About Me

Thursday, July 21, 2011

குழந்தையும் பொம்மையும்


நம்மை பொறுத்தவரை பொம்மைகளுக்கு உயிர் இல்லைதான்.ஆனால் ஒரு குழந்தை பொம்மையுடன் விளையாடுவதை பார்த்தால் அது தவறு என்பது புரியும்.அந்த குழந்தை பொம்மையுடன் பேசும்,சிரிக்கும்,அழும்,தான் சாப்பிடும் சாப்பாட்டை ஊட்ட முயற்சி செய்யும்,அதற்கு ஆடை அணிவிக்கும்.பொம்மை பேசாதுதான்.ஆனாலும் நாள் முழுவதும் விளையாடும்.அதற்கு யாரும் தேவை இல்லை.இரவில் அதனுடனே தூங்கும்.உண்மையில் எல்லா குழ்ந்தைகளும் கடவுள் தான்.அவர்கள் உயிரற்ற பொம்மைகளுக்கு உயிர்கொடுப்பதனால்.ஆனால் வளர்ந்தவுடன் அதே குழந்தை தன் கடவுள் தன்மையை தொலைத்துவிட்டு மனிதனாகி தான் தொலைத்த கடவுளை தேடி தேடி நொந்து சாகிறது.

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..