ஓர் அழகான எழுத்து முயற்சி.

என் கேள்வி ?

No comments
கேள்வியொன்னு கேள்வியொன்னு
மண்டைக்குள்ள நிக்குது
அத கேக்கனும் நினைக்கும்போது
நெஞ்சுக்குள்ள விக்குது
வந்த இடமும் தெரியல
போகும் இடமும் தெரியல
நடுவுல நின்னுக்கிட்டு
நானும் கேள்வி கேக்குறேன்

கட்டிக் கட்டா புத்தகமுண்டு
கடன் வாங்கிய அறிவுமுண்டு
புத்திசாலினு பேருமுண்டு
நல்லவனா நடிப்பும் உண்டு
நடிக்கிறேனு தெரிஞ்சிருந்தும்
நடிக்காம இருந்ததில்ல
பிடிக்கலேனு தெரிஞ்சிருந்தும்
பிடிச்சமாறி நடிச்சதுண்டு

நண்பன் இருந்தாலும்
உண்மையாக நானுமில்ல
காதல் இருந்தாலும்
அன்பாக இருக்கவில்ல
உண்மை இருந்தாலும்
உண்மை சொல்லி பழக்கமில்ல
கடவுளே வந்தாலும்
பிச்சையெடுக்காத நாளில்ல

ஒன்னும் இல்லேநாளும்
கொழுப்புக்கு பஞ்சமில்ல
மண்ண தின்னாலும்
வெறிக்கு பஞ்சமில்ல
கட்டைல போனாலும்
சபலத்துக்கு பஞ்சமில்ல
நானும் சாகும்போது
ஊருக்குள்ள அழுவாரோ?
நல்லவன் போயிட்டானு
ஊருக்குள்ள சொல்வாரோ?
நானும் அத கேட்பேனோ?
சந்தோஷமா போவேனோ?


No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..