ஓர் அழகான எழுத்து முயற்சி.

உன்னை நான் பார்த்த பின்

2 comments
உன்னை நான் பார்த்த பின்
முன்பு போல் இல்லையே!
என்னையே கேட்கிறேன்
எங்கு நான் தொலைந்தேனோ?

மண்ணிலே பிறந்தேனோ?
மழையிலே கரைந்தேனோ?
காற்றிலே கலந்தேனோ?
கூந்தல் வாசம் நுகர்ந்தேனோ?

கால தூரம் கடந்தேனோ?
காம ஏக்கம் உணர்ந்தேனோ?
சொர்க்கமே சென்றாலும் உன்
பிரிவு ஏக்கம் கொல்லுதடி.

உன்னையென்று பார்த்தேனோ?
உயிரை தொலைத்துவிட்டேனே.
கண்ணிழந்த குருடர்கள்
யானை தடவி பார்ப்பது போல்,
கண்ணில் கண்ட பொருளெல்லாம்
உன்னை பார்க்க நினைக்கிறேன்.

மொட்டைமாடி போகிறேன்.
ஒற்றைக்காலில் நிற்கிறேன்.
தனிமையோடு பேசுகிறேன்.
தவமாய் கிடக்கிறேன்.

2 comments :

  1. கடைசி para வுக்கு முந்திய para வை எடுத்து end ஆ வச்சா சும்மா நச்சு இருந்திருக்கும்னு தோணுது சகோ. but என் கருத்தை சொன்னேன், தப்பா எடுத்துக்காதீங்க:))

    ReplyDelete
  2. வணக்கம், இந்த அற்புதமான கட்டுரையை எழுதியதற்கு நன்றி மற்றும் எடுத்துக்காட்டுகள் நிறைய உதவின .. தயவுசெய்து தொடர்ந்து எழுதுங்கள்.

    pdms admin course in chennai
    pdms training
    pdms admin training
    pdms training in india
    pdms training in chennai
    Pdms design in chennai
    pdms course
    pdms admin training in chennai
    pdms design
    pdms training centre in chennai
    Pdms course in india
    pdms admin course
    Pdms course in chennai
    Pdms in chennai

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..