ஓர் அழகான எழுத்து முயற்சி.

காதலே ஏன் இந்த மாயம் ?

2 comments
காதலே ஏன் இந்த மாயம்
காதலே ஏன் இந்த மாயம்
காதலே காதலே
ஏன் இந்த மாயம்
இதயத்தின் சுவர்களை
கரைத்திட்ட மாயம்
கண்களும் அலையாய் பொங்குதே
இதயத்தின் சுவர்களும் வெடிக்குதே

இரவின் நடுவினில்
நீ விடும் தூது
எந்தன் கனவினை
கரைக்கும் அமிலத்தின்சாறு
இமைகளின் வெளியே
நீ செய்யும் மாயம்
கனவினில் என்னை
கொல்கின்ற காயம்

உன்னை நினைத்து
பாடிய கீதம்
மூங்கில் காட்டில்
கிழிந்திட்ட கீதம்
உள்ளே உள்ளே
நீ செய்த காயம்
என்னைக் கொல்லும்
காலனின் வாகனம்.

2 comments :

  1. பார்ரா...மாப்ள இதயத்துக்கு எத்தனை தடவை தான் ஒட்டு போடுரது!

    ReplyDelete
    Replies
    1. அட சும்மா போடுங்க மாம்ஸ்.எனக்கு போடாம யாருக்கு போட போறீங்க

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..