About Me

Friday, December 16, 2011

கண்ணீர்! தண்ணீர்!

இனம் வேண்டாம்
மொழி வேண்டாம்
மதம் வேண்டாம்
எல்லாம் கடந்த அன்பு வேண்டும்

ஈசல் கூட அரைநொடி ஆயுலில்
அற்புதமாய் வாழ்கிறதே!
வரலாறாய் வாழும் மானிடா
ஏன் இந்த போராட்டம்?
ஏன் இந்த சண்டை?
தாய்மொழியென்று மார்தட்டும் நீ
அன்பின் மொழி மறந்ததென்ன?
என்னுடன் பிறந்தவர்கள் மட்டுமல்ல
பக்கத்து மாநிலத்தில் பிறந்த
நீ கூட என் சகோதரன்தான் என்று
தேசியகீதம் பாடும்போது
உறுதிமொழி கூறினேனடா.

உன்னை திட்டகூட மனம் வரவில்லை
ஆனால் நீ வெட்ட வருகிறாய்
கண்ணீர் வருகிறது, சிறு
தண்ணீருக்காக என்னை அடிக்கும்போது
உனக்கும் எனக்கும் இடையில்
ஆயிரம் தடுப்புகள் இருந்தாலும்
என்மனம் உன்னை நினைத்து அழுகிறது.

நான் கேட்பது தண்ணீர்
நீ கொடுப்பதோ கண்ணீர் ,பரவாயில்லை
என் கல்லறை மேல்
உன்மாளிகை கம்பீரமாய் எழும்பட்டும்
அப்போதும் சொல்வேன்
இவ்வுலகில் பிறந்தயாவரும்
என் உடன்பிறந்தோரென்று!!

2 comments:

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..