அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

கதை நேரம் : அழகிய மனங்களுக்கான அந்த மாதிரி கதைகள்



ஒரு பேராசிரியர் உடற்கூறு வகுப்பில் "உணர்ச்சி தீண்டுதலில் பத்து மடங்கு பெரிதாகும் மனித உறுப்பு  எது என்று?" ஒரு மாணவியிடம் கேட்டார்.

உடனே அந்த மாணவி நாணத்துடன் "இதற்கு நான் பதில் கூறமாட்டேன் என்றாள்".

அந்த பேராசிரியர் அருகில் இருந்த மாணவனை கேட்டார்.

அவன் "கண்ணின் கருவிழி" என்றான்.

பேராசிரியர் மாணவியை பார்த்து கூறினார்.

உனது குழப்பம் மூன்று விசயங்களை காட்டுகிறது.ஒன்று "நீ பாடங்களை சரியாக படிப்பதில்லை".இரண்டு "உன் மனம் அழுக்கானது".மூன்று "நீ மிகவும் ஏமாற்றத்திற்குள்ளாவாய்".


----------------------------------------------------------------&&---------------------------------------------------


தன்னுடைய 70 வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாட விரும்பிய அந்த முதியவர் மருத்துவமனைக்கு வந்தார்.

டாக்டரை அணுகி "டாக்டர், இன்று இரவு ஒரு பெண்ணுடன் தங்கப்போகிறேன்.அவளிடம் ஒரு இளைஞனைப்போல் நடந்து கொள்ள விரும்புகிறேன்.ஏதாவது மருந்து கொடுங்கள்" என்றார்.

அவரது ஆசையை கண்டு அனுதாபப்பட்டு டாக்டரும் சில மாத்திரைகளை எழுதிக்கொடுத்தார்.

நடு இரவில் அந்த டாக்டர் ஆர்வத்தை கட்டுப்படுத்தமுடியாம ல் அந்த முதியவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டார்: "என்னுடைய மாத்திரைகள் ஏதும் வேலை செய்ததா?"

"ஆகா! பிரமாதம்! இதுவரை எழு தடவை ஆகிவிட்டது!"என்று உற்சாகமாக கூறினார் முதியவர்.

"அப்படியா! ரொம்ப சந்தோசம்! ஆமாம், அந்த பெண் எப்படி இருக்கிறாள்?" என்றார் டாக்டர்?

அந்த பெண்ணா? அவள் இன்னும் இங்கு வரவில்லையே. என்றார் முதியவர்.


-------------------------------------------------------------&&---------------------------------------------------------

மேலே சொல்லப்பட்ட கதைகள் மனம் காட்டும் கண்ணாடிகள். நீங்கள் இந்த கதைகளை படிக்கும் போது ஆழமாக உங்கள் மனங்களை பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்னை திட்ட நினைத்தால் அதற்கு நீங்கள் கொண்ட தவறான புரிதலாக கூட இருக்கலாம். நீங்கள் சிரித்துக்கொண்டால் நானும் சிரித்துக்கொள்வேன்.ஏனென்றால் நாம் இருவரும் சரியான புரிதல் உள்ளவர்களாக இருக்கலாம்.


மேலும் கதைகளுக்கு படியுங்கள்.

  1. ஆசை 
  2. வாயால் வந்த வினை


சிந்தனை நேரம் : உடல் எடையும் ,குறைக்கும் வழிமுறைகளும்


இன்றைய சூழலில் பல ஆயிரம் கோடி லாபம் தரும் தொழில் எது என்றால் அது உடல் எடையை குறைக்கும் கருவிகளை,மாத்திரைகளை தயாரிக்கும் தொழில் தான்.ஏனென்றால்  மேற்கில் மூன்றில் ஒரு பங்கு ஆணும்,பெண்ணும் அதிக எடையுடன்(overweight) இருப்பதாக ஒர் ஆராய்ச்சி சொல்கிறது.அதுமட்டுமில்லாமல் இயல்பான எடையில் இருப்பவர்கள் கூட மனதளவில் தாங்கள் அதிக எடையுடன் இருப்பதாக நினைத்து கவலைப்படுகிறார்கள்.

 குறிப்பாக ஆண்களைவிட பெண்கள் தாங்கள் அதிக எடையில் இருப்பதாக நினைத்து கவலைப்படுகிறார்கள்.டாக்டர் ஜெப்ரி என்பவர் இரண்டாயிரம் பேரிடம் எடுத்த  ஒரு சர்வேயில் 72 சதவீதம் பெண்கள்  உணவு கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டினி(diet) கிடப்பதாகவும் ,44 சதவீத ஆண்கள் இயல்பான எடையில் இருப்பதாகவும் கூறிவுள்ளார்.

பட்டினி இருப்பது இன்று ஒரு நாகரீகமாகிவிட்டது.உண்மையில் இது நீண்டகாலம் நீடிக்காமல் மனஅழுத்தத்தில் கொண்டுபோய்விடுகிறது.இதில் வேதனை தரும் விஷயம் பதினைந்து வயதிற்குட்பட்ட மூன்றில் ஒரு பள்ளி குழந்தை உடல் எடையை காக்கிறேன் என்று பட்டினி கிடக்கிறது.

நான் குண்டாக(Obesity) இருக்கிறேன்.அதிக எடையில் அசிங்கமாக இருக்கிறேன்,இது போன்ற மன அழுத்தங்கள் தோன்றி பட்டினி கிடந்து,மருந்து சாப்பிட்டு வாழ்வை சீரழிக்கின்றன.உண்மையில் மன அழுத்தம் உள்ளவர்கள் தான் அதிகமாக உண்டு உடல் எடையினால் அவதிப்படுகிறார்கள்.

இவற்றில் இருந்து வெளியேறி ஆரோக்கியமான உடல் எடையை எப்படி தக்கவைப்பது?

  • நாம் எல்லா விசயத்தையும் முதலில் மனதளவில் புரிதளோடு தொடங்க வேண்டும்.
  •  முதலில் நாம் அதிக எடையுடன் இருக்கிறோம் என்ற மன அழுத்தத்தில் இருந்து வெளியேருங்கள்.இதை எப்படி செய்வது?
  • உங்கள் எடை கூடியதற்கு நீங்கள் நீண்டகாலம் மேற்கொண்ட தவறான உணவு பழக்கவழக்கம் தான் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். 
  • அதே போல் உடல் எடைகுறையவும் நீண்டகாலம் ஆகும் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.
  • உடலின் செயல்முறைகளை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்.உண்மையில் நம் உடல் ஓர் அற்புதம் என்பதை உணருங்கள்.
  • நாம் பட்டினி கிடக்கும் போதோ அல்லது பத்தியம் இருக்கும் போதோ உடல் இயங்க தேவையான ஆற்றல் குறைந்து உடல் தன் இயக்கத்தை மெதுவாக்குகிறது,இது கொழுப்பை கரைக்கும் செயலையும் மெதுவாக்குகிறது. நீங்கள் நன்றாக சாப்பிடும் போது கொழுப்பை கரைக்கும் உடலின் செயல் துரிதமாகிறது.எனவே நன்றாக சாப்பிடுங்கள்.
  • அறிவியல்ஆய்வுகள் சொல்கின்றன வருடத்திற்கு ஒரு மனிதன் அதிகபட்சமாக ஆறுகிலோ வரைக்கும் குறைக்கலாம் என்று. நீங்களோ உங்கள் நண்பரோ ஆறுகிலோவை ஒரு மாதத்தில் குறைத்தால் பக்கவிளைவுகள் நிச்சயம்.அடுத்தடுத்த மாதத்தில் மீண்டும் உடல் எடை வேகமாக கூட ஆரம்பிக்கும்
  • எந்த மருந்தும் உடல் எடையை நீண்ட நாள் குறைத்து தக்கவைக்க முடியாது என்பதை உணருங்கள்.
  • இரவில் கொழுப்பு உணவை தவிர்த்து விடுங்கள்.ஏனென்றால் இரவில் உடல் தன் இயக்கத்தை குறைத்து உணவை கொழுப்பாக மாற்றுகிறது.
  • நீண்ட காலம் கடைபிடிக்க முடிந்த ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.உதாரணமாக காலையில் ஐந்து இட்லி,மதியம் இரண்டு கப் உணவு,இரவு ஒரு கப் உணவு அல்லது இரண்டு சப்பாத்தி என்று உடல் உழைப்பிற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
  • சிலர் திரவ உணவுகளை மட்டும் உட்கொள்வதால் உடலுக்கு போதிய ஆற்றல் இல்லாமல் உடனே பசி ஏற்படுகிறது.
  • தண்ணீர் அதிகம் குடியுங்கள்.ஏனென்றால் தண்ணீர் அதிகம் குடிக்காமல் பசிக்கும் தாகத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடுகிறது.
  • உணவை பற்றியும்,உடல் எடை பற்றியும் அதிகம் சிந்திப்பதை நிறுத்துங்கள்.
  • உணவை மெதுவாகவும்,அணுஅணுவாகவும் ரசித்து சாப்பிடுங்கள்.
  • ஒரு நாள் அதிகம் சாப்பிட்டுவிட்டால் கவலைப்படுவதை விட்டு அடுத்த நாள் இரண்டி நிமிடம் அதிகம் உடற்பயிற்சி செய்து குறைத்துக் கொள்ளலாம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
  • யோகா,தியானம் போன்ற நல்ல விசயங்களில் கவனம் செலுத்துங்கள்.
  • இறுதியாக உடல் எடை குறையாவிட்டால் உங்களை நினைத்து கவலைப்படுவதை விட்டு, நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
 மேலும் வாசிக்க

http://www.fatmatters.com/top-10-dieting-mistakes/
http://www.fatmatters.com/tag/psychology-of-dieting/
http://www.fatmatters.com/how-to-stay-committed-to-losing-weight/


கதைநேரம் : ஆசை



இந்த உலகமே ஆசை என்னும் சக்கரத்தின் மீது ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த உலகத்தில் ஆசை இல்லாத மனிதனே இல்லை.எல்லோருக்கும் அவர் அவர்களின் வசதியை பொருத்து ஆசை இருக்கிறது.ஆனால் ஆசையே துன்பத்திற்கு காரணம் என புத்தர் சொல்கிறார்.அப்போ ஆசைபடுவது தவறா?

இந்த கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள ஆசை பற்றிய கொஞ்சம் புரிதல் வேண்டும்.ஆசை என்பது என்ன?

ஆசை என்பது நம் மனதை திருப்திபடுத்தும் பொருளை அடைவது அல்லது செயலை செய்வது.ஒரு கார் அழகாக இருக்கிறது என்பதால் அதன் மீது ஆசைபடலாம் அல்லது அது நம்மிடம் இருந்தால்தான் நாம் சமுதாயத்தில் பெரிய மனிதனாக தெரிவோம் என்ற கெளரவத்திற்காக ஆசைபடலாம்.இது மட்டுமா.நாம் ஆசைபட்ட பொருளின் மீது நம் உடல்  பொருள் ஆன்மா என் எல்லாவற்றையும் வைத்து விடுகிறோம்.

உண்மையில் மனிதன் தன் ஆன்மாவையும் உயிரையும் புறப்பொருளின் மீது வைக்க  நினைப்பதுதான் ஆசைக்கு உண்மையான அர்த்தம்.

சரி ஆசை எப்படி துன்பத்திற்கு காரணமாக முடியும்?

ஆசை வந்தவுடன் நாம் கனவுகான ஆரம்பிக்கிறோம்.அவை செயல்களாக மாற ஆரம்பிக்கின்றன.ஆசை நிறைவேறிய பின் ஆசைபட்ட பொருளின் மீதான ஈர்ப்பு குறைய ஆரம்பிக்கிறது.இதற்காகவா இவ்வளவு போராடினோம் என குற்ற உணர்வு ஆரம்பிக்கும்.

சில நேரம் ஆசையை நிறைவேற்ற தவறான செயல்களை செய்ய ஆரம்பித்து வாழ்க்கையையே தொலைத்துவிடுகிறோம்.சில ஆசைகளினால் வாழ்க்கையை இயல்பாக வாழமுடியாமல் இயந்திரமாக வாழ ஆரம்பித்துவிடுகிறோம்.

உண்மையில் ஒரு ஆசையின் பின் மற்றொரு ஆசை என ஒன்றன் பின் ஒன்றாக நம் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது.ஆசையின் காரணமாக கடனாளியாக,குற்றவாளியாக, இயல்பு வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம். ஆசை ஆசையாக காதலித்து வாழ்க்கையை தொலைத்தவர்கள்தான் இங்கு அதிகம்.

உண்மையில் ஆசை நம் இயல்பு வாழ்க்கை தின்று விடுகிறது.இதற்கு அருமையான கதை ஒன்று சொல்வார்கள்.

ஒருத்தர் அருமையான கார் ஒன்றை வாங்க ஆசைபட்டார்.அதற்காக குடும்பம் பிள்ளைகள் என அனைத்தையும் மறந்து கடினமாக வேலை செய்தார்.இறுதியாக அவர் அந்த காரை வாங்கி தன் வீட்டின் முன் நிறுத்தி நிம்மதி பெரு மூச்சு விட்டுக்கொண்டார்.

அடுத்த நாள் காலையில் எழுந்து தன் காரை பார்க்க வந்த போது அவருடைய மகள் அந்த புது காரின் மேல் கல்லால் எதையோ கிறுக்கிக்கொண்டிருந்தாள்.அதை பார்த்த அவருக்கு தன் உயிரின் மேல் கிறுக்குவது போல் இருந்தது.ஆத்திரத்தில் அருகில் இருந்த குச்சியை எடுத்து மகளின் கைகளின் மேல் ஆத்திரம் தீர அடித்தார். இந்த செயலால் மகளின் கையே செயல் இழந்து போனது.மீண்டும் கை செயல்படாது மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள்.

அவர் மிக கவலையுடன் தன் வீட்டின் முன் அமர்ந்து அந்த காரை பார்த்துக் கொண்டிருந்தார்.தற்செயலாக மகள் கிறுக்கிய பகுதியை உற்று பார்க்கும் போது அது ஏதோ எழுத்துபோல் இருந்தது.ஓடி போய் அருகில் நின்று பார்த்தார்.

அதில் I love you dad என எழுதி இருந்தது.அவர் நொடிந்து போய்விட்டார்.

இதை தான் புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என சொன்னார்.ஆசை ஏதாவது ஒரு வகையில் துன்பத்தில் போய் முடிகிறது.ஆசைபடாமல் எப்படி வாழ்வது என நீங்கள் கேட்கலாம்.

வாழ்க்கையை இரண்டு வகைகளில் வாழலாம்.ஒன்று தேர்ந்தெடுப்பது(choice) மற்றொன்று முக்கியத்துவம் அளிப்பது(preference).எப்போதும் முக்கியத்துவமளித்து வாழுங்கள்.தேர்ந்தெடுத்து வாழாதீர்கள்.

அப்படி தேர்ந்தெடுக்கும் போது உங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.தேர்ந்தெடுத்த பொருள் இல்லாமல் உங்களால் வாழமுடியாதா?அதன் மேல் உயிரையே வைத்திருக்கிறீர்களா?இரண்டுக்கும் ஆமாம் என்றால் நீங்கள்  ஆசைபடுகிறீர்கள் என்று அர்த்தம்.அது உங்களுக்கு தேவையில்லை.






சிந்தனை நேரம் : டிப்பிங் பாய்ன்ட்(tipping point)

ஒரு பொருள் அல்லது செயல் அதன் உச்சகட்ட அளவை எட்டுவதை ஆங்கிலத்தில் டிப்பிங் பாய்ன்ட்(tipping point) என்பார்கள்.சில நேரங்களில் சமுதாயத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் ,சில பொருள்கள் அதன் உச்சகட்ட அளவை எட்ட காரணமாகலாம்.உதாரணமாக விளம்பரம் இல்லாமல் சாதாரணமாக வெளிவரும் ஒரு சிறு முதலீட்டு திரைப்படம் மவுத்டாக்(mouth talk) எனப்படும் வாய்வழி விளம்பரங்களாலும் ,இனணயதள விளம்பரங்களாலும்  அதன் உச்சகட்ட வெற்றியை பெற்று சக்கைபோடு போடும்.ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலும்  டிப்பிங் பாய்ன்ட்(tipping point)க்கு ஒரு சிறந்த உதாரணம். அவர் மக்களிடம் திடீரென்று பிரபலமாகி டெல்லி முதல்வர் ஆகிவிட்டார்.
 
சரி இப்படி திடீரென்று ஒரு பொருள் அல்லது செயல் சந்தையில் பிரபலமாகி அதன் உச்சகட்ட வளர்ச்சியை அடைய காரணம் என்ன?இதை நாம் நம் வளர்ச்சிக்கோ அல்லது நாம் சார்ந்த தொழிலுக்கோ பயன்படுத்த முடியுமா?
கண்டிப்பாக முடியும் .நம்மால் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் சிறு மாற்றங்களை செய்ய முடியுமானால் நாம் உச்சகட்ட அளவு வெற்றியை எட்டமுடியும்.

நாம் முதலில் சொன்ன சிறு முதலீட்டு படத்தை எடுத்துக்கொள்வோம்.படம் வெளியாகி சரியாக 6 மணி நேரம் கழித்து ஒரு பத்து பேர் சேர்ந்தார் போல் படம் நன்றாக இருக்கிறது என்று இணையத்தில் எழுதினால் போதும்.அப்புறம் வாய்வழியாக ஒரு பத்து பேரிடம் படம் சூப்பர் என்று சொன்னால் போதும்.கண்டிப்பாக இது படத்தின் லாபத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை.இதே போல் சில நல்ல படங்கள் கூட மோசமான விமர்சனங்களால் ஓடாமல் கூட போயிருக்கிறது.


இதற்கு காரணம் செயல்களின் பரவும்தன்மை.உண்மையில் ஒவ்வொரு செயலும் வைரஸ் போல் பரவும்தன்மை கொண்டவை.நான் கொட்டாவி என்று சொல்லும் போதும்  சரி அல்லது கொட்டாவி விடும் சத்தத்தை நீங்கள் உங்கள் மொபைலில் பதிவு செய்து கேட்கும் போதும் சரி உங்களுக்கு கொட்டாவி வர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு செயல்களின் பரவும்தன்மை மிக முக்கியமான ஒன்று.


'வதந்திகள்' பரவும்தன்மைக்கு அருமையான உதாரணம்.பிள்ளையார் பால் குடிக்கிறார் என்ற வதந்தி காட்டு தீ போல பரவி எல்லோரும் அருகே உள்ள பிள்ளையார் கோவிலுக்கு  படையெடுத்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.

சில நேரங்களில் சமுதாயங்களில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட மிக பெரிய விளைவை ஏற்படுத்தலாம்.உதாரணமாக இன்று இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் திடீரென அதன் உச்ச அளவை எட்டி இருக்கின்றன.இதற்கு சமுதாயத்தில் ஏற்பட்ட இரண்டு முக்கியமான காரணங்கள் தான்.ஒன்று இணையதளம் சுருங்கி ஒவ்வொருவர் உள்ளங்கைகளிலும் கைபேசியாக அமர்ந்திருப்பது.மற்றொன்று பாலியல் குற்றங்கள் பற்றிய செய்திகள் இணையதளம் மற்றும் செய்திதாள்கள் வழியாக மக்களிடம் வேகமாக பரவுவது.இவை இரண்டும் மக்களிடம் பாலியல் விசயங்களை குறையாமல் பரப்புவதுதான்.

ஒரு தனிமனிதனின் செயல்கள் கூட அவர்கள் வாழ்வில் உச்சகட்ட மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கு  ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் சிறந்த உதாரணம்.அவருக்கும் அன்னஹசாரேவுக்கும் இடையேயான சிறு கருத்து வேறுபாட்டையும்,ஊழலுக்கு எதிரான மக்களின் உறுதியான மனப்பாங்கையும் அவர் வழுவாக பயன் படித்திக்கொண்டார்.டெல்லி முதல்வர் ஆனார்.தன் வாழ்வின் உச்சகட்ட வளர்ச்சியை எட்டிக்கொண்டிருக்கிறார்.

ஒரு நாள் சுப்பர் மார்க்கெட்டில் நூடுல்ஸ் வாங்க போயிருந்தேன்.ஆனால் எந்த கம்பெனி நூடுல்ஸ் வாங்கனு தெரியல.டக்னு மனசு டாப் ராமன்(top raman) னு மனசு சொல்லுச்சு. நான் ஏன் டாப் ராமன் வாங்குனேனு யோசிச்சா! டிவியில தினமும் அந்த கம்பெனி விளம்பரம் தான் ஓடிட்டு இருக்கு.அது என்  மனசுல எப்பவோ பதிஞ்சு போயிருந்தது. நான் எதை வாங்கனு குழப்பமா இருந்த போது எனக்குள்ள இருந்த டாப் ராமன்(top raman) விளம்பரம் அதோட வேலைய காட்டிருச்சி.ஒரு விளம்பரம் எப்படி எல்லாம் வேலை செய்யுது பாருங்க.


வாழ்க்கையில் அல்லது தொழிலில் வெற்றி பெற நாம் பெரிய மாற்றங்கள் செய்ய தேவையில்லை.சிறு மாற்றங்களே போதும் என்பதை சொல்வது தான் இந்த டிப்பிங் பாய்ன்ட்(tipping point).

பெண்களென்னும் பட்டாம்பூச்சிகள்

பெண்கள்
அழகான பட்டாம்பூச்சிகள்,
அழுக்கான பூமியில்
இங்கும் அங்கும் பறந்து
வண்ணம் அடிக்கும்
அழகியல் சிற்பிகள்.

பெண்கள்
மழைச்சாரல்கள்,
வறண்ட மனங்களை
ஈரமாக்கும்
வெள்ளி தேவதைகள்.

பெண்கள்
இசைகீதங்கள்,
இதயங்களை கரைக்கும்
மூங்கில் குழலோசைகள்.

பெண்கள்
சுகமான கனவுகள்,
சஞ்சலமான இரவுகளை
சுகமாக்கும் மெத்தைகள்.

பெண்கள்
தேவதைகள்,
நம்மை சுற்றி
எப்போதும் பார்க்கமுடிந்த
பூமி வாழ் தெய்வங்கள்.

மகளிர் தின வாழ்த்துகள்..............

கதை நேரம் ---- வாயால் வந்த வினை

வாழ்க்கையில் பெரிய பிரச்சனையே பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அல்லது பேசாமல் இருக்க வேண்டிய இடத்தில் உளறிக்கொட்டுவது தான்.
சில நேரங்களில் உண்மையை மறைக்க ஒரு பொய் சொல்வோம்.அப்புறம் பொய்யை மறைக்க இன்னொரு பொய். இப்படியே போய் பொய்யே வாழ்க்கை ஆகிவிடும்.






ஒரு ஊரில் பாலம் கட்டி இருந்தார்கள்.பெரிய விழா எடுத்து அந்த ஊர் அமைச்சரை அந்த பாலத்தை திறக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

அதனால் நிறைய போக்குவரத்து துறை அதிகாரிகளும் பொதுமக்களும் வந்திருந்தனர்.

ஒரு போட்டி ஒன்னும் அறிவிச்சாங்க.அதாவது நூறாவதா அந்த பாலத்தை கடக்குற  வண்டிக்கு பணமுடிப்பை கொடுக்க போறதா அறிவிச்சாங்க.

அமைச்சரும் பாலத்தை திறந்து வச்சு முதல் ஆள பாலத்தை கடந்து போனாரு.அவரை தொடர்ந்து ஒவ்வொரு காரா கடக்க ஆரம்பிச்சது.விழா ஏற்பாடு செஞ்சவங்க ஒவ்வொரு காரா எண்ண ஆரம்பிச்சாங்க.

 நூறாவத வந்த அந்த கார் டிரைவரிடம் போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த பரிசை என்ன செய்யப்போகிறீர்கள்? என கேட்டனர்.

உடனே அந்த ஆள் இந்த பணத்தை வைத்து டிரைவிங் லைசென்ஸ் எடுக்க போறேன்னு சொன்னான்.


என்னது நீ டிரைவிங் லைசென்ஸ் இல்லாமதான் வண்டி ஓட்டிட்டு இருக்கியானு அதிகாரிகள் அதிர்ச்சியுடன் கேட்டனர்.

காருக்குள்ள அமர்ந்திருந்த அவர் மனைவி நிலைமையை புரிஞ்சிகிட்டாங்க.

கணவரை காப்பாத்தியாகனும். உடனே அவங்க சொன்னாங்க

ஐயா இவர் சொல்றதை நம்பாதிங்க.குடிச்சிட்டு உளறுறாரு.

ஓ இந்த ஆளு குடிக்க வேற செஞ்சிருக்கானா?

காருக்குள்ள இருந்த அந்த ஆளோட அப்பாக்கு காது கேட்காது.ஆனா ஏதோ சிக்கல் மட்டும் புரிஞ்சது.

அப்பவே சொன்னேன் கார திருடாதனு.இவன் கேட்கவே இல்லைனு மெதுவா முணங்க ஆரம்பித்தார்.

இது திருட்டுகாரானு கேட்டு அதிகாரிகள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்..

எப்படி பேசக்கூடாது என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம்.

மனுநீதி

அப்பாவியை தூக்கிலிட்டு,
நீதி சாவதில்லையென்று,
மார்தட்டிக்கொண்டார்கள்
நீதியரசர்கள்.

இதயத்திற்குள் போராட்டம்

எனக்கு பிடித்த
புத்தகத்தை,
என் குழந்தை
கிழிக்கும் போது,
என் இதயம்
அணி பிரிந்து
சண்டையிடுவதை
உணர்கிறேன்.

உயர்பரிமாண(Higher dimension) பூனை

பூனை நக்க
பாற்கடலும் வற்றுமோ?
வினவினான் ஒருவன்?

உயர்பரிமாண(Higher dimension)
பூனையென்றால்
பிரபஞ்சத்தையே நக்கலாம்
என்றேன்!!

எதார்த்த கணவன்

நிலவிற்கு 
ராக்கெட் அனுப்பிவிட்டு, 
வீட்டிற்கு வந்தவனிடம்
 மனைவி சொன்னாள்? 
நேற்று வாங்கி வந்த
வெண்டைக்காய்
 சூத்தையென்று.