About Me

Wednesday, February 11, 2015

குருட்டுச்சித்தன்

தன்னையறியாமல் மண்ணையறிய
புறம் நோக்கியோடி - காலிடறி
அகத்தில் விழுந்த குருட்டுச்சித்த  - உன்
எண்ணமென்னும் ஏர் தாருமாறாயிருக்க.
மந்திரத்தால் கத்தியும்,தந்திரதால் தாவியும்
அகமென்னும் இருட்டில் நீ
அடையபோகும் இலக்கென்னவோ?

ஜான் ஞானம் மேலேற
துளிவிசம் கீழிறங்க
அடையப்போவதோ அகம்பாவமாயிருக்க!
அகமென்னும் இருட்டில் நீ
அடையபோகும் இலக்கென்னவோ? 

கற்ற குப்பை வைத்துக்கொண்டு
பார்ப்பதெல்லாம் மாயையென்று!
வாழ்க்கைவிட்டு ஓடிப்போய்!
குப்பையான உடலுடன்
சேர்த்த ஞானம் வைத்துக்கொண்டு
அகமென்னும் இருட்டில் நீ
அடையபோகும் இலக்கென்னவோ?

வந்தவனும் சொல்லவில்லை.
போனவனும் சொல்லப்போவதில்லை.
உண்மையெல்லாம் ஊமையாயிருக்க! - நீயும்
கொண்டுவரவுமில்லை, கொண்டுபோவதுமில்லை.
இல்லையெல்லாம் இப்படியிருக்க.
ஞானமென்னும் செல்லாக் காசை வைத்து
அகமென்னும் இருட்டில் நீ
அடையபோகும் இலக்கென்னவோ?

கதிரவனும் உதிக்கிறான்.
சந்திரனும் சிரிக்கிறான்.
ஞானமென்னும் தவளை கொண்டு
மாற்றமெல்லாம் வேண்டுகிறாய்.
கதிரவனும் மாறுமோ?சந்திரனும் சாகுமோ?
இக்கணத்தில் வாழடா,
உறுதிகொண்டு வாழடா,
அக்கரைக்கு ஆசைகொண்டு,
சங்கடத்தில் வீழாதே.
சொல்வதெல்லாம் உண்மையல்ல.
கேட்பதெல்லாம் உண்மையல்ல.
உணர்தெல்லாம் உண்மையே - அது
உனக்குமட்டும் உண்மையே.













No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..