ஓர் அழகான எழுத்து முயற்சி.

தமிழனின் பொங்கல்

4 comments
மேகம் மழைபொழிய
நிலமெல்லாம் ஈரமாக
கையில் கலப்பை எடுத்து
கம்பீர காளை பூட்டி
இடுப்பில் கோவணம் கட்டி
ஆழ உழுத்திட்டோம்
மார்கழியில் கதிரறுக்க

மாரியம்மா துணையிருக்க
மும்மாரி மழைபொழிய
கதிரவன் துணையிருக்க
மார்கழியும் வந்ததடி
மனசெல்லாம் குளிர்ந்ததடி
பசித்த வயித்துக்கெல்லாம்
வயிறாற சோறுபோட
பூமித்தாய் கொடுத்ததடி

தையும் வந்ததடி
பொங்கலும் வந்ததடி
பொங்கலாம் பொங்கல்
நாளுநாள் பொங்கல்
அள்ளிகொடுத்த அன்னைக்கு
தமிழனின் பொங்கல்

பொங்கலாம் பொங்கல்
போகிப் பொங்கல்
பசியெல்லாம் போக்கி
மனஅழுக்கெல்லாம் போக்கி
பழசெல்லாம் பறந்துவிட
புதுவெள்ளம் பாய்ந்துவிட
மக்கள் குறைபோக்க
தமிழனின் பொங்கல்
போகிப் பொங்கல்

பொங்கலாம் பொங்கல்
தைப் பொங்கல்
அன்னம் கொடுத்த
பூமி அன்னைக்கு
நன்றி தெரிவிக்கும்
தமிழனின் பொங்கல்
தைப் பொங்கல்

பொங்கலாம் பொங்கல்
மாட்டுப் பொங்கல்
களத்து மேட்டிலும்
ஜல்லி கட்டிலும்
துள்ளி விளையாடிய
காளைகளுக்கு
நன்றி தெரிவிக்கும்
தமிழனின் பொங்கல்
மாட்டுப் பொங்கல்

பொங்கலாம் பொங்கல்
கணுப் பொங்கல்
உற்ற சுற்றங்களை
வரவேற்றும்
களைபிடுங்கி
நாத்து நட்டு
கதிரறுத்து சுமைதூக்கிய
பெண்டீருக்கும்
நன்றி தெரிவிக்கும்

தமிழனின் பொங்கல்
கணுப் பொங்கல்

பொங்கலும்தான் பொங்குது
சந்தோஷம் பொங்குது
பசித்த உயிர்க்கெல்லாம்
சந்தோஷம் பொங்குது
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்


அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

4 comments :

  1. பொங்கல் திரு நாள் சிறப்புக் கவிதை
    அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசிப்புக்கு நன்றி.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
      அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

      Delete
  2. கவிதை நன்று !
    உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசிப்புக்கு நன்றி.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
      அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..