About Me

Friday, February 21, 2014

மனுநீதி

அப்பாவியை தூக்கிலிட்டு,
நீதி சாவதில்லையென்று,
மார்தட்டிக்கொண்டார்கள்
நீதியரசர்கள்.

Thursday, February 20, 2014

இதயத்திற்குள் போராட்டம்

எனக்கு பிடித்த
புத்தகத்தை,
என் குழந்தை
கிழிக்கும் போது,
என் இதயம்
அணி பிரிந்து
சண்டையிடுவதை
உணர்கிறேன்.

Wednesday, February 19, 2014

உயர்பரிமாண(Higher dimension) பூனை

பூனை நக்க
பாற்கடலும் வற்றுமோ?
வினவினான் ஒருவன்?

உயர்பரிமாண(Higher dimension)
பூனையென்றால்
பிரபஞ்சத்தையே நக்கலாம்
என்றேன்!!

Tuesday, February 18, 2014

எதார்த்த கணவன்

நிலவிற்கு 
ராக்கெட் அனுப்பிவிட்டு, 
வீட்டிற்கு வந்தவனிடம்
 மனைவி சொன்னாள்? 
நேற்று வாங்கி வந்த
வெண்டைக்காய்
 சூத்தையென்று.

Monday, February 10, 2014

மனித தர்மம்

கடித்த எறும்பின்
கருணை மனுவை
அதை கொன்ற பின்,
பரிசீலிக்கும்
மனித தர்மத்தை
என்னவென்று சொல்ல?



Saturday, February 8, 2014

'நான்' என்னும் 'கருங்குழி'

யாரோ சொல்லி,
எனக்குள் எட்டிப்பார்க்க,
அங்கிருந்த கருங்குழி
என்னை உள்ளே இழுத்துக்கொண்டது.
இப்போது
என்னால் யாரையும்
பார்க்கமுடிவதில்லை.
யார் குரலையும்
கேட்கமுடிவதில்லை.
தயவு செய்து
உங்களுக்குள் எட்டிப்பார்க்காதீர்கள்.

Tuesday, February 4, 2014

கவிஞனின் கவிதை

கடல் நீரில்
கால் நனைக்கும் போது,தன்
கால்கள் கரைவதை
உணரமுடியாத
கவிஞனின் கவிதை
ஆன்மாவில்லாத
வெற்றுடம்பு.

Monday, February 3, 2014

நீ நல்லவனா?





நீ நல்லவனா?

என்று

கேட்டவனிடம் சொன்னேன்,

பொய்,

பொறாமை,

கோபம்,

வஞ்சம்,

ஏமாற்றம்,

தோல்வி,

போன்ற குப்பைகளால் ஆன,

கனத்த இதயம்

எனக்கும் உண்டு என்று.