ஓர் அழகான எழுத்து முயற்சி.

நன்றிசொல் காதலுக்கு

6 comments
காதல் வந்தால்
காற்றின் ஆக்சிஜன்
குறைந்து போகும்
கால்கள் மறையும்
சிறகுகள் முளைக்கும்
காற்றில் பறப்பாய்
இதே உடலில்
மறுபிறவி எடுப்பாய்

கலைக்கண் திறக்கும்
தேடல் ஆரம்பிக்கும்
வார்த்தைகளை வளைப்பாய்
வண்ணங்களில் தோரணம் கட்டுவாய்
மலரை ரசிப்பாய்
நிலவை முட்டுவாய்
இதயத்தை பங்குபிரிப்பாய்
தனி உலகில்
வாழ ஆரம்பிப்பாய்
மண்ணைமுட்டி வெளிவந்த
புதியவிதை போல
பூமியை பார்ப்பாய்

எமனுடன் போட்டிபோட்டு
உலகம் சுற்றிவருவாய்
கண்ணில் கண்ட
கற்களை சிலையாக்குவாய்
ஒளியின் வேகத்தில்
கற்பனை செய்வாய்
பூமி சிறியதாகி
பிரபஞ்சத்தில் பறப்பாய்
அன்பென்னும் பிரபாகம்
பொங்கிப்பெருகி கருணையால்
உலகை நனைப்பாய்
ஆதலால் நன்றிசொல்
காதலுக்கு!

6 comments :

  1. ஆதலினால் காதல் செய்வீர் என அந்தக் கவிஞர்
    அதற்குத்தான் சொன்னாரா ?
    மனம் கவர்ந்த அருமையான பதிவு

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசிப்புக்கு நன்றி.எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

      Delete
  2. வணக்கம் தன்சேகரன்.2008 லேயே பதிவுகள் தொடங்கியிருக்கிறீர்கள்.இப்போதான் காண்கிறேன்.பல நல்ல கவிதைகளைப் படித்தேன் இப்போ.தொடருங்கள் இன்னும்.இனிய தைத்திருநாள் வாழ்த்துகள் உங்களுக்கு !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசிப்புக்கு நன்றி

      Delete
  3. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  4. கவிதைக்காகவேனும் காதலித்துப்பார்க்கிரேன்..

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..