ஓர் அழகான எழுத்து முயற்சி.

விஸ்வரூபம்

1 comment
சூழ்ச்சி வலையால்
பசுவின் கழுத்தை நெறித்த
பசுந்தோல் போர்த்திய
புலியென தீவிரவாதம்.
பசு புனிதம் - அதுபோல்
எல்லா மதமும் புனிதம்.
பசுவை வணங்கும் நாம்
பசுந்தோல் போர்த்திய
புலிகளை வணங்குவது தகுமோ?
மதத்தை வணங்கலாம்.
ஆனால் அதன் பின்னால்
ஒளிந்து வாழும்
மக்களை கொல்லும்
மனித பீரங்கிகளை
துடைத்து  துடைத்து 
வணங்கவா முடியும்?
தவறுகளை சுட்டிக்காட்டும்
விரல்களை வெட்ட ஆரம்பித்தால்
உலகமும் நரகம்.
அதே ஏற்றுக்கொண்டால்
நரகமும் சொர்க்கம்.
மனிதன் மனிதானாக
இருக்கவே மதம்.
மதம் கருணையாகும் போது
கடவுள் ஆகிறது.
மதம் கருகும் போது
மிருகமாகிறது.
எங்கே கொள்கையும்
பாதையும் தவறப்படுகிறதோ
அங்கே மதம் கருகுகிறது.
கருகுவதன் காரணத்தை
சுட்டிக்காட்டி ஆளில்லை.
போராட ஆளில்லை.
களை வெட்ட ஆளில்லை.
ஆனால் சுட்டிகாட்டுபவனை
வெட்டி எறிய கூட்டமுண்டு.
குறைகளை ஏற்காத,சகிக்கமுடியாத
எல்லாம் டார்வின் பரிணாமப்படி
வாழ்ந்தாக சரித்திரம் இல்லை.
மாற்றமென்பது நம்மிடம் வரவெண்டியது
அடுத்தவரிடம் இல்லை.
மாறுவோம் மனிதனாவோம்.







1 comment :

  1. NALLA KAVITHAI.ERPARILLAI.IDHU TAMILNATTIN THALAIELUTHU.PAARI

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..