்டா? ( Review )
கவிதையாய் வருவாய்

Wednesday, February 22, 2012

எங்க சொந்த ஊரைப்பற்றி - தொடர்பதிவு

                                                   தமிழ்நாட்டில் மிக வறட்சியான ஊர்.குடிக்க தண்ணீர் கிடையாது.வருடத்தின் 365 நாட்களும் சுட்டெரிக்கும் வெயில்.ஆனால் வருட உற்பத்தி நிகர லாபம் 1000 கோடி ரூபாய்.இந்தியாவின் 90 % பட்டாசுகள் இங்கு தான் உற்பத்தியாகிறது.இந்தியாவின் 60 % அச்சுத்தொழில் 80 % தீப்பெட்டி என எல்லாம் இங்கு தான் தயாராகின்றன.கடுமையான உழைப்பைப் பார்த்த பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் எங்கள் ஊரை குட்டி ஜப்பான் என அழைத்தார்.

                                                   பேருந்தின் மூலம் எங்கள் ஊருக்கு  நுழையும் போது "வெடிகளின் நகரம்" உங்களை வரவேற்கிறது என்ற அறிவிப்பு பலகையை காணலாம்.நானும் உங்களை என் சொந்த ஊரான சிவகாசியை பற்றி அறிய அன்போடு வரவேற்கிறேன்.இத்தொடர் பதிவை எழுத அழைத்த நண்பர் துரை டேனியல் அவர்களை மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
                                                  சுமார் 600 வருடங்களுக்கு முன் ஹரிகேசரி பராகிராம பாண்டியன் மதுரையின் தென் பகுதியை ஆண்டு வந்தார்.அவர் காசியைப் போன்று தென்காசியிலும் சிவன் கோவில் எழுப்ப ஆசைப்பட்டு காசியிலிருந்து சிவலிங்கத்தை பசுவின் மேல் ஏற்றி வந்தார்.போகும் வழியில் சிவகாசியில் தங்கி ஓய்வெடுத்து கிளம்பும் வேலையில் பசு அந்த இடத்தை விட்டு நகர மறுக்க அங்கேயே சிவலிங்கத்திற்கு கோவில் எழுப்பினான்.காசியிலிருந்து வந்த சிவலிங்கம் என்பதன் சுருக்கமே சிவகாசி.
சிவகாசி சிவன் கோவில்
சிவகாசி சிவன் கோவில்

                                                    1960களில் இந்தியாவின் பொருளாதாரம் மோசமாக இனி அரசாங்கத்தை நம்ப முடியாது என நினைத்து சிவகாசியில் உள்ள மக்களும் பணக்கார முதலாளிகளும் ஒன்று சேர்ந்து வறட்சிக்கு ஏற்ற தொழில் செய்ய ஆரம்பித்தனர்.ஒற்றுமையாலும் கடுமையான உழைப்பாலும் பாலையையும் சோலை ஆக்கினர்.இன்று சிவகாசி இந்தியாவின் பட்டாசுகளின் தலைநகரம்.உலகில் ஜெர்மனியின் குடன்பர்க் நகரத்திற்கடுத்து அதிக அச்சுத்தொழில் நடைபெறும் இடம்.சீனாவிற்கடுத்து அதிக பட்டாசுகள் தயாரகும் இடம் என உலக நாடுகளோடு போட்டி போட்டு உழைக்கும் மக்கள் வாழும் இடம்.இந்தியாவில் 100% வேலைவாய்ப்பு உள்ள இடம்.பொருளாதார தேக்கத்தினால் பாதிக்கப்படாத நகரம்.இந்தியாவில் 100% கல்வியறிவை நோக்கி நகரும் ஒரே நகரம்.

                                                   சிவகாசியின் மொத்த மக்கள் தொகை 1.5 லட்சம்.நேரடியாக 100000 பேரும் மறைமுகமாக 150000 பேரும் வேலை செய்கின்றனர்.முக்கியமான திருவிழாக்கள் பங்குனி பொங்கல்,சித்திரை பொங்கல்.பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.சித்திரை திருவிழாவின் போது 5ம்,6ம் நாள் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
                                                   சிவகாசியில் பத்திரகாளியம்மன்,மாரியம்மன் என்ற இரு காவல் தெய்வங்களுக்கு இரு கோவில்கள் உள்ளன.இதில் பத்திரகாளியம்மன் கோவில்கோபுரம் தமிழ்நாட்டில் உயர்ந்த கோபுரங்களில் ஒன்று.மாரியம்மன் கோவில் உட்புறம் தங்கத்தகடுகளால் பதிக்கப்பட்டது.இவை இரண்டும் தனியாரால் பராமரிக்கப்படுகின்றன.
சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில்
சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில்

                                                   நீங்கள் வெடிக்கும் பட்டாசு.எழுதும் நோட்டு,படிக்கும் புத்தகம்,பார்க்கும் வண்ண போஸ்டர்கள்,தீப்பெட்டி என எல்லாம் சிவகாசியில் தயாராகுபவை.பொதுவாக "made in china" ,"made in india" என்று நாடுகளைத்தான் அழைப்போம்.ஆனால் சிவகாசியோ "made in sivakasi" என்ற தனிவழியில் உலகளாவிய வர்த்தகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.கடினமாக உழைத்தால் பாலையையும் சோலையாக்கலாம்.இது தான் சிவகாசியில் நான் கற்ற பாடம்.


மேலும் படிக்க

தன்னம்பிக்கை
என்ட்ரோபி(entropy)
miracle Antimatter!!

                  



Tuesday, February 21, 2012

தொந்தரவு செய்யாதே - don't disturb me

தொந்தரவு செய்யாதே - don't disturb me
தொந்தரவு செய்யாதே
உனக்கும் கடவுளுக்கும்
வேறு வேலையில்லை - அவனோ
என்னை படைத்துக் கொண்டே இருக்கிறான்
நீயோ என்னை காதலிக்காமல்
சாகடித்துக் கொண்டே இருக்கிறாய் - ஒன்று
நீ என்னைக் காதல் செய் - இல்லை
கடவுளை சும்மா இருக்கச் சொல் !


மேலும் படிக்க

தன்னம்பிக்கை
என்ட்ரோபி(entropy)
miracle Antimatter!!

அன்னையின் பிரிவு

அன்னையின் பிரிவு
அன்னையின் பிரிவு
அன்னையே
என்னைப் பெற்றவளே
சக்தியின் மறு உருவமே
கருப்பொருளின் உருப்பொருளே
என்னை உயிர்ப்பித்தவளே

கழுதையைப் பெற்றவளும் சாகிறாள் - உன்போல்
சிங்கத்தைப் பெற்றவளும் சாகிறாள் - பாகுபாடில்லா
இந்த சாவுக்கும் நோக்காடொன்று வாராதா ?
உடலை உருக்கி உதிரம் தெளித்து
நீ செய்த ஓவியம் உன்முன்னே
கண்ணீரால் கரையும் சத்தம் கேட்கிறதா?
எழுந்து வாராயோ ? மகனேவென அழைப்பாயோ ?

உடலை வைத்து அழுவதா? - இல்லை
தொலைத்த உயிரைத்தேடி அழுவதா?
ஒன்றும் புரியவில்லை ?
உன்னைத்தேடி அலைகிறேன்
குழந்தையென அழுகிறேன்.
போனவளே வந்துவிடு
போன இடம் சொல்லிவிடு


Monday, February 20, 2012

love is enough - அன்பு மட்டும் போதும்

அன்பு மட்டும் போதும்
 அன்பு மட்டும் போதும்
அழுவது நீயாகட்டும்
துடைப்பது நானாகட்டும்
உறவு தேவையில்லை
உரிமை தேவையில்லை
கண்ணீரைத் துடைப்பதற்கு
அன்பு மட்டும் போதும் !
அன்பு இருந்தால்
கல்லையும் கரைக்கலாம்
பசும் புல்லிலும்
கடவுளைக் காணலாம் !

Friday, February 17, 2012

காதல் பயம் - Love Fear

காதல் பயம்
காதல் பயம்
காதல்வரா வானத்தினூடே
சத்தமில்லாமல் பறந்தேன்
காதல்வரா தெருவினூடே
தடமில்லாமல் நடந்தேன்
கன்னியர் பாதையில்
கண்மூடி நடந்தேன்
அலைபாயும் நேரத்தில்
கீதை படித்தேன்
சுவைமிகும் நேரத்தில்
சோகம் படித்தேன்
மகிழ்ச்சி விற்று
காவி வாங்கினேன்
காதலும் என்னை கவ்விடுமோ ?
காதல் நஞ்சைக் கக்கிடுமோ ?
இந்நஞ்சுக்கும் முறிவு உண்டோ ?
சொல்லிவிட்டு காதல் செய்வீர் ?
காதல் தோழர்களே !

அன்பால் கொல்லாதே

அன்பால் கொல்லாதே
மென்மையே மென்மையென
பொன்னிற மேனியென
அழகியதொரு பட்டாம்பூச்சி
தோட்டத்தில் பறக்கக்கண்டேன்
மலர்களின் மேலமர்வதுமாய்
மகரந்தம் குடிப்பதுமாய்
இடுப்பில் கயரில்லாமல்
சுதந்திரமாய் பறக்கக்கண்டேன்

உணர்வுகள் தடுமாற
அன்புவெள்ளம் பொங்கிவர
இதயத்தில் இடமொதிக்கி
அன்பென்னும் கூட்டிலடைத்தேன்
அன்பென நினைத்து
நான் செய்த காரியங்கள்
சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்க
நிறையிழந்த இலையென
அன்பில் கருகி
பிணமாய் காட்சியளித்தது
அன்புகூட கொல்லுமென
கடைசியாய் வந்த ஞானம்
கண்ணீர்த்துளிகளுடன் சொன்னது
அன்பால் கொல்லாதே!

Thursday, February 16, 2012

கருச்சிதைவு

கருச்சிதைவு
கருச்சிதைவு
வரிகள் தெரியாமல்
வலிகளுடன் மட்டும் - வயிற்றில்
வளர்ந்த என் கவிதை
கையில் கிடைத்தது
உருகுலைந்த நிலையில்
இதற்காகவா இத்தனை வலிகள் !

Wednesday, February 15, 2012

புத்தம் buddha

புத்தம்
புத்தம்
வாழ்க்கையென்னும் பிச்சைப்
பாத்திரத்தில் விழுந்ததை சாப்பிடு
கிடைத்ததற்கு நன்றி சொல்
பசியாறிய வயிறு
உடலை மறைக்க தூண்டும்
உடலை மறைத்த மனம்
துணையை தேட சொல்லும்
எல்லாம் கிடைத்த மனம்
திமிர் பிடித்து திரியும்
மீண்டும் பசிவந்தால்
எல்லாம் மறைந்து போகும்
ஒரு ஜான் வயிறு - அதான்
இயக்கத்தின் மூலம்

மலை உச்சியில் பார்த்தால்
பள்ளத்தாக்கில் நடப்பது புரியும் !
விழிப்பின் உச்சியில் பார்த்தால்
நடப்பது புரியும்  ! நடக்கப் போவதும் புரியும் !
வந்த வழி சிறியது !
போகும் வழி பெரியது !
வந்த வழியில் திரும்பிப்
போக முடியாது !
போகும் வழி எங்கு போய்
முடிவதோ தெரியாது ?
வந்துவிட்டாய் , போகப் போகிறாய் !
சலனம் வேண்டாம்
ஓடல் வேண்டாம்
மனக் குளத்தில் கல்லெறிந்து
கொண்டே இருக்காதே !
ஓடிக் கடக்க முடியாது - உலகம்
அமைதியாக உட்கார்
உன்னைத்தேடி வரும் !
நீ தான் அது !
அதான் நீ  !
கண்ணாமூச்சி புரிந்து விட்டால்
தேடல் நின்றுவிடும் !
ஆன்ம சுதந்திரம் பிறந்துவிடும்
அமைதியோடு அமைதியாகி
அன்பு வெள்ளம் பெருகி
உன்னை அழித்து
புத்தம் பிறக்கும் !


Tuesday, February 14, 2012

காதலை வெறுக்காதீர்

காதலை வெறுக்காதீர்
காதலை வெறுக்காதீர்
காதல்
கவிஞர்களின் அகரம்
கிறுக்கல்களின் காவியம்
அழகியலின் ஆரம்பம்
சிணுங்களின் சிகரம்
அறிவியலின் உயர்பரிமாணம்
கலையின் ஆரம்பம்
மொழியின் அடையாள அட்டை
கடவுளின் சுரங்கப்பாதை
மனிதனைக் கவிஞனாக்கி
கவிஞனைக் கடவுளாக்கும்
ரசாயண மாற்றம்
காதல் இல்லா மனிதன்
காமத்தின் ஓவியம்
காதல் இல்லா எழுத்து
அசிங்கத்தின் நிர்வாணம்
காதல் உங்களை ரசிக்க வைக்கும்
காதல் உங்களை கிறுக்க வைக்கும்
இறுதில் உங்களை கவிஞனாக்கும்
ஆதலால் காதலை வெறுக்காதீர்!!


 





யார் தந்தோ காதலோ ?

யார் தந்த காதல்
யார் தந்த காதல்
யார் தந்தோ காதலோ
யாரிடம் சொன்னதோ
யாருக்கும் தெரியாமல்
இதயத்தை கிழித்ததோ ?

சுகம் தந்தோ காதலே
சுமையாகிப் போனதோ
சுமைதாங்க முடியாமல்
தடுமாறி விழுந்ததோ ?

ஒளிதந்த காதலே
இருளாகிப் போனதோ
இமைமூடும் நேரத்தில்
காற்றினிலே பறந்ததோ ?

சொல்லாத காதல்கள்
சோகங்கள் தந்ததோ
சுவைகூடும் இரவினிலே
சுதிமாறிக் கத்தியதோ ?

அவன் தந்த காதலோ
அடி நெஞ்சில் ஒட்டியதோ
அவனில்லா வேலையிலும்
அசைபோடச் சொல்கிறதோ ?


மேலும் படிக்க


Monday, February 13, 2012

மின்னனு காதலர்தினம்

 Happy Digital Lovers Day

இலைகளை மேயும் ஆடுகளாய்
வலைதளங்களை மேயும் இளைஞர்கள்
கிளைகளில் பூத்த மலர்கள்
வலைதளங்களில் பூக்கின்றன
புல்தரையில் காத்திருந்தவர்கள்
கணிணி திரையில் காத்திருக்கிறார்கள்
காதலை சொல்ல பயந்தவர்கள்
கணிணி அரட்டையில் கதைக்கிறார்கள்
புறாக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு
குறுஞ்செய்திகள் தூது செல்கின்றன
கணப்பொழுதின் பிரிவை தாங்கமுடியாதவர்கள்
அலைபேசியின் மடியில் தவழ்கிறார்கள்
ஏக்கத்தில் புரண்டவர்கள்
தொடுதிரையில் தொட்டுக்கொள்கின்றனர்
சந்திக்காத இதயங்கள்
பேஸ்புக்கில் சந்தித்துவிட்டு
ட்வீட்டரில் நலம்விசாரித்து
அலைபேசியில் காதலை தொடர்கின்றன
கல்லெடுத்த காலத்திலும்
காதல் வந்தது
கணிணி காலத்திலும்
காதல் வருகிறது
காதல் மனிதனின் ஆன்மா
மனிதன் வாழும் வரை வாழும்!
வாழ்க காதல் !
வளர்க மின்னனு காதலர்தினம்!

மேலும் படிக்க


தனிமை கடற்பயணம்

 lonely sea travel
அவன் கொடுத்த திசைமானியை
தொலைத்து விட்டேன்
காற்றடிக்கும் திசைகளிளெல்லாம் என்
பாய்மரம் நகர்ந்து கொண்டிறிக்கிறது
lonely sea travel
lonely sea travel
அலைகளின் அசைவுகளுக்கிடையே
மெல்ல மெல்ல என் வாழ்க்கை
ஊர்ந்து கொண்டிருக்கிறது
அகல் விளக்கின் துணைகூட இல்லாமல்
இரவில் தவிக்கிறேன்
பகலில் காய்கிறேன்
சுற்றி நீரிருந்தும்
நீர் வற்றி தவிக்கிறேன்
இந்த நீல வானமும்
நீலக்கடலும் என்னை
நிலைகுலையச் செய்கின்றன
அழகெல்லாம் பயமுறுத்தும்
பேய்களென தெரிகின்றன
என் பாடலே எனக்கு
மரண ஓலமாய் கேட்கிறது

என்னுளிருந்த கலைஞன்
முழுவதுமாக கருகிவிட்டான்
கலைதாகத்தோடு பயணம் மேற்கொண்டேன்
கரை என்னை ஏமாற்றிவிட்டது
உன்னை அழகென காட்டிவிட்டது
நீயோ சத்தமில்லாமல்
பலரைக் கொன்று
உன்காலடியில் புதைத்து
கரையில் உள்ளவர்களிடம்
அமைதியென புன்னகைக்கிறாய்
என்னை விட்டுவிடு
என் கவிதைப்பயணத்தை
இறுதிப்பயணம் ஆக்கிவிடாதே

Saturday, February 11, 2012

Develop an Honesty philosophy

 வாக்குறுதியை காப்பாற்றுங்கள்
Develop an Honesty philosophy
Develop an Honesty philosophy

நித்தம்  நித்தம் வாழ்வு
சத்தியம் இல்லா பெருவாழ்வு
வருவேன் என்பார் வரமாட்டார்
தருவேன் என்பார் தரமாட்டார்
உடைந்த வாக்குறுதிகள் கொடுத்து
உறவுகளை உடைப்பார்
கேட்பீர் தோழர்களே
வாக்குறுதி சொல்லின் உறுதி
வாக்குறுதி நம்மீதான மதிப்பு
மதிப்புகளை உடைத்து
உறவுகளை அறுக்காதீர்
சொன்னதை செய்து
செய்வதை சொல்லி
வாக்குறுதிகளை காப்பாற்றும்
உயர் தத்துவத்தை கைகொள்வீர்
பேச்சைக் குறைத்து
செயலைக்கூட்டும் தத்துவத்தை
பழகிக் கொள்ளுங்கள்

மேலும் படிக்க





Friday, February 10, 2012

தோள்கொடுக்க வருவீரோ?

தோள்கொடுக்க வருவீரோ
காற்றின் அணுக்களில்
சோகத்தை கலந்தது யார் ?
பூக்களின் தோட்டத்தில்
கற்களை வீசியது யார் ?
சொற்களின் கூட்டத்தில்
சோகத்தை வீசியதார் ?

விழியிரண்டும் அழுகிறதே
இமையிரண்டும் துடிக்கிறதே
கனவெல்லாம் கரைகிறதே
வாய்ப்பெல்லாம் பறக்கிறதே
தோல்விகள் எனைச்சூழ
இதயமும் உடைகிறதே !
சிறகொடிந்த பட்டாம்பூச்சி
பறக்கத்தான் ஆசைப்பட்டேன் !
சொல்லித்தர யாருமில்லை
தோள்கொடுக்க ஆளுமில்லை
மூச்சடக்கி முயற்சித்தேன்
முட்டுச்சந்தில் மோதிவிட்டேன்
சிறகுகளும் முளைக்காதோ ?
கனவுகளும் பலிக்காதோ ?
சிறகொடிந்த வாழ்க்கைக்கு
தோள்கொடுக்க வருவீரோ?
தோழனாக ஆவிரோ?

மேலும் படிக்க

பாட்டாளி
ஜென் zen
தன்னம்பிக்கை

Keep a Journal

 நாட்குறிப்பு எடுங்கள்

வாழ்க்கையென்னும் நத்தை
ஊர்ந்து கொண்டிருக்க அது
சுமந்துவரும் அனுபவமும்
ஊர்ந்து கொண்டிருக்க
புயல்வேக வாழ்க்கைப்பயணம்
அதன் பாடத்தை
கற்பது எப்போது
வாழ்க்கைப் பாடம் தான்
நம்மை ஞானியாக்கும் படகு
விழிப்பு வேண்டும்
விழிப்பென்பது சூரியதரிசனமல்ல அது
கடவுள் தரிசனம்
மெதுவாகத்தான் கிட்டும்

விழிக்க வேண்டுமானால்
நாட்குறிப்பு எடுப்பீர்
நாட்குறிப்பு நம்
அனுபவக் குறிப்பு
வாழ்க்கை  நமக்களிக்கும்
எதிர்காலம்பற்றிய துருப்புச்சீட்டு
குறிப்புகள் நிகழ்வுகள்
மீதான நம் விழிப்பு
குறிப்புகள் வெற்றி
Keep a Journal
Keep a Journal
தோல்வியின் வர்ணனைகள்
குறிப்புகள் நொடிகளின்
நெடி வாசனைகள்
குறிப்புகள் விழிப்புணர்ச்சியின்
ஆரம்பத்துளிகள்
விழிப்புணர்ச்சி ஞானியின்பார்வை
வெற்றி தோல்வியை
உற்றுப்பார்க்கும் தீட்சண்ய பார்வை
நாட்குறிப்பு  ஞானக்குறிப்பு
நம்மோடு நாம் பேசும்
அனுபவக் குறிப்பு

Thursday, February 9, 2012

கதைக்கு காலுண்டா?கத்திரிக்காய்க்கு வாலுண்டா? ( Review )

விமர்சனம்
விமர்சனம்
இருப்பதை ஏற்க முடியாத
திருப்தியில்லா மனதின் சலனம்
படைப்புகள் கடவுளுக்கு சொந்தம்
படைப்பவன் வெறும் பொம்மை
பொம்மையை விமர்சனம் செய்யலாம்
படைப்பை விமர்சனம் செய்ய
கடவுளுக்கே கிடையாது உரிமை
விமர்சனத்தின் அடி நாதம்
முழுமையை நோக்கியென்றால்
கடவுளின் படைப்பே
சில நேரம் ஊனமாகி
அழுது நிற்பதேன்
விமர்சனம் சுட்டிக்காட்டும் போது
அகங்காரமாய் முட்டி நிற்கிறது
தட்டிக் கொடுக்கும் போது
தோழனாய் தோள்கொடுத்து நிற்கிறது

அது ஓர் அழகான குளிர்இரவு
பாட்டியின்  கதகதப்பான அனைப்பில்
நடக்கும் கதைமழையில்
வரும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கும்
ஆயிரம் ஆயிரம் விமர்சனத்திற்கும்
பாட்டி சொன்ன எளிய பதில்
கதைக்கு காலுண்டா?கத்திரிக்காய்க்கு வாலுண்டா?
நல்லதை எடுத்துக்கொள்! கெட்டதை விட்டுவிடு!
மகிழ்விக்க வந்ததை விமர்சனம் செய்யாதே!

Practice Tough Love

Practice Tough Love
Practice Tough Love
சுயஒழுக்கத்தை பயிற்சி செய்யுங்கள்
 
சுயமில்லாதான் வாழ்க்கை
முகமில்லாத மனிதனடா
சுய ஒழுக்கமில்லாதான் வாழ்க்கை
பாறை குடிகொண்ட கோவிலடா
ஒழுக்கம்தானே நம்மை
செதுக்கும் உளிகள்
நமக்கு  நாமே கடுமையாக
நடப்பதுதானே ஒழுக்கம் - கேளுங்கள்
அது ஒழுக்கம் இல்லை
விதமான கடுமையான அன்பு
சுய ஒழுக்கமில்லாதான் வாழ்க்கை
காற்றின் போக்கில் அசைந்தாடும்
ஒழுக்கமுள்ளவன் வாழ்க்கை
காற்றை எதிர்க்கும் ஆலமரமாகும்

சுயஒழுக்கம் ஒன்று
வெளியிலிருந்து வருவதல்ல
அது உள்ளிருந்து
முளைக்க வேண்டிய விதை
ஒழுக்கமென்பது வெறும் வார்த்தை
அது முளைக்கும் தனிப்பட்ட
மனிதனின் மனதைப் பொறுத்தது
இதயம் சொல்லும் முடியுமென்று
ஆனால் ஒன்றும் நடக்காது
காரணம் சுயஒழுக்கமின்மை
சுயஒழுக்கமென்பது நமக்கு
நாமே கொடுக்கும் பயிற்சி
பயிற்சியில்லா குதிரை வெற்றிபெறாது
நெருப்பில் தீக்குளித்தால் தான்
தங்கத்திற்கு மதிப்பு
சுயஒழுக்கத்தில் குளித்தால் தான்
நமக்கு மதிப்பு
வாழ்க்கையின் போக்கில்
நகர வேண்டியதில்லை
சுயஒழுக்கமிருந்தால் போதும்
எல்லாம் நம்மை நோக்கி நகரும்

Wednesday, February 8, 2012

வெறும் பேனா நீ



தோல்வியென்னும் சூறாவளியாலும்
வெற்றியென்னும் வெடிகுண்டாலும்
உடையாத கோட்டை கட்ட
வெறும் பேனா நீ
கருங்கல் கேட்டேன் அவனிடம்

அவனோ தோல்வியை
மட்டுமே தந்தான்
தோல்வியை வைத்தே
கோட்டை கட்டினேன் - அற்புதம்
இப்போது எதையும் தாங்கும்
அற்புதக் கோட்டை என்னிடம்

அது என் மனக்கோட்டை
அதை தந்தவனுக்கு
நன்றி சொன்னேன்
அவனோ நான் கொடுத்தவற்றை
மற்றவருக்கு கொடுத்துவிடு என்றான்.
கொடுப்பதும் நான்
கொடுக்கும் பொருளும் நான்

எல்லாம்  நான்
வெறும் பேனா நீ
என சொல்லி மறைந்தான்

Maintain your perspective

தனிப்பட்ட பார்வையை தக்க வைத்துக் கொள்ளுங்கள்

Maintain your perspective
Maintain your perspective
கவலை கவ்விய முகத்தோடு
பூங்காவில் மனம் பறந்துகொண்டிருக்க
ஆங்கோர் சிறகொடிந்த பட்டாம்பூச்சி
மலர்களில் அமர்வதுமாயும்
தேன் குடிப்பதுமாயும்
மேலும் கீழும் பறப்பதுமாயும்
வாழ்க்கையை கரைத்துக் கொண்டிருக்க
சட்டென கேள்வியொன்று கேட்டேன்
ஏ பூச்சியே உனக்கு
கவலையில்லையா வலிக்கவில்லையா?
என் காதோரம் அமர்ந்து
கதையொன்று சொல்வேன்
பொறுமையாக கேளாய்யென்றது

ஆங்கோர் மருத்துவமனையில்
அடுத்தடுத்த அறையில்
இருவர் அனுமதிக்கப்பட்டனர்
அதிலொருவனுக்கு ஜன்னில்லா அறை
தனிமையும் வேதனையும் நச்சரிக்க
புலம்ப ஆரம்பித்தான் அதைகேட்ட
ஜன்னலுள்ள அறைக்காரன்
ஜன்னலின் வெளியே உள்ளவற்றை
அழகுபட கூற ஆரம்பித்தான்
கேட்டவனுக்கோ இயற்கையை
ரசிக்கமுடியாத வருத்தம்
ஜன்னல்காரனை வெறுத்தான்
இரவில் வந்த நீண்ட இருமல்
ஜன்னல்காரனின் உயிரைக்குடித்தது
பாதுகாப்பு மணி இருந்தும்
ஜன்னலில்லா அறைக்காரன் அழுத்தவில்லை
இப்போது இவன் தனது அறையை
மாற்றிக்கொண்டு ஜன்னலின் வழியே
எட்டிப்பார்த்தான் - அதிர்ச்சி
 ஜன்னல் வெறும் சுவரைக் காட்டியது
கஷ்டமான சூழ்நிலையிலும்
ஜன்னல்காரன் இவனை
தனது கற்பனையாலும்
சுத்தமான அன்பினாலும்
சந்தோஷப் படுத்தினான்
கதையை சொல்லிவிட்டு
கண்களில் கண்ணீரை கொடுத்துவிட்டு
பறந்தது பட்டாம்பூச்சி

கேட்பீர் தோழர்களே
எல்லா இருட்டிலும்
ஒளிவரும் பாதையுண்டு
இக்கஷ்டம் பெரியதா
இத்தோல்வி பெரியதாவென
உங்களை நீங்களே கேளுங்கள்
ஒளிக்கான பாதை தெரியும்
கஷ்டத்திலும் ஒளிமயமான
பாதையை தேடும் பார்வையை
தக்கவைத்துக் கொள்ளுங்கள்
அது உங்களை
வெளிச்சத்திற்கு கூட்டிச்செல்லும்
பூமியின் மீதான உங்களின்
வருகைக்காலம் குறைவு
வருத்தப்பட்டு இருளில்
வாழ்க்கையை கரைக்காதீர்கள்
ஒளியை தேடும் திறனை
கண்டு கொள்ளுங்கள்
புத்திசாலிதனத்துடன் வாழ்வை
துளிகூட மிச்சமில்லாமல்
பருகி விடுங்கள்

Tuesday, February 7, 2012

Every day be kind to a stranger

 புதியவர்களிடம் அன்பாக இருங்கள்


ஒவ்வொரு காலையும்
அழகைக் கொப்பளித்துக் கொண்டு
புதிய செய்தியோடு பிறக்கிறது
ஒவ்வொரு மலரும் புதிய
அழகோடும் மணத்தோடும் காத்திருக்கிறது
புதிய மனிதர்கள் புதிய பாடத்தோடும்
புதிய கதையோடும் காத்திருக்கிறார்கள்
உங்களுக்குச் சொல்ல
புதிய காலை புதிய மனிதர்களென
புதியபூமி விடிகிறது ஒவ்வொரு நாளும்
உன்னத செயல்களோ
பாராட்டுக் கூட்டங்களோ
திருப்தியான வாழ்வை தராது
அனுதினமும் அன்போடும்
கருணையோடும் ரசனையோடும்
செய்யும் சிறுகாரியங்கள் தான்
உன்னதமான வாழ்வைத்தரும்

ஒவ்வொரு கணமும் ஒரு வாய்ப்பு  நம்
மனித நேயத்தைக் காட்ட
பூமியின் மீது நீங்கள்
ஆக்கிரமித்துள்ள இடத்திற்கு
அன்புதான் வாடகை அதை
எல்லோர் மீதும் பொழியுங்கள்
புதியவர்களை சந்திக்க பாராட்ட
ஆர்வமாக இருங்கள்
அவர்கள் உங்கள்
அனுபவத்தை சுமந்து வருகிறார்கள்
அவர்களை வரவேற்க
அன்பு செலுத்த தயாராகுங்கள்


வணக்கம் நண்பர்களே ! கவி பிரம்மாக்களே !

இன்று முதல் ஒரு புத்தகத்தை கவிதை வடிவில் மொழி பெயர்த்து வெளியிடலாம் என நினைக்கிறேன்.அது திரு ராபின் சர்மா எழுதிய "நீங்கள் இறக்கும் போது உங்களுக்காக அழுபவர் யாரோ " - " who will cry when you die " என்ற சுயமுன்னேற்ற நூல்தான்.தங்கள் ஆதரவும் பின்னூட்டமும் மிக அவசியமும்.

நன்றி