
நான் கொடுக்கும் செம்பருத்தியை மறுக்காதே!
காதலின் பரிசு நிலவு என்பதற்காக
நான் கொடுக்கும் கைகுட்டையை மறுக்காதே!
காதலின் நிறம் சிகப்பு என்பதற்காக
என் உடலை கிழிக்கச் சொல்லாதே!
காதலின் பார்வை குருடு என்பதற்காக
என்னைப்பார்த்து கண்களை மூடிக்கொள்ளாதே!
காதலுக்கான இடம் இதயம் என்பதற்காக
என் இதயத்தை கிழிக்காதே!
காதலின் மொழி மெளனம் என்பதற்காக
என்னிடம் பேசாமல் கொல்லாதே!
காதல்வெறும் சொல் என்பதற்காக
உன்காதலை சொல்லாமல் கொல்லாதே!
No comments:
Post a Comment
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..