Showing posts with label tamil love kavithaigal. Show all posts
Showing posts with label tamil love kavithaigal. Show all posts
நீ நல்லவனா?
Marc
8:20 PM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
poems
,
poems about life
,
tamil kavithaigal
,
tamil love kavithaigal
,
கவிதைகள்
,
வாழ்க்கை கவிதைகள்
உன் மெளனத்தின் முன்னால்
Marc
உன் மெளனத்தின் முன்னால்
ஒரு குழந்தையாய் தவிக்கிறேன்!
கொல்ல நினைக்கிறாயா?
கொஞ்ச நினைக்கிறாயா?
உன் மெளனத்தின் முன்னால்
என் இதயம் துடிப்பது கூட
எரிசலாய் இருக்கிறது.
உன் மெளனத்தின் முன்னால்
என் ஊன்னுடம்பு
மெழுகாய் உருகுகிறது.
உன் மெளனத்தின் முன்னால்
உனக்கும் எனக்கும் இடையேயான
கால தூர பிரபஞ்சபோர்வை நீள்கிறது.
உன் மெளனத்தின் முன்னால்
உணர்வுகளை தொலைத்த
புத்தனாகிறேன்.
மொத்தத்தில்
உன் மெளனத்தின் முன்னால்,நான்
என்னையே தொலைத்து தேடுகிறேன்.
ஒரு குழந்தையாய் தவிக்கிறேன்!
கொல்ல நினைக்கிறாயா?
கொஞ்ச நினைக்கிறாயா?
உன் மெளனத்தின் முன்னால்
என் இதயம் துடிப்பது கூட
எரிசலாய் இருக்கிறது.
உன் மெளனத்தின் முன்னால்
என் ஊன்னுடம்பு
மெழுகாய் உருகுகிறது.
உன் மெளனத்தின் முன்னால்
உனக்கும் எனக்கும் இடையேயான
கால தூர பிரபஞ்சபோர்வை நீள்கிறது.
உன் மெளனத்தின் முன்னால்
உணர்வுகளை தொலைத்த
புத்தனாகிறேன்.
மொத்தத்தில்
உன் மெளனத்தின் முன்னால்,நான்
என்னையே தொலைத்து தேடுகிறேன்.
8:48 PM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
love poems
,
poems
,
tamil kavithaigal
,
tamil love kavithaigal
,
tamil poems about life
,
கவிதைகள்
,
காதல் கவிதைகள்
உன்னைப் பார்க்கும் போது
Marc
![]() |
| உன்னைப் பார்க்கும் போது |
புறக்கண்ணில் தோன்றும் !
நீ வரும் நேரம்
சலனங்கள் தோன்றும் !
நீ காற்றினில்
கலந்த சர்க்கரையே !
என் நாவினில் வந்து
இனிப்பதும் ஏன்? ( .... நீ காற்றினில் )
என் எண்ணங்களில்
பொன் வண்ணங்களாய்
உந்தன் நினைவுகள்
புதைந்து இனிக்கிறதே!
நீ வெள்ளை நிலவு
கொள்ளை அழகு
துடிக்கும் நட்சத்திரம்
நீ பார்த்தால் சிரித்தால்
அருகில் அமர்ந்தால் எந்தன்
உயிரும் கரைந்தோடும்
ஒரு மாலைவெயில் போல
ஒரு மாற்றம் தந்தாயே !
எந்தன் நேசப்புதர்களிலே
முட்பூவாய் மலர்ந்தாயே !
என் எண்ணங்களில்
பொன் வண்ணங்களாய்
உந்தன் நினைவுகள்
புதைந்து இனிக்கிறதே!
10:45 AM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
love poems
,
poems
,
tamil love kavithaigal
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
,
காதல் கவிதைகள்
காதல் பயம் - Love Fear
Marc
![]() |
| காதல் பயம் |
சத்தமில்லாமல் பறந்தேன்
காதல்வரா தெருவினூடே
தடமில்லாமல் நடந்தேன்
கன்னியர் பாதையில்
கண்மூடி நடந்தேன்
அலைபாயும் நேரத்தில்
கீதை படித்தேன்
சுவைமிகும் நேரத்தில்
சோகம் படித்தேன்
மகிழ்ச்சி விற்று
காவி வாங்கினேன்
காதலும் என்னை கவ்விடுமோ ?
காதல் நஞ்சைக் கக்கிடுமோ ?
இந்நஞ்சுக்கும் முறிவு உண்டோ ?
சொல்லிவிட்டு காதல் செய்வீர் ?
காதல் தோழர்களே !
7:52 PM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
love poems
,
poems
,
tamil kavithai
,
tamil love kavithaigal
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
,
காதல் கவிதைகள்
யார் தந்தோ காதலோ ?
Marc
![]() |
| யார் தந்த காதல் |
யாரிடம் சொன்னதோ
யாருக்கும் தெரியாமல்
இதயத்தை கிழித்ததோ ?
சுகம் தந்தோ காதலே
சுமையாகிப் போனதோ
சுமைதாங்க முடியாமல்
தடுமாறி விழுந்ததோ ?
ஒளிதந்த காதலே
இருளாகிப் போனதோ
இமைமூடும் நேரத்தில்
காற்றினிலே பறந்ததோ ?
சொல்லாத காதல்கள்
சோகங்கள் தந்ததோ
சுவைகூடும் இரவினிலே
சுதிமாறிக் கத்தியதோ ?
அவன் தந்த காதலோ
அடி நெஞ்சில் ஒட்டியதோ
அவனில்லா வேலையிலும்
அசைபோடச் சொல்கிறதோ ?
மேலும் படிக்க
10:07 AM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
love poems
,
poems
,
tamil kavithai
,
tamil love kavithaigal
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
,
காதலர்தினம்
,
காதல் கவிதைகள்
மின்னனு காதலர்தினம்
Marc
Happy Digital Lovers Day
இலைகளை மேயும் ஆடுகளாய்
வலைதளங்களை மேயும் இளைஞர்கள்
கிளைகளில் பூத்த மலர்கள்
வலைதளங்களில் பூக்கின்றன
புல்தரையில் காத்திருந்தவர்கள்
கணிணி திரையில் காத்திருக்கிறார்கள்
காதலை சொல்ல பயந்தவர்கள்
கணிணி அரட்டையில் கதைக்கிறார்கள்
புறாக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு
குறுஞ்செய்திகள் தூது செல்கின்றன
கணப்பொழுதின் பிரிவை தாங்கமுடியாதவர்கள்
அலைபேசியின் மடியில் தவழ்கிறார்கள்
ஏக்கத்தில் புரண்டவர்கள்
தொடுதிரையில் தொட்டுக்கொள்கின்றனர்
சந்திக்காத இதயங்கள்
பேஸ்புக்கில் சந்தித்துவிட்டு
ட்வீட்டரில் நலம்விசாரித்து
அலைபேசியில் காதலை தொடர்கின்றன
கல்லெடுத்த காலத்திலும்
காதல் வந்தது
கணிணி காலத்திலும்
காதல் வருகிறது
காதல் மனிதனின் ஆன்மா
மனிதன் வாழும் வரை வாழும்!
வாழ்க காதல் !
வளர்க மின்னனு காதலர்தினம்!
மேலும் படிக்க
4:34 PM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
love poems
,
poems
,
tamil kavithai
,
tamil love kavithaigal
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
,
காதலர்தினம்
,
காதல் கவிதைகள்
அறை
Marc
9:52 AM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
love poems
,
poems
,
tamil kavithai
,
tamil kavithaigal
,
tamil love kavithaigal
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
,
காதல் கவிதைகள்
காதலே ஏன் இந்த மாயம் ?
Marc
![]() |
| காதலே ஏன் இந்த மாயம் |
ஏன் இந்த மாயம்
இதயத்தின் சுவர்களை
கரைத்திட்ட மாயம்
கண்களும் அலையாய் பொங்குதே
இதயத்தின் சுவர்களும் வெடிக்குதே
இரவின் நடுவினில்
நீ விடும் தூது
எந்தன் கனவினை
கரைக்கும் அமிலத்தின்சாறு
இமைகளின் வெளியே
நீ செய்யும் மாயம்
கனவினில் என்னை
கொல்கின்ற காயம்
உன்னை நினைத்து
பாடிய கீதம்
மூங்கில் காட்டில்
கிழிந்திட்ட கீதம்
உள்ளே உள்ளே
நீ செய்த காயம்
என்னைக் கொல்லும்
காலனின் வாகனம்.
10:16 AM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
love poems
,
tamil kavithai
,
tamil kavithaigal
,
tamil love kavithaigal
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
,
காதல் கவிதைகள்
அன்பே வருவாயா ?
Marc
![]() |
| அன்பே வருவாயா ? |
என்னைத் தொலைத்தேனடி
உன் விரல்களின் இடையில்
என் விரல் கோர்த்தேனடி
நீயில்லா நானுமே
நீரில்லா மேகமே
மழை தூவும் வானமே
காதல் மழை பொழிவாயா?
இரவில்லா வானத்தில்
குயில்பாடும் கானத்தில்
காலைப்பனி நனைந்தேனடி
காதல்சுகம் கண்டேனடி
இரவெல்லாம் நீண்டிருக்க
கனவெல்லாம் காத்திருக்க
கனியே நீ வருவாயா?
காதல்சுகம் தருவாயா?
வழியெல்லாம் விழிவைத்து
விழிக்குள்ளே உன்னை வைத்து
உனக்காக காத்திருப்பேன்
பூவாக பூத்திருப்பேன்
சொல்லாத சொல்லெடுத்து
குத்தாத முள்ளெடுத்து
மணமாலை நான் செய்து
மணமாற சூட்டுவேன்.
தோழி
Marc
![]() |
| தோழி |
கோடையிலும் ஓர் வசந்தம்
பாலையிலும் ஓர் சோலைவனம்
பருவமடையா வயதில்
ரெட்டை ஜடையுடன்
கைகோர்த்து நடந்தது
ஒருகை இலந்தைப்பழத்தை
இருகைகள் பகிர்ந்துண்டது
டியூசன் வகுப்புகளுக்கு
துணையாய் வந்தது
யாரோ உன்னையடிக்க
எனக்கு கோபம்வந்தது
விடுமுறை நாட்களில் வந்த
இழந்தது போன்ற உணர்வு
அண்ணணை சாக்காய் வைத்து
உன்னைப் பார்த்தது
நட்பையும் தாண்டிய
நாகரீகப் பேச்சுகள்
இடையறாத பேச்சுக்களின்
நடுவே நீ காட்டும் மெளனம்
எல்லை தாண்டியபோதும்
நட்பாய் ஏற்றுக்கொண்டது
இவைகளை நினைத்தால்
இமைகளும் வலிக்கினறன
உடல்கள் நடுங்குகின்றன
கண்கள் குளமாகின்றன
ஆயிரம் வசந்தம்
ஆயிரம் கோடை
கடந்து விட்டேன்
நீயிட்ட கோலமட்டும்
மனதில் பசுமையாய்
நிழலாடுகிறது தோழி
உன் சுவடுகள் என் நெஞ்சில்
அதை ஒவ்வொருநாளும்
படிக்கிறேன் அழுகிறேன்
மெழுகுவர்த்தி
Marc
இயற்கை வெளிச்சம் குறைந்து
செற்கைவெளிச்சம் கவிழும்
மாலை நேரம் - திடீரென
எலெக்ட்ரான் ஓட்டம் தடைபட
மீண்டும் கவிழ்ந்தது இருட்டு
இருட்டை விரட்ட அவன்
என்னோடு இருந்தான் - நானோ
கருவறை இருந்தும்
கருவில்லாத தாயைப்போல்
என்தேடலை தேடிக்கொண்டிருந்தேன்
நேரம் நகர நகர
அவன் கரைந்து கொண்டிருந்தான்
சட்டென ஓர் இருட்டு
அவன் முழுவதுமாக
கரைந்து தரையில்கிடந்தான்
ஒளி கொடுத்தவன்
நன்றி எதிர்பார்க்காமல்
தன்னை அர்பணித்து
தரையில் கிடக்கிறான்
நானோ சுயநலமாக
அவனிடம் பேசாமல்
இருந்துவிட்டேன்
கரைந்த உடலை
தழுவிக்கொண்டே கண்ணீருடன்
நகர்ந்தது மாலைவேளை
இன்னும் எத்தனை
தியாகங்களை மறந்தேனோ!!!
![]() |
| மெழுகுவர்த்தி |
மாலை நேரம் - திடீரென
எலெக்ட்ரான் ஓட்டம் தடைபட
மீண்டும் கவிழ்ந்தது இருட்டு
இருட்டை விரட்ட அவன்
என்னோடு இருந்தான் - நானோ
கருவறை இருந்தும்
கருவில்லாத தாயைப்போல்
என்தேடலை தேடிக்கொண்டிருந்தேன்
நேரம் நகர நகர
அவன் கரைந்து கொண்டிருந்தான்
சட்டென ஓர் இருட்டு
அவன் முழுவதுமாக
கரைந்து தரையில்கிடந்தான்
ஒளி கொடுத்தவன்
நன்றி எதிர்பார்க்காமல்
தன்னை அர்பணித்து
தரையில் கிடக்கிறான்
நானோ சுயநலமாக
அவனிடம் பேசாமல்
இருந்துவிட்டேன்
கரைந்த உடலை
தழுவிக்கொண்டே கண்ணீருடன்
நகர்ந்தது மாலைவேளை
இன்னும் எத்தனை
தியாகங்களை மறந்தேனோ!!!
பாவம்
Marc
![]() |
| பாவம் |
அதன்கீழ் ஒர் விடிவெள்ளி
இரவின் நிழலில்
நீண்ட சாலையில்
அலங்கார விளக்கெடுத்து
ஊர்திகள் விரைந்துசெல்ல
சாலையிலன் ஓரம்
என்னவளின் கைபிடித்து
குலாவிக்கொண்டிருந்த தருணம்
சற்று தூரத்தில்
பூனையொன்று ரோட்டில்பாய
ஊர்தியொன்று தலையில் ஏற
சடக்கென சத்தம்
என்னவளே அய்யோவென
இதயம் நின்றது
போல ஓர் உணர்வு
பூனையின் கால்கள் உதற
அதை கடந்த தருணம்
கல்லானது இதயம்
மனம்மட்டும் கதறியது
அய்யோ பாவம்!
அய்யோ பாவம்!
என்ட்ரோபி(entropy)
Marc
வெப்ப இயக்கவியலின்(Thermo dynamics) இரண்டாம் விதி.உலகில் பல விஞ்ஞானிகளால் பலவித அர்த்தங்கள் சொல்லப்பட்டு இன்னும் பலரால் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட விதி என்றும் சொல்லலாம்.இன்னும் பல ஆராய்ச்சிகள் இந்த விதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பிரபஞ்சத்தின் தோற்றம்,முடிவு சம்பந்தமான ஆய்வுகளுக்கும்,கோள்கள்,நட்சத்திரங்கள் ,மனித இனத்தின் தோற்றம் என எல்லா இடங்களிலும் மேற்கோள் காட்டப்பயன்படும் விதி.நோபல் பரிசுக்கென சிலர் இன்னும் இவ்விதியை வைத்து மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
என்ட்ரோபி(entropy) என்பது ஒரு அமைப்பின்(System) ஒழுங்கற்ற அமைப்பை(Disorder) பற்றி கூறுவது.
(அல்லது)
ஒரு அமைப்பிற்கு(System) கொடுக்கப்படும் ஆற்றலுக்கும்(q) அதன் வெப்பநிலைக்கும்(T) உள்ள விகிதம் (q/T)ஆகும்
பள்ளியில் நாம் படித்த ஒரு சின்ன அறிவியல் விதி வெப்பம் சூடான இடத்தில் இருந்து குளிர்ந்த இடத்தை நோக்கிப் பரவும்.ஆனால் நாம் எப்போதாவது ஏன் வெப்பம் ஏன் குளிர்ந்த இடத்திலிருந்து சூடான இடத்தை நோக்கி பாயக்கூடாது என கேட்டதுண்டா? பரவாயில்லை இப்போது கேட்போம் ஏன் பாயக்கூடாது?
குளிர்ந்த பனிக்கட்டியில் உள்ள மூலக்கூறுகள்(molecules) ஒரு நிலைத்தன்னையுடன் குறைந்த பட்ச ஓர் ஒழுங்கமைப்பில்(Order) இருக்கும்.
ஓர் சூடான கம்பியில் உள்ள மூலக்கூறுகள்(molecules) அதிக ஆற்றலால் அதிக இயக்க ஆற்றலைப்(kinetic energy) பெற்றிருக்கும்.அதனால் ஒன்றின் மீது ஒன்று மோதி ஓர் ஒழுங்கற்ற அமைப்பை(Disorder) பெற்றிருக்கும்.
இப்போது சூடான கம்பியை பனிக்கட்டியில்விடும்போது கம்பியில் உள்ள அதிக ஆற்றல் மூலக்கூறுகள் பனிக்கட்டி மூலக்கூறுகளை மோத ஆரம்பிக்கும் .கம்பியின் அதிக ஆற்றல் மூலக்கூறுகள் தங்கள் ஆற்றலை பனிக்கட்டி மூலக்கூறுகளின் மீது மோதி செலுத்தும்.இதனால் வெப்பம் அதிகரித்து பனிக்கட்டி உருக ஆரம்பிக்கும் அதன் மூலக்கூறு அமைப்பும் ஒழுங்கிலிருந்து(Order) ஒழுங்கற்ற(Disorder) அமைப்பை நோக்கி நகர ஆரம்பிக்கும்.
ஏற்கனவே சூடான கம்பியின் என்ட்ரோபி(entropy)(ஒழுங்கற்ற தன்மை) அதிகம் இருந்தது இப்போது வெப்ப ஓட்டம் காரணமாக பனிக்கட்டியின் என்ட்ரோபி (ஒழுங்கற்ற தன்மை) அதிகரித்து விட்டது.மொத்த என்ட்ரோபி ஏற்கனவே இருந்ததை விட இப்போது அதிகரித்துவிட்டது.
சூடான கம்பியின் மூலக்கூறுகள் தனது அதிகப்படியான ஆற்றலை இழந்தால் தான் சமநிலை அடையமுடியும் .அதனால் அதிகப்படியான ஆற்றலை பனிக்கட்டியின் மூலக்கூறுகளிடம் இழந்து சமநிலை(Equilibrium) அடைகிறது.இதனால் வெப்பம் அல்லது ஆற்றல் எப்போதும் அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்தை நோக்கி பாயும்.
ஒரு அமைப்பின் என்ட்ரோபி(ஒழுங்கற்ற அமைப்பு) எப்போதும் அதிகரிக்கும் அல்லது ஏற்கனவே இருந்த மதிப்பாக இருக்கும்.ஆனால் குறையவே குறையாது.
மிக முக்கியமான ஒரு விதி இயற்கை எப்போதும் ஒழுங்கிலிருந்து ஒழுங்கற்ற அமைப்பை நோக்கியே செல்லும்.ஆனால் ஒழுங்கற்ற அமைப்பிலிருந்து ஒழுங்கை நோக்கி செல்ல வெளியிலிருந்து ஆற்றல் அல்லது வேலை செய்ய வேண்டும்.
உதாரணங்கள் :
சிதறிய செங்கற்கள் ஒழுங்கற்ற அமைப்பில் இருக்கும்.இப்போது என்ட்ரோபி அதிகம் உள்ளது.அதை ஒழுங்காக அடுக்க நாம் நமது ஆற்றலை வேலையாக செலவழித்தால் ஒழுங்காகமாறிவிடும்.இப்போது செங்கற்களின் என்ட்ரோபி குறைந்து விட்டது.
கவனிக்க :
என்ட்ரோபி குறையவே குறையாது என்று சொன்னேன் ஆனால் இப்போது குறைகிறதே என நீங்கள் கேட்கலாம்.இங்கு தான் பல அறியாமை தவறுகள் நடக்கின்றன.மொத்த அமைப்பை பார்க்க வேண்டும்.நாம் ,செங்கள் ,சுற்றுச்சூழல் மொத்ததையும் ஓர் அமைப்பாக கருதவேண்டும்.செங்களை அடுக்க ஆற்றலை செலவழித்து நாம் வேலை செய்கிறோம் .வெப்பத்தினால் நமது என்ட்ரோபி அதிகரிக்கிறது.செங்களின் என்ட்ரோபி குறைக்க நாம் அதிக வேலை செய்து நமது என்ட்ரோபியை அதிகரிக்கிறோம்.இதனால் மொத்த என்ட்ரோபி அதிகரிக்கிறது.
என்ட்ரோபி செயல்பட ஒரு அமைப்பு(System) புறவிசை(External factors) எதுவும் பாதிக்காதாகவும்,மூடியதாகவும்(closed), தொடர்ந்து மாறிக்கொண்டே(changing) இருக்க கூடியாதாகவும் இருக்க வேண்டும்.
புறவிசை(External factors) எதுவும் பாதிக்காத ஒரு அமைப்பு(System) நேரம்(Time) ஆக ஆக எப்போதும் ஒழுங்கிலிருந்து(Order) ஒழுங்கற்ற(Disorder) அமைப்பை நோக்கியே செல்லும்.
என்ட்ரோபி(entropy) எப்போதும் ஒழுங்கமைப்பை(Order) பற்றி கூறுகிறது ஒழுங்கைப்பற்றி(disipline) அல்ல.
http://mapyourinfo.com
குறிப்பாக பிரபஞ்சத்தின் தோற்றம்,முடிவு சம்பந்தமான ஆய்வுகளுக்கும்,கோள்கள்,நட்சத்திரங்கள் ,மனித இனத்தின் தோற்றம் என எல்லா இடங்களிலும் மேற்கோள் காட்டப்பயன்படும் விதி.நோபல் பரிசுக்கென சிலர் இன்னும் இவ்விதியை வைத்து மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
விதி :
என்ட்ரோபி(entropy) என்பது ஒரு அமைப்பின்(System) ஒழுங்கற்ற அமைப்பை(Disorder) பற்றி கூறுவது.
(அல்லது)
ஒரு அமைப்பிற்கு(System) கொடுக்கப்படும் ஆற்றலுக்கும்(q) அதன் வெப்பநிலைக்கும்(T) உள்ள விகிதம் (q/T)ஆகும்
பள்ளியில் நாம் படித்த ஒரு சின்ன அறிவியல் விதி வெப்பம் சூடான இடத்தில் இருந்து குளிர்ந்த இடத்தை நோக்கிப் பரவும்.ஆனால் நாம் எப்போதாவது ஏன் வெப்பம் ஏன் குளிர்ந்த இடத்திலிருந்து சூடான இடத்தை நோக்கி பாயக்கூடாது என கேட்டதுண்டா? பரவாயில்லை இப்போது கேட்போம் ஏன் பாயக்கூடாது?
ஒரு சோதனை :
குளிர்ந்த பனிக்கட்டியில் உள்ள மூலக்கூறுகள்(molecules) ஒரு நிலைத்தன்னையுடன் குறைந்த பட்ச ஓர் ஒழுங்கமைப்பில்(Order) இருக்கும்.
![]() |
| என்ட்ரோபி(entropy) |
ஓர் சூடான கம்பியில் உள்ள மூலக்கூறுகள்(molecules) அதிக ஆற்றலால் அதிக இயக்க ஆற்றலைப்(kinetic energy) பெற்றிருக்கும்.அதனால் ஒன்றின் மீது ஒன்று மோதி ஓர் ஒழுங்கற்ற அமைப்பை(Disorder) பெற்றிருக்கும்.
இப்போது சூடான கம்பியை பனிக்கட்டியில்விடும்போது கம்பியில் உள்ள அதிக ஆற்றல் மூலக்கூறுகள் பனிக்கட்டி மூலக்கூறுகளை மோத ஆரம்பிக்கும் .கம்பியின் அதிக ஆற்றல் மூலக்கூறுகள் தங்கள் ஆற்றலை பனிக்கட்டி மூலக்கூறுகளின் மீது மோதி செலுத்தும்.இதனால் வெப்பம் அதிகரித்து பனிக்கட்டி உருக ஆரம்பிக்கும் அதன் மூலக்கூறு அமைப்பும் ஒழுங்கிலிருந்து(Order) ஒழுங்கற்ற(Disorder) அமைப்பை நோக்கி நகர ஆரம்பிக்கும்.
ஏற்கனவே சூடான கம்பியின் என்ட்ரோபி(entropy)(ஒழுங்கற்ற தன்மை) அதிகம் இருந்தது இப்போது வெப்ப ஓட்டம் காரணமாக பனிக்கட்டியின் என்ட்ரோபி (ஒழுங்கற்ற தன்மை) அதிகரித்து விட்டது.மொத்த என்ட்ரோபி ஏற்கனவே இருந்ததை விட இப்போது அதிகரித்துவிட்டது.
கேள்வியின் பதில் :
சூடான கம்பியின் மூலக்கூறுகள் தனது அதிகப்படியான ஆற்றலை இழந்தால் தான் சமநிலை அடையமுடியும் .அதனால் அதிகப்படியான ஆற்றலை பனிக்கட்டியின் மூலக்கூறுகளிடம் இழந்து சமநிலை(Equilibrium) அடைகிறது.இதனால் வெப்பம் அல்லது ஆற்றல் எப்போதும் அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்தை நோக்கி பாயும்.
![]() |
| என்ட்ரோபி(entropy) |
ஒரு அமைப்பின் என்ட்ரோபி(ஒழுங்கற்ற அமைப்பு) எப்போதும் அதிகரிக்கும் அல்லது ஏற்கனவே இருந்த மதிப்பாக இருக்கும்.ஆனால் குறையவே குறையாது.
மிக முக்கியமான ஒரு விதி இயற்கை எப்போதும் ஒழுங்கிலிருந்து ஒழுங்கற்ற அமைப்பை நோக்கியே செல்லும்.ஆனால் ஒழுங்கற்ற அமைப்பிலிருந்து ஒழுங்கை நோக்கி செல்ல வெளியிலிருந்து ஆற்றல் அல்லது வேலை செய்ய வேண்டும்.
சிதறிய செங்கற்கள் ஒழுங்கற்ற அமைப்பில் இருக்கும்.இப்போது என்ட்ரோபி அதிகம் உள்ளது.அதை ஒழுங்காக அடுக்க நாம் நமது ஆற்றலை வேலையாக செலவழித்தால் ஒழுங்காகமாறிவிடும்.இப்போது செங்கற்களின் என்ட்ரோபி குறைந்து விட்டது.
![]() |
| என்ட்ரோபி(entropy) |
என்ட்ரோபி குறையவே குறையாது என்று சொன்னேன் ஆனால் இப்போது குறைகிறதே என நீங்கள் கேட்கலாம்.இங்கு தான் பல அறியாமை தவறுகள் நடக்கின்றன.மொத்த அமைப்பை பார்க்க வேண்டும்.நாம் ,செங்கள் ,சுற்றுச்சூழல் மொத்ததையும் ஓர் அமைப்பாக கருதவேண்டும்.செங்களை அடுக்க ஆற்றலை செலவழித்து நாம் வேலை செய்கிறோம் .வெப்பத்தினால் நமது என்ட்ரோபி அதிகரிக்கிறது.செங்களின் என்ட்ரோபி குறைக்க நாம் அதிக வேலை செய்து நமது என்ட்ரோபியை அதிகரிக்கிறோம்.இதனால் மொத்த என்ட்ரோபி அதிகரிக்கிறது.
முக்கியவிதி :
என்ட்ரோபி செயல்பட ஒரு அமைப்பு(System) புறவிசை(External factors) எதுவும் பாதிக்காதாகவும்,மூடியதாகவும்(closed), தொடர்ந்து மாறிக்கொண்டே(changing) இருக்க கூடியாதாகவும் இருக்க வேண்டும்.
புறவிசை(External factors) எதுவும் பாதிக்காத ஒரு அமைப்பு(System) நேரம்(Time) ஆக ஆக எப்போதும் ஒழுங்கிலிருந்து(Order) ஒழுங்கற்ற(Disorder) அமைப்பை நோக்கியே செல்லும்.
என்ட்ரோபி(entropy) எப்போதும் ஒழுங்கமைப்பை(Order) பற்றி கூறுகிறது ஒழுங்கைப்பற்றி(disipline) அல்ல.
மேலும் படிக்க :
தமிழ்மகனே கண்ணுறங்கு
Marc
கண்ணே ஒரு பாடல்
காதோரம் நான் பாட
கண்ணே கண்ணுறங்கு
கன்னித்தமிழ் நீகேளு!
பூவே புதுமலரே
பூவில் மலர்ந்த பூந்தேனே
புதுராகம் நான் பாட
பூந்தேனே கண்ணுறங்கு!
மார்கழி குளிர்காத்து
உன்னை தீண்டாமல்
இதமாய் அணைப்பேன்
அந்த கதகதப்பில்
பைங்கிளியே கண்ணுறங்கு!
அம்புலி நீ விளையாட
நிலவெல்லாம் சேர்த்துவைப்பேன்
உன்பசி நான் போக்க
வட்டதோசை சுட்டு வைப்பேன்
நீதிக்கதை நான் சொல்ல
நிலவே நீ கண்ணுறங்கு!
கூடி விளையாட
அத்த மக இருக்க
ஓடி விளையாட
ஆவாரம்பூ காடிருக்கு
ஊர்க்கதைகள் நான் சொல்ல
ஊர்க்கிளியே கண்ணுறங்கு!
தாய்மொழி நான் சொல்ல
கனிமொழி நீ பேச
தமிழ்மொழிதான் வளர
தாய்மொழி நீ கற்று
தரணி ஆள்வாய்
தமிழ்மகனே!
![]() |
| தமிழ்மகனே கண்ணுறங்கு |
கண்ணே கண்ணுறங்கு
கன்னித்தமிழ் நீகேளு!
பூவே புதுமலரே
பூவில் மலர்ந்த பூந்தேனே
புதுராகம் நான் பாட
பூந்தேனே கண்ணுறங்கு!
மார்கழி குளிர்காத்து
உன்னை தீண்டாமல்
இதமாய் அணைப்பேன்
அந்த கதகதப்பில்
பைங்கிளியே கண்ணுறங்கு!
அம்புலி நீ விளையாட
நிலவெல்லாம் சேர்த்துவைப்பேன்
உன்பசி நான் போக்க
வட்டதோசை சுட்டு வைப்பேன்
நீதிக்கதை நான் சொல்ல
நிலவே நீ கண்ணுறங்கு!
கூடி விளையாட
அத்த மக இருக்க
ஓடி விளையாட
ஆவாரம்பூ காடிருக்கு
ஊர்க்கதைகள் நான் சொல்ல
ஊர்க்கிளியே கண்ணுறங்கு!
தாய்மொழி நான் சொல்ல
கனிமொழி நீ பேச
தமிழ்மொழிதான் வளர
தாய்மொழி நீ கற்று
தரணி ஆள்வாய்
தமிழ்மகனே!
கடவுள் வாழ்த்து
Marc
என்னுடைய இந்த 150 பதிவை கடவுளுக்கு சமர்ப்பிக்கிறேன்.
அலை அலையாய்
ஆயிரம் பிறவிகள்
கரை இல்லாத
இப்பிறவி பெருங்கடலில்
கரை சேர
இப்பிறவி அளித்த
இறைவா போற்றி!
உத்தமர் தன்வரம் கொடுக்க
உத்தமி தன்மகனாய் பிறக்க
வரம் அளித்த
இறைவா போற்றி!
நான் அழ தான்அழுது
நான் விழ தான் கைதூக்கிய
உடன்பிறப்புகளை அளித்த
இறைவா போற்றி!
இவ்வுலகை இனிதாக்க
வனப்பும் வலிமையுமிக்க
உடலை அளித்த
இறைவா போற்றி!
தன்னுணர்வை தானறிந்து
உள்ளுணர்வால் உனையறியும்
அறிவைக் கொடுத்த
இறைவா போற்றி!
அறிவில் மாணிக்கமாய்
உன்னில் ஒருபாதியாய்
குருவை அளித்த
இறைவா போற்றி!
சுற்றும் உலகை சுவைத்தறிய
ஊன்றுகோலாய் ஊன்றிநடக்க
சுற்றம் கொடுத்த
இறைவா போற்றி!
பேரழகும் பெருங்குணமும்
பாருலகில் பைங்கிளியாயும்
மனைவி அளித்த
இறைவா போற்றி!
என்பெருமை தான் தூக்க
கடைசியில் கால்தூக்க நன்
மக்கட்பேறு அளித்த
இறைவா போற்றி!
ஆயிரம்பேர் வந்தாலும்
ஆயிரம்தான் சொன்னாலும்
தன்னலம்தான் பாராமல்
என்னலம்தான் பார்க்கும்
நண்பனை அளித்த
இறைவா போற்றி!
அழகு அழகு
பைங்கிளியின் பேச்சழகு
அழகுக்கெல்லாம் அழகு
பைங்கிளியின் தமிழ் பேச்சழகு
திட்டினாலும் வாய்மணக்கும்
தமிழ்மொழி அளித்த
இறைவா போற்றி!
கல்லில் உனைக்கண்டேன்
பசும்புல்லில் உனைக்கண்டேன்
என்னில் உனைக்கண்டேன்
தமிழாய் உனைக்கண்டேன்
உருண்டோடும் பிரபஞ்சத்தில்
ஒர் ஒழுங்காய் உனைக்கண்டேன்
தாய்மையில் உனைக்கண்டேன்
அன்பில் உனைக்கண்டேன்
நட்பில் உனைக்கண்டேன்
துள்ளிவரும் நாய்க்குட்டியின்
நன்றியில் உனைக்கண்டேன்
உன்னைக்காண என்னைப்படைத்து
உன்னையறியும் உணர்வைக் கொடுத்து
உன்னைப்பாடும் அறிவை அளித்த
![]() |
| கடவுள் வாழ்த்து |
ஆயிரம் பிறவிகள்
கரை இல்லாத
இப்பிறவி பெருங்கடலில்
கரை சேர
இப்பிறவி அளித்த
இறைவா போற்றி!
உத்தமர் தன்வரம் கொடுக்க
உத்தமி தன்மகனாய் பிறக்க
வரம் அளித்த
இறைவா போற்றி!
நான் அழ தான்அழுது
நான் விழ தான் கைதூக்கிய
உடன்பிறப்புகளை அளித்த
இறைவா போற்றி!
இவ்வுலகை இனிதாக்க
வனப்பும் வலிமையுமிக்க
உடலை அளித்த
இறைவா போற்றி!
தன்னுணர்வை தானறிந்து
உள்ளுணர்வால் உனையறியும்
அறிவைக் கொடுத்த
இறைவா போற்றி!
அறிவில் மாணிக்கமாய்
உன்னில் ஒருபாதியாய்
குருவை அளித்த
இறைவா போற்றி!
சுற்றும் உலகை சுவைத்தறிய
ஊன்றுகோலாய் ஊன்றிநடக்க
சுற்றம் கொடுத்த
இறைவா போற்றி!
பேரழகும் பெருங்குணமும்
பாருலகில் பைங்கிளியாயும்
மனைவி அளித்த
இறைவா போற்றி!
என்பெருமை தான் தூக்க
கடைசியில் கால்தூக்க நன்
மக்கட்பேறு அளித்த
இறைவா போற்றி!
ஆயிரம்பேர் வந்தாலும்
ஆயிரம்தான் சொன்னாலும்
தன்னலம்தான் பாராமல்
என்னலம்தான் பார்க்கும்
நண்பனை அளித்த
இறைவா போற்றி!
அழகு அழகு
பைங்கிளியின் பேச்சழகு
அழகுக்கெல்லாம் அழகு
பைங்கிளியின் தமிழ் பேச்சழகு
திட்டினாலும் வாய்மணக்கும்
தமிழ்மொழி அளித்த
இறைவா போற்றி!
கல்லில் உனைக்கண்டேன்
பசும்புல்லில் உனைக்கண்டேன்
என்னில் உனைக்கண்டேன்
தமிழாய் உனைக்கண்டேன்
உருண்டோடும் பிரபஞ்சத்தில்
ஒர் ஒழுங்காய் உனைக்கண்டேன்
தாய்மையில் உனைக்கண்டேன்
அன்பில் உனைக்கண்டேன்
நட்பில் உனைக்கண்டேன்
துள்ளிவரும் நாய்க்குட்டியின்
நன்றியில் உனைக்கண்டேன்
உன்னைக்காண என்னைப்படைத்து
உன்னையறியும் உணர்வைக் கொடுத்து
உன்னைப்பாடும் அறிவை அளித்த
இறைவா உன்பாதம் பணிந்து
உன்னை வணங்குகிறேன்.
Subscribe to:
Posts
(
Atom
)






















விருது வழங்கிய திரு.ஹேமா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
விருது வழங்கிய திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.