About Me

Tuesday, July 19, 2011

கதைகேட்டு நீதி சொல்லுங்கள் - 2

ஒரு நாள் கடவுள் பூமிக்கு வர ஆசைப்பட்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார்?வெளியே வந்த ஆளிடம் நான் தான் கடவுள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்?வீட்டுக்காரர் மிகுந்த கடுப்புடன் இவ்வாறு கூறினார் "முன்பு எல்லாம் கடவுளின் பெயரைச் சொல்லி பிச்சையெடுத்தீர்கள்!இப்போ கடவுள் என்று கூறி பிச்சையெடுக்க ஆரம்பித்து விட்டீர்களா? என்று சீறினார்.கோபம் கொண்ட கடவுள் கீழி இறங்கி ரோட்டில் நடக்க ஆரம்பித்தார்.வழியில் அவர் இரு குடிகார குடிமகன்களிடம் நான் தான் கடவுள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்?அதற்கு ஒருவன் சரிதான் போ நாங்கள் யார் என்று நினைத்தாய்? நான் யேசு!இவன் முகமது!என்று கூறினான்.நொந்தே போய்விட்டார் கடவுள்!!


இதன் நீதி : ?????

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..