Showing posts with label கதை நேரம். Show all posts
Showing posts with label கதை நேரம். Show all posts
சில வரிக் கதைகள் (குவாண்டம் வாழ்க்கை, சூது கவ்வும், வாழ்க்கை ஒரு வட்டம்)
Marc
குவாண்டம் வாழ்க்கை
கல்யாணம் ஆகாமல் ஒன்றாய் வாழும் கௌதமும், கீர்த்தியும் அந்த
அப்பார்ட்மென்ட் கட்டிலில்
பிளாங்க் இடைவெளியில்(h/2 Pi), நிலையற்ற தருணத்தில்( unCertainity), காம (குவாண்ட) உணர்வை
பரிமாறிக் கொண்டிருந்தார்கள். சட்டென சுதாரித்துக் கொண்ட கிர்த்திதன்னை விலக்கிக்கொண்டு கேட்டாள் "இதெல்லாம் தப்பில்லையா?''
இல்லையென்பது போல் சிரித்துக் கொண்டே தலையசைத்தான் கௌதம். இருவரும் தங்கள் பிளாங்க் இடைவெளியை குறைத்துக் கொண்டார்கள். புதிய பிரபஞ்சம் உருவாக தயாரானது.
அசிங்கமான மனிதர்கள்
கிழிந்த சட்டை, அழுக்கு பாவாடை சகிதமாய் ,நடு ரோட்டில் கிடந்த மாட்டின் அசிங்கங்களை வெறும் கையால் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தாள் அவள். அவளை அசிங்கமாக பார்த்துக்கொண்டே கடந்து சென்றார்கள் சக மனிதர்கள்.
சூது கவ்வும்
முன்பெல்லாம் தன் காதல் கல்யாண வாழ்க்கையை பற்றி அக்கம் பக்கத்தில் பெருமையடித்துக் கொண்ட கமலா', இப்போதெல்லாம் ஓடிப்போன மகளின் காதலைப் பற்றி அக்கம் பக்கத்தில்புலம்பிக் கொண்டிருக்கிறாள்.
வாழ்க்கை ஒரு வட்டம்
மனிதர்களின் உணர்வை புரிந்து கொள்ள முடியாத நோயினால் பாதிக்கப்பட்ட மோகன், வாழ்க்கையில் தேறுவது கடினம் என பள்ளி ஆசிரியர் வருத்தப்பட்டுக் கொண்டார். பாவம் மோகன், இப்போது கால்நடை மருத்துவர் ஆகி விட்டான்.
9:37 PM
எனது பக்கங்கள்
,
கதை நேரம்
டால்ஸ்டாய் கதைகள்: பாதிரியாரும் பிரார்த்தனையும்
Marc
அமைதியாக இருந்த கடலில் அந்தக் கப்பல் நிதானமாக போய்க்கொண்டிருந்தது.அதில் ஒரு பாதிரியாரும் சில பிரயாணிகளும் இருந்தனர்.கப்பளின் மேல் தளத்தில் இருந்தவர்கள் சிறு சிறு கூட்டங்களாக கூடி உணவருந்திக் கொண்டும் படுத்தபடி அரட்டை அடித்துக்கொண்டும் இருந்தனர். பாதிரியார் இவர்கள் யாருடனும் சேராமல் தனியாக உலவிக்கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் ஒருவன் தொலைவில் இருந்த எதையோ சுட்டிக்காட்டித் தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.பாதிரியாரும், அவன் காட்டிய திசையில் உற்றுப் பார்த்தார்.சூரிய ஒளியில் பளபளக்கின்ற கடலைத் தவிர வேறு ஒன்றும் அங்கிருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. தானும் கூட்டத்தின் மத்தியில் போய் உட்கார்ந்து கொண்டு அவர்கள் பேசும் கதைகளைக் கேட்க விரும்பினார் பாதிரியார்.
ஆனால் அவர் வருவதைக் கண்டதும் கதை சொன்னவன் அதை நிறுத்திவிட்டான்.நீ சொல்வதைக் கேட்கவே நான் இங்கே வந்திருக்கிறேன்.ஏன் நீ சொல்லிக்கொண்டிருந்ததைப் பாதியில் நிறுத்தி விட்டாய்?என்றார் பாதிரியார் அவனைப் பார்த்து.
"கண்ணுக்குத் தெரியும் தூரத்தில் அதோத் தூரத்தில் தெரியும்,அந்தச் சிறிய தீவைப் பாருங்கள்! அங்கே கடவுளின் தொண்டர்கள் சிலரும் முதியவர்கள் சிலரும் இருக்கிறார்கள்" என்றான் அவன்.அவன் கண்ணுக்குத் தெரிந்த அந்த தீவு ஏனோ பாதிரியாரின் கண்களுக்குத் தெரியவில்லை.
"தீவுதான் எனக்குத் தெரியவில்லை. அதை விடு.அங்கே வாழும் முதியவர்களைப் பற்றியாவது என்னிடம் கூறு:அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள நான் மிகவும் விரும்புகிறேன்" என்று மிகவும் ஆவலோடு கேட்டார் பாதிரியார்.
அவர்களைப் பற்றி நான் வெகு காலத்திற்கு முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன்.அவர்கள் புனிதமானவர்கள் என்பார்கள்.ஆனால் அவர்களைக் காணும் பாக்கியம் எனக்குப் போன வருடம்தான் கிடைத்தது.ஒரு பயணத்தின் போது படகில் மீன் பிடித்துக் கொண்டு நான் திரும்பிக் கொண்டிருந்தபோது வழி தவறி அத்தீவிற்குப் போய்விட்டேன்.இங்கும் அங்கும் அலைந்து திரிந்து விட்டு கடைசியாக ஒரு மண்குடிசைக்குச் சென்றேன். அங்கே முதியவர் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.அப்போது வேறு இருவர் அந்த மண்குடிசையின் உள்ளே இருந்து வந்து கொண்டிருந்தனர்.அவர்கள் எனக்கு உணவும் உடையும் தந்து என் படகைச் செப்பனிடு உதவினார்கள்.
"அவர்களில் ஒருவர் கூனல் முதுகுள்ள சிறிய உருவமுடையவர்:அவர் காவி உடை அணிந்திருந்தார்.மிகவும் வயதானவராகத் தெரிந்தார்.அவருக்கு நூறு வயதுக்கும் இருக்கும்.அவருடைய நரைத்த தாடி வெண்மை நிறம் மாறிப் போய் பசுமையாகிக் கொண்டிருந்தது.சிரித்த முகம் அவருக்கு.தேவதையைப் போல் அது ஒளி வீசிக்கொண்டிருந்தது.இரண்டாவது கிழவர் முதலாமானவரை விட உயரமானவர்.அவரும் வயதானவர்தான்.கிழிந்த கம்பளி உடை ஒன்றை அவர் அணிந்திருந்தார்.அவருடைய நீளமான தாடி பாதி மஞ்சள் நிறமானதாகவும் பாதி சாம்பல் நிறத்திலும் இருந்தது.ஆனாலும் அவர் மிக பலசாலியாக இருந்தார்.நான் சொல்லாமலே என் படகை அவர் செப்பனிட்டுக் கொடுத்தார்.மூன்றாவதாக இருந்த கிழவர் மிகப் பெரியவரியவராகவும் உயரமானவராகவும் இருந்தார்.முழங்கால் வரை அவரது தாடி நீண்டு வளர்ந்திருந்தது.அவரது முகம் அவரது கடின உள்ளத்தைக் காட்டியது.அவர் கோவணம் மட்டுமே அணிந்திருந்தார்.அவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவேயில்லை.வேலை செய்வதிலேயே அவர்கள் கருத்தாக இருந்தார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதன் மூலமும் பார்வைகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலமும் உணர்த்திக் கொண்டு அதற்கேற்ப அவர்கள் நடந்து கொள்கிறார்கள். அவர்களிடம் 'இங்கே வெகு காலமாக வசிக்கிறீர்களா?' என்று கேட்டேன்.அதற்கு அவர்களில் ஒருவர் ஏதோ முணுமுணுத்தார்.மற்றொருவர் அவர் கையைப் பற்றிக் கொண்டு புன்னகை செய்தார்.சிறிது நேரத்திற்குப் பிற்கு ,"மன்னிக்கவும்!" என்று கூறிவிட்டுச் சிரித்தார். "
இப்போது கப்பல் தீவை நெருங்கிக் கொண்டிருந்தது.
தீவு இப்போது எல்லோர் கண்களுக்கும் நன்றாகத் தெரிந்தது.பாதிரியாருக்கும் அது நன்றாகத் தெரிந்தது.
மாலுமியை நெருங்கி அந்தத் தீவின் பெயரைக்கேட்டார் ."பெயர் எனக்குத் தெரியாது; இதைப் போல எவ்வளவோ தீவுகளின் இங்கே இருக்கின்றன" என்றான் அவன் அசட்டையாக.
"அங்கே முதியவர்கள் வாழ்வதாக கூறுகிறார்களே?" என்று திரும்பவும் கேட்டார் பாதிரியார்.
"அப்படித்தான் சொல்லுகிறார்கள்! அது உண்மையா,பொய்யா என்று எனக்குத்தெரியாது;மீனவர்களில் சிலர் அவர்களைப் பார்த்திருப்பதாகக் கூறக் கேட்டிருக்கிறேன்.அது கட்டுக் கதையாகவும் இருக்கலாம்" என்றான் மாலுமி சலிப்புடன்.
"அந்தத் தீவுக்குச் சென்று அவர்களைக் காண நான் விரும்புகிறேன்:எனக்கு உன்னால் உதவ முடியுமா?" என்று கேட்டார் பாதிரியார்.
"இந்தக் கப்பல் அங்கே போகாது!ஏதாவது ஒரு சிறு படகிலே ஏறித்தான் அங்கு செல்ல வேண்டும்.அதற்குக் கப்பல் தலைவனின் அனுமதி வேண்டும்" என்றான் மாலுமி கடுப்புடன்.
பாதிரியார் விடுவதாயில்லை.கப்பல் தலைவனிடம் நேராய்ப் போய் தன் ஆசையைக் கூறினார்.
"நம்முடைய பிரயாணம் தடைப்படுவதைத் தவிர அதனால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. அவர்கள் பேசும் பேச்சு நமக்குப் புரியாது:நம் மொழியும் பேச்சும் அவர்களுக்குத்தெரியாது!" என்றான் தலைவன்.
பாதிரியார் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால்,மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் தலைவன் கடைசியில் அவர் ஆசையை நிறைவேற்ற இணங்கினான்.
கப்பல் தீவை நோக்கிச் சென்றது!கப்பல் தலைவனிடமிருந்த தூரதிருஷ்டிக் கண்ணாடியின் மூலம் பாதிரியார் தீவைப் பார்த்தார்.கரையில் அந்த மூன்று பெரியவர்களும் கைகோர்த்துக் கொண்டு நிற்பது தெரிந்தது.
"கப்பலை இங்கேயே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கிறேன்.நீங்கள் வேண்டுமானால் படகில் சென்று வாருங்கள்" என்று கூறினான் தலைவன்.
கப்பல் நிறுத்தப்பட்டது.சிறு படகு ஒன்றை அதிலிருந்து இறக்கினார்கள்.படகோட்டிகளில் சிலர் அதற்குள் குதித்தார்கள்.பாதிரியாரும் படகிற்குள் இறங்கினார்.படகும் தீவை நோக்கிச் சென்று கரையை அடைந்தது.பாதிரியார் அதிலிருந்து கரையேறினார்.இப்போதும் அந்த மூன்று பெரியவர்களும் அங்கே கைகோத்துக் கொண்டு நின்றிருந்தனர்.பாதிரியரைப் பார்த்ததும் அவர்கள் அவரை வணங்கினார்கள்.அவர்களும் அவர்களை ஆசிர்வதித்தார்.
அவர்களைப் பார்த்து பாதிரியார், "இந்த ஆளரவமற்ற இடத்தில் இருந்து கொண்டு நீங்கள் மனித குலத்தின் பாவத்தை மன்னித்து அருளும்படி ஏசுவை நோக்கித் தவம் புரிவதாகக் கேள்விப்பட்டேன்.நானும் கர்த்தரின் சேவகன் தான்! வேத்தைப் போதித்து வாழ்விப்பது என்னுடைய புனித கடமை.அதனால் கடபுளின் கருணையால் நான் இங்கே வந்திருக்கிறேன்.உங்களைப் பார்க்க வேண்டும் என்பதும், முடிந்தால் உங்களுக்குப் போதனை செய்ய வேண்டும் என்பதும் ,ஆண்டவனின் கட்டளை!" என்றார் பாதிரியார்.
முதியவர்கள் இதற்குப் பதில் ஒன்றும் கூறாமல்,ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்து கொண்டார்கள்.
"நீங்கள் ஆண்டனை எவ்வாறு வழிபடுகிறீர்கள்?" என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார் பாதிரியார்.
அதற்கும் அவர்கள் புன்னகையையே பதிலாக அளித்தனர்.
கடைசியில் அவர்களில் பெரியவராகத் தென்பட்டவர் கூறினார்:"கர்த்தரின் சேவகரே! கடவுளை எப்படி வழிபடுவது என்பது பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது; எங்களுக்கு நாங்களே சேவை செய்வது எப்படி என்கிற ஒன்றை மட்டும் தான் நாங்கள் அறிவோம்."
"சரி,அதை விடுங்கள்.கடவுளை எப்படி வண்ங்குகிறீர்கள் அதைச் சொல்லுங்கள்?" என்றார் பாதிரியார்.
அதற்கு அந்த மூவரில் மூத்தவராகத் தெரிந்த பெரியவர் பதில் அளித்தார்:"மூன்று தேவர்களே!எங்கள் மூவரிடமும் கருணை காட்டுங்கள் என்று கூறி வணங்குவோம்."
அவர் இவ்வாறு கூறியதும்,அம்மூவரும் வானை நோக்கி,ஒரே குரலில் மேற்கூறிய பிரார்த்தனையைக் கூறி வணங்கினார்கள்.
"தேவபிதா,தேவகுமாரன்,பரிசுத்த ஆவி என்ற இந்த மூன்று தேவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீகள் என்று தெரிகிறது.ஆனாலும் நீங்கள் பிரார்த்தனை செய்யும் முறை தவறு.உங்கள் அறியாமைக்காக நான் பரிதாபப்படிகிறேன்.நீங்கள் கர்த்தருக்கு திருப்தி அளிக்கும் முறையில் நடந்து கொள்ள விருப்புகிறீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால்,அதற்கான சரியான வழிமுறை உங்களுக்கு தெரியவில்லை.சரியாகப் பிரார்த்தனை செய்யும் முறையை உங்களுக்கு நான் சொல்லித் தருகிறேன். இது வேதத்தில் கூறப்பட்டுள்ள முறை.கடவுளே அவ்விதிகளைச் செய்திருக்கிறார்."
தேவபிதா,தேவகுமாரன்,பரிசுத்த ஆவி இவை பற்றிய தத்துவங்களைப் பாதிரியார் அவர்களுக்கு விளக்கினார்.
"மனிதர்களை இரட்சிக்க வேண்டி இந்த உலகில் அவதரித்த தேவகுமாரன் இப்படித்தான் கடவுளை வணங்க வேண்டும் என்று விதித்திருக்கிறான்.சொல்லுகிறேன் கேளுங்கள்: பரமண்டலத்திலுள்ள எங்கள் கர்த்த பிதாவே......" என்று தொடங்கினார் பாதிரியார்.
பெரியவர்கள் மூவரும் அவர் சொன்னதையெல்லாம் திருப்பிச் சொன்னார்கள். நடுத்தர உயரமுள்ள பெரியவர் சொற்களைச் சரியாக உச்சரிக்க முடியாமல் ஒன்றோடொன்று போட்டுக் குழப்பினார்.உயரமானவருடைய தாடியும்,மீசையும் தெளிவாக உச்சரிக்க இயலாமல் அவரைத் தடுத்தன.மூன்றாவது பெரியவருக்குப் பற்கள் இல்லாததால் உச்சரிப்பு சரியாக வரவில்லை.மறுபடியும் மறுபடியும் பாதிரியார் அவர்களிக்குச் சொல்லி கொடுத்துக் கொண்டே இருந்தார்.அவர்களும் திரும்பத் திரும்ப அதைச் சொன்னார்கள்.மாலை நேரம் வரை இதே கதை தான்.ஆனாலும் பாதிரியார் சலிக்கவில்லை.முதியவர்களும் அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.பிரார்த்தனை வாசகம் மனப்பாடம் ஆகும் வரை பாதிரியார் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.
இரவு நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால், கப்பலுக்குப் புறப்படப் பாதிரியார் எழுந்தார்.அவர் அவர்களிடம் விடை பெறும் போது,முதியவர்கள் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள்.பாதிரியார் கப்பலை அடையும் வரை, உரத்த குரலில் அவர்கள் செய்த பிரார்த்தனை கேட்டுக் கொண்டிருந்தது.சிறிது நேரத்தில் நிலவொளியில் அவர்களது உருவங்கள் மட்டும்தான் தெரிந்தன.சத்தம் அடங்கிப் போயிருந்தது.
இப்போது கப்பல் அங்கிருந்து நகரத் துவங்கியது.ஆனாலும் தீவைப் பார்த்துக் கொண்டே பாதிரியார் உட்கார்ந்திருந்தார்.தீவும் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையிலிருந்து மறைந்து கொண்டிருந்தது.இப்போது கப்பலில் இருந்த அனைவரும் உறங்கிவிட்டனர்.பாதிரியார் மட்டும் உறங்கவில்லை.
அந்த நேரத்தில் முதியவர்களின் ஆர்வத்தை எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தார்.அந்த உத்தமர்களுக்கு போதிக்கும் பாக்கியத்தை தமக்கு அருளிய கடவுளுக்கும் நன்றி கூறினார்.
அந்தச் சமயத்தில் கடலில் திடீரென வெண்மையாக ஒளி போன்ற ஒன்று பளிச்சென்று காணப்பட்டது.அது கப்பலையும் நெருங்கியது.அது ஒரு படகும் இல்லை.அதற்குப் பின் பாய் மரமும் தெரியவில்லை.அது பறவையோ, மீனோ இன்னதென்று அவரால் இனம் காண முடியவில்லை.ஆனால் மனித உருவம் அல்ல.இவ்வளவு உயரமான மனிதன் இருக்க முடியுமா? அதுவும் அவன் இப்படிக் கடலில் நடந்து வரக்கூடுமா?அவரது சிந்தனை பலவாறாக ஓடியது.
அந்த சமயத்தில் மாலுமியும் அதைப் பார்த்துவிட்டான்."அதோ தெரிகிறதே, அது என்ன?" என்று அந்த மாலுமி கேட்டான் பாதிரியாரைப் பார்த்து.அதற்குள் பாதிரியார் தெரிந்துகொண்டார் அந்த மூன்று முதியவர்களும் தான் விரைவாக அங்கே வந்துகொண்டிருந்தனர் என்பதை.அவர்களுடைய உடலும் வெண்ணிறத்தாடியும் நிலவொளியில் ஒளி வீசின."கடவுளே! பூமியில் நடந்து வருவதைப் போல் அல்லவா இவர்கள் கடளில் நடந்து வருகின்றனர்!." என்று வியப்போடு உரக்கக் கூவியபடி கப்பலை அந்த இடத்திலே நிறுத்திவிட்டான் மாலுமி.பிரயாணிகள் அனைவரும் அதற்குள் தளத்தில் கூடிவிட்டனர்.அவர்கள் வருவதை அபர்களும் கண்டார்கள்.அவர்கள் இப்போது கப்பலில் வந்து ஏறிவிட்டனர்.பிறகு பாதிரியாரைப் பார்த்து,"கர்த்தரின் தொண்டரே! நீங்கள் சொல்லிக் கொடுத்தவற்றையெல்லாம் நாங்கள் மறந்துவிட்டோம்.தயை செய்து அதை மீண்டும் எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள். " என்று அவர்கள் அவரை வேண்டிக்கொண்டார்கள்.
அவர்கள் அப்படிச் சொன்னதும் மண்டியிட்டு அமர்ந்து பாதிரியார், "கடவுளின் புராதன உத்தமர்களே!உங்கள் பிரார்த்தனையும் கடவுளை எட்டும்.நாங்ககள் தான் பாவ ஆத்மாக்கள்.நீங்கள் தான் எங்களுக்காக கடவுளை நோக்கிப் பிராத்தனை செய்ய வேண்டும்.உங்களுக்குப் போதிக்க எனக்குத் தகுதியில்லை!" என்றார்.
பிறகு பாதிரியார் அவர்களை வணங்கினார்.அதற்குப் பிறகு தங்கள் தீவை நோக்கி அந்த முதியவர்கள் திரும்பினார்கள்.
பொழுது புலரும் வரை, அவர்கள் மறைந்த அந்த இடத்திலிருந்து ஒளி எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருந்தது.
ஆனால் அவர் வருவதைக் கண்டதும் கதை சொன்னவன் அதை நிறுத்திவிட்டான்.நீ சொல்வதைக் கேட்கவே நான் இங்கே வந்திருக்கிறேன்.ஏன் நீ சொல்லிக்கொண்டிருந்ததைப் பாதியில் நிறுத்தி விட்டாய்?என்றார் பாதிரியார் அவனைப் பார்த்து.
"கண்ணுக்குத் தெரியும் தூரத்தில் அதோத் தூரத்தில் தெரியும்,அந்தச் சிறிய தீவைப் பாருங்கள்! அங்கே கடவுளின் தொண்டர்கள் சிலரும் முதியவர்கள் சிலரும் இருக்கிறார்கள்" என்றான் அவன்.அவன் கண்ணுக்குத் தெரிந்த அந்த தீவு ஏனோ பாதிரியாரின் கண்களுக்குத் தெரியவில்லை.
"தீவுதான் எனக்குத் தெரியவில்லை. அதை விடு.அங்கே வாழும் முதியவர்களைப் பற்றியாவது என்னிடம் கூறு:அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள நான் மிகவும் விரும்புகிறேன்" என்று மிகவும் ஆவலோடு கேட்டார் பாதிரியார்.
அவர்களைப் பற்றி நான் வெகு காலத்திற்கு முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன்.அவர்கள் புனிதமானவர்கள் என்பார்கள்.ஆனால் அவர்களைக் காணும் பாக்கியம் எனக்குப் போன வருடம்தான் கிடைத்தது.ஒரு பயணத்தின் போது படகில் மீன் பிடித்துக் கொண்டு நான் திரும்பிக் கொண்டிருந்தபோது வழி தவறி அத்தீவிற்குப் போய்விட்டேன்.இங்கும் அங்கும் அலைந்து திரிந்து விட்டு கடைசியாக ஒரு மண்குடிசைக்குச் சென்றேன். அங்கே முதியவர் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.அப்போது வேறு இருவர் அந்த மண்குடிசையின் உள்ளே இருந்து வந்து கொண்டிருந்தனர்.அவர்கள் எனக்கு உணவும் உடையும் தந்து என் படகைச் செப்பனிடு உதவினார்கள்.
"அவர்களில் ஒருவர் கூனல் முதுகுள்ள சிறிய உருவமுடையவர்:அவர் காவி உடை அணிந்திருந்தார்.மிகவும் வயதானவராகத் தெரிந்தார்.அவருக்கு நூறு வயதுக்கும் இருக்கும்.அவருடைய நரைத்த தாடி வெண்மை நிறம் மாறிப் போய் பசுமையாகிக் கொண்டிருந்தது.சிரித்த முகம் அவருக்கு.தேவதையைப் போல் அது ஒளி வீசிக்கொண்டிருந்தது.இரண்டாவது கிழவர் முதலாமானவரை விட உயரமானவர்.அவரும் வயதானவர்தான்.கிழிந்த கம்பளி உடை ஒன்றை அவர் அணிந்திருந்தார்.அவருடைய நீளமான தாடி பாதி மஞ்சள் நிறமானதாகவும் பாதி சாம்பல் நிறத்திலும் இருந்தது.ஆனாலும் அவர் மிக பலசாலியாக இருந்தார்.நான் சொல்லாமலே என் படகை அவர் செப்பனிட்டுக் கொடுத்தார்.மூன்றாவதாக இருந்த கிழவர் மிகப் பெரியவரியவராகவும் உயரமானவராகவும் இருந்தார்.முழங்கால் வரை அவரது தாடி நீண்டு வளர்ந்திருந்தது.அவரது முகம் அவரது கடின உள்ளத்தைக் காட்டியது.அவர் கோவணம் மட்டுமே அணிந்திருந்தார்.அவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவேயில்லை.வேலை செய்வதிலேயே அவர்கள் கருத்தாக இருந்தார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதன் மூலமும் பார்வைகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலமும் உணர்த்திக் கொண்டு அதற்கேற்ப அவர்கள் நடந்து கொள்கிறார்கள். அவர்களிடம் 'இங்கே வெகு காலமாக வசிக்கிறீர்களா?' என்று கேட்டேன்.அதற்கு அவர்களில் ஒருவர் ஏதோ முணுமுணுத்தார்.மற்றொருவர் அவர் கையைப் பற்றிக் கொண்டு புன்னகை செய்தார்.சிறிது நேரத்திற்குப் பிற்கு ,"மன்னிக்கவும்!" என்று கூறிவிட்டுச் சிரித்தார். "
இப்போது கப்பல் தீவை நெருங்கிக் கொண்டிருந்தது.
தீவு இப்போது எல்லோர் கண்களுக்கும் நன்றாகத் தெரிந்தது.பாதிரியாருக்கும் அது நன்றாகத் தெரிந்தது.
மாலுமியை நெருங்கி அந்தத் தீவின் பெயரைக்கேட்டார் ."பெயர் எனக்குத் தெரியாது; இதைப் போல எவ்வளவோ தீவுகளின் இங்கே இருக்கின்றன" என்றான் அவன் அசட்டையாக.
"அங்கே முதியவர்கள் வாழ்வதாக கூறுகிறார்களே?" என்று திரும்பவும் கேட்டார் பாதிரியார்.
"அப்படித்தான் சொல்லுகிறார்கள்! அது உண்மையா,பொய்யா என்று எனக்குத்தெரியாது;மீனவர்களில் சிலர் அவர்களைப் பார்த்திருப்பதாகக் கூறக் கேட்டிருக்கிறேன்.அது கட்டுக் கதையாகவும் இருக்கலாம்" என்றான் மாலுமி சலிப்புடன்.
"அந்தத் தீவுக்குச் சென்று அவர்களைக் காண நான் விரும்புகிறேன்:எனக்கு உன்னால் உதவ முடியுமா?" என்று கேட்டார் பாதிரியார்.
"இந்தக் கப்பல் அங்கே போகாது!ஏதாவது ஒரு சிறு படகிலே ஏறித்தான் அங்கு செல்ல வேண்டும்.அதற்குக் கப்பல் தலைவனின் அனுமதி வேண்டும்" என்றான் மாலுமி கடுப்புடன்.
பாதிரியார் விடுவதாயில்லை.கப்பல் தலைவனிடம் நேராய்ப் போய் தன் ஆசையைக் கூறினார்.
"நம்முடைய பிரயாணம் தடைப்படுவதைத் தவிர அதனால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. அவர்கள் பேசும் பேச்சு நமக்குப் புரியாது:நம் மொழியும் பேச்சும் அவர்களுக்குத்தெரியாது!" என்றான் தலைவன்.
பாதிரியார் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால்,மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் தலைவன் கடைசியில் அவர் ஆசையை நிறைவேற்ற இணங்கினான்.
கப்பல் தீவை நோக்கிச் சென்றது!கப்பல் தலைவனிடமிருந்த தூரதிருஷ்டிக் கண்ணாடியின் மூலம் பாதிரியார் தீவைப் பார்த்தார்.கரையில் அந்த மூன்று பெரியவர்களும் கைகோர்த்துக் கொண்டு நிற்பது தெரிந்தது.
"கப்பலை இங்கேயே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கிறேன்.நீங்கள் வேண்டுமானால் படகில் சென்று வாருங்கள்" என்று கூறினான் தலைவன்.
கப்பல் நிறுத்தப்பட்டது.சிறு படகு ஒன்றை அதிலிருந்து இறக்கினார்கள்.படகோட்டிகளில் சிலர் அதற்குள் குதித்தார்கள்.பாதிரியாரும் படகிற்குள் இறங்கினார்.படகும் தீவை நோக்கிச் சென்று கரையை அடைந்தது.பாதிரியார் அதிலிருந்து கரையேறினார்.இப்போதும் அந்த மூன்று பெரியவர்களும் அங்கே கைகோத்துக் கொண்டு நின்றிருந்தனர்.பாதிரியரைப் பார்த்ததும் அவர்கள் அவரை வணங்கினார்கள்.அவர்களும் அவர்களை ஆசிர்வதித்தார்.
அவர்களைப் பார்த்து பாதிரியார், "இந்த ஆளரவமற்ற இடத்தில் இருந்து கொண்டு நீங்கள் மனித குலத்தின் பாவத்தை மன்னித்து அருளும்படி ஏசுவை நோக்கித் தவம் புரிவதாகக் கேள்விப்பட்டேன்.நானும் கர்த்தரின் சேவகன் தான்! வேத்தைப் போதித்து வாழ்விப்பது என்னுடைய புனித கடமை.அதனால் கடபுளின் கருணையால் நான் இங்கே வந்திருக்கிறேன்.உங்களைப் பார்க்க வேண்டும் என்பதும், முடிந்தால் உங்களுக்குப் போதனை செய்ய வேண்டும் என்பதும் ,ஆண்டவனின் கட்டளை!" என்றார் பாதிரியார்.
முதியவர்கள் இதற்குப் பதில் ஒன்றும் கூறாமல்,ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்து கொண்டார்கள்.
"நீங்கள் ஆண்டனை எவ்வாறு வழிபடுகிறீர்கள்?" என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார் பாதிரியார்.
அதற்கும் அவர்கள் புன்னகையையே பதிலாக அளித்தனர்.
கடைசியில் அவர்களில் பெரியவராகத் தென்பட்டவர் கூறினார்:"கர்த்தரின் சேவகரே! கடவுளை எப்படி வழிபடுவது என்பது பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது; எங்களுக்கு நாங்களே சேவை செய்வது எப்படி என்கிற ஒன்றை மட்டும் தான் நாங்கள் அறிவோம்."
"சரி,அதை விடுங்கள்.கடவுளை எப்படி வண்ங்குகிறீர்கள் அதைச் சொல்லுங்கள்?" என்றார் பாதிரியார்.
அதற்கு அந்த மூவரில் மூத்தவராகத் தெரிந்த பெரியவர் பதில் அளித்தார்:"மூன்று தேவர்களே!எங்கள் மூவரிடமும் கருணை காட்டுங்கள் என்று கூறி வணங்குவோம்."
அவர் இவ்வாறு கூறியதும்,அம்மூவரும் வானை நோக்கி,ஒரே குரலில் மேற்கூறிய பிரார்த்தனையைக் கூறி வணங்கினார்கள்.
"தேவபிதா,தேவகுமாரன்,பரிசுத்த ஆவி என்ற இந்த மூன்று தேவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீகள் என்று தெரிகிறது.ஆனாலும் நீங்கள் பிரார்த்தனை செய்யும் முறை தவறு.உங்கள் அறியாமைக்காக நான் பரிதாபப்படிகிறேன்.நீங்கள் கர்த்தருக்கு திருப்தி அளிக்கும் முறையில் நடந்து கொள்ள விருப்புகிறீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால்,அதற்கான சரியான வழிமுறை உங்களுக்கு தெரியவில்லை.சரியாகப் பிரார்த்தனை செய்யும் முறையை உங்களுக்கு நான் சொல்லித் தருகிறேன். இது வேதத்தில் கூறப்பட்டுள்ள முறை.கடவுளே அவ்விதிகளைச் செய்திருக்கிறார்."
தேவபிதா,தேவகுமாரன்,பரிசுத்த ஆவி இவை பற்றிய தத்துவங்களைப் பாதிரியார் அவர்களுக்கு விளக்கினார்.
"மனிதர்களை இரட்சிக்க வேண்டி இந்த உலகில் அவதரித்த தேவகுமாரன் இப்படித்தான் கடவுளை வணங்க வேண்டும் என்று விதித்திருக்கிறான்.சொல்லுகிறேன் கேளுங்கள்: பரமண்டலத்திலுள்ள எங்கள் கர்த்த பிதாவே......" என்று தொடங்கினார் பாதிரியார்.
பெரியவர்கள் மூவரும் அவர் சொன்னதையெல்லாம் திருப்பிச் சொன்னார்கள். நடுத்தர உயரமுள்ள பெரியவர் சொற்களைச் சரியாக உச்சரிக்க முடியாமல் ஒன்றோடொன்று போட்டுக் குழப்பினார்.உயரமானவருடைய தாடியும்,மீசையும் தெளிவாக உச்சரிக்க இயலாமல் அவரைத் தடுத்தன.மூன்றாவது பெரியவருக்குப் பற்கள் இல்லாததால் உச்சரிப்பு சரியாக வரவில்லை.மறுபடியும் மறுபடியும் பாதிரியார் அவர்களிக்குச் சொல்லி கொடுத்துக் கொண்டே இருந்தார்.அவர்களும் திரும்பத் திரும்ப அதைச் சொன்னார்கள்.மாலை நேரம் வரை இதே கதை தான்.ஆனாலும் பாதிரியார் சலிக்கவில்லை.முதியவர்களும் அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.பிரார்த்தனை வாசகம் மனப்பாடம் ஆகும் வரை பாதிரியார் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.
இரவு நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால், கப்பலுக்குப் புறப்படப் பாதிரியார் எழுந்தார்.அவர் அவர்களிடம் விடை பெறும் போது,முதியவர்கள் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள்.பாதிரியார் கப்பலை அடையும் வரை, உரத்த குரலில் அவர்கள் செய்த பிரார்த்தனை கேட்டுக் கொண்டிருந்தது.சிறிது நேரத்தில் நிலவொளியில் அவர்களது உருவங்கள் மட்டும்தான் தெரிந்தன.சத்தம் அடங்கிப் போயிருந்தது.
இப்போது கப்பல் அங்கிருந்து நகரத் துவங்கியது.ஆனாலும் தீவைப் பார்த்துக் கொண்டே பாதிரியார் உட்கார்ந்திருந்தார்.தீவும் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையிலிருந்து மறைந்து கொண்டிருந்தது.இப்போது கப்பலில் இருந்த அனைவரும் உறங்கிவிட்டனர்.பாதிரியார் மட்டும் உறங்கவில்லை.
அந்த நேரத்தில் முதியவர்களின் ஆர்வத்தை எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தார்.அந்த உத்தமர்களுக்கு போதிக்கும் பாக்கியத்தை தமக்கு அருளிய கடவுளுக்கும் நன்றி கூறினார்.
அந்தச் சமயத்தில் கடலில் திடீரென வெண்மையாக ஒளி போன்ற ஒன்று பளிச்சென்று காணப்பட்டது.அது கப்பலையும் நெருங்கியது.அது ஒரு படகும் இல்லை.அதற்குப் பின் பாய் மரமும் தெரியவில்லை.அது பறவையோ, மீனோ இன்னதென்று அவரால் இனம் காண முடியவில்லை.ஆனால் மனித உருவம் அல்ல.இவ்வளவு உயரமான மனிதன் இருக்க முடியுமா? அதுவும் அவன் இப்படிக் கடலில் நடந்து வரக்கூடுமா?அவரது சிந்தனை பலவாறாக ஓடியது.
அந்த சமயத்தில் மாலுமியும் அதைப் பார்த்துவிட்டான்."அதோ தெரிகிறதே, அது என்ன?" என்று அந்த மாலுமி கேட்டான் பாதிரியாரைப் பார்த்து.அதற்குள் பாதிரியார் தெரிந்துகொண்டார் அந்த மூன்று முதியவர்களும் தான் விரைவாக அங்கே வந்துகொண்டிருந்தனர் என்பதை.அவர்களுடைய உடலும் வெண்ணிறத்தாடியும் நிலவொளியில் ஒளி வீசின."கடவுளே! பூமியில் நடந்து வருவதைப் போல் அல்லவா இவர்கள் கடளில் நடந்து வருகின்றனர்!." என்று வியப்போடு உரக்கக் கூவியபடி கப்பலை அந்த இடத்திலே நிறுத்திவிட்டான் மாலுமி.பிரயாணிகள் அனைவரும் அதற்குள் தளத்தில் கூடிவிட்டனர்.அவர்கள் வருவதை அபர்களும் கண்டார்கள்.அவர்கள் இப்போது கப்பலில் வந்து ஏறிவிட்டனர்.பிறகு பாதிரியாரைப் பார்த்து,"கர்த்தரின் தொண்டரே! நீங்கள் சொல்லிக் கொடுத்தவற்றையெல்லாம் நாங்கள் மறந்துவிட்டோம்.தயை செய்து அதை மீண்டும் எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள். " என்று அவர்கள் அவரை வேண்டிக்கொண்டார்கள்.
அவர்கள் அப்படிச் சொன்னதும் மண்டியிட்டு அமர்ந்து பாதிரியார், "கடவுளின் புராதன உத்தமர்களே!உங்கள் பிரார்த்தனையும் கடவுளை எட்டும்.நாங்ககள் தான் பாவ ஆத்மாக்கள்.நீங்கள் தான் எங்களுக்காக கடவுளை நோக்கிப் பிராத்தனை செய்ய வேண்டும்.உங்களுக்குப் போதிக்க எனக்குத் தகுதியில்லை!" என்றார்.
பிறகு பாதிரியார் அவர்களை வணங்கினார்.அதற்குப் பிறகு தங்கள் தீவை நோக்கி அந்த முதியவர்கள் திரும்பினார்கள்.
பொழுது புலரும் வரை, அவர்கள் மறைந்த அந்த இடத்திலிருந்து ஒளி எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருந்தது.
11:31 PM
எனது பக்கங்கள்
,
கதை நேரம்
,
டால்ஸ்டாய் கதைகள்
தன்னம்பிக்கை நேரம் :: ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு.
Marc
24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்.
"அப்பா இங்கே பாருங்கள் மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்.
மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
"அப்பா மேலே பாருங்கள் மேகங்கள் நம்மோடு வருகின்றன என்றான்.
இதைக்கேட்டு தாங்க முடியாத தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்
"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக்கூடாது என்றனர்"
அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார்.
"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.என் மகன் பிறவிக்குருடன்.இன்றைக்கு தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."
உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு.மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம்.சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.
கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய்.
"அப்பா இங்கே பாருங்கள் மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்.
மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
"அப்பா மேலே பாருங்கள் மேகங்கள் நம்மோடு வருகின்றன என்றான்.
இதைக்கேட்டு தாங்க முடியாத தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்
"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக்கூடாது என்றனர்"
அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார்.
"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.என் மகன் பிறவிக்குருடன்.இன்றைக்கு தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."
உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு.மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம்.சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.
கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய்.
8:28 PM
எனது பக்கங்கள்
,
எனர்ஜி டானிக்
,
கதை நேரம்
,
தன்னம்பிக்கை நேரம்
கதை நேரம் : நாமே புத்தர்கள்
Marc

தத்துவக்குப்பைகளையும் துடைத்தெரிந்து விட்டு விழிப்புணர்வுடன் இயற்கையோடு வாழ்வது தான்.
நாம் எல்லோரும் காலையில் விழிக்கிறோம், மூன்று வேளை சாப்பிடுகிறோம்,இரவில் தூங்குகிறோம்.இவற்றிற்கிடையில் சாப்பாட்டிற்காக உழைக்கிறோம்.ஆனால் இவற்றில் எதையும் என்ன செய்கிறோம் என்ற விழிப்புணர்வோடு செய்வதில்லை.
காலையில் கண்விழித்த போது மீண்டும் ஒரு வாய்ப்பளித்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லவில்லை.குளிக்கும் போதும் நம் உடலை தொட்டு தழுவி நம்மை சுத்தமாக்கும் தண்ணீருக்கு நன்றி சொல்லவில்லை.
சாப்பிடும் போதும் சாப்பாட்டை வாயில் இட்டு ரசித்து சுவைத்து சாப்பிடுவதும் இல்லை. அதற்காகபாடு பட்டவற்களுக்கு நாம் நன்றி சொல்வதும் இல்லை.இரவிலும் அன்றைய தினம் முழுவதிற்கும் நமக்கு உதவியவர்களுக்கும், நமக்கு வாய்ப்பளித்தவர்களுக்கும் நாம் நன்றி சொல்வதில்லை.என்ன ஒரு நன்றி கெட்ட வாழ்க்கையை வாழுகிறோம்.உண்மையில் ஒரு செக்கு மாட்டைப்போல் வாழ்கிறோம்.
வாழ்க்கையை இனிமையாய் வாழ நாம் என்ன செய்கிறோம் என்ற சின்ன விழிப்புணர்வு போதும்.அப்புறம் வாழ்க்கை இனிக்கத்தொடங்கி விடும்.
ஒரு சின்ன விழிப்பென்னும் தீப்பொறி அறியாமை காட்டிற்குள் விழும் போது என்ன ஆகும் என்பதை பாரதியார் பாடுகிறார்..
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.
விழிப்பென்னும் சிறு தீப்பொறியை அறியாமை நிரம்பிய மனமென்னும் காட்டிற்குள் வைத்த போது ,மனமென்னும் காடு எரிந்து சாம்பலாகி,விழிப்பென்னும் உயர் நிலையை அடைகிறது.அப்போது அவர் மனம் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் என ஆனந்த கூத்தாடுகிறது.
மனதில் ஏற்படும் ஒரு சின்ன மாற்றம்,சின்ன கீறல் போதும் ஞானம் உதயமாகிவிடும்.அப்புறம் வாழ்க்கையே இனிமையாகிவிடும்.அற்பமெல்லாம் அற்புதமாகிவிடும்.
ஒருவன் பெரிய ஜென் மடாலயத்திற்கு சென்று அங்குள்ள குருவிடம் "நான் புத்தனாக வேண்டும்" என்றான் ஒருவன்.
அவர் உடனே கோபத்தில் ஓங்கி அறைந்து விட்டார்.அவனும் அதிர்ச்சியில் கன்னதை தடவிக்கொண்டே அங்கிருந்த தலைமை குருவிடம் "இவர் ரொம்ப மோசம். நான் புத்தனாக வேண்டும் என்றுதானே கேட்டேன்?" இதற்காக ஏன் இப்படி அறைகிறார்? என்றான்.
உடனே தலைமை குரு சொன்னார்.
"அவர் ரொம்ப கருணையானவர். நீ ரொம்ப இளம் வயதுக்காரன் என்பதால் உன்னை அறைவதோடு நிறுத்திக்கொண்டார்.இல்லையென்றால் கத்தியெடுத்து வெட்டி இருப்பார்".
ஏன் என்னை இப்படி கோபப்படுகிறார்? என்றான் வந்தவன்.
அதற்கு குரு சொன்னார் பிறகு "புத்தனாக இருந்து கொண்டே புத்தனாவது எப்படி என்று கேட்டால் யாருக்குதான் கோபம் வராது."
இதையே தான் இந்து மதமும் சொல்கிறது "அயம் ஆத்மா பிரம்மம் – இந்த ஆத்மாவே பிரம்மம் "
நானே புத்தனென்றேன்
ஆனவமாய் ஆகி நின்றேன்.
நாமே புத்தர்களென்றேன்
புத்தனாய் ஆகிவிட்டேன்.
இன்னொரு கவிதை
வாழ்க்கையென்னும் பிச்சைப்
பாத்திரத்தில் விழுந்ததை சாப்பிடு
கிடைத்ததற்கு நன்றி சொல்
பசியாறிய வயிறு
உடலை மறைக்க தூண்டும்
உடலை மறைத்த மனம்
துணையை தேட சொல்லும்
எல்லாம் கிடைத்த மனம்
திமிர் பிடித்து திரியும்
மீண்டும் பசிவந்தால்
எல்லாம் மறைந்து போகும்
ஒரு ஜான் வயிறு - அதான்
இயக்கத்தின் மூலம்
மலை உச்சியில் பார்த்தால்
பள்ளத்தாக்கில் நடப்பது புரியும் !
விழிப்பின் உச்சியில் பார்த்தால்
நடப்பது புரியும் ! நடக்கப் போவதும் புரியும் !
வந்த வழி சிறியது !
போகும் வழி பெரியது !
வந்த வழியில் திரும்பிப்
போக முடியாது !
போகும் வழி எங்கு போய்
முடிவதோ தெரியாது ?
வந்துவிட்டாய் , போகப் போகிறாய் !
சலனம் வேண்டாம்
ஓடல் வேண்டாம்
மனக் குளத்தில் கல்லெறிந்து
கொண்டே இருக்காதே !
ஓடிக் கடக்க முடியாது - உலகம்
அமைதியாக உட்கார்
உன்னைத்தேடி வரும் !
நீ தான் அது !
அதான் நீ !
கண்ணாமூச்சி புரிந்து விட்டால்
தேடல் நின்றுவிடும் !
ஆன்ம சுதந்திரம் பிறந்துவிடும்
அமைதியோடு அமைதியாகி
அன்பு வெள்ளம் பெருகி
உன்னை அழித்து
புத்தம் பிறக்கும் !
மேலும் படிக்க
சிந்தனை நேரம் : உண்மையில் பெண்களுக்கு என்னதான் வெண்டும்?
கதை நேரம் : கடவுள் (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்)
சிந்தனை நேரம் : பெண்களை புரிந்து கொள்வது எப்படி? பகுதி 1
7:59 AM
எனது பக்கங்கள்
,
கதை நேரம்
கதை நேரம் : கடவுள் (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்)
Marc
ஒரு ஆத்திகர் இறந்தவுடன் சொர்க்கம் சென்றார்.
கடவுள் ஊர்வலம் நடப்பதால் கொஞ்ச நேரம் ஒரத்தில் நிற்குமாறு கிங்கரர்கள் ஆத்திகரிடம் கூறினார்கள்.அவரும் ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தார்.
கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய கூட்டம் வெள்ளை சிப்பாவும்,முகத்தில் தாடியும் கொண்ட மனிதனை தங்கள் தோல்களில் சுமந்த படி சென்றனர்.ஆத்திகர் கூட்டத்தை பற்றி கிங்கரர்களிம் கேட்டதற்கு கிறித்தவர்கள் கூட்டம் என கூறினார்கள்.
அந்த கூட்டம் போன பின்பு மற்றொரு கூட்டம் வந்தது. அவர்களும் ஒரு பெரிய மனிதரை தங்கள் தோல்களில் சுமந்து ஆடிக்கொண்டே சென்றனர்.அவர்கள் பற்றி கேட்ட போது இஸ்லாமியர்கள் கூட்டம் என கூறினார்கள்.
அதற்கடுத்தாற் போல் அமைதியாக ஒரு மனிதன் நடந்து போனார்.அவரை பின் பற்றி அமைதியாக ஒரு கூட்டம் சென்றது.அவர்களை பார்த்த உடனே புத்த மதத்தை சேர்ந்தவர்கள் என ஆத்திகர் புரிந்து கொண்டார்.
இவ்வாறாக சிறிதும் பெரிதுமாக கூட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்து சென்றன.இறுதியில் ஒரே ஒரு வயதான மனிதர் மட்டும் தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தார்.அவர் பின்னால் எந்த கூட்டமும் இல்லை.
இதைப்பார்த்த ஆத்திகருக்கு ஒரே ஆச்சர்யம்.ஓடிப்போய் அவரிடமே நீங்கள் யார்?உங்களை நான் பூமியில் பார்த்ததே இல்லை என கூறினார்.
அதற்கு அந்த வயதான மனிதர் நான் தான் கடவுள் என்றார்.
========================================================================
"ஒருவன் ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டுங்கள்" என்று ஒரு மத போதகர் போதகம் செய்து கொண்டிருந்தார்.இதை கேட்டுக்கொண்டிருந்த ஒருவன் பரிசோதிக்க விரும்பினான்.
உடனே போதகர் கன்னத்தில் அறைந்தான்.
உண்மையான போதகர் மறுகன்னத்தையும் காண்பித்தார்.
இந்த முறை அவன் தன் முழு உடல் பலத்தையும் பயன்படுத்தி ஓங்கி மறு கன்னத்திலும் அறைந்தான்.
உடனே அவனை பாய்ந்து பிடித்த துறவி செம்மையாக அடிக்கத்தொடங்கினார்.
வலிதாங்க முடியாமல் அலறியபடி அவன் கேட்டான்.
"என்ன செய்கிறீர்கள்?காலையில்தான் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னதைக் காட்ட சொன்னீர்கள்?"
துறவி சொன்னார் :
"ஆம்.எனக்கு மூன்றாம் கன்னம் இல்லையே; ஏசுவும் மறு கன்னத்தோடு நிறுத்திக்கொண்டார்.அதற்கு பிறகு நான் விரும்பியதை செய்து கொள்ளலாம்.ஏசு இதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை என்றார்".
=======================================================================
மேலும் படிக்க :
சிந்தனை நேரம் : பெண்களை புரிந்து கொள்வது எப்படி?
8:00 AM
எனது பக்கங்கள்
,
கதை நேரம்
திகில் கதை : வேண்டாத வேலை
Marc
நள்ளிரவில் ஒரு வீட்டில் இரண்டு திருடர்கள் நுழைந்தனர்.அவர்கள் ஒவ்வொரு அறையாக சென்று பீரோல் மற்றும் நகைகள் இருக்கும் இடத்தை தேடினார்கள்.
இறுதியாக இருவரும் பீரோல் இருக்கும் அறையை அடைந்தனர்.முதலாவது திருடன் பீரோலை திறந்து பார்த்தவுடன் அலறியபடி தரையில் சுருண்டு விழுந்தான்.அலறலைக் கேட்ட இரண்டாவது திருடனும் பீரோல் அருகில் வந்து சுற்றி முன்னும் பின்னும் பார்த்தான். திடீரென அவனும் அலறியபடி தரையில் சுருண்டு விழுந்தான்.
சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது திருடர்கள் இருவரும் வாயில் நுரையுடன் சுருண்டு கிடந்தனர்.
வீட்டில் உள்ளவர்கள் உடனே போலிஸுக்கு போன் செய்து நடந்ததை சொன்னார்கள்.போலிஸ் வந்து இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.
அந்த நள்ளிரவு நேரத்தில் திருடர்கள் ஏன் அலறினார்கள்?
எதனால் இருவரும் மயங்கி விழுந்தார்கள்?
என போலிஸுக்கு ஒன்றுமே புரியவில்லை.
வீட்டில் உள்ளவர்களை கேட்ட போதும் தங்களுக்கு எதுவும் தெரியாது என விசாரணையில் சொல்லிவிட்டார்கள்.
உடனே இன்ஸ்பெக்டர் அந்த வீடு முழுவதையும் மீண்டும் பரிசோதிக்க ஆரம்பித்தார்.குறிப்பாக அந்த பீரோல் இருக்கும் அறையை கூர்ந்து பரிசோதிக்க ஆரம்பித்தார்.ஆனால் அங்கு எந்த குறிப்பும் கிடைக்கவில்லை.
பிறகு அந்த அறையைவிட்டு அதற்குமுன் இருந்த சமையல் அறையை பரிசோதிக்க ஆரம்பித்தார்.சமையல் அறை சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருந்தது.ஆனால் அந்த அறையில் இருந்த ஒரு மேஜையின் மீது வெற்று தட்டு இருப்பதை தற்செயலாக பார்த்தார் .அதன் ஓரங்களில் ஏதோ இனிப்பு பொருள் ஒட்டி இருப்பதை பார்த்தார்.
உடனே வீட்டில் உள்ளவர்களிடம் தட்டைப்பற்றி விசாரித்தார்.அதற்கு வீட்டில் உள்ளவர்கள் "வீட்டில் எலித்தொல்லை அதிகம் இருப்பதால் எலியை கொல்ல சுவீட்டிற்குள் எலி மாத்திரை வைத்துவிட்டு தூங்குவது தங்கள் வீட்டில் வழக்கம் என் கூறினார்கள்."
இன்ஸ்பெக்டருக்கு எல்லாம் புரிந்து விட்டதால் கிளம்ப ஆரம்பித்தார்.ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்றும் புரியாததால் இன்ஸ்பெக்டரிடம் என்ன நடந்தது என கேட்டனர்?
அதற்கு அவர் திருடர்கள் முதலில் சமையல் அறைக்குள் நுழைந்திருக்கிறார்கள்.எலி மருந்து கலந்த சுவீட்டை சாப்பிட்டுவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்து பீரோலை திறக்க ஆரம்பிக்கும் போது எலி மருந்து தன் வேலையை காட்டிவிட்டது.திருடர்கள் மாட்டிக்கொண்டார்கள் என்றார்.
மேலும் வாசிக்க:
கதை நேரம் : அழகிய மனங்களுக்கான அந்த மாதிரி கதைகள்
கதைநேரம் : ஆசை
8:22 AM
எனது பக்கங்கள்
,
கதை நேரம்
கதை நேரம் : அழகிய மனங்களுக்கான அந்த மாதிரி கதைகள்
Marc
ஒரு பேராசிரியர் உடற்கூறு வகுப்பில் "உணர்ச்சி தீண்டுதலில் பத்து மடங்கு பெரிதாகும் மனித உறுப்பு எது என்று?" ஒரு மாணவியிடம் கேட்டார்.
உடனே அந்த மாணவி நாணத்துடன் "இதற்கு நான் பதில் கூறமாட்டேன் என்றாள்".
அந்த பேராசிரியர் அருகில் இருந்த மாணவனை கேட்டார்.
அவன் "கண்ணின் கருவிழி" என்றான்.
பேராசிரியர் மாணவியை பார்த்து கூறினார்.
உனது குழப்பம் மூன்று விசயங்களை காட்டுகிறது.ஒன்று "நீ பாடங்களை சரியாக படிப்பதில்லை".இரண்டு "உன் மனம் அழுக்கானது".மூன்று "நீ மிகவும் ஏமாற்றத்திற்குள்ளாவாய்".
----------------------------------------------------------------&&---------------------------------------------------
தன்னுடைய 70 வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாட விரும்பிய அந்த முதியவர் மருத்துவமனைக்கு வந்தார்.
டாக்டரை அணுகி "டாக்டர், இன்று இரவு ஒரு பெண்ணுடன் தங்கப்போகிறேன்.அவளிடம் ஒரு இளைஞனைப்போல் நடந்து கொள்ள விரும்புகிறேன்.ஏதாவது மருந்து கொடுங்கள்" என்றார்.
அவரது ஆசையை கண்டு அனுதாபப்பட்டு டாக்டரும் சில மாத்திரைகளை எழுதிக்கொடுத்தார்.
நடு இரவில் அந்த டாக்டர் ஆர்வத்தை கட்டுப்படுத்தமுடியாம ல் அந்த முதியவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டார்: "என்னுடைய மாத்திரைகள் ஏதும் வேலை செய்ததா?"
"ஆகா! பிரமாதம்! இதுவரை எழு தடவை ஆகிவிட்டது!"என்று உற்சாகமாக கூறினார் முதியவர்.
"அப்படியா! ரொம்ப சந்தோசம்! ஆமாம், அந்த பெண் எப்படி இருக்கிறாள்?" என்றார் டாக்டர்?
அந்த பெண்ணா? அவள் இன்னும் இங்கு வரவில்லையே. என்றார் முதியவர்.
-------------------------------------------------------------&&---------------------------------------------------------
மேலே சொல்லப்பட்ட கதைகள் மனம் காட்டும் கண்ணாடிகள். நீங்கள் இந்த கதைகளை படிக்கும் போது ஆழமாக உங்கள் மனங்களை பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்னை திட்ட நினைத்தால் அதற்கு நீங்கள் கொண்ட தவறான புரிதலாக கூட இருக்கலாம். நீங்கள் சிரித்துக்கொண்டால் நானும் சிரித்துக்கொள்வேன்.ஏனென்றால் நாம் இருவரும் சரியான புரிதல் உள்ளவர்களாக இருக்கலாம்.
மேலும் கதைகளுக்கு படியுங்கள்.
8:00 AM
எனது பக்கங்கள்
,
கதை நேரம்
கதைநேரம் : ஆசை
Marc
இந்த உலகமே ஆசை என்னும் சக்கரத்தின் மீது ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த உலகத்தில் ஆசை இல்லாத மனிதனே இல்லை.எல்லோருக்கும் அவர் அவர்களின் வசதியை பொருத்து ஆசை இருக்கிறது.ஆனால் ஆசையே துன்பத்திற்கு காரணம் என புத்தர் சொல்கிறார்.அப்போ ஆசைபடுவது தவறா?
இந்த கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள ஆசை பற்றிய கொஞ்சம் புரிதல் வேண்டும்.ஆசை என்பது என்ன?
ஆசை என்பது நம் மனதை திருப்திபடுத்தும் பொருளை அடைவது அல்லது செயலை செய்வது.ஒரு கார் அழகாக இருக்கிறது என்பதால் அதன் மீது ஆசைபடலாம் அல்லது அது நம்மிடம் இருந்தால்தான் நாம் சமுதாயத்தில் பெரிய மனிதனாக தெரிவோம் என்ற கெளரவத்திற்காக ஆசைபடலாம்.இது மட்டுமா.நாம் ஆசைபட்ட பொருளின் மீது நம் உடல் பொருள் ஆன்மா என் எல்லாவற்றையும் வைத்து விடுகிறோம்.
உண்மையில் மனிதன் தன் ஆன்மாவையும் உயிரையும் புறப்பொருளின் மீது வைக்க நினைப்பதுதான் ஆசைக்கு உண்மையான அர்த்தம்.
சரி ஆசை எப்படி துன்பத்திற்கு காரணமாக முடியும்?
ஆசை வந்தவுடன் நாம் கனவுகான ஆரம்பிக்கிறோம்.அவை செயல்களாக மாற ஆரம்பிக்கின்றன.ஆசை நிறைவேறிய பின் ஆசைபட்ட பொருளின் மீதான ஈர்ப்பு குறைய ஆரம்பிக்கிறது.இதற்காகவா இவ்வளவு போராடினோம் என குற்ற உணர்வு ஆரம்பிக்கும்.
சில நேரம் ஆசையை நிறைவேற்ற தவறான செயல்களை செய்ய ஆரம்பித்து வாழ்க்கையையே தொலைத்துவிடுகிறோம்.சில ஆசைகளினால் வாழ்க்கையை இயல்பாக வாழமுடியாமல் இயந்திரமாக வாழ ஆரம்பித்துவிடுகிறோம்.
உண்மையில் ஒரு ஆசையின் பின் மற்றொரு ஆசை என ஒன்றன் பின் ஒன்றாக நம் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது.ஆசையின் காரணமாக கடனாளியாக,குற்றவாளியாக, இயல்பு வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம். ஆசை ஆசையாக காதலித்து வாழ்க்கையை தொலைத்தவர்கள்தான் இங்கு அதிகம்.
உண்மையில் ஆசை நம் இயல்பு வாழ்க்கை தின்று விடுகிறது.இதற்கு அருமையான கதை ஒன்று சொல்வார்கள்.
ஒருத்தர் அருமையான கார் ஒன்றை வாங்க ஆசைபட்டார்.அதற்காக குடும்பம் பிள்ளைகள் என அனைத்தையும் மறந்து கடினமாக வேலை செய்தார்.இறுதியாக அவர் அந்த காரை வாங்கி தன் வீட்டின் முன் நிறுத்தி நிம்மதி பெரு மூச்சு விட்டுக்கொண்டார்.
அடுத்த நாள் காலையில் எழுந்து தன் காரை பார்க்க வந்த போது அவருடைய மகள் அந்த புது காரின் மேல் கல்லால் எதையோ கிறுக்கிக்கொண்டிருந்தாள்.அதை பார்த்த அவருக்கு தன் உயிரின் மேல் கிறுக்குவது போல் இருந்தது.ஆத்திரத்தில் அருகில் இருந்த குச்சியை எடுத்து மகளின் கைகளின் மேல் ஆத்திரம் தீர அடித்தார். இந்த செயலால் மகளின் கையே செயல் இழந்து போனது.மீண்டும் கை செயல்படாது மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள்.
அவர் மிக கவலையுடன் தன் வீட்டின் முன் அமர்ந்து அந்த காரை பார்த்துக் கொண்டிருந்தார்.தற்செயலாக மகள் கிறுக்கிய பகுதியை உற்று பார்க்கும் போது அது ஏதோ எழுத்துபோல் இருந்தது.ஓடி போய் அருகில் நின்று பார்த்தார்.
அதில் I love you dad என எழுதி இருந்தது.அவர் நொடிந்து போய்விட்டார்.
இதை தான் புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என சொன்னார்.ஆசை ஏதாவது ஒரு வகையில் துன்பத்தில் போய் முடிகிறது.ஆசைபடாமல் எப்படி வாழ்வது என நீங்கள் கேட்கலாம்.
வாழ்க்கையை இரண்டு வகைகளில் வாழலாம்.ஒன்று தேர்ந்தெடுப்பது(choice) மற்றொன்று முக்கியத்துவம் அளிப்பது(preference).எப்போதும் முக்கியத்துவமளித்து வாழுங்கள்.தேர்ந்தெடுத்து வாழாதீர்கள்.
அப்படி தேர்ந்தெடுக்கும் போது உங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.தேர்ந்தெடுத்த பொருள் இல்லாமல் உங்களால் வாழமுடியாதா?அதன் மேல் உயிரையே வைத்திருக்கிறீர்களா?இரண்டுக்கும் ஆமாம் என்றால் நீங்கள் ஆசைபடுகிறீர்கள் என்று அர்த்தம்.அது உங்களுக்கு தேவையில்லை.
8:24 AM
கதை நேரம்
கதை நேரம் ---- வாயால் வந்த வினை
Marc
வாழ்க்கையில் பெரிய பிரச்சனையே பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அல்லது பேசாமல் இருக்க வேண்டிய இடத்தில் உளறிக்கொட்டுவது தான்.
சில நேரங்களில் உண்மையை மறைக்க ஒரு பொய் சொல்வோம்.அப்புறம் பொய்யை மறைக்க இன்னொரு பொய். இப்படியே போய் பொய்யே வாழ்க்கை ஆகிவிடும்.
ஒரு ஊரில் பாலம் கட்டி இருந்தார்கள்.பெரிய விழா எடுத்து அந்த ஊர் அமைச்சரை அந்த பாலத்தை திறக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
அதனால் நிறைய போக்குவரத்து துறை அதிகாரிகளும் பொதுமக்களும் வந்திருந்தனர்.
ஒரு போட்டி ஒன்னும் அறிவிச்சாங்க.அதாவது நூறாவதா அந்த பாலத்தை கடக்குற வண்டிக்கு பணமுடிப்பை கொடுக்க போறதா அறிவிச்சாங்க.
அமைச்சரும் பாலத்தை திறந்து வச்சு முதல் ஆள பாலத்தை கடந்து போனாரு.அவரை தொடர்ந்து ஒவ்வொரு காரா கடக்க ஆரம்பிச்சது.விழா ஏற்பாடு செஞ்சவங்க ஒவ்வொரு காரா எண்ண ஆரம்பிச்சாங்க.
நூறாவத வந்த அந்த கார் டிரைவரிடம் போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த பரிசை என்ன செய்யப்போகிறீர்கள்? என கேட்டனர்.
உடனே அந்த ஆள் இந்த பணத்தை வைத்து டிரைவிங் லைசென்ஸ் எடுக்க போறேன்னு சொன்னான்.
என்னது நீ டிரைவிங் லைசென்ஸ் இல்லாமதான் வண்டி ஓட்டிட்டு இருக்கியானு அதிகாரிகள் அதிர்ச்சியுடன் கேட்டனர்.
காருக்குள்ள அமர்ந்திருந்த அவர் மனைவி நிலைமையை புரிஞ்சிகிட்டாங்க.
கணவரை காப்பாத்தியாகனும். உடனே அவங்க சொன்னாங்க
ஐயா இவர் சொல்றதை நம்பாதிங்க.குடிச்சிட்டு உளறுறாரு.
ஓ இந்த ஆளு குடிக்க வேற செஞ்சிருக்கானா?
காருக்குள்ள இருந்த அந்த ஆளோட அப்பாக்கு காது கேட்காது.ஆனா ஏதோ சிக்கல் மட்டும் புரிஞ்சது.
அப்பவே சொன்னேன் கார திருடாதனு.இவன் கேட்கவே இல்லைனு மெதுவா முணங்க ஆரம்பித்தார்.
இது திருட்டுகாரானு கேட்டு அதிகாரிகள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்..
எப்படி பேசக்கூடாது என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம்.
சில நேரங்களில் உண்மையை மறைக்க ஒரு பொய் சொல்வோம்.அப்புறம் பொய்யை மறைக்க இன்னொரு பொய். இப்படியே போய் பொய்யே வாழ்க்கை ஆகிவிடும்.
ஒரு ஊரில் பாலம் கட்டி இருந்தார்கள்.பெரிய விழா எடுத்து அந்த ஊர் அமைச்சரை அந்த பாலத்தை திறக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
அதனால் நிறைய போக்குவரத்து துறை அதிகாரிகளும் பொதுமக்களும் வந்திருந்தனர்.
ஒரு போட்டி ஒன்னும் அறிவிச்சாங்க.அதாவது நூறாவதா அந்த பாலத்தை கடக்குற வண்டிக்கு பணமுடிப்பை கொடுக்க போறதா அறிவிச்சாங்க.
அமைச்சரும் பாலத்தை திறந்து வச்சு முதல் ஆள பாலத்தை கடந்து போனாரு.அவரை தொடர்ந்து ஒவ்வொரு காரா கடக்க ஆரம்பிச்சது.விழா ஏற்பாடு செஞ்சவங்க ஒவ்வொரு காரா எண்ண ஆரம்பிச்சாங்க.
நூறாவத வந்த அந்த கார் டிரைவரிடம் போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த பரிசை என்ன செய்யப்போகிறீர்கள்? என கேட்டனர்.
உடனே அந்த ஆள் இந்த பணத்தை வைத்து டிரைவிங் லைசென்ஸ் எடுக்க போறேன்னு சொன்னான்.
என்னது நீ டிரைவிங் லைசென்ஸ் இல்லாமதான் வண்டி ஓட்டிட்டு இருக்கியானு அதிகாரிகள் அதிர்ச்சியுடன் கேட்டனர்.
காருக்குள்ள அமர்ந்திருந்த அவர் மனைவி நிலைமையை புரிஞ்சிகிட்டாங்க.
கணவரை காப்பாத்தியாகனும். உடனே அவங்க சொன்னாங்க
ஐயா இவர் சொல்றதை நம்பாதிங்க.குடிச்சிட்டு உளறுறாரு.
ஓ இந்த ஆளு குடிக்க வேற செஞ்சிருக்கானா?
காருக்குள்ள இருந்த அந்த ஆளோட அப்பாக்கு காது கேட்காது.ஆனா ஏதோ சிக்கல் மட்டும் புரிஞ்சது.
அப்பவே சொன்னேன் கார திருடாதனு.இவன் கேட்கவே இல்லைனு மெதுவா முணங்க ஆரம்பித்தார்.
இது திருட்டுகாரானு கேட்டு அதிகாரிகள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்..
எப்படி பேசக்கூடாது என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம்.
7:38 AM
கதை நேரம்
கதைகேட்டு நீதி சொல்லுங்கள் - 2
Marc
ஒரு நாள் கடவுள் பூமிக்கு வர ஆசைப்பட்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார்?வெளியே வந்த ஆளிடம் நான் தான் கடவுள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்?வீட்டுக்காரர் மிகுந்த கடுப்புடன் இவ்வாறு கூறினார் "முன்பு எல்லாம் கடவுளின் பெயரைச் சொல்லி பிச்சையெடுத்தீர்கள்!இப்போ கடவுள் என்று கூறி பிச்சையெடுக்க ஆரம்பித்து விட்டீர்களா? என்று சீறினார்.கோபம் கொண்ட கடவுள் கீழி இறங்கி ரோட்டில் நடக்க ஆரம்பித்தார்.வழியில் அவர் இரு குடிகார குடிமகன்களிடம் நான் தான் கடவுள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்?அதற்கு ஒருவன் சரிதான் போ நாங்கள் யார் என்று நினைத்தாய்? நான் யேசு!இவன் முகமது!என்று கூறினான்.நொந்தே போய்விட்டார் கடவுள்!!
இதன் நீதி : ?????
இதன் நீதி : ?????
3:04 PM
எனது பக்கங்கள்
,
கதை நேரம்
Subscribe to:
Posts
(
Atom
)