About Me

Friday, December 30, 2011

போய்வா 2011

தூக்கம் கலைந்து
துயிழெழும் நேரம் வந்த
கனவினைப் போல
கடந்து சென்றாயே!
பல கனவுகள்
பல சபதங்களுடன்
உன்னை தொடர ஆரம்பித்தேன்!

என்னோடு நீயிருந்த 
365 நாட்களில்
இன்பத்தில் சிலநேரம்
துன்பத்தில் சிலநேரம்
ஏற்றத்தில் சிலகாலம்
இறக்கத்தில் பலகாலம்
அடடா என்னே
நீ கொடுத்த அனுபவம்!

கனத்த இதயத்துடன் சில கணங்கள்
இறகைப்போலே  சில கணங்கள்
கண்ணீருடன் சில நேரம்
கவிதையுடன் சில நேரம்
சொல்லிய வார்த்தைகள்
சொல்லாமல் சென்றவர்கள்
திரும்பிப் பாக்கையில்
எத்தனை பதிவுகள்
என் பதிவேட்டில்!
ஓடிக்கொண்டே இருந்துவிட்டாய்.

இந்த 365 நாட்கள்
என் காதேரம், கனவுகள்,
தனிமை, கவிதை
கண்ணீர் என
என்னோடு இருந்தாய்!
இப்போது செல்லப் போகிறாய்!
மீண்டு வரமுடியாத
இடத்திலிருந்து வந்து
திரும்பிபெற முடியாதவற்றை
தந்துவிட்டு செல்கிறாய்!
உன் காலடி தடம்
என் நெஞ்சில் மாறா இரனமாய்இருக்க
என்னை விட்டு செல்கிறாய்!
பரவாயில்லை!
போய்வா நண்பனே!
போய்வா 2011!!





அவள்

காம்பின்மேல் வரைந்த
அற்புத ஓவியம் மலர்,
பூமியின் மேல் மலர்ந்த
அற்புத மலர் அவள்!


நியாயமா?

ஒவ்வொருமுறையும் உன்னை
பெண்ணாக படைக்கிறான் கடவுள்,
ஒவ்வொருமுறையும் உன்னை
தேவதை ஆக்குகிறேன் நான்,
நீயோ கடவுளை வணங்குகிறாய்
என்னை முறைக்கிறாய்
இது நியாயமா?


Thursday, December 29, 2011

காதலின் வலி

காதலின் சின்னம் ரோஜா என்பதற்காக
நான் கொடுக்கும் செம்பருத்தியை மறுக்காதே!

காதலின் பரிசு நிலவு என்பதற்காக
நான் கொடுக்கும் கைகுட்டையை மறுக்காதே!

காதலின் நிறம் சிகப்பு  என்பதற்காக
என் உடலை கிழிக்கச் சொல்லாதே!

காதலின் பார்வை குருடு என்பதற்காக
என்னைப்பார்த்து கண்களை மூடிக்கொள்ளாதே!

காதலுக்கான இடம் இதயம் என்பதற்காக
என் இதயத்தை கிழிக்காதே!

காதலின் மொழி மெளனம் என்பதற்காக
என்னிடம் பேசாமல் கொல்லாதே!

காதல்வெறும் சொல்  என்பதற்காக
உன்காதலை சொல்லாமல் கொல்லாதே!




Tuesday, December 27, 2011

சொல்லாத பார்வைகள்

உருகும் மெழுகோ இங்கிருக்க
எரியும் தீயோ அங்கிருக்க
உன் சொல்லாத பார்வைகள்
என்னை உருக்கிச் செல்லுதே
உன் கொல்கின்ற மெளனங்கள்
என்னை சுழட்டிச் செல்லுதே!

சாலையோரம் வீற்றிருக்கிறேன்
காதல்வருமென காத்திருக்கிறேன்
காற்றினூடே கலந்திருக்கிறேன்,
உன்வாசம் வருமென காத்திருக்கிறேன்
என்ஒற்றை ரோஜா
உனக்காகத்தான்!
என் ஏங்கும் இதயமும்
உனக்காகத்தான்!
இந்த காத்திருப்பும்
உனக்காகத்தான்!

காலை நிலவே வருவாயா
காதல் ஏக்கம் தனிப்பாயா
நிலவே நிலவே வருவாயா
உன் புன்னகைகொஞ்சம் தருவாயா
இசையே நீயும் வருவாயா
என் மனதைகொஞ்சம் கரைப்பாயா
பனியே பனியே களைவாயோ
அவளின் கனிமுகம் அருள்வாயா




Saturday, December 24, 2011

நான்

விந்தை எடுத்து
அண்டத்தில் குழைத்து
இருட்டில் வரைந்த
ஓவியம் நான்!
மண்ணில் விழுந்து
விண்ணை இடித்து
ஓங்கி வளர்ந்த
கற்பகவிருட்சம் நான்!
சொல்லை எடுத்து
தேனில் குழைத்து
காற்றில் எழுதிய
கவிதை நான்!

சொல்லை தாண்டிய சொல்லும் நான்
கற்பனைக்கு எட்டாத கற்பனை நான்
இருளில் கலந்த இருளும் நான்
ஒளியை தாண்டிய ஒளியும் நான்
தாகத்தில் கலந்த தண்ணீர் நான்
பசியில் கலந்த வறுமை நான்

காக்கை சிறகினில் நான்
குயிலின் குரலில் நான்
குளிர்ந்ததென்றல் காற்றும் நான்
கடும் பாலை நிலமும் நான்
எல்லைகடந்த எல்லை நான்

மூச்சும் நான்
சுவாசம் நான்
மண்ணும் நான்
விண்ணும் நான்
கண்டதும் நான்
காணபோவதும் நான்
தெடுவதும் நான்
தெடுபொருளும் நான்
உண்மை நான்
உயிரும் நான்
நானும் நான்
நீயும் நான்

அண்டம் அதிர
பிண்டம் குலுங்க
உலகை படைத்த
கடவுளும் நான்!

Thursday, December 22, 2011

படங்களும் சில கிறுக்கல்களும்

விழியின் இருகரைகளிலும்
கண்ணீர் வெள்ளம்
பயம்கரையை கடப்பது எப்போது?














 மனம்கனந்த நிலையில்
மரத்தின் மடியில்!
இலையுதிர்காலம் போல்
சோகம்யுதிர்காலம் வராதோ!













 எவ்வளவு எரித்தும்
சாம்பலாகாத பெண்கொடுமை
இன்னும் எவ்வளவுகாலம்
பார்வையால் எரிக்கவேண்டுமோ?













 அடிவயிற்றிலோ ஆனந்தம்
மேலேமனதிலோ சோகம்
என்னேஇந்த இருதலைகொள்ளி வாழ்க்கை!














 சோகங்களை எவ்வளவு நாள்தான்
ஆற்றங்கரைகளில் கரைப்பது?















 வாழ்க்கையை கரைக்க நினைப்பவர்களின்
கடைசிவாசத்தலம் ஆலமர நிழல்.

Wednesday, December 21, 2011

புதுகாதல் ஜோடி

இருஜோடி கால்தடங்கள்
கடற்பரப்பில் கால்பதிக்க
மேலும் ஒருகாதலை
பதிந்துகொண்டால் கடல்அன்னை!

முல்லை பெரியாறு

அணையில் விழவேண்டிய விரிசல்
இப்போது மக்கள் மனதில்
நீர்கசிய வேண்டிய இடத்தில்
இரத்தம் கசிகிறது!

Tuesday, December 20, 2011

கடற்கரை

அலைக்கும் கரைக்கும்
இடையேயான காதல்விளையாட்டு!
யாரும் இல்லாதபோதும்
தொடர்கிறது தொட்டுவிளையாட்டு!

Friday, December 16, 2011

கண்ணீர்! தண்ணீர்!

இனம் வேண்டாம்
மொழி வேண்டாம்
மதம் வேண்டாம்
எல்லாம் கடந்த அன்பு வேண்டும்

ஈசல் கூட அரைநொடி ஆயுலில்
அற்புதமாய் வாழ்கிறதே!
வரலாறாய் வாழும் மானிடா
ஏன் இந்த போராட்டம்?
ஏன் இந்த சண்டை?
தாய்மொழியென்று மார்தட்டும் நீ
அன்பின் மொழி மறந்ததென்ன?
என்னுடன் பிறந்தவர்கள் மட்டுமல்ல
பக்கத்து மாநிலத்தில் பிறந்த
நீ கூட என் சகோதரன்தான் என்று
தேசியகீதம் பாடும்போது
உறுதிமொழி கூறினேனடா.

உன்னை திட்டகூட மனம் வரவில்லை
ஆனால் நீ வெட்ட வருகிறாய்
கண்ணீர் வருகிறது, சிறு
தண்ணீருக்காக என்னை அடிக்கும்போது
உனக்கும் எனக்கும் இடையில்
ஆயிரம் தடுப்புகள் இருந்தாலும்
என்மனம் உன்னை நினைத்து அழுகிறது.

நான் கேட்பது தண்ணீர்
நீ கொடுப்பதோ கண்ணீர் ,பரவாயில்லை
என் கல்லறை மேல்
உன்மாளிகை கம்பீரமாய் எழும்பட்டும்
அப்போதும் சொல்வேன்
இவ்வுலகில் பிறந்தயாவரும்
என் உடன்பிறந்தோரென்று!!

Thursday, December 15, 2011

உனக்காக தான்

அணைப்பதற்கு கைகள்
அழுவதற்கு கண்கள்
சாய்ந்துகொள்ள ஒரு மடி
அதுவும் நீயாக இருந்தால்
இதயம் மட்டும் அல்ல
உயிரையும் கொடுப்பேன்.

காதல் கசியும் நேரம்

அழகான மாலைநேரம்
அந்திசாயும் மாலைநேரம்
இரவே நுழைந்தாயோ
பகலே மறைந்தாயோ

என்னுள் ஏதோ மாற்றம்
சிறு மின்னலின் தோற்றம்
மனதே கரைந்தாயோ
ஈரம் கசிந்தாயோ

வானம் முழுக்க வண்ணமாற்றம்
எந்தன் வானில் அவளின் தோற்றம்
நிலவே வந்தாயோ
காதல் சொன்னாயோ

எந்தன் உணர்வு விளிம்புகளில் சிறுமாற்றம்
எந்தன் உடல் முழுதும் சிறுஏக்கம்
மனமே அழுதாயோ
அவளை நினைத்தாயோ

காதல் உணர்வுகளில் நான் திளைக்க
அவளைபற்றி என் உடல் நினைக்க
தூக்கம் வாராதோ
ஏக்கம் குறையாதோ

என் ஏக்கம் இங்கிருக்க
அவளின் ஏக்கம் அங்கிருக்க
கனவே வருவாயோ
தூரம் குறைப்பாயோ

இரவே முடியாதே!
பகலே வாராதே!
இரவே முடியாதே!
பகலே வாராதே!

உயிர் நண்பனே

எங்கோ பிறந்தோமடா
எங்கோ வளர்ந்தோமடா
வாழ்க்கையின் ஓட்டத்தில்
நண்பர்கள் ஆனோமடா

இன்பத்தில் இனித்தாய்
துன்பத்தில் அணைத்தாய்
என்னை எனக்கே
அடையாளம் காட்டினாய்

என் உதட்டின் வழியே நீ சிரிக்க
உன் கண்ணின் வழியே நான் அழ
உயிருக்கு உயிராய் ஆனாயடா

வறண்ட என் வானத்தில்
தேன் மழை பொழிந்தாயடா
சாறற்ற என் வாழ்க்கையில்
பின்னணி இசை ஆனாயடா
பெற்றோரை மறந்து
உடன் பிறந்தவர்களை மறந்து
நீயே என்வாழ்க்கை
என்று ஆனாயடா

சின்ன சண்டைகள்
சில்மிஷ சேட்டைகள்
ஒற்றைச் சட்டை
ஒரே படுக்கை
மொட்டை மாடி
தேனிர் விடுதி
குட்டிச்சுவரு
கோவில் சாலை
என வாழ்க்கையை
கரைத்தோமடா

விதியென வாழ்க்கை
நண்பர்கள் ஆனோம்
சதியென வாழ்க்கை
பிறிந்து விட்டோம்
உடல் இங்கே
உயிர் அங்கே
இருட்டில் நான்
ஒளியில் நீ
என்குரல் கேட்கிறதா?
மீண்டும் வருவாயா?

அழவிடமாட்டேன் என்றாயடா?
இப்போது உனக்காக அழுகிறேனடா!
நிலவுக்கு காத்திருக்கும் இரவுபோல
உனக்காக காத்திருக்கிறேன்
சீக்கிரம் வந்துவிடு
என் உயிர் நண்பனே!