About Me

Thursday, December 15, 2011

உயிர் நண்பனே

எங்கோ பிறந்தோமடா
எங்கோ வளர்ந்தோமடா
வாழ்க்கையின் ஓட்டத்தில்
நண்பர்கள் ஆனோமடா

இன்பத்தில் இனித்தாய்
துன்பத்தில் அணைத்தாய்
என்னை எனக்கே
அடையாளம் காட்டினாய்

என் உதட்டின் வழியே நீ சிரிக்க
உன் கண்ணின் வழியே நான் அழ
உயிருக்கு உயிராய் ஆனாயடா

வறண்ட என் வானத்தில்
தேன் மழை பொழிந்தாயடா
சாறற்ற என் வாழ்க்கையில்
பின்னணி இசை ஆனாயடா
பெற்றோரை மறந்து
உடன் பிறந்தவர்களை மறந்து
நீயே என்வாழ்க்கை
என்று ஆனாயடா

சின்ன சண்டைகள்
சில்மிஷ சேட்டைகள்
ஒற்றைச் சட்டை
ஒரே படுக்கை
மொட்டை மாடி
தேனிர் விடுதி
குட்டிச்சுவரு
கோவில் சாலை
என வாழ்க்கையை
கரைத்தோமடா

விதியென வாழ்க்கை
நண்பர்கள் ஆனோம்
சதியென வாழ்க்கை
பிறிந்து விட்டோம்
உடல் இங்கே
உயிர் அங்கே
இருட்டில் நான்
ஒளியில் நீ
என்குரல் கேட்கிறதா?
மீண்டும் வருவாயா?

அழவிடமாட்டேன் என்றாயடா?
இப்போது உனக்காக அழுகிறேனடா!
நிலவுக்கு காத்திருக்கும் இரவுபோல
உனக்காக காத்திருக்கிறேன்
சீக்கிரம் வந்துவிடு
என் உயிர் நண்பனே!

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..