அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

Showing posts with label காலம். Show all posts
Showing posts with label காலம். Show all posts

காலம்

காலமென்னும் ஆற்றினிலே
கூழாம் கற்களாய்
ஓடுகின்ற வாழ்க்கையிது
யார் சொல்லியும் கேட்பதில்லை
யாருக்கும் நிற்பதில்லை
விழித்தவன் கரை சேர்கிறான்
மற்றவன் அடித்துச் செல்லப்படுகிறான்

முன்னது முடிந்தது
பின்னது வரப்போவது
இரண்டுக்குமிடையில்
ஒரு புள்ளி ஊஞ்சலாட்டம்
இந்த ஓடம்
எல்லையில்லா வெளியில்
எல்லை தெரியாமல்
அசைந்துகொண்டே முடிகிறது.

சுருக்கவும் வழியில்லை
நீட்டவும் வழியில்லை
கரைபுரண்ட வெள்ளமாய்
கண்ணுக்கு சிக்கமால்
பலரின் வாழ்க்கையை கரைத்து
கையில் சிக்காமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது.