About Me

Saturday, February 4, 2012

காதலே ஏன் இந்த மாயம் ?

காதலே ஏன் இந்த மாயம்
காதலே ஏன் இந்த மாயம்
காதலே காதலே
ஏன் இந்த மாயம்
இதயத்தின் சுவர்களை
கரைத்திட்ட மாயம்
கண்களும் அலையாய் பொங்குதே
இதயத்தின் சுவர்களும் வெடிக்குதே

இரவின் நடுவினில்
நீ விடும் தூது
எந்தன் கனவினை
கரைக்கும் அமிலத்தின்சாறு
இமைகளின் வெளியே
நீ செய்யும் மாயம்
கனவினில் என்னை
கொல்கின்ற காயம்

உன்னை நினைத்து
பாடிய கீதம்
மூங்கில் காட்டில்
கிழிந்திட்ட கீதம்
உள்ளே உள்ளே
நீ செய்த காயம்
என்னைக் கொல்லும்
காலனின் வாகனம்.