About Me

Saturday, November 26, 2011

காத்திருப்பு

முள்ளில் பூத்த அழகே
என் சொல்லில் முளைத்த கனியே
இசையாய் காற்றாய்
இனிக்கும் தேனாய்
என் உயிரில் கலந்த உணர்வே!

உன்னை நினைக்கும் போது
என் உள்மூச்சும் எரியுதடி
விழிகள் மூடினாலும்
உன் பிம்பம் தெரியுதடி
உன் ஒவ்வொரு அசைவிலும்
என்னுள் மாற்றம் நிகழுதடி

காலம் சுருங்க
இடைவெளி அதிகரிக்க
உன் ஒவ்வொரு மொளனம்
என்னைக் கொல்லுதடி
என் ஆசை குழந்தையின்
அழுகுரல் கேட்கவில்லயா?
அது காதல் கேட்கிறது
நீ மொளனம் கொடுக்கிறாய்
விண்ணை நோக்கிய மண்ணாய்
உன்னை நோக்கி காத்திருக்கிறேன்
உன் காதலுக்காக!

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..