ஓர் அழகான எழுத்து முயற்சி.

மின்சாரமில்லா மாலைவேளை

13 comments
மின்சாரமில்லா மாலைவேளை
மின்சாரமில்லா மாலைவேளை
அழகானதொரு மாலைவேளை
அழகின்மேல் அழகூட்ட
அரசாங்கம் மின்சாரத்தை அணைக்க
என்னவளும் நானும்
பேருந்து நிறுத்தத்தில்
அலவளாவிக் கொண்டிருந்தோம்
நிலா ஒளியில்
பறவைகள் கூட்டிற்கு நகர
புழுக்க வாடையில்
மக்கள் வீட்டிலிருந்து வெளியேற
புலம்பலிலும் புழுக்கத்திலும்
மாலை நகர்ந்து கொண்டிருந்தது
இருட்டிலும் அவள்
கன்னங்கள் பளபளக்க
நானோ குவித்த உதடுகளுடன் - அவள்
கன்னத்தை நோக்கி நகர
சட்டென மின்சாரம் வர
பட்டென அவள் பார்க்க
மின்னலென ஞாபகம் வந்தது
அரசாங்கத்தின் மின்வெட்டு
குறைப்பு தீர்மானம்
உணர்வு போராட்டங்களுக்கிடையே
வெட்கத்தோடு நகர்ந்தது
அந்த மாலைவேளை

மேலும் படிக்க

தனிமை கடற்பயணம்
கதைக்கு காலுண்டா?கத்திரிக்காய்க்கு வாலுண்டா? ( Review )
கவிதையாய் வருவாய்

13 comments :

  1. அனைத்து நன்மைகளிலும் கொஞ்சம் தீமையும்
    அனைத்து தீமைகளிலும் கொஞ்சம் நன்மையும்
    கல்ந்திருப்பதை சொல்லிப் போகும் தங்கள் பதிவு அருமை
    தொடர வாழ்த்துக்கள் (கவிதையைச் சொன்னேன் )

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  2. அப்போ மின்சாரம் போனதற்கு நன்றி சொல்லிங்க போல........

    ReplyDelete
    Replies
    1. அட நீங்க வேற மின்சாரம் போறதுக்கு ரூப் போட்டு திட்டிக்கிட்டு இருக்கோம்.


      தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  3. மின்சார தடையை இப்படியும்
    நேரிடையாக எடுத்துக்கொள்ளலாமோ....

    ReplyDelete
    Replies
    1. வேற வழியில்ல நண்பரே!!

      தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  4. இப்ப மின்சாரம் வந்ததுக்கு கவலையாகியிருக்குமே...?

    ReplyDelete
    Replies
    1. கவல இல்லாமலா!!

      தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  5. மின்சாரம் = சம்சாரம்...என்ன பன்னும்னு யாருக்கும் தெரியாது ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. மாம்ஸ் டயலாக் விட்டு அத்த கிட்ட அடிவாங்கிடாதிங்க?

      தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  6. அப்போ மின்தடை காரணமாக அடிக்கடி இந்த நிகழ்வு தொடரும் போல ....

    ReplyDelete
    Replies
    1. வேற வழியில்லை


      தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  7. ச்ச...மின்சாரம் வராமலே இருந்திருக்கலாம்.இன்னும் அழகான கவிதையும் வந்திருக்கும் !

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..